இந்து சீரழிவு சக்திகளெல்லாம்...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:42 | Best Blogger Tips

 


அதிகாலை எழுந்து அமர்ந்திருக்கின்றான் நல்ல இந்து, வழக்கமாய் ஆலயம் வழிபடும் அவனுக்கு இன்னொரு ஆலயமும் திறந்திருக்கின்றது

அது காலதேவன் திறந்து வைத்த நீதிதேவன் ஆலயம், ஐந்து வருடத்துக்கு ஒருமுறை திறக்கும் நீதியின் ஆலயம் அது, அங்கு பக்தன் கைகூப்பி நிற்பதில்லை, வழிபட்டு நிற்பதில்லை மாறாக அவன் விரல் நீட்டி சொல்லும் நியாங்கள் நீதிதேவனால் ஏற்கபடும்

இன்று அவன் விரல் நீட்டி குற்றம் சாட்டி தனக்கான நியாயம் கேட்க வேண்டிய அந்த நாள், அதிகாலையிலே அதற்கான ஏற்பாடுகளை கால தேவன் செய்ய ஆலயத்தை திறந்துவிட்டான்

இதோ இந்து எழும்பிவிட்டான் தன் பூஜை அறையில் வழக்கம் போல் பிரார்த்திவிட்டு நீதிதேவன் கோவில் ஏக அவன் தயாராகின்றான்

அவன் பூஜையறையில் திருப்பதி வெங்கடாசலபதி சிரித்து கொண்டிருக்கின்றார், அவரை நோக்கி புன்னகைக்கின்றான் வட வேங்கடம் என அழைக்கபட்ட தமிழகத்து திருப்பதி அடுத்தமாநிலத்துக்கு சென்றது எப்படி என அவனுக்கு சிந்தனை செல்கின்றது, அது சக்தி மிக்க திருமலை தெய்வம் தானே தப்பி சென்ற கதை என்பதை விளங்கி மெல்ல புன்னகைக்கின்றான்

அதோ தமிழ் இந்து சேக்கிழார் பாடி, தமிழ்பெரு மன்னன் ராஜேந்திர சோழன் ஆலயம் கட்டிய திருகாளத்தியும் தமிழகத்தில் இல்லை என்பதை மெல்ல உணருகின்றான், ஏன் என சிந்திக்கும் பொழுது பெருமூச்சு ஒன்றே அவனுக்கு பதிலாக கிடைக்கின்றது

தமிழன் என அடையாளபடுத்தபட்டு இந்துவாக அவன் இங்கு இழந்த ஆலயங்களையெல்லாம் நினைத்து பார்க்கின்றான்

அவன் பார்வை பிள்ளையார் மேல் விழுகின்றது, உன்னையா..செருப்பாலா... அய்யோ என அவன் கண்கள் பனிக்கின்றன

மெல்ல பார்வையினை திருப்புகின்றான் அங்கே ராமன் படம் இருக்கின்றது, வாழும் பொழுதுதான் நிம்மதி பெறாத ராமா இத்தனை லட்சம் ஆண்டுகள் கழித்தும் இந்த கும்பல் உன்னை..அதுவும் பொது இடத்தில் ..ராவணன் கூட செய்யாத கொடுமையல்லவா அது, என்னவெல்லாம் பேசினார்கள், என்னவெல்லாம் அவமானபடுத்தினார்கள் என அவன் விம்முகின்றான்

அடுத்திருக்கும் மீனாட்சி அன்னை அவன் கண்களுக்கு தெரிகின்றாள், அவளும் காமாட்சியும் சில காட்டுமிராண்டிகள் வாயில் சிக்கியதெல்லாம் அவன் நினைவுக்கு வருகின்றன

