*கணையத்தை ஏன்*
*பாதுகாக்க வேண்டும்...*
கணையம் ஓர் உறுப்பா...
உடலில் இது எந்த பாகத்தில் இருக்கிறது...
இதன் பணிதான் என்ன அதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அறிகுறிகள் யாவை...
*இப்படி ஏராளமான கேள்விகள் இருக்கலாம்...*
இடுப்பு வலி என்றவுடன், அதிக நேரம் தவறான நிலையில் உட்கார்வதால் இருக்கும் என்று நினைக்கிறோம். செரிமான மண்டலத்தின் முக்கிய அங்கமான, வயிற்றின் பின் பகுதியில் இருக்கும் கணையத்தில் பிரச்னை இருந்து, வலி ஏற்பட்டால், முதுகு வலி வரலாம்.
உடலில் ஒரேநேரத்தில்
செரிமானநீர் மற்றும் ஹார்மோன்களை சுரக்கும்
ஒரே சுரப்பி கணையம்.

ஒரு மனிதன் உயிர்வாழ இதயம், மூளை போன்ற உறுப்புகள் எந்த அளவுக்கு முதன்மையோ அதே அளவுக்குக் கணையமும் முதன்மை வாய்ந்தது.
இதற்கு இரட்டை சுரப்பி என,மற்றொரு பெயரும் உண்டு. இது உறுப்பா எனக்கேட்டால்,
இலைவடிவில், ஒரு சுரப்பி என்றே சொல்லலாம்.
வயிற்றின் தொப்புள் பகுதிக்குப் பின்புறத்தில் இருக்கும் இந்த கணையம், டியோடினம் என்று அழைக்கப்படும்
சிறுகுடலின் முதல் பிரிவில் இருக்கிறது. கடுகு சிறிதாக இருந்தாலும் காரம் பெரிது என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த உறுப்பின் செயல்பாடுகளும் வியக்கத்தக்க வகையில் உள்ளன.
கணையம் எனும் உறுப்பு மனித உடலின் வயிற்றுப் பகுதியில் மிக ஆழமாகவும், மிகச்சிக்கலான இடத்திலும், முன் சிறுகுடலுக்கு சற்று இடது புறத்திலும் அமைந்துள்ளது. இதன் நீளம் 15-20 செ.மீ. எடை 85 -100 கிராம்.

கணையம் என்பது ஒரு கலப்படச் சுரப்பி. EXOCRINE மற்றும் ENDOCRINE எனும் இரண்டு சுரப்பிகளாலும் ஆனது.
கணையத்தில் ‘லாங்கர்ஹான்ஸ் திட்டுகள்’ எனும் சிறப்புத் திசுக்கள் பரவிக் கிடக்கின்றன. ஆரோக்கியமாக உள்ள நபரிடம் சுமார் 10 லட்சம் திட்டுகள் உள்ளன. ஒவ்வொரு திட்டிலும் 3000 முதல் 4000 வரை ஆல்பா, பீட்டா, டெல்டா என்று 3 வகை செல்கள் உள்ளன. ‘பீட்டா’ செல்கள் இன்சுலினையும், ஆல்பா செல்கள் மற்றும்
டெல்டா செல்கள் ஹார்மோனையும், சுரக்கின்றன.
உடலில் ஹார்மோன்கள் மற்றும் உணவு செரிமானத்திற்கான நொதி என்ற திரவத்தைச் சுரக்கச் செய்கிறது.நொதி என்பது நாம் உண்ணும் உணவுகளைச் செரிக்க செய்யும் ஒரு வகை நீர்மமாகும். இதைச் சுரக்கச் செய்யும் பணியைக் கல்லீரல், குடல், மற்றும் இரைப்பையுடன் சேர்ந்து கணையமும் செய்கிறது. உணவு மனிதன் உயிர்வாழ எவ்வளவு தேவையோ, அவ்வளவு அதன் சத்துகள் முழுமையாக உடலைச் சென்றடையக் குடலில் நடக்கும் செரிமானச் செயல்பாடுகளும் தேவை.
