ஆரூரில்இருப்பதேஇன்பம்*

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:17 | Best Blogger Tips

 


முன்னொரு காலத்தில் ஒரு சிவராத்திரி நன்னாளில் வில்வ மரத்தின் மீது இருந்த ஒரு குரங்கு அந்த மரத்தில் இருந்து ஒவ்வொரு வில்வ இலையாக கிள்ளி கீழே போட்டது. விடிந்து பார்த்தால் அந்த மரத்துக்கு கீழ் ஒரு சிவலிங்கம்.

சிவராத்திரி தினத்தன்று

இரவு முழுவதும் கண் விழித்து சிவலிங்கத்துக்கு வில்வத்தால் குரங்கு அர்ச்சனை செய்ததன் பலனாக அதன் பிறவி முடிந்ததும்

மறு பிறவியில் அரச குடும்பத்தில் பிறக்கும் பாக்யம் அந்த குரங்குக்கு கிடைத்தது.

தெரியாமல் செய்த பூஜைக்கு இவ்ளவு? பெரிய ஒரு யோகம் கிடைக்கும் என்பதை அந்த குரங்கு எதிர் பார்க்கவில்லை.

அந்த குரங்கு மனிதனாக பிறக்கும் முன். ஈசனிடம் *'சுவாமி எனக்கு இன்னுமோர் வரம் வேண்டும்"* என்று கேட்டது.

*"உனக்கு வேறு என்ன? வேண்டும் கேள்"*

என்று ஈசன் சொல்ல அந்த குரங்கு.

*"அடியேன் விரும்புவது பிறவா வரம் தான். அதை உங்களால் தர முடியுமா? எனக்கு மனித பிறவி வேண்டாம்"*

என்று குரங்கு சொல்ல.

அதற்கு ஈசன்.

*"யார்? யாருக்கு எந்த, எந்த நேரத்தில் எதை? தர வேண்டும் என்பது எனக்கு தெரியும். நீ மறுபிறவியில் மிகப்பெரிய சக்ரவர்த்தியாக பிறந்து விண், மண் என அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சக்ரவர்த்தியாக இருப்பாய். எனக்கு பல கோவில்களை நீ கட்டுவாய். உன்னால் இந்த மண்ணுக்கு ஆக வேண்டிய பணிகள் பல இருக்கிறது. அதனால் நீ வேறு ஏதேனும் வரம் கேள்"* என்று

ஈசன் அந்த குரங்கை பார்த்து சொல்ல.

அதற்கு அந்த குரங்கு

*"மனிதன் என்றாலே அவன் பேராசை, ஆணவம் இரண்டும் சேர்ந்த வடிவம். அவ்வாறு இருக்க. காடுகளில் எவ்வித கவலைகளும் இன்றி மரத்துக்கு மரம், கிளைகளுக்கு கிளை, தாவி மிக சுதந்திரமாக சுற்றி திரியும் என்னை அடுத்த பிறவியில் மனிதனாக. அதுவும் அரசனாக வேறு பிறக்க போகிறேன் என்கிறீர்கள். இது எனக்கு வரமா இல்லை சாபமா என்று தெரியவில்லை. அடியேன் மாமன்னனாக பிறந்தாலும். இந்த குரங்கு முகம் மட்டும் என்னை விட்டு போக கூடாது. காரணம் மனிதன் என்றால் அவனுக்கு ஏதேனும் ஒரு குறை இருக்க வேண்டும். இல்லையேல் அவனுக்கு ஆணவம் அதிகமாக இருக்கும், மேலும் குறைகளே இல்லாத, கவலைகளே இல்லாத மனிதன் இறைவனை வணங்கவும் மாட்டான்"*

என்று கேட்டது.

அதனால் ஈசன் அந்த குரங்கினை அதன் விருப்பப்படி குரங்கின் மறு பிறவியில் குரங்கு முகத்தோடு *முசுகுந்த சக்கரவர்த்தி* என்ற பெயரோடு மன்னராக பிறந்தார்.

மாந்தாதா என்னும் முசுகுந்த சக்கரவர்த்தி எத்தகைய சிறப்பு வாய்ந்த மன்னர் என்றால்?

தேவர்களுக்கு பொதுவாக அசுரர்களால் தொல்லை வந்தால் தேவர்கள் விஷ்ணு, சிவன் போன்ற தெய்வங்களிடம் உதவி கேட்பார்கள்.