அவர்களை வணங்கிவிட்டு திரும்பினால் கண்ணன் புன்னகைக்கின்றான்

கண்ணா என அவன் காலில் விழுந்து கதறுகின்றான் பக்தன், கண்ணா..கண்ணா எவ்வளவு பெரும் ஞான பொக்கிஷம் நீ, எவ்வளவு பெரும் தத்துவ ஞானி நீ, எத்தனை கோடி பேருக்கு ஆபத்பாந்தவன் நீ.. உன்னையா பொறுக்கி என்றார்கள் துஷ்ட சக்தி பொறுக்கி எடுத்த பொறுக்கிகள் என அவன் அழுகின்றான்

சிசுபாலன் கூட பேசாத பேச்செல்லாம் உன்னை நோக்கி சொன்னார்களே கண்ணா என அவன் உள்ளம் விம்முகின்றது

மாபெரும் விஞ்ஞானி ஐசன்ஹோவரும், ஒப்பன் ஹீமரும் ஐன்ஸ்டீனும் படித்த கீதையினை தமிழக இந்து படிக்க கூடாதாம், இதெல்லாம் நாங்கள் கண்ட கொடுமை கண்ணா என அவன் கதறும் பொழுதே அவன் குரல் உடைகின்றது

கண்களை துடைத்துவிட்டு நோக்கினால் அருகில் முருகபெருமான் அமர்ந்திருக்கின்றார், முருகா ஞானபண்டிதா தமிழ் இந்துவின் தனிபெரும் தெய்வமே உன்னையா.. உன் செந்தூர் பதியில் உருவான கவசத்தையா.. அய்யோ என அலறி கொண்டே அவன் காலில் விழுந்து அழுகின்றான்

பூஜை மேடையின் கீழ் புத்தகங்கள் பெரிய புராணமும், கம்ப ராமாயணமும், கீதையுமாக அடுக்கி வைக்கபட்டிருக்கின்றன

இவைகளையெல்லாமா எரிக்க சொன்னார்கள், இவைகளை எல்லாமா மறைத்து அழிக்க சொன்னார்கள், சொன்ன கூட்டமா இன்று நீதி தேவன் கோவிலுக்கு நீதிகேட்டும் வருகின்றது என்பதில் அவனுக்கு ஆவேசம் வருகின்றது

ஆனாலும் பூஜை அறையில் அமைதியாய் அமர்ந்திருக்கின்றான், அவன் மனம் ஆழ்ந்த சிந்தனைக்கு செல்கின்றது

ஒரு இந்துவாக இந்த மண் எவ்வளவு இழந்தது என்பதை எண்ணி பார்க்கின்றான், 14 ம் நூற்றாண்டில் சோழ பாண்டிய வம்சம் சரிந்து மாலிக்காபூர் படையெடுத்த காலத்தில் விழ்த்தபட்ட மண் இது

நாயக்கரின் சொற்பகாலம் மறைந்து மறுபடி ஐரோப்பியரிடம் சிக்கியது

மாலிக்காபூர் நேரடியாக செய்ததை தன் இந்திய கைகூலிகள் மூலம் செய்தான் வெள்ளையன், இந்துக்களை இந்துக்களாலே அழிக்கும் ஒரு நூதன திட்டம் அவனிடம் இருந்தது

இந்துதர்மம் இருந்ததாலே இம்மண் செல்வம் கொழிக்கும் மண்ணாய் இருந்தது என்பதை கண்டு வியாபாரம் செய்ய வந்த வெள்ளையன் , தன் கைகூலிகள் மூலம் அதன் பெருமையினை அழிக்க முயன்றான், அதன் அழிவில்தான் தன் ஆதிக்கம் நிலைபெறும் என்றும் கண்டான்

அதிலிருந்து உருவானது இந்து சீரழிவு

அரசனாகவோ நில சுவாந்தாரகவோ படைதளபதியாகவோ ஏன் நாட்டாமையாக கூட இல்லா பிராமண இனம் குறிவைத்து அடிக்கபட்டது, அவர்கள் அழிந்தால் இந்துமதம் அழியும் என்பது அவன் கணக்கு, அதற்கு துணைபோனது அவனின் கைகூலிகள்