அந்தப் பணியைத்தான் கணையம் செய்கிறது. இந்த நொதிகள் கணையத்தில் உள்ள குழாய்கள் வழியாகச் சென்று சிறுகுடலின் மேல்பகுதியில் கலக்கின்றன. அதனைத் தொடர்ந்து, குடலில் இருக்கும் உணவில் உள்ளபுரதம், கொழுப்புமாவு சத்துகளைப் பிரித்துச் செரிக்க உதவுகிறது.
கணையத்தில் சுரக்கும், செரிமான நீர் கடுமையானது. இயல்பை மீறி, அது கணையத்தில் தேங்குமானால் கணையத்தையே அழித்து விடும். கணையத்தில் ஏற்படும் (அழற்சி) தொற்று உயிரை பாதிக்கும் பிரச்னையாகும்.
நாளமில்லாச்சுரப்பியாகச் செயல்படும் இந்தக் கணையம் இன்சுலின், குளுகோகான் என்ற இரு ஹார்மோன்களைச் சுரக்கிறது. அதில் இன்சுலின் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும், குளுகோகான் சர்க்கரையின் அளவைக் அதிகரிக்கவும் செய்து, உடலின் ரத்தச் சர்க்கரையின் அளவைச் சரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்கிறது. எங்குப் பார்த்தாலும் நீரிழிவு நோய். இன்றளவில் நீரிழிவு நோயாளிகள் இல்லாத வீடே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இது வருவதற்கு என்ன காரணம்.
நம்மில் பலருக்கு நீரிழிவுநோய் என்றால் உடலில் இன்சுலின் அளவு குறைவாகச் சுரப்பதால் வருவது என்றுதான் தெரியும். ஆனால் இந்த இன்சுலினைச் சுரப்பது கணையம் என்று தெரிவதில்லை.
*கணையம் பாதிக்கப்படுவது எதனால்*
கணையத்திற்கும், கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகிய உறுப்புகளுக்கும் பொதுவான ஒரு வெளியேற்றும் குழாய்
[CBD-COMMON BILE DUCT] உண்டு. இதன் காரணமாக சில நேரங்களில் கல்லீரலில் உள்ள பித்த நீர், கணையத்திற்குள் இந்த வழியாகச் சென்று, கணையத்தைச் சேதப்படுத்துவதும் உண்டு.
அதே போல, பித்தப்பைக் கற்கள் கணையத்தின் குழாயை அடைத்து விடுவது உண்டு. இதனால்
கணைய நீர் மீண்டும் கணையத்திற்குள்ளேயே திரும்ப வந்து அந்த உறுப்பையே செரித்து அரித்து விடும் அபாயமும் உண்டு. கணையத்தில் சுரக்கும் செரிமான நீர்கள் மிகவும் கடுமையானவை. தங்கள் இயல்பை மீறி கணையத்தில் இவை தேங்குமானால், கணையத்தையே அழித்துவிடக் கூடியவை.
இக்காரணங்களாலேயே கணையத்தில் அழற்சி தோன்றுகிறது.
இன்றைய பெரும்பாலான உணவுகளில் ருசிக்காக, அழகுக்காக வண்ணங்கள், ரசாயனப் பொருட்கள், மசாலாக்கள் சேர்க்கப்படுகின்றன. இவைகளால் உடலுக்குப் பெருந்தீங்குகள் ஏற்படுகின்றன. இவற்றை விரும்பி உண்போருக்கு கணையக் கற்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம். பலவித ஆங்கில மருந்து மாத்திரைகளின் பின்விளைவுகளாகவும் கணையக் கற்கள் உருவாகின்றன.
கணையக் கற்கள் காரணமாக பல சந்தர்ப்பங்களில் SECONDARY DIABETES ஏற்படுகிறது. இப்பிரச்னைகளோடு கணையத்தில் பல்வேறு கட்டிகள் வரும் வாய்ப்பும் உண்டு. அதிக மது, புகைப் பழக்கமுள்ளவர்களுக்கு கணையப் புற்று ஏற்படக்கூடும். புற்று நோய்களில் இது கடுமையானது. கொடுமையானது. பலரும் விரைவில் மரணத்தைச் சந்திக்க நேர்கிறது.
சிறுநீரகம் செயல் இழந்த நிலையில் ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிப்பதால் கணையம் பாதிக்கப்படலாம். பரம்பரைக் கோளாறுகள், புற்றுநோய், ரத்த ஓட்டக் குறைபாடுகள்,
விஷக்கடிகள் மற்றும் ஒவ்வாமை போன்றவற்றாலும் கணையம் பாதிக்கப்படலாம்.