அத்தகைய தேவர்கள் ஒரு மனிதனிடம் பலமுறை உதவி கேட்டார்கள் என்றால் அது புராண வரலாறில் முசுகுந்த சக்கரவர்த்தி மட்டுமே.

ஒரு முறை தேவலோகத்தில் இருந்த அமிர்தம் அசுரர்களால் கவர்ந்து செல்லப்பட்டது. அதை மீட்டு கொண்டு வர தேவர்களின் தலைவனான இந்திரன் செல்கிறார். இந்திரன் இல்லாத நேரத்தில் இந்திரனின் தலைநகரான அமராவதியை அசுரர்கள் தாக்கக்கூடும் என்பதால் பாதுகாப்புக்கு யாரை வைக்கலாம் என்று இந்திரன் தனது அவையில் உள்ள அனைவரையும் கேட்ட பொழுது அனைத்து தேவர்களும் சொன்ன ஒரே வார்த்தை முசுகுந்தன் என்பதுதான்.

ஏற்கனவே தேவ லோகத்துக்கு பல பிரச்சனைகள் வந்த பொழுது. அந்த நேரங்களில் தேவர்களின் தலைவன் இந்திரன் திக்கு, முக்காடிய பொழுது . முசுகுந்தன் தான் இந்திரனுக்கும், தேவர்களுக்கும் உதவி செய்தார்.

அதனால் மீண்டும் முசுகுந்தனை தேவேந்திரன் உதவிக்கு அழைக்க முசுகுந்தன் தனது நண்பனுக்கு உதவுவதற்காக ஓடோடி வந்தார்.

எதிர்பார்த்தது போல அசுரர்கள் அமராவதியைத் தாக்கினார்கள்.

அந்த அசுரர்களை முசுகுந்தன் திருப்பி தாக்கினார். முசுகுந்தனின் பராக்கிரமம்

முன் ஈடு கொடுக்க முடியாத அசுரர் படை புறமுதுகிட்டு ஓடியது.

அதன் பின் இந்திரனும் அமிர்தத்தை

மீட்டு கொண்டு தேவலோகம் திரும்பினார்.

இந்திரன் முசுகுந்தனை நோக்கி.

*"நண்பா. நீ ஒரு முறை இருமுறை அல்ல பலமுறை என்னையும் இந்த தேவர் உலகையும் காப்பாற்றி இருக்கிறாய். அதனால் நான் உனக்கு ஏதேனும் ஒரு பரிசு கொடுத்தே ஆக வேண்டும்"*

என்று இந்திரன் கேட்க. உடனே முசுகுந்தன்.

*"பொன், பொருள் போன்றவற்றை எதிர் பார்த்து நான் உனக்கு உதவி செய்யவில்லை. ஒரு நண்பனாக தான் செய்கிறேன். இதை நான் ஏற்கனவே உனக்கு பலமுறை சொல்லி விட்டேன்"*

என்று சொல்ல.

ஆனால் இந்திரனோ மிக பிடிவாதமாக. *"இல்லை நான் உனக்கு ஏதேனும் ஒரு பரிசை கொடுத்தே தீருவேன். நண்பன் பரிசு கொடுத்தால் நீ ஏற்று கொள்ள மாட்டாயா?"*

என்று மீண்டும் இந்திரன் அன்பு தொல்லை செய்ய.

முசுகுந்தன் இந்திரனை நோக்கி.

*"நான் என்ன? பரிசு கேட்டாலும் நீ எனக்கு தருவாயா?"*

இந்திரன்

*"நீ எனது சிம்மாசனத்தையே பரிசாக கேட்டால் கூட நான் உனக்கு தருவேன்.தேவலோகத்தை ஆளும் தகுதி என்னை விட உனக்கு நிறையவே இருக்கிறது."*

முசுகுந்த சக்ரவர்த்தியோ. *"எனக்கு இந்த அற்ப சிம்மாசனம் தேவை இல்லை. நீ தினமும் பூஜை செய்யும் என் அப்பன் தியகராஜரின் திவ்ய மங்கள விக்ரஹம் வேண்டும். அதை எனக்கு பரிசாக உன்னால் தர முடியுமா?"*

என்று முசுகுந்தன் இந்திரனை பார்த்து கேட்க.

