பெண்களைப் பற்றி ...

மணக்கால் அய்யம்பேட்டை | 10:28 AM | Best Blogger Tips

May be an image of 1 person

பெண்களைப் பற்றி ஒரு ஆண் எழுதிய
மனதை தொடும் வரிகள்.
 
நான் பிறந்த போது என்னைத் தூக்கி அரவணைத்தது ஒரு பெண்- என் அம்மா
 
என் குழந்தைப் பருவத்தில் எனக்காகப் பரிந்து என்னுடன் விளையாடினாள் ஒரு பெண் - என் சகோதரி. 
 
நான் பள்ளிக்கு சென்ற போது அன்புடன் கல்வி கற்பித்தவள் ஒரு பெண் - என் ஆசிரியை 
 
நான் கவலையுடன் இருந்த போது தோள் கொடுத்து ஆறுதல் சொன்னாள் ஒரு பெண் - என் தோழி 
 
எனக்கு உறவாகவும் உயிராகவும் துணையாகவும் இருந்தாள் ஒரு பெண் - என் மனைவி 
 
நான் கோபமாக இருந்தபோது தனது மழலைச் சொற்களால் என்னை மயங்க வைத்தாள் ஒரு பெண் - என் மகள் 
 
நான் இறக்கும் போது என்னைத் தன்னுள் உறங்கச் செய்வாள் ஒரு பெண் - என் தாய்நாடு 
 
ஒரு பெண் வாழ்க்கையில் தனக்கு ஏற்படும் கவலைகளையும் துன்பங்களையும் தனது பிராத்தனைகளாலும் அசையாத நம்பிக்கையாலும் எதிர்கொள்கிறாள். 
 
நீ ஒரு ஆணாக இருந்தால் ஒவ்வொரு பெண்ணையும் போற்றி வணங்கு! 
 
நீ பெண்ணாக இருந்தால் அதற்காகப் பெருமைப்படு.....