மோடி - பிரதமர் அலுவலகத்தில்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:21 | Best Blogger Tips
Image may contain: 1 person, sitting and indoor

மோடி அவர்கள் பதவியேற்ற பிறகு பிரதமர் அலுவலகத்தில் மத்திய அரசாங்கத்தில் நடந்துள்ள மாற்றங்கள்
====================================

இன்று காலை நேர பேருந்து பயணத்தில் ஒருவரை சந்தித்தேன். அவரிடம் பேசியதிலிருந்து அவர் டெல்லி சவுத் ப்ளாக்கில் மத்திய அரசு வேலையில் இருப்பதாக அறிந்தேன். 25 ஆண்டுகளாக அங்கு வேலை பார்க்கிறார்.

இவற்றை கேட்டதும் அவரிடம் சில விஷயங்கள் பற்றிப் பேசினேன். முக்கியமாக, 2014 தேர்தலுக்குப் பிறகு என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது என்று.

அவரது பதில் எனது எதிர்பார்ப்பிற்கு மாறுபட்டதாக இல்லை. ஆனால், அவர் கூறியதை கேட்ட பின்பு, '! ஆண்டவா!' என்றே கூறினேன்.

அவர் கூறினார், செயலாளர் மட்டத்திலான அதிகாரிகள் மத்தியில் எப்போதுமே தாமதமாக வேலைக்கு வரும் ஒரு வழக்கம் இருந்தது.

அவ்வாறு வந்த பின்னரும் வேலையை பாக்கி வைத்து விட்டு இருப்பார்கள்.

அவசரமாக முடிக்க வேண்டிய வேலை என்றால், அதற்கு ஒரு வழக்கம் இருந்தது. அத்தகைய வேலை செய்யும் போது, வேலை நேரம் கடந்த பின்னரும் அலுவலகத்தில் இருக்க வேண்டியதால், இரவு உணவை
'
ஹோட்டல் லீமெரிடன்'லிருந்து ஒரு ப்ளேட் ரூ 1300 அளவிற்கு வாங்கி வரச் செய்வார்கள்.

அலுவலகத்தில் 15 பேருக்கும் குறைவாக ஆட்கள் இருந்தாலும் கூட 30 பேருக்கு ஆர்டர் செய்வார்கள்.தங்கள் குடும்பத்தினருக்கும் சேர்த்து.

மறுநாள் காலை, சுமார் 40000 ரூபாய் பில்லை திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டெக்சிங் அலுவாலியா போன்றவர்கள் உடனே ஒப்புதல் அளிப்பார்கள்.

இத்தகைய வழியில் எல்லாம் மக்கள் பணம் காங்கிரஸ் ஆட்சியில் வீணடிக்கப்பட்டது.

ஆனால், இப்போதெல்லாம் அலுவலகத்தில் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டியது இருந்தாலும் ஹோட்டலில் உணவு வாங்க கூடாது, அவரவர் வீட்டில் இருந்து உணவு வர வேண்டும் என்று பிரதமர் உத்தரவு

முன்பு ஃபர்னிச்சர், திரைச் சீலை போன்றவை புதிய அதிகாரிகள் வந்தால் மாற்றப்படும். தற்போது ஃபர்னிச்சர், திரைச் சீலை போன்றவை ஏழு ஆண்டுகளுக்கு மாற்றக் கூடாது என்றும், இதர வகையில் அலுவலக புனரமைப்பு வேலை 11 ஆண்டுகள் கழித்து தான் என்பது பிரதமர் அறிவுரை.

ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் முன்மாதிரியாக பிரதமர் தனது அன்றாட நடவடிக்கையை துரிதப்படுத்துகிறார்

பிரதமர் காலை 5 மணிக்கே எழுந்து 9-20க்கு முன்பாக அலுவலகம் வந்து விடுவார்.

பிரதமர் மற்றும் அமைச்சர்களை காலை 6-20க்கே தேவைப்பட்டால் அழைத்து விடுகிறார்

காலை 10-10க்கு எல்லாம் அனைத்து அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் வருகை பதிவேடுகளும் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு விடும்

தற்போது எந்தவொரு கோப்புகளும் ஏழு நாட்களுக்கு மேல் நிலுவையில் வைக்க கூடாது.. இல்லை என்றால் பிரதமர் அலுவலகம் நேரடியாக விசாரிக்கும்

ஆண்டுக்கு பல வாரங்கள் விரதம் இருக்கிறார். நீர் மட்டுமே அருந்துகிறார் அவர்.

திட்டக் கமிஷன் அலுவலகத்தில் உள்ள உணவகத்தில் தற்போது, 60 ரூபாய்க்கும் சிறப்பான அறுசுவை உணவு கிடைக்கிறது

மத்திய அரசு அமைச்சக அலுவலகங்களில் பாதாம்-கிஸ்மிஸ் பால் வழங்கும் வழக்கம் நிறுத்தப்பட்டது.
மேற்கூறிய நடவடிக்கைகளால் 2014 தேர்தலுக்குப் பிறகு, மத்திய அரசு அலுவலகங்களின் செலவுகள் 17% குறைந்து விட்டது.

நன்றி ! 
சுபாஷ் மேத்தா என்பவரின் ஆங்கில பதிவு...
Subhash Mehta ( M. S. E. E. U.S.A.)
Pravina Mehta
1112 Amur Creek Ct.
San Jose, Ca. 95120.