இந்திரன் இதை துளியும் எதிர் பார்க்கவில்லை. காரணம் இந்திரன் தனது பதவி, இந்திர லோகம், அமிர்தம் அனைத்தை விட சிவபெருமானது அந்த தியாகராஜ திரு உருவத்தை தான் மிகவும் நேசித்தார்.

சிவனது பல வடிவங்களில் தியாகராஜ வடிவமும் ஒன்று. சிவனுக்கு தியாகராஜர் என்னும் பெயர் எதனால்? வந்தது.

பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட நஞ்சை ஈசன் உண்டு அமிர்தத்தை தேவர்களுக்கு கொடுத்தாரே.

அது எத்தகைய

ஒரு மகத்தான தியாகம்.

அதனால் தான்

சிவ பெருமானுக்கு தியாகராஜர் என்னும் பெயர் வந்தது.

இந்திரனுக்கோ அந்த தியாகராஜரை கொடுக்க விருப்பம் இல்லை.

சிவன் நஞ்சுண்டு நீலகண்டன் ஆன பின் அவரிடம் இருந்து சுயம்புவாக வெளிப்பட்ட வடிவமே அந்த தியாகராஜர் உருவம்.

அந்த தியாகராஜ உருவத்தை திருமால் பல ஆண்டுகள் தன் மார்பினில்

வைத்து பூஜை செய்துள்ளார்.

பின் அந்த தியாகராஜரை திருமாலிடம் இருந்து இந்திரன் பெற்று கொண்டார்.

அத்தகைய தியாகராஜரை முசுகுந்தனிடம் கொடுக்க இந்திரன் விரும்பவில்லை. அதனால் இந்திரன் ஒரு தந்திரம் செய்தார்.

அந்தச் தியாகராஜர் போலவே ஆறு தியாகராஜர்களை முசுகுந்தன்

முன் வைத்து.

அந்த தியாகராஜர்களோடு முசுகுந்தன் விரும்பிய அசல் தியாகராஜரையும் வைத்து, முசுகுந்தனுக்கு விருப்பமானதை எடுத்துக் கொள்ளுமாறு இந்திரன் சொன்னார்.

ஏழு தியாகராஜர்களும் ஒரே மாதிரியாக இருப்பதைப் பார்த்ததும், எதனையெடுப்பது என்று தெரியாமல் முசுகுந்தன் மயங்கினார்.

சிவபெருமானை மனதில் வணங்கி, ஒரு தியாகராஜரை கைகளில் எடுத்தார். முசுகுந்தன் கையில் எடுத்த அந்த தியாகராஜரே முசுகுந்தன் விரும்பிய அசல் தியாகராஜர்.

இந்திரனும் முசுகுந்த சக்ரவர்த்தியின் பக்தியை பாராட்டி. *"இந்த ஏழு தியாகராஜர்களையும் நீயே எடுத்து கொள்"*

என்று கொடுத்து விட்டார்.

முசுகுந்தன் தேவலோகத்தில் இருந்து கொண்டு வந்த ஏழு

திவ்ய மங்கள தியாகராஜர் விக்ரஹங்களில் முதலில் வெளிப்பட்ட அந்த *தியாகராஜரை திருவாரூரில்* வைத்தார்.

மற்ற ஆறினை *திருநள்ளாறு, நாகபட்டினம், திருக்காராயில், திருக்குவளை, திருவாய்மூர், வேதாரண்யம்* ஆகிய ஊர்களில் வைத்து கோவில் கட்டினார்.

சப்த என்றால் ஏழு.

விடங்க என்றால் உளியால் செதுக்கப்படாத என்று பொருள்.

முசுகுந்தன் முன் இந்திரன் வைத்த அந்த ஏழு தியாகராஜர் விக்ரஹங்களுமே உளியால் செதுக்கப்படாத சுயம்பு வடிவங்களே.

உலகில் மிக பெரிய திருத்தேராம் திருவாரூர் ஆழித்தேர் 25.03.2021 அன்று நடைபெற்றது அதை தொடர்ந்து

#பக்தகாட்சி இன்று நடைபெறுகிறது

தேவலோகத்தை வேண்டாம் என்று கூறி *திருவாரூரை* ஆள வந்த *தியாகேசரை*, குபேரன் தனது நாடான குபேரபுரியை ஆளவருமாறு பணிந்தான்.

குபேரபுரி செல்ல மனமில்லாமல் திருவாரூரிலேயே இருக்க சித்தமானார் தியாகேசர்.

