*கண்ணாடி அணியும் குழந்தைகளின் பெற்றோர் கவனத்திற்கு*

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:07 | Best Blogger Tips
Image result for School for perfect vision
"என் மகள்  , பள்ளிக்கூடத்தில் சரியாக படிக்க முடியவில்லை..தெளிவாக எதையும் பார்க்க முடியவில்லை என்று சொன்ன போது பதட்டத்துடன் கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன் . அங்கே என் பிள்ளையை பரிசோதித்த மருத்துவர் இரண்டு கண்களிலும் -2 , -1.5 பவர் குறைபாடு உள்ளது என்றும் கண் கண்ணாடி கண்டிப்பாக போட வேண்டும் என்றும் கூறினார். இதற்கு வேறு வழிகள் இல்லையா என்று நான் கேட்டதற்கு மருத்துவர் இப்போதைக்கு இதற்கு கண்ணாடி மட்டும்தான் தீர்வு ..18 வயதிற்குப் பின் லேசர் அறுவைச்சிகிச்சைக்கு முயற்சிக்கலாம் என்றும் சொன்னார் . நான் இதை ஏற்க மனமில்லாமல் ஏதாவது மாற்று வழிகள் இருக்குமா என்று தேட ஆரம்பித்தேன் .

என் நண்பர் கோயம்புத்தூர் சாய்பாபா காலணியில் இருக்கும் SCHOOL FOR PERFECT VISION பற்றி கூறினார் . எளிய கண் பயிற்சிகள் மூலம் இந்த குறைபாட்டினை நிரந்தரமாக சரி செய்ய முடியும் என்பதை அங்கு சென்ற பின் உணர்ந்து கொண்டேன் .என் மகள் சேர்ந்து ஒரு வார கண் பயிற்சியிலேயே நல்ல முன்னேற்றம் தெரிய வந்தது . மருத்துவமனை சென்று கண் பரிசோதனை செய்ததில் -2 இருந்த வலது கண் பவர் -1.25 ஆகவும் -1.5 இருந்த இடது கண் பவர் -1.0 வாகவும் இருந்தது . மேலும் பயிற்சி செய்ய செய்ய என் செல்ல மகளின் குறைபாடு முழுக்க நீங்கி விடும் என்று 100% கண்கூடாக தெரிகிறது! நிறைய பிள்ளைகள் முழுப் பயிற்சியின் முடிவில் கண்ணாடிகள் இல்லாமல் படிக்க முடிந்ததையும் தெளிவாக பார்க்க முடிந்ததையும் நேரில் கண்டு வியந்தேன் .

*
இந்த மையத்தில் ஏழை மாணவர்கள் ,அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எந்த கட்டணமும் வாங்குவதில்லை*

இந்த நல்ல செய்தியை அனைவரும் பகிரலாமே!

அவர்கள் முகவரி: School for perfect vision ,
Saibaba colony,
Coimbatore

தொடர்பு எண்கள் 
7094 333000
0422 2443030
நன்றி இணையம்