‘காக்காக்ஸி’ எனும் ஒரு வகை வைரஸ், மஞ்சள் காமாலை, அம்மை வைரஸ், ‘ருபல்லா’ வைரஸ் முதலிய வைரஸ்களில் ஏதாவது ஒன்று, கணையத்தை நேரடியாக தாக்கும்போது, ‘பீட்டா செல்கள்’ முழுவதுமாக அழிந்து, கணையம் பாதிக்கப்படுகிறது.
கணையப் பகுதியின் மீது அடிபட்டாலும், புளு சுரத்தின் பின் விளைவாகவும்,கணைய அழற்சி ஏற்படலாம்.
உணவைச் செரிக்க, சில வகையான என்சைம்களை கணையம் சுரக்கிறது. இதை ஆல்கஹால் தடுத்துவிடுகிறது. இதனால், கணையத்தில் சுரக்கப்படும் என்சைம்கள் கணையத்திலேயே தங்கி, அதன் செல்களைப் பாதிக்கிறது. மது அருந்துவதால் அதிக அளவில் கணைய அழற்சி ஏற்படும். ஆல்கஹால் கணையத்துக்கு அரக்கன் என்பதை உணர வேண்டும்.
சிகரெட் புகைப்பதால் நுரையீரல் மட்டுமல்ல, கணையமும் பாதிப்புக்கு உள்ளாகிறது. கணையத்தில் உற்பத்தியாகும் என்சைம் சிறுகுடலுக்குச் சென்றபிறகு தான், செயல்திறன் பெறும். ஆனால், புகைப் பழக்கமானது கணையத்தில் வீக்கத்தை ஏற்படுத்தி, என்சைம்களை கணையத்தில் இருக்கும்போதே செயல்படத் தூண்டி, பாதிப்பை ஏற்படுத்தும். புகை கணையத்துக்குப் பகை.இதுதவிர,
மதுப்பழக்கமும், புகைபழக்கம், கால்சியம் அளவு அதிகரிப்பது, அதிக கொழுப்பு, ஹார்மோன் சமச்சீரற்ற தன்மையாலும் கணையம் பாதிக்கப்படும். மரபியல் காரணிகள், வெப்பம் அதிகம் உள்ள இடங்களில் வசிப்பவருக்கும் கணைய அழற்சி வரலாம்.
இரைப்பைப் புண் இருப்பவர்களுக்கு ஏற்படுவது போன்ற வயிற்று வலி கணைய நோயிலும் காணப்படும். குமட்டல் வாந்தியும் காணப்படும். அல்சர் வயிற்றுவலி வாந்திக்குப் பின் குறைந்துவிடும். கணைய நோயில் வாந்திக்குப் பின்னரும் வலி குரையாது. இந்த வலி மேல் வயிற்றில் ஆரம்பிக்கும். பின்பு முதுகுப் பக்கத்துக்குப் பரவும். சிலருக்குத் தொப்புளைச் சுற்றி வலி இருக்கலாம். முன்பக்கமாக சாய்ந்து உட்கார்ந்தால் வலி சிறிது குறையும். படுத்தால் வலி அதிகரிக்கும்.வயிற்று உப்புசம் ஏற்படும்.
*பித்தப்பை கல்*

இது பொதுவான பிரச்னையாகி விட்டது. பித்தப்பை கல்லின் அளவுக்கும், பிரச்னைகள் வருவதற்கும் தொடர்பில்லை. 10, 12 மி.மீ., அளவு கல்லை விடவும், 5 மி.மீ.,க்கு குறைவான கற்களே அதிக பாதிப்பை தரும். காரணம். இவை எளிதாக பித்தப் பையில் இருந்து, பித்த நீர் குழாய் வழியே கணையத்திற்கு சென்று விடும்.
பித்தப் பையில் கற்கள் உண்டாகி, பித்த நீர் குழாய் வழியே கணையத்தை அடைந்து, தொற்றை ஏற்படுத்தலாம். நோய் அணுக்களால் பாதிக்கப்பட்ட பித்த நீர் கணைய நாளத்தினுள் புகுந்தால் கணைய அழற்சி ஏற்படுகிறது. அல்லது பித்தக் கற்கள் கணையத்தினுள் சென்றாலும் கணைய அழற்சி ஏற்படலாம். அடிக்கடி ஏற்படும் கணைய அழற்சி பித்தப்பை அழற்சியுடன் இணைந்தே தோன்றுகிறது.