அதை சீர்திருத்தம், பகுத்தறிவு, விஞ்ஞானம், புரட்சி, அடிமை ஒழிப்பு என பலபெயரில் இவர்கள் முகமூடியாய் சொன்னாலும் ஒரே இலக்கு இந்து அழிப்பு

அதில் முதலில் பலியானது இந்துக்களின் கோவில் நிலங்கள், அது அழிய அழிய கோவில்களின் வருமானம் தடைபட்டது, அரசனும் இல்லா நிலையில் அவை பாழாயின

அவற்றின் கல்வெட்டு தூண்களும் கல்லும் அணைகட்டவும், அஸ்திவாரத்துக்கும் வெள்ளையனால் அகற்றபட்டன

எவ்வளவோ ஆலயம் அழிய சில மட்டும் மிஞ்சின, ஆம் எஞ்சிய எச்சம் தான் இன்றிருக்கும் ஆலயங்களெனில் மொத்த கணக்கென்ன என்றபொழுது இந்துவின் தலை சுற்றிற்று, அவ்வளவா இழ்ந்துவிட்டோம்

அடுத்து இந்துமதம் தமிழ் இலக்கியத்தில் வாழ்வதை கண்டான் வெள்ளையன், தமிழுக்கான சோதனை அப்பொழுது தொடங்கிற்று, இந்து தர்மம் இலக்கியத்தில் இருந்து பிரிக்கபட்டு திரிபுகள் புகுத்தபட்டு இந்து ஞானி வள்ளுவன் கூட மாற்றபட்டான்

சிவசிவ, ஹரே ராமா ஹரே கிருஷ்ணா, முருகா, தாயே பராசக்தி என பன்னெடுங்காலம் குரல்களாய் ஒலித்த தமிழக தெருக்கள் குபிர் திடீர் புரட்சியில் சிக்கின

கல்வி என்பதும் மருத்துவம் என்பதும் இந்துமதம் அழிக்க என்றபொழுது ஆதீனங்களும் மடங்களும் இந்துக்களும் எவ்வளவோ போராடியும் வெள்ளையனின் கைகூலி தந்திரம் முன் முழு வெற்றி இல்லை

இந்து தெய்வங்களை பழிப்பதும் , ஆலயங்களை இடிப்பதும் புரட்சி என்றாயிற்று, ஆலய சிலைகளை விற்பது தொழிலுமாயிற்று

அந்நெரம் வெள்ளையன் கிளம்ப இனி இது நம்பூமி என ஆசுவாசபட்ட இந்துக்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது, ஆம் டெல்லியினை கைபற்றிவிட்டு கிளம்பிய கோரி முகமது தன் அடிமைகளை ஆட்சி செய்ய வைத்துவிட்டு சென்றது போல் வெள்ளையன் வைத்த அடிமைகளும் அவன் புதைத்துவிட்டு சென்ற கண்ணி வெடிகளும் பின்புதான் புரிந்தன

தேசம் தன் இந்து மீட்பு போருக்கு ஆயத்தமாயிற்று

ஆங்கிலேயனுக்கு எதிரான போர் தமிழகத்தில் இருந்து தொடங்கியிருக்கலாம் ஆனால் இந்து மீட்புபோர் வடக்கே இருந்துதான் தொடங்கிற்று

தெற்கே நிலை வெள்ளையன் எங்கே எதை புதைத்து வைத்தான் என தெரியாத அளவு கண்ணிவெண்டிகளு, கண்ணி சிக்கலுமாய் இருந்தன

அதில் இந்துக்கள் திணறும்பொழுதே யாரும் எதிர்பாராத வகையில் இந்து சீரழிவு சக்திகளெல்லாம் தொழில்நுட்ப மாயையில் எங்கோ சென்று அமர்ந்து கொண்டன, அமர்ந்தவை இந்து என்பதையும் இந்துக்கள் என்பதையும் மறைக்க என்னவெல்லாமோ செய்தன

கடைசியில் தமிழனுக்கு மதமில்லை எனும் அளவு சொல்லி, கால்டுவெல் தெய்வமாக்கபட்ட கொடுமையெல்லாம் நடந்தது

