இந்தியாவின் தந்தை மோடி- ட்ரம்ப்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:52 | Best Blogger Tips
Image may contain: 2 people, text

இந்தியாவுக்கு ம் அமெரிக்காவுக்கு ம் உள்ள நெருக்கம் அதிகமாகி கொண்டே இருக்கிறது.  கடந்த மாதம் ரஷ்யாவை இந்தியாவோடு நெருக்கமாக்கிய மோடி இப்பொழுது அமெரிக்காவை அமெரிக்காவை இந்தியாவோடு மிக நெருக்கமாக கொண்டு வருகிறார்.
இதன் உச்சகட்டமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எனக்கும், மோடிக்குமான கருத்து ஒற்றுமை, மிகச் சிறந்ததாக உள்ளது. அவர் மீது உண்மையிலேயே அதிக மதிப்பு, ஈர்ப்பு எனக்கு உள்ளது. மிகவும் கவுரவமானவ ராக, மிகச் சிறந்த தலைவராக உள்ளார்.
இதற்கு முந்தைய இந்தியாவை நான் அறி வேன். அது, கிழிந்துபட்ட நாடாகக் கிடந்தது. துண்டு துண்டாக, சண்டைகள் நிறைந்ததாக இருந்தது. அதையெல்லாம் சீர்செய்து, ஒருங்கிணைந்த நாடாக, இந்தியாவை மோடி மாற்றியுள்ளார்
ஒரு தந்தையைப் போல, நாட்டைச் சீர்செய்து உள்ளார்.  நாட்டிற்கு, மிகச் சிறந்த பணியாற்றி இருக்கிறார் அவர் இந்தியாவின் தந்தை. நாம் அவரை, இந்தியாவின் தந்தை என்றே அழை க்கலாம் என்று நம்மை போல இந்தியாவை உண்மையாக நேசிக்கும் மக்களின் எண்ணங்களை அமெரிக்க அதிபர் பிரதிபலித்துள்ளார்

சமீபத்தில் நடைபெற்ற மோடியின் பிறந்த நாளில் இந்தியாவின் தந்தை மோடி என்று பலர் புகழ்ந்ததற்கு சில பேர் எதிர்ப்பு தெரிவித்து காந்தி இருந்த இடத்தில் மோடியா என்று கிண்டல் செய்தார்கள்.
.
தமிழர்களின் தந்தை என்று தமிழை காட்டு மிராண்டி மொழி என்று கூறிய கோமாளி பெரியாரை தமிழர்களின் தந்தை என்று கூறுவது எவ்வளவு அபத்தமானதோ அந்த அளவிற்கு காந்தியை இந்தியாவின் தந்தை என்று கூறுவதும் அபத்தமானதே.
ஒரு குடும்பத்தின் தலைவர் என்பவர் எந்த ஒரு சூழ்நிலையிலும் அந்த குடும்பத்தை பிரிந்து விடாமல் காப்பாற்றி ஒருங்கிணைத்து கொண்டு செல்ல வேண்டும் அப்படி இருந்தால் அவரை குடும்பத்தின் தலைவராக அழைக் முடியும்.
காந்தியால் இந்தியா என்கிற குடும்பம் பிரிவதை தடுக்க முடியவில்லை.இந்தியா உடைந்து பாகிஸ்தான் என்கிற நாடு உதயமான தை காந்தி யால் கை கட்டி வேடிக்கை மட்டுமே
பார்க்க முடிந்தது. இந்தியா என்கிற குடும்பம் 1947 ல் உடைந்து இரண்டாக பிரிந்த பொழுது அதை வேடிக்கை பார்த்த காந்தி எப்படி இந்தியா என்கிற குடும்பத்தின் தலைவராக இருக்க முடியும்?
சோவியத் யூனியனின் தந்தை என்று யாரை அழைக்கிறார்கள்? விளாடிமிர் லெனினையா?
இல்லை சோவியத் யூனியனை பல நாடுகளா பிரிய துணை நின்ற மிக்கேல் கோப்பசே வையா? காந்தி இந்தியாவின் தந்தையென்கால் சோவியத் யூனியனின் தந்தை என்று கோர்ப்பசேவையே அழைக்க வேண்டும்.
Image may contain: 6 peopleபாகிஸ்தானின் தந்தை என்று முகம்மது அலி ஜின்னாவை கூறுகிறார்கள். அது உண்மை ஏனென்றால் இந்தியாவை உடைத்து பாகி ஸ்தான் என்கிற நாட்டை உருவாக்கினார்அதனால் அவரை பாகிஸ்தானின் தந்தை என்று  பாகிஸ்தானியர் கொண்டாடுவதில் எந்த தவறும் இல்லை.

வங்காளதேசத்தில் சேக் முஜிபுர் ரஹ்மானை வங்காள தேசத்தின் தந்தை என்று கூறுகிறார்கள்.அவர் பாகிஸ்தானில் இருந்து உடைத்து கொண்டு வங்காள தேசத்தை உருவாக்கி னார் அதனால் அவரை வங்காள தேசத்தின் தந்தை என்று அழைக்கிறார்கள்.
இலங்கையின் தந்தையாக இலங்கையின் முதல் பிரதமரான சேனநாயக்காவையே இலங்கை மக்கள் கூறுகிறார்கள்.   காரணம் என்ன தெரியுமா? இந்தியாவில் இருந்து முஸ்லிம்கள் வாழும் பகுதிகளை பிரித்து ஆங்கிலேய ர்கள் ஜின்னா தலைமையில் பாகிஸ்தான் ன்கிற ஒரு புதிய நாட்டை உருவாக்கினார்களோ அதே மாதிரி இலங்கையிலும் ஆங்கி லேயர்கள் செய்ய நினைத்தார்கள்.
சுதந்திரத்தின் பொழுதே இன ரீதியாக பிளவுபட்டு இருந்த சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் அவர்கள் வாழும் பகுதிகளை பிரித்து தனி நாடாக அறிவித்து சுதந்திரம் அளிக்கும் திட்டத்தை ஆங்கிலேயர் கள் வைத்து இருந்தார்கள்ஆனால் அதை தடுத்து இலங்கை பிரிவினையை முறியடித்து ஒன்று பட்ட இலங்கைக்கே சுதந்திரம் வாங்கியவர் சேனநாயக்கே.