அதிகப்படியான, மது மற்றும் புகைப்பழக்கத்தால், கணையத்தில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த நோய் அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு எதற்கும் கட்டுப்படாது. அதனால் புகைப்பழக்கம், மது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
*கணையம் சரியாக*
*வேலை செய்யவில்லை* *என்பதற்கான*
*அறிகுறிகள்...*
கணையம் சரியாக செயல்படாத போது வயிற்றில் மேல் பகுதியில் தீவிரமான வலி ஏற்படலாம். இந்த வலி முதுகுப்பகுதி வரை பரவலாம். சில சமயங்களில் உட்கார்ந்த நிலையில் அல்லது முன்னோக்கி வளைந்த நிலையில் இருக்கும் போது வலி அதிகமாக இருக்கும்.
கணையம் சரியாக செயல்படாததால் வயிறு வீக்கம், குமட்டல் மற்றும் வாந்தியை ஏற்படுத்தும்.
இது பெரும்பாலும் வயிற்று வலியுடன் தொடர்புடையதாக இருக்கும்.
கணையம் சரியாக செயல்படாமல் போனால், உடல், உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை சரியாக உறிஞ்சிக் கொள்ள முடியாமல் போகலாம். இதனால், எதிர்பாராத எடை இழப்பு ஏற்படக்கூடும்.
கணையம் உற்பத்தி செய்யும் செரிமான நொதிகள் குறைவாக இருப்பதால், கொழுப்பு நிறைந்த மலம், லேசான மிதக்கும் மலம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
கணையத்தில் ஏற்படும் வீக்கம், பித்த நீரின் ஓட்டத்தைத் தடுத்து மஞ்சள் காமாலையை உண்டாக்கும். இதனால், சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறும்.
கணையம் இன்சுலின் உற்பத்தியை குறைப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, சர்க்கரை நோய் ஏற்படலாம். ரத்தத்த சர்க்கரை நீரின் அளவு அதிகரிப்பதால் தொடர்ச்சியான தாகம் மற்றும் சிறுநீர் கழிக்கும் பிரச்சனை உண்டாக்கலாம்.
*கணைய அழற்சி மூன்று வகையாகும்*

1. தீவிர குருதியொழுகு கணைய அழற்சி
2. கடுமை குறைவான கணைய அழற்சி
3. நாட்பட்ட கணைய அழற்சி ஆகியவையாகும்.
*தீவிர குருதியொழுகும் கணைய அழற்சி*

பித்தப்பையில் உற்பத்தியாகி இருக்கும் பித்தக்கற்கள் நகர்ந்து சென்று கணைய நாளத்தை அடைகின்றன. அந்தப் பித்தக் கற்களின் கூர்முனை கணையத்தின் உட்பகுதியைக் குத்தினால் குருதி ஒழுகும். எனவே இதனைத் தீவிரக் குருதியொழுகும் கணைய அழற்சி என்கிறோம்.
பித்தக் கற்கள் கணைய நாளத்தை அடைத்திருக்கலாம் அல்லது கணைய நாளத்தினுள் நாக்குப்புழு உட்சென்று அடைத்துக் கொள்ளலாம். அல்லது குடற்புற சுருக்குத் தசையில் வலிப்பு ஏற்பட்டு கணைய அழற்சி உண்டாகலாம்.நோயணு நிறைந்த பித்த நீர் கணையத்தை தூண்டிக் கணைய நொதியங்களை கூடுதலாகச் சுரக்கச் செய்கிறது.பித்தக் கற்கள் உராய்வினாலும, பித்த நீர் செறிவின் காரணமாகவும் தோன்றிய குருதியொழுக்கின கூடுதலாகச் சுரந்த கணைய நொதியங்கள ், தானே சீரணித்து விடுகின்றன. இந்த நொதியங்கள் கணையத்தில் உண்டாகும் கொழுப்புச் சிதைவுகளையும் சீரணித்து விடுகின்றன.
