அழகிய விலைமாது . . . . . . . !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:33 | Best Blogger Tips

 


அந்த ஊருக்கு அழகிய விலைமாது வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு , ஓஷோ , தன் நானியிடம் , " நான் அவளைப் பார்க்க விரும்புகிறேன் " என்றார் .

அப்பொழுது ஓஷோவுக்கு வயது 15 ...

நானி , " விலைமாது என்றால் என்ன என்று உனக்குத் தெரியுமா ? "

" எனக்குச் சரியாகத் தெரியாது . "

" சரி . முதலில் நீ அங்கு சென்று , அவள் ஆடும் நாட்டியத்தையும் பாடும் பாட்டையும் கேட்டு வா " என்றார் .

பொதுவாக , ஒரு விலைமாதுவின் ஆட்டமும் பாட்டும் விரசம் கலந்ததாகவே இருக்கும் .

ஆட்டம் , பாட்டம் முடிந்த பிறகு விபச்சாரம் ஆரம்பிக்கும் .

நானி ஓஷோவிடம் சிறிது பணம் கொடுத்து , அவர் புறப்படுவதற்கு முன்பு , " நீ அவளிடம் செல்லுவதற்கு முன்பு , அவள் முகத்தை நன்றாக உற்றுப்பார் .

அதற்கப்புறமும் நீ போக விரும்பினால் , செல் " என்று சொல்லி அனுப்பினார் .

அதைப் போலவே அங்கு சென்ற ஓஷோ , சற்று உற்றுப் பார்த்தார் .

அவ்வளவுதான் . உடனே எழுந்து வந்து விட்டார் !

நானி , " ஏன் , இவ்வளவு சீக்கிரம் நீ வந்து விட்டாய் ?"

ஓஷோ , " அங்கு உட்காரவே எனக்குப் பிடிக்கவில்லை .

அவளை உற்றுப் பார்த்ததும் எனக்கு அப்படி ஒரு குமட்டல் !" என்றார் .

அதன் பிறகு அந்த எண்ணமே ஓஷோவுக்கு எழவில்லை .

உங்களுக்கு ஒன்று தெரியுமா ?

நீங்கள் அழகு என்று சுற்றும் பெண்ணை/ஆணை ஓஷோவைப்

போல சற்று உற்றுப் பாருங்கள் - (அவள் உங்களைத் தவறாக நினைக்காமல் இருந்தால் !)

அப்பொழுது அவளுடைய/ அவனுடைய அழகு மெல்ல மெல்ல கலைந்து அதற்கு அடியில் உள்ள அவலட்சணம் தெரியும் !

#நான்_அறிந்த_ஓஷோ*

 


நன்றி இணையம்