முன் “பற்று” என்றால் என்ன?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:47 | Best Blogger Tips







ஒரு பொருளின் மீது பற்று எப்படி வருகிறது?
அதை எப்படி வெல்ல முடியும்? என்ற கேள்விகளை எழவ்ுப்பினார்.
அந்த கேள்விகளுக்கான பதிலை இங்கு பதிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்....
இந்த விடையை ஒரு சின்ன கதையை உதாரணமாக கொண்டு புரிந்துக்கொள்ளலாம்.
ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.
அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு அவனுடையது தான்.
அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்க பலரும் தயாராக இருந்தனர்.
ஆனால் இவன் விற்கவில்லை. இப்போது அந்த வீடு அவன் கண் முன்னே எரிந்துகொண்டிருந்தது.
ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள். தீ முழுவதுமாக பரவிவிட்டதால் அதை அனைத்தும் பிரயோஜனம் இல்லை என்று எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
வணிகனோ செய்வதறியாமல் கண்ணில் நீரோடு புலம்பிகொண்டிருந்தான்.
ஐயோ என் வீடு..!!! என் வீடு...!! என்று அலறினான்.
அப்போது அவனின் மூத்த மகன் ஓடிவந்து ஒரு விஷயத்தை சொல்கிறான்தந்தையே ஏன் அழுகிறீர்கள்? இந்த வீட்டை நான் நேற்றே மூன்று மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டேன். இதனால் நமக்கு நஷ்டம் இல்லைஎன்று கூறினான்.
இதை கேட்ட வணிகனுக்கு ஏக மகிழ்ச்சி. அவனது சோகம் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி உண்டானது.
இப்போது வணிகனும் கூடி இருந்த கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான். அதே வீடு தான், அதே நெருப்பு தான் ஆனால் சில வினாடிகளுக்கு முன் இருந்த தவிப்பும் சோகமும் இப்போது அவனிடம் இல்லை.
சிறிது நேரத்தில் வணிகனின் இரண்டாவது மகன் ஓடி வந்துதந்தையே ஏன் இப்படி கவலையில்லாமல் சிரிக்கிறீர்கள்? நாங்கள் விற்ற இந்த வீட்டிற்க்கு முன்பணம் மட்டுமே வாங்கியுள்ளோம். முழு தொகை இன்னும் வரவில்லை. வீட்டை வாங்கியவன் இப்போது மீதி பணத்தை தருவானா என்பது சந்தேகமேஎன்றான்.
இதை கேட்ட வணிகன் அதிர்ச்சி அடைந்தான். மீண்டும் சோகத்தில் ஆழ்ந்தான். கண்ணீரோடு மீண்டும் புலம்ப ஆரம்பித்தான். தனது உடமை எரிகிறதே என்ற எண்ணம் மீண்டும் அவனை வாட்டியது.

சில மணித்துளிகள் பின்பு வணிகனின் மூன்றாவது மகன் ஓடி வருகிறான்.
தந்தையே கவலை வேண்டாம். இந்த வீட்டை வாங்கிய மனிதன் மிகவும் நல்லவன் போலும். இந்த வீட்டை வாங்க அவன் முடிவு செய்தபோது வீடு தீ பிடிக்கும் என்று உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது.
ஆகையால் நான் பேசியபடி முழு தொகையை கொடுப்பது தான் நியாயம் என்று என்னிடம் இப்போது தான் சொல்லி அனுப்பினான்என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தான்.
இதை கேட்ட வணிகனுக்கோ ஏக சந்தோஷம். கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடிப்பாடி மகிழ்ந்தான். கண்ணீரும் சோகமும் மீண்டும் காணாமல் போய்விட்டது.
மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.
இங்கு எதுவுமே மாறவில்லை. அதே வீடு, அதே நெருப்பு, அதே இழப்பு. இது என்னுடையது என்று நினைக்கும் போது அந்த இழப்பு உங்களை சோகத்தில் ஆழ்த்துகிறது.



இது என்னுடையது அல்ல என்று நினைக்கும் போது உங்களை சோகம் தாக்குவது இல்லை. நான், என்னுடையது, எனக்கு சொந்தமானது என்ற எண்ணம் தான் பற்று.
உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை. ஒருவனுக்கு மட்டுமே சொந்தமானது இல்லை.
அனைத்துமே அழிய கூடியது. நான் உட்பட எல்லாமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் அழியக்கூடியது அல்லது வேறு ஒருவனுக்கு சொந்தமாக கூடியது என்பதை நாம் நினைவில் நிறுத்தினாலே போதும். அந்த எண்ணமே பற்றற்ற நிலை.
ஆக பற்றுள்ள நிலை, பற்று இல்லாத நிலை இரண்டுமே நம் எண்ணங்களின் வெளிப்பாடு தான்.
இதற்காக நீங்கள் சன்யாசம் சென்று தான் பற்றற்ற நிலையை அனுபவிக்க வேண்டும் என்பது இல்லை.

சன்யாசம் என்பது நாம் பற்றற்ற நிலையில் இருக்கும் போது உலக மாயை நம்மை ஆட்கொள்ளாமல் இருக்க, சலனப்படுத்தாமல் இருக்க நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் பாதுகாப்பு வளையம்.
இங்கு நாம் மற்றொரு விஷயத்தை நன்கு கூர்ந்து கவனிக்க வேண்டும். நமது எண்ணங்களில் பல ஏன் முழுவதுமாக கூட சொல்லலாம், எவையுமே உங்களுக்கு சொந்தமானது இல்லை.
நீங்கள் சிந்திக்கும் பல விஷயங்கள் உங்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்று உங்களை சுற்றி உள்ளவர்கள் உங்கள் மீது ஏற்படுத்திய தாக்கமே. நமது எண்ணங்கள் பிறரிடம் இருந்து நம் மனதிற்குள் செல்கிறது அல்லது கடன் வாங்க பெறுகிறது.
இதை தான் உலக மாயை என்று நமது சனாதான தர்மம் தெளிவாக சொல்கிறது. இந்த உலக மாயையில் இருந்து விடுதலை பெற்று வருவதே பற்றற்ற நிலை. மனதினை ஒருநிலை படுத்தி, எண்ணங்களை கட்டுப்பாட்டில் வைப்போம். உலக மாயையில் இருந்து விடுபெற்று இன்பமாக வாழ்வோம்.
நல்ல எண்ணத்தை விதைத்தால், நல்ல செயலை அறுவடை செய்வாய்,
நல்ல செயலை விதைத்தால், நல்ல பழக்கத்தை அறுவடை செய்வாய்,
நல்ல பழக்கத்தை விதைத்தால், நல்ல குணத்தை அறுவடை செய்வாய்,
நல்ல குணத்தை விதைத்தால், நல்ல விதியை அறுவடை செய்வாய்.
நல்ல நாளாக அமையட்டும்......
நன்றி
🌹நல்லதே நடக்கும்.....🌺
நன்றி இணையம்