பிரதமராகும் முன்னரே, பழங்குடியின சமூகங்களுடன் கொண்ட பயணம்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:02 PM | Best Blogger Tips

 May be an image of text

 

பிரதமராகும் முன்னரே, நரேந்திர மோடியின் பழங்குடியின சமூகங்களுடன் கொண்ட பயணம் நான்கு சுவர்களுக்குள் அடங்கிய அலுவலகங்களில் அல்ல, 
 
குஜராத்தின் சிறு கிராமங்களில் துவங்கி . அவரின் இளம் பிரச்சாரகராக இருந்த காலத்தில், சபர்காந்தா, பரோடா, டாங் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜனஜாதியா குடும்பங்களுடன் பல ஆண்டுகள் வாழ்ந்து, அவர்களது வீடுகளில் தங்கி,
 
அவர்களுடன் உணவு பகிர்ந்து, அவர்களின் வாழ்க்கைப் போராட்டங்களை நேரடியாகப் புரிந்துகொண்டார்.
 
1980களில் குஜராத்தில் ஏற்பட்ட வறட்சி காலங்களில், பல கிராமங்களுக்கு உதவி சென்றடையாத நிலையில், பழங்குடியின குடும்பங்களுக்கு உணவும் தண்ணீரும் வழங்க ஏற்பாடு செய்தார். 
 பிரதமர் நரேந்திர மோதியின் தொட்டுத் தொடரும் தலைப்பாகை பாரம்பரியம் - BBC News  தமிழ்
ஆடம்பர கொண்டாட்டங்களை தவிர்த்து, பழங்குடியினக் குழந்தைகளின் கல்விக்கு உதவுவது போன்ற அர்த்தமுள்ள செயல்களில் ஈடுபட வேண்டும் என்று அவர் தன்னார்வலர்களை ஊக்குவித்தார்.
 
சில்வாசாவில் நடைபெற்ற வன்வாசி கல்யாண் ஆஸ்ரமின் ஒன்றுகூடலில், சுமார் ஐம்பது புத்தகங்களை மேற்கோளிட்டு பழங்குடியின கலாச்சாரம் குறித்து அவர் நிகழ்த்திய உரை, அன்றைய ஜனாதிபதி ஜெயில் சிங்கை ஆழமாக கவர்ந்தது.
 
பின்னர் பாஜக மாநில பொதுச் செயலாளராக இருந்தபோது, புதிய பழங்குடியின தலைவர்களை உருவாக்கி வழிநடத்தினார்.
 
1995 ஆம் ஆண்டில் குஜராத்தின் முதல் Tribal Haq Patra (பழங்குடியினர் உரிமைப் பிரகடனம்) வெளியிட்டார். இதில் வீடு, உடல்நலம் மற்றும் பழங்குடியின மக்களின் கண்ணியமான வாழ்க்கை முக்கியமாக வலியுறுத்தப்பட்டன.
 பிரதமர் நரேந்திர மோதியின் தொட்டுத் தொடரும் தலைப்பாகை பாரம்பரியம் - BBC News  தமிழ்
இந்த அனுபவங்கள் அவருக்கு, பழங்குடியினர் மீது கருணை மட்டுமல்ல, வாய்ப்புகளும் தேவையெனும் நம்பிக்கையை உருவாக்கின.
 
அதன் பின்னரும், ஒவ்வொரு பழங்குடியினர் குடும்பமும் தகுதியான மரியாதையும், சுயநிறைவு கொண்ட வாழ்வையும் பெற வேண்டும் என்ற அவரது உறுதி தொடர்ந்து வலுத்தது.
 
அந்த உறுதி வாழ்நாள் முழுவதும் இன்று வரை பின்பற்றி வருவதை நாடறிந்த உண்மை.
 
Bhartiya Janata Party.

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 No photo description available.  🌷 🌷🌷 🌷