சிவனின் பாம்பை ஆபரணமாக கொண்டு

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:37 | Best Blogger Tips
Image result for சிவன் பாம்பு


சிவபெருமான் தனது தலை, கழுத்து, கைகளில் பாம்பை ஆபரணமாக அணிந்துள்ளார். இதற்கு விசேஷ காரணம் உள்ளது.
மனிதனுக்கு கண், காது, மூக்கு, வாய், மெய் என்னும் ஐம்புலன்கள் உள்ளன. 
இவை தீயவழிகளில் ஈடுபடும் போது, 
விஷம் கக்கும் நாகம் போல 
#துன்பத்திற்கு 
மனிதன் ஆளாக நேரிடும்.
இவற்றை அடக்கி நல்வழியில் செலுத்தி விட்டால் வாழ்விற்கு அழகூட்டும் ஆபரணமாக மாறி விடும். 
இதை நமக்கு உணர்த்தவே நாதனாகிய சிவன் ஐந்துதலை நாகப்பாம்பை
ஆபரணமாக அணிந்துள்ளார்.
பாம்பின் ஐந்து தலையும் ஐம்புலனைக் குறிக்கும். இதை வெளிப்படுத்தும் விதமாக தங்கம், வெள்ளி, பித்தளையால் ஆன நாகத்தை லிங்கத்தின் மீது ஆபரணமாக சாத்துவர். நாக லிங்கத்தை தரிசித்தால் தீய ஆசைகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும்.....