*கடுமை, வலி குறைவான கணைய அழற்சி*
கடுமையான கணைய அழற்சியின் அறிகுறிகள் அத்தனையும் இதற்கும் உண்டு.ஆனால்...
நோய்க்குறிகளின் கடுமை குறைவாகவும் மெதுவாகவும் தோன்றும்.மயக்கம் ஏற்படாது.
கடுமையான காய்ச்சல் தோன்றும்.
இரைப்பையின் மேல்புறம் மென்மையுற்றிருக்கும்.
இந்நிலை பித்தப்பை அழற்சியைப் போன்று தோன்றலாம். இந்த நோயைக் கண்டுபிடிக்க சிறுநீரைச் சோதித்து சர்க்கரையின் அளவு கூடுதலாகவும் நொதியங்கள் கூடுதலாகவும் வெளியேறுவதைக் கண்டு உறுதி செய்து கொள்ளலாம்.
*நாட்பட்ட கணைய அழற்சி*
நாட்பட்ட கணைய அழற்சி என்பது திசுக்கள் அழிவுபட்டு புதிய நார்த் திசுக்கள் வளர்ந்து அவைகளில் சுண்ணாம்புப் படிவுகள் தோன்றி கணையம் தன்னுடைய இயல்புத் தன்மையை இழந்து இருக்கும் நிலையாகும். இதனால் கணையம் இறுக்க முற்றுச் சுருங்கியிருக்கும்.
கணைய நாளங்கள் அகண்டு இருக்கும். முடிவில் கணையத்தின் அகச்சுரப்பு மற்றும் புறச்சுரப்புப் பணிகளில் கோளாறு ஏற்படுகிறது.
*நோய் அறிகுறிகள்...*

1. நிறைய உணவு அல்லது மது அருந்திய பின்பு திடீரென்று வயிற்றில் தாங்க இயலாத கடுமையான வலி உண்டாகும். இவ்வலி 24 முதல் 48 மணிநேரம் வரை நீடிக்கும்.
2. தரையில் முதுகு படுமாறு வைத்துப் படுத்துக் கொண்டால் வலி சற்றுக் குறையும். வயிற்றின் எல்லா பகுதிக்கும் வலி பரவும். சிலருக்கு தோள்பட்டை மற்றும் முதுகுக்கும் கூட வலி பரவும்.
3. வலியுடன் சேர்ந்து பேதியாகலாம். மலம் எண்ணெய்ப் பசையுடன் இருக்கும்.
4. நின்று கொண்டே முன்புறம் சாய்த்து இரண்டு கைகளையும் முட்டிக்கால் மீது வைத்துக் கொண்டு வாந்தி எடுப்பார்கள். வாந்தி எடுக்கும்போது உண்டாகும் வலியைச் சமாளிக்க இந்த நிலையை நாடுவர்.
5. வயிறு மென்மையாக இருக்கும்.
6. மலம் வெளுத்திருக்கும். நீரில் சர்க்கரை கலந்து சிறுநீராக வெளியேறும்.
7. கடுமையான வயிற்று வலி தோன்றும். அதன் கடுமை தாளாது நோயாளர் அதிர்ச்சியுற்று மயக்கமடைவார்.
8. நாடி விரைவு நாடியாகவும் இழையோடும் நாடியாகவும் இருக்கும்.
9. குருதியழுத்தம் குறையும். கை, கால்,முதலியவை சில்லிட்டு வியர்த்திருக்கும். உதடுகள் நீலித்து இருக்கும்.
10. திடீரென்று நோயாளரின் நினைவு குன்றும்.
11. வாந்தி கடுமையாகவும் தொடர்ந்தும் இருக்கும். வாய்வழியாக உள்ளுக்குள் எது சென்றாலும் சென்ற மறு நிமிடமே வாந்தியாகிவிடும். இந்த அறிகுறிதான் நோயாளரையும் மருத்துவரையும் மிகவும் குழப்பத்திற்கு உள்ளாக்குகிறது.
12. பிறகு வயிற்றின் மேற்புற தோலில் நீலநிறத் திட்டுக்கள் தோன்றும்.
13. வயிற்றுத் தசைகள் இறுகிக் கடினமாகத் தோன்றும். ஆனால் அடிவயிறு இளக்கமாக இருக்கும்.
14. குடலின் அலைவு இயக்கம் தானே குறையும்.