இந்துக்கள் மெல்ல விழித்தார்கள் அவர்களுக்கு அப்பொழுதுதான் புரிந்தது, ஆம் இந்த தர்மம் எப்பொழுதும் ஓய்வில் இருக்க கூடிய வரம் கொண்டதல்ல, இது போர் புரிந்து கொண்டே தன்னை தற்காக்க வேண்டிய தர்மம்

புத்தனின் அஹிம்சை முதல் அலெக்ஸாண்டரின் வாள் வரை அது எதிர்த்து போரிட்டது, சமண தத்துவம் முதல் கஜினி கோரியின் வாள் வரை அது சந்தித்தது

அப்படியே பின்னாளில் வெள்ளையனின் துப்பாக்கியினை சந்தித்தும் அது மீண்டது

இனி அது வெள்ளையன் அடிமைகளிடம் இருந்து மீள அடுத்தபோர் அவசியம் என்பதை உணர்ந்தது

ஆனால் முதலில் அது திகைத்தது யார் கைகூலி யார் தேசாபிமானி யார் எதிரி? யார் வழிகாட்டி என தெரியாமல் அது குழம்பிற்று, எப்படி யார் தலமையில் யாரோடு யுத்தம் புரியவேண்டும் என்பது அதற்கு தெரியவில்லை

சங்கரருமில்லை, வீர சிவாஜியுமில்லை, பிருத்திவிராஜனுமில்லை என அது அழுது தேடியது

காலதேவன் அவர்களுக்கொரு வழிகாட்டினான், கஜினியால் அழிக்கபட்ட சோமநாதபுரி ஆலயம் சீரமைக்கபட்டபோது மெல்ல வெளிச்சம் தெரிந்தது

பின் ஒரு அணிதிரண்டது அது ராமனை கொண்டாடிய சேனையானது, விஸ்வாமித்திர மகரிஷியின் தவம் வழிகாட்ட தேசத்துக்கே வழிகாட்டினான் ராமன்

அதுவரை இருளில் யார் எதிரி என தேடிகொண்டிருந்த தமிழக இந்துக்களுக்கு பெரும் வெளிச்சம் கிடைத்தது, அந்த வெளிச்சத்தில் பகைவர் அழகாக தெரிந்தனர்

ஓஓ இந்துக்கள் பண்டிகையினை கொண்டாட கூடாது என கருதுவர் யார்.. அவர்களே

இந்து ஆலயங்கள் அழிய எல்லா சதியும் செய்வது யார்.. அவர்களே

இந்து சம்பிரதாயங்களை கொச்சைபடுத்தி இந்து தர்மத்தை பூண்டோடு அழிக்க சுற்றி திரிவது யார்.. அவர்களே

தோளில் கைபோட்டு நண்பனாய் பழகி பின் அழித்தொழிக்கும் துரொகிகள் யார்.. அவர்களே

இந்து ஆலய நிலங்கள் முதல் சிலைகள் வரை அழித்து, இந்து ஆலய நிர்வாகத்தையும் அழித்து இந்துக்களை கோவிலில் இருந்து பிரித்து அவை அழிய வழிசெய்திருப்பது யார்.. அவர்களே

ஆம், வடக்கே இருந்து எழும்பிய பேரோளியில் சுமார் 600 ஆண்டுகால பெரும் இருளில் இங்கு இந்து இழந்தததையும் அடுத்த 50 ஆண்டுகளில் வெள்ளையனின் எச்சங்கள் இங்கு செய்த இந்துவிரோதங்களும் அவனுக்கு அழகாய் தெரிந்தன

தெளிந்த இந்து இப்பொழுது யார் எதிரி என உணர்ந்துவிட்டான், அவன் சிந்தனை தெளிவினை கொடுக்க கிளம்ப ஆயத்தமானான்

இதோ தீபம் ஏற்றி வைத்து அதில் சத்தியமும் செய்கின்றான், இந்த போரில் எக்காரணம் கொண்டும் இந்து துரோகம் செய்யமாட்டேன் என அவன் அக்னிபகவான் முன்னால் உறுதியெடுக்கின்றான்