அதனால் தான் அவரை இலங்கையின் தந்தை என்று அழைக்கிறார்கள்.ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இலங்கையில் முக்கியமான அரசு பதவிகளிலும் ராணுவம் போலீஸ் என்று சகல செல்வாக்குடன் இருந்த தமிழர்களை வெறும் எண்ணிக்கை அடிப்படையில் மட்டுமே உயர்ந்து இருந்த சிங்கள தலைவர் சேனநாயக்கா ஆங்கிலேயர்களின் தனிநாடு பரிந்துரை களையும் தமிழர்களின் தனி நாடு ஆசைக ளையும் முறியடித்து ஒன்று பட்ட இலங்கைக்கு சுதந்திரம் வாங்கினார் அல்லவா..

அதனால் தான் சேனநாயக்காவை இலங்கை யின் தந்தை என்று அழைக்கிறார்கள்.ஆனால் காந்தியை நான் ஏன் இந்தியாவின் தந்தை என்று அழைக்க வேண்டும்? இந்தியாவை உடைத்து பாகிஸ்தான் என்கிற ஒரு நாட்டை ஆங்கிலேயர் உருவாக்கிய பொழுது வேடி க்கை பார்த்த காந்தி எப்படி இந்தியாவின் தந்தையாக இருக்க முடியும்?
அமெரிக்கா வின் தந்தை யார் என்று கேட்டு பாருங்கள்.எட்டு பேரின் பெயர்களை கூறு வார்கள்.,ஜார்ஜ் வாஷிங்டன் ஜான் ஆடம்ஸ் தாமஸ் ஜாபர்சன் ஜேம்ஸ் மாடிசன் அலெக்சா ண்டர் ஹாமில்டன் ஜேம்ஸ் மன்றோ பெஞ்ச மின் பிராங்கிளின் என்று பல தலைவர்களை அமெரிக்கர்கள் தங்களின் நாட்டை வடிவமைத்த தலைவர்களாக கொண்டாடுகிறார்கள்.
இவர்கள் அனைவரும் அமெரிக்காவை ல்வேறு காலங்களில் ஒருங்கிணைத்து வலிமையான அமெரிக்கா உருவாக துணை
நின்றவர்கள்.அதனால் தான் அமெரிக்கர்கள் ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவின் சுதந்திர போராட்டத்தை நடத்தி ஆங்கிலேயர் களிடம் இருந்து சுதந்திரம் பெற துணை நின்றாலும் மற்ற தலைவர்கள் காலத்தில் அமெரிக்கா ஒன்று பட்டு வலிமையான தால் அவர்களும் அமெரிக்காவை தோற்றுவித்த தலைவர்களாகவே கொண்டாடப்படுகிறார்கள்.
ஒரு நாட்டின் தந்தை என்று அழைக்கப்படுபவர் நிச்சயமாக அந்த நாட்டை ஒருங்கிணைத்து வலிமை படுத்திய வராக இருக்க வேண்டு ம்.காந்தி அப்படி செய்தாரா? இல்லையே.. நேதாஜியின் மூலமாக வேகமாக பரவிய சுதந்திர போராட்டத்தின் தீவிரத்தை மட்டுமடுத்தி வைக்க ஆங்கிலேயர் கள் காந்தியை ஒரு கருவியாக பயன்படுத்தி கொண்டார்கள்.
மோடி காலத்தில் இந்தியாவில் பிரிவினை ஒழிந்து இந்தியா ஒன்று பட்டு நிற்கிறது.வடகிழக்கு மாநிலங்களில் ஒலித்த தனி நாடு கோசங்கள் முறியடிக்கப்பட்டு அங்கு மத்திய மாநில கட்சிகள் இணைந்து ஒருங்கி ணைந்த ஆட்சி நடத்திக்கொண்டு இருக்கின்றன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 70 ஆண்டுகளாக இந்தியாவை ஏய்த்து இந்திய மக்களின் வரிப்பணத்தில் சாப்பிட்டுக்கொண்டு இந்தியா வை திட்டிக்கொண்டு் தனி நாடு கேட்டுக் கொண்டு இருந்த கும்பல்களிடம் இருந்து காஷ்மீர் முழுமையாக மீட்கப்பட்டு இந்தியாவின் பிடிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனால் தான் மோடியின் ஆட்சியில் இந்தியா ஒருங்கிணைக்கப்படுவதால் காந்தி மாதி ரி அல்லாது அமெரிக்காவில் அந்த நாட்டை ஒருங்கிணைத்தவர்களையே தந்தையாக போற்றப்படுவதால் அமெரி க்க அதிபர் இந்தி பிரதமர் மோடியை இந்தியாவின் தந்தை என்று புகழ்ந்துள்ளார்..



Thanks to FB  Vijayakumar  Arunagiri