15. கடுமையான வயிற்றுவலி துவங்கும். இந்த வலி, மேல்வயிற்றில் துவங்கி, முதுகுக்கு பரவும். சிலருக்கு தொப்புளை சுற்றி வலி இருக்கலாம்.
கணையத்தைப் பாதிக்கும் நோய்களில் மிகவும் முதன்மையானது கணைய அழற்சியாகும். இந்த நோயின் காரணத்தால் ஒவ்வோர் ஆண்டும், இந்தியாவில் மட்டும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்.
*கணையம் வீக்கம் மற்றும் கணைய அழற்சி என்றால் என்ன...*
கணைய அழற்சி என்பது உங்கள் கணையத்தின் வீக்கம் ஆகும். நாள்பட்ட கணைய
அழற்சி என்பது கணையத்தின் தொடர்ச்சியான வீக்கத்தால் ஏற்படும் ஒரு நிலை. இந்த வகை கணைய அழற்சியானது கடுமையான கணைய
அழற்சியை விட மிகவும் கடுமையான நோயாகும் மற்றும் கடுமையான நீரிழிவு அல்லது சிறுநீரக செயலிழப்பு போன்ற கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
*கணையத்தைப் பாதிக்கும் நோய்கள், அதற்கான காரணங்கள்*
கணைய அழற்சி,
கணையப் புற்றுநோய்,
சிஸ்டிக் பைப்ரோசிஸ்,
மது மற்றும் பித்தப்பைக் கற்களால் ஏற்படும் நோய்கள்

*கணைய அழற்சி*
பித்தப்பைக் கற்கள் அல்லது அதிக மது அருந்துதல்
பொதுவாகக் கணைய அழற்சிக்குக் காரணமாக அமைகின்றன.அதுமட்டுமன்றிரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்கும் போதும் (உயர் டிரைகிளிசரைடு டி.ஜி.எல். அளவு) கணைய அழற்சி ஏற்படுபடுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
*இதன் அறிகுறிகள்*
வயிற்றின் மேல் பகுதியில் வலி உணர்வு,
உணவு உட்கொண்டபின் ஏற்படும் வயிற்று வலி,
முதுகு பகுதிக்கும் பரவுதல்,
உடல் எடை குறைவது,
சில நேரங்களில் காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை ஆகும்.
*கணையப்*
*புற்றுநோய்*
புற்றுநோய் என்பது இக்காலத்தில் மனிதர்கள் இடையே நாளுக்கு நாள் கூடி வருகிறது. பலவகையான புற்றுநோய்கள் இருக்கின்றன. அதில் ஒன்று கணையப் புற்றுநோய். கணையத்தில் உள்ள செல்கள் தம் கட்டுப்பாட்டை இழந்து பல்கிப் பெருகுவதால் கணையப் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்தநோய் முற்றும் போது அதன் செல்கள் பிறபாகங்களுக்கும் பரவுகின்றன.
*இதன் அறிகுறிகள்*
முதுகில் பரவும் வயிற்று வலி,
பசியின்மை அல்லது எதிர்பாராத எடை இழப்பு,
தோல் மற்றும் கண்களில் மஞ்சள் நிறம் ஏற்படுவது (மஞ்சள் காமாலை),
வெளிர் நிற மலம்,
கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர்,
தோல் அரிப்பு,
உடலில் ரத்தக் கட்டிகள்.
நீரிழிவு நோயின் அறிகுறிகள் (மீறியப் பசி, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, மீறிய தாகம்)
*சிஸ்டிக்பைப்ரோசிஸ்*
*(மூச்சுக்குழாய் அழற்சி*
*Cystic Fibrosis )*
இந்த நிலையில், மூச்சுக்குழாய் குழாய்களில் காற்றுப்பாதைகள் சேதமடைகின்றன. அவை அசாதாரணமாக விரிவடைந்து வடுவை உருவாக்குகின்றன. இதனால் நுரையீரலுக்கு உள்ளேயும் வெளியேயும் காற்றின் இயக்கம் கடினமாகிறது. செயல்பாட்டில், மூச்சுக்குழாயிலிருந்து சளியை வெளியேற்றுவது கடினமாகிறது.
