திருமண தடை உள்ள ஆண்களுக்கு

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:20 | Best Blogger Tips

 




திருமண தடை உள்ள ஆண்களுக்கு

வழிபாடு செய்ய இருக்கிறது ஒரு திருத்தலம்!

ஒரு குடியானவருக்கு மூன்று மகள்கள்!

அவரின் சகோதரியும், சகோதரியின் கணவரும் இறந்த காரணத்தால், அவர்களின் மகனை தன்னோடு வைத்து கொண்டு தன்னிடம் இருந்த விவசாய பூமியில் பாடுபட்டார்!

அந்த இளைஞர், அதாவது அவரின் அக்கா மகனுக்கு குடியானவர் எந்தவொரு கூலியும் கொடுப்பது இல்லை!!!!

"மாப்பிள்ளை, உனக்கென்று மூன்று முறைப்பெண்கள் இருக்கிறார்கள் அவர்களில் ஒருத்தியை உனக்கு கட்டி வைக்கிறேன்என்று உறுதி மொழி கொடுத்து வேலை வாங்கினார்.



அந்த இளைஞனும் கடுமையாகப் பாடுபட்டார்.

முதல் பெண்ணை வெளியூரில் இருந்த பெரிய பணக்கார வீட்டிற்கு திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்துவிட்டார்.

இளைஞனும் தன் மாமாவிடம், ”என்ன மாமா எனக்கு ஒருத்தியை கட்டி கொடுப்பதாக சொன்னீர்கள்" என்று கேட்க அந்த குடியானவனும்,...

"இல்லை மாப்பிள்ளை இன்னமும் 2 பெண்கள் இருக்கிறார்கள் இல்லையா? அவர்களில் ஒருத்தி உனக்குத்தான் " என்று சொல்லிட்டார்.

சரி, மாமாவே சொல்லிட்டாரே என்று அந்த இளைஞனும் பொறுத்து கொண்டார்.

அதன் பின்னர்அடுத்ததாக இருந்த இரண்டாவது பெண்ணை வேறு ஒரு நல்ல வசதியான இடத்தில் பேசி முடித்து விட்டார்!

இளைஞனுக்கு கூலி கொடுக்காமல் வேலை மட்டும் வாங்கிக் கொண்டிருந்ததால், குடியானவரும் நல்ல வசதியுள்ளவராக ஆகிவிட்டார்.

முறைப் பையனும், “இந்தப் பெண்னையாவது கட்டி வைப்பீங்கன்னு பார்த்தேனே மாமாஎன்றார்!

குடியானவரும், “என்ன மாப்பிள்ளை இன்னொருத்தி இருக்காள் அவளை உனக்கு கட்டி வைக்கிறேன்என்றார்!

அந்த இளைஞனும், “அதுக்கு என்ன சாட்சி? முன்னையே இரண்டு முறை ஏமாற்றி விட்டீர்களே?” என்று கேட்டார்.

அந்த விவசாயபூமிக்கு பக்கமாக மலைப்பாங்கான ஏரியாவில் ...அந்த சமயத்தில் அந்த பக்கமாக "ஒரு கரடி" போய் கொண்டு இருந்தது.

இந்த குடியானவரும் அந்த முறைப் பையனிடம், “அதோ அந்தக் கரடி சாட்சியாக சொல்கிறேன் மாப்பிள்ளை.

என் கடைசிப் பெண்ணை உனக்கே கட்டி வைக்கிறேன்என்று சொல்லிவிட்டு அப்போதைக்கு விசயத்தை தள்ளிப் போட்டார்.

ஆனால் அந்த விவசாயி சொன்னபடி நடக்காமல் மூன்றாவதுபெண்ணையும் வேறு இடத்திற்கு சம்பந்தம் பேசி விட்டார்.

தன் மாமனிடம் எந்தகூலியும் வாங்காமல் உழைத்து கொடுத்த இளைஞர் மன்னனிடம் சென்று முறையிட்டார்!