குபேரன் மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே, நான் குபேரபுரியை ஆள வர வேண்டுமெனில் என்னுடைய நடனத்தின் ஒவ்வொரு அடிக்கும் ஒரு பொன் அளிக்கவேண்டும் என தியாகேசர் குபேரனிடம் கேட்க அவ்வாறே அளிப்பதாக குபேரன் ஒப்புக்கொண்டான்.

முதலாம் பிரகாரத்தில் தியாகேசர் திருநடனம் புரிந்தபோது, ஒவ்வொரு அடிக்கும் ஒரு பொன் என குபேரன் தான் அணிந்திருந்த மொத்த நகைகளையும் அளிக்க நேரிட்டு பின் தன் மனைவி அணிந்திருந்த நகைகளையும் அளித்தான் . இரண்டாம் பிரகாரத்திற்கு சென்ற போது தனது சேனைகள் அணிந்திருந்த அனைத்து பொன்களையும் பொருட்களையும் அளிக்க வேண்டியதாயிற்று .

மூன்றாம் பிரகாரத்திற்கு சென்று ஆரூர் பக்தர்களுக்கு நடனத்துடன் காட்சி அளித்துவிட்டு குபேரபுரி செல்லலாம் என தியாகேசர் குபேரனிடம் கூற குபேரனும் அவ்வாறே ஆகட்டும் என கூறினான். ஆனால் தியாகேசர் நீண்ட நெடியதும், காணக்கிடைக்காததும், கண்கொள்ளாததும், மெய்சிலிர்க்க வைப்பதும், அதிர்வலைகளை ஏற்படுத்துவதும், நொடிக்கு ஓராயிரம் அடிகளுடன் கூடியதுமாகிய தனது அஜபா நடனத்துடன் பக்தர்களுக்கு காட்சியளிக்க, தியாகேசனின் அடுத்த அடிக்கு கொடுப்பதர்க்கு பொன், பொருள் ஏதும் இல்லாமல் குபேரபுரியின் செல்வக் கிடங்கு காலியாகி குபேரன் செய்வதறியாது திகைத்து நின்றான்.

உடனே தியாகேசன் தோல்வியுற்ற குபேரனிடம் இருந்து பெற்ற பொன், பொருள் என அனைத்தையும் பல மடங்காக்கி குபேரனிடம் அளித்து , குபேரபுரி சென்று நல்லாட்சி புரிந்திடுக என ஆசி வழங்கி அனுப்பினார். பின் #*#

#ஆரூரில்இருப்பதேஇன்பம்* என கூறி யதாஸ்தானம் சென்றார்.

ஆண்டுதோறும் தேரோட்டம் முடிந்து தியாகேசன் யதாஸ்தானம் செல்லும் முன் *#பக்தகாட்சி உற்சவம்* நடைபெறுகிறது. இந்த பக்தகாட்சி உற்சவத்தை திருவாரூர், விஜயபுரம் வர்த்தகர்கள், பக்தர்கள் என அனைவரும் ஒன்று கூடி சிறப்பாக நடத்தி வருகிறார்கள். அவர்கள் அனைவரும் குபேரர்களாக இருந்து திருநடனத்துடன் காட்சி கொடுக்கும் தியாகேசனுக்கு பக்தியுடன் மலர்தூவி அளிக்கின்ற புஷ்பத்தில் பொன், வெள்ளி சேர்த்து அளிக்கிறார்கள். அவ்வாறு அளிக்கப்படும் பொன்னையும், பொருளையும் தியாகேசன் பலமடங்காக்கி பக்தர்களுக்கே திரும்ப அளித்து அருள் பாலிப்பான் என்பது ஐதீகம்.

*ஸ்ரீ தியகராஜ சுவாமிக்கு* திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர்கள் உபயமாக நடைபெறும் *78 ம் ஆண்டு #பக்தகாட்சிபெருவிழா* 29.03.2021 திங்கள் அன்று நடைபெற உள்ளது. இரவு 7:30 மணியளவில் /மி தியாகராஜ சுவாமி #பக்தர்களுக்குகாட்சி கொடுத்து *#யதாஸ்தானம்* செல்லும் பெருவிழாவில் அனைவரும் கலந்து கொண்டு /மி தியாகேசனின் அஜபா நடனத்தை கண்டு களித்து

#ஸ்ரீதியாகேசன் அருள் பெற அழைக்கின்றோம்.

 

நன்றி இணையம்