பூக்களை எடுத்து முருகனுக்கும் கண்ணனுக்கும் ராமனுக்கும் சாற்றுகின்றான், இனி எந்த அவமானமும் இங்கு உங்களுக்கு நிகழாது என்பதன் உறுதி அது

நற்புகையினை பரவவிடுகின்றான்,இதோ இனிய சனாதான தர்மம் பரவ தொடங்கிவிட்டது எனும் அடையாளம் அது

நெற்றியில் விபூதி இட எடுக்கின்றான், அதை நெற்றியில் பூசுகின்றான் ஆம் கழுத்தில் பூசாமல் நெற்றியில் பூசி மீதி விபூதியினை கீழே கொட்டாமல் பவ்வியமாக தட்டில் வைக்கின்றான்

தெய்வத்தை விழுந்து வணங்குகின்றான்

பூஜை அறையினை விட்டு வெளிவந்து அறையின் படங்களை நோக்குகின்றான், முன்னோர்கள் எல்லாம் அவனை வாழ்த்துவது அவனுக்கு புரிகின்றது

நீதிதேவன் ஆலயம் நோக்கி நடக்கின்றான், நடக்கும் வழியில் சீரழிந்த இந்து ஆலயமும் இடிபாடுகளும் ஆக்கிரமிக்கபட்ட நிலங்களும் அவன் கண்களில் படுகின்றன

நீதிதேவனிடம் இவற்றை எல்லாம் சொல்லவேண்டும் என அவன் உறுதி பூண்டுகொண்டே நடக்கின்றான்

அதோ அவன் ஆலயம் வந்துவிட்டது, உள்ளே கம்பீரமாக அமர்ந்திருக்கின்றான் நீதிதேவன்

காலதேவன் இந்துவினை வரிசையில் நிற்க சொல்லி ஒவ்வொருவராக அனுப்புகின்றான், நீதிதேவனின் பூதகணங்கள் ஒவ்வொருவன் தகுதியும் சோதித்து உள்ளே அனுப்புகின்றன

நீதிதேவன் சன்னதியில் தன் விரலை நீட்டுகின்றான், அவன் காதில் "வெற்றிவேல் வீரவேல்" எனும் பெரும் குரல் கேட்கின்றது, ஹரே ராமா..ஹரே கிருஷ்ணா எனும் பெரும் கோஷம் அவன் காதில் விழுகின்றது

அண்ணாமலையாரை வணங்கியபடி நரேந்திர தத்தா எனும் விவேகானந்தரை மனமார நினைத்தபடி கையினை உயர்த்தி விரலை நீட்டுகின்றான் இந்து

"எழுந்தது பார் யுகபுரட்சி" என்ற அந்து இந்து இந்திய கவிஞனின் வரியும் அவன் நினைவோடு சேர்ந்து கொள்கின்றது.

நீதிதேவன் அவன் விரலை நீட்டிய திசையினை உற்றுபார்க்கின்றான், இந்து சொல்லும் குற்றசாட்டினை பதிவு செய்து கொள்கின்றான், விரைவில் முடிவினை அறிவிப்பேன் என அந்த இந்துவினை சைகயால் போக சொல்கின்றான்

தன் கடமையினை சரியாக செய்துவிட்ட திருப்தியில் நீதிதேவனிடம் விடைபெற்று காலதேவன் அறிவிக்க போகும் தீர்ப்புக்காக கண்ணன் சிலைமுன் முருகனின் வேல் ஏந்தி காத்திருக்கின்றான் இந்து

அதோ அங்கே விடிந்து விட்டது, இதோ இங்கு விடிவெள்ளி தெரிந்துவிட்டது நிச்சயம் விரைவில் விடியும் என அவன் காதில் சொல்லி அவன் கண்ணீரை துடைத்து நம்பிக்கையாய் தலைவருடி கொண்டிருக்கின்றது ஒரு அன்னை பராச்கதியின் கரம்

 

நன்றி இணையம்