சபைக்கு அழைக்கப்பட்டார் குடியாவர்.

மன்னர் விசாரிக்க, குடியானவரும்தான் தன் பெண்ணை இளைஞனுக்கு கட்டிக் கொடுப்பதாக சொல்லவில்லைஎன்று குற்றத்தை மறுத்தார்.

"அவன் என் அக்கா மகன்.

அவனுக்கு உழைத்த கூலி என்னிடம் உள்ளது. அவனுக்குத் திருமணம் அமையும் போது கொடுக்கத் தயாராக இருக்கிறேன் மன்னா " என்று சொன்னதோடு நிறுத்திக் கொண்டார்!

இளைஞனோ எனக்கு பெண்ணைத்தான் கட்டி வைக்கவேண்டும். கூலி வேண்டாம் மன்னா என்று மறுத்தார்.

அப்போது அந்த குடியாவரும்நான் பெண்ணைக் கட்டிக் கொடுக்கிறேன் என்று சொன்னதிற்கு யார் சாட்சி?” என்று கொக்கி போட்டார்.

மன்னரும், ”ஆமாம், சாட்சி இல்லாமல் வழக்கு தீர்வாகாது. உன் சாட்சிகள் யாராவது இருந்தால் நாளைக்கு அழைத்து வா.."என்று சொல்லிட்டார்.

அந்த இளைஞர்

மாமா சொன்னதிற்கு கரடிதான் சாட்சி மன்னா

என்று சொல்ல அரசவையில் ஏக சிரிப்பு.

ஆனால் மறுநாள் அந்த அரசவையில் நேரடியாக கரடி சாட்சி சொல்லவந்தது....

நடந்த அனைத்து விஷயங்களையும் அரசவையில் சொல்லியது.

அந்த பையனும் மூன்றாவதாக இருந்த தன் முறைபெண்ணின் கழுத்தில் தாலியைக் கட்டினார்.

இதில் கரடியாக வந்தவர் அந்த மலையில் வாழ்ந்து வந்த திருமூலர்தான்.

திருமணம் நடந்த இடம்:

சேலம், உத்தமசோழபுரம்!

இவ்வூரில் கரபுரநாதர் என்ற சித்தரின் சந்நிதி உள்ளது.

திருமணம் கூடிவராமல் இருக்கும் ஆண்கள் கோயிலின் உள்ளே இருக்கும் கரடிசித்தரை (திருமூலரை) வழிபட்டு பின்னர் ஈஸ்வர தரிசனம் செய்யவேண்டும்.

உங்களுக்கு விரைவில் திருமணம் கூடி வரும்!

சேலம் உத்தம சோழபுரம் ஸ்ரீகரபுரநாதர் திருக்கோவில்...

சேலத்தில் உள்ள மிக பழமையான கோவில்களில் இதுவும் ஒன்று..

இங்கு முகூர்த்தநாட்களில் நிறைய திருமணங்கள் நடைபெறும்...

சிறு பாலகனுக்கு முடி சாய்ந்து கொடுத்த சுவாமி என்பதால் இந்த கோவிலில் உள்ள லிங்கம் சற்று சாய்ந்தபடி இருக்கிறது.

ஒளவையார், நாரதர், அருணகிரிநாதர், திருநாவுக்கரசர், திருமூலர் ஆகியோர் வந்து வழிபட்ட திருத்தலம்.

இங்கு ஒளவையாருக்கு சிலை உள்ளது.

ஒளவையாரின் வளர்ப்பு மகள்களான அங்கவை மற்றும் சங்கவை ஆகியோருக்கு திருமணங்கள் ஆன இடம்.

சேர, சோழ, பாண்டியர் வந்து வழிபட்ட திருத்தலம்.

சித்தர் கரடி வடிவில் வந்து பூஜை செய்த திருத்தலம்

 

 

நன்றி இணையம்