*நாள்பட்ட நோய்த்தொற்றுகள்*
முன்னர் குறிப்பிட்டபடி, நுரையீரல் மற்றும் சைனஸில் உள்ள தடிமனான சளி பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளைப் பிடிக்கிறது, அங்கு அவை பெருகும். செயல்பாட்டில், நபர் சைனசிடிஸ், மூச்சுக்குழாய் அழற்சி அல்லது நிமோனியா போன்ற தொற்றுநோய்களை உருவாக்குகிறார். அங்கு இனப்பெருக்கம் செய்யும் பாக்டீரியாவின் சில விகாரங்கள் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டவையாக இருக்கலாம், இது சிகிச்சையை கடினமாக்குகிறது.
*நாசி பாலிப்ஸ்*
சிஎஃப் உள்ளவர்களுக்கு, மூக்கின் உள்ளே உள்ள நாசிப் புறணி வீங்கி வீக்கமடைகிறது. மேலும், பாலிப்ஸ் எனப்படும் சிறிய, மென்மையான மற்றும் சதைப்பற்றுள்ள வளர்ச்சிகள் அங்கு உருவாகின்றன.
*ஹீமோப்டிசிஸ்*
முன்னர் விவரிக்கப்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி நுரையீரலில் உள்ள இரத்த நாளங்களுக்கு அடுத்ததாக நிகழும்போது, தொற்றுடன் சேர்ந்து சுவாசப்பாதையில் ஏற்படும் சேதம் நபருக்கு இருமல் இரத்தத்தை ஏற்படுத்தும். இவை இரத்தத்தின் சில துளிகள் மட்டுமே என்றாலும், இந்த நிலை உயிருக்கு ஆபத்தானதாக மாறும்.
*நியூமோதோராக்ஸ்*
நுரையீரல் மற்றும் மார்புச் சுவருக்கு இடையில் ஒரு சிறிய குழி அல்லது இடைவெளி உள்ளது. நியூமோதோராக்ஸ் என்பது நுரையீரலில் இருந்து இந்த இடத்தில் காற்று கசியத் தொடங்கும் ஒரு நிலை, அதன் பிறகு ஒரு பகுதி அல்லது முழு நுரையீரல் சரிந்துவிடும். நபர் மார்பில் கூர்மையான வலி, மூச்சுத் திணறல் மற்றும் மார்பில் குமிழ் போன்ற உணர்வை அனுபவிக்கிறார்.
*நுரையீரல் செயலிழப்பு*
நாள்பட்ட CF நுரையீரல் திசுக்களை படிப்படியாக சேதப்படுத்தும், அது இனி வேலை செய்யாது. இது மூச்சுத்திணறல் அல்லது நுரையீரல் செயலிழப்பு என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது ஆபத்தானது.
*கடுமையான அதிகரிப்புகள்*
நுரையீரல் செயலிழப்பு ஏற்படுவதற்கு முன், அறிகுறிகள் மிகவும் தீவிரமடையும் (மோசமாக) நிலைகளில் ஒன்றாகும். தடிமனான சளி மற்றும் மூச்சுத் திணறலை உருவாக்கும் அதிக இருமல் இதில் அடங்கும். நபர் சோர்வு, குறைந்த ஆற்றல் மற்றும் எடை இழப்பு ஆகியவற்றை அனுபவிக்கிறார்.
நீண்ட காலமாக சர்க்கரை கோளாறு, BP இருந்து, சமீப நாட்களில், சர்க்கரை கட்டுக்குள் இல்லாமல் இருப்பது, 60 வயதிற்கு மேல் முதன்முறையாக சர்க்கரை கோளாறு வருவது, மஞ்சள் காமாலை, காரணம் இல்லாத உடல் எடை குறைவு இருந்தால், உடனடியாக கணைய பரிசோதனை அவசியம்.
ஒரு காலத்தில் கணையத்தில் கோளாறு என்றாலோ, ஆபரேஷன் என்றாலோ மரணம் உறுதி என்று கருதப்பட்டது. இன்றைய நிலையில்
கணையப்புற்றின் முற்றிய நிலைத் தவிர இதர கணைய நோய்களுக்கு ஆபரேஷனின்றி குணப்படுத்த சித்தா மற்றும் ஆயுர்வேத வைத்தியத்தில் அரிய பல மருந்துகள் உள்ளன.
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