தன்னம்பிக்கை வாிகள் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:13 | Best Blogger Tips



விழுந்தால் அழாதே . . .                 எழுந்திரு !

தோற்றால் புலம்பாதே . . .போராடு !

கிண்டலடித்தால் கலங்காதே . . .மன்னித்துவிடு !

தள்ளினால் தளராதே . . .துள்ளியெழு !

நஷ்டப்பட்டால் நடுங்காதே . . .நிதானமாய் யோசி !

ஏமாந்துவிட்டால் ஏங்காதே . . .எதிர்த்து நில் !

நோய் வந்தால் நொந்துபோகாதே . நம்பிக்கை வை !

கஷ்டப்படுத்தினால் கதறாதே . . .கலங்காமலிரு !

உதாசீனப்படுத்தினால் உளறாதே .                        
           ( என் சுயம்பு )

உயர்ந்து காட்டு !
கிடைக்காவிட்டால் குதிக்காதே . . .
அடைந்து காட்டு !
மொத்தத்தில் நீ பலமாவாய் . . . (என் அழகு தேவதை)
சித்தத்தில் நீ பக்குவமாவாய் . . .
உன்னால் முடியும் . (என் அழகு தேவதை)
உயர முடியும் . . .
உதவ முடியும் . . .
உனக்கு உதவ நீ தான் உண்டு !
உன்னை உயர்த்த நீ தான் . . . நம்பு . .
உன்னை மாற்ற நீ தான் . . . முடிவெடு . . .
நீயே பாறை . . .நீயே உளி . . .
நீயே சிற்பி . . .நீயே செதுக்கு . . .
நீயே விதை . . .நீயே விதைப்பாய் . . .
நீயே வளர்வாய் . . .நீயே அனுபவிப்பாய் . . .
நீயே நதி . . . நீயே ஓடு . . .
நீயே வழி . . . நீயே பயணி . . .
நீயே பலம் . . . நீயே சக்தி . . .  
(நீயே பராசக்தி – என் சுயம்பு)

நீயே ஜெயிப்பாய் . .

என்றொன்றும் அன்புடன்
உங்கள் நலம் விரும்பி