எனக்கொரு ஆசை...மீண்டும் என் முதல் உலகிற்கு செல்ல...!!!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 11:57 | Best Blogger Tips

நீர் சூழ்ந்த உலகம் அது....!!
காற்று என்பதே கிடையாது...!!
இருள் நிறைந்த உலகம் அது....!!
பயம் என்பதே கிடையாது.....!!
அங்கே இருட்டில் இருந்தும் எப்போதும்
வாழ்கை வெளிச்சமாய் இருந்தது....!!
கிட்டதட்ட அது ஒரு தனிக்குடித்தனம்..
ஆனாலும் தனியாக இல்லை....!!
உணவு இடம் பாசம் என அனைத்தும் கிடைக்கும் விருந்தோம்பல் அங்கே ...!!
வேலை என்பதே கிடையாது , ஆனாலும் ஒரே வேலை தூக்கம்....!!
சில நேர விழிப்பில் தூக்கத்திற்கு ஓய்வு..
மனதில் சிறிதும் , கோபம் இல்லை ,
சோகம் இல்லை , துன்பம் இல்லை,
காதல் இல்லை , காமம் இல்லை...!!
இரவின் நிலவு போல, அங்கு துணையாக யாரும் இல்லை...
தனிமையை தவிர....!!
ஆனாலும் அங்கேயும் ... நிலவை தாங்கும் வானம் போல எனையும் தாங்க....!!
எனக்காக சுவாசிக்க.....!!
எனக்காக உண்ண......!!
என்னையே எப்போதும் நினைக்க....!!
எனக்காகவே இருக்க.....!!
ஒரு ஜீவன்......!!!!
என் தாய் ..!!
==========
ஆம்..! எனக்கொரு ஆசை
மீண்டும் என் முதல் உலகிற்கு செல்ல.....!!

நன்றி இணையம்