ராகு-கேது தோஷமும்,பரிகாரமும் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:54 | Best Blogger Tips
ராகு-கேது தோஷமும்,பரிகாரமும்;
----------------------------------------------
மனித பிறவி எடுத்த ஒவ்வொருவர் ஜாதகத்திலும் சில தோஷ்ங்கள் காணப்படுகின்றன. அவற்றில் முதன்மையான தோஷம் ராகு-கேதுவினால் வரும் தோசங்களாகும்.

பிதூர் தோசம்,களத்திர தோசம்,சர்ப்பதோசம்,புத்திர தோசம் போன்ற முக்கிய தோசங்களுக்கு ராகு,கேதுக்களே காரணமாகின்றனர்.ராகு-கேது எல்லோருக்கும் கெடுதலை செய்துவிடுவதில்லை ஒரு சிலருக்கு அபரிதமான நன்மைகளையும் கொடுப்பார்கள்.ஆண் பெண் இருபாலருக்கும் திருமணம் தடைப்பட்டால்,கனவில் அடிக்கடி பாம்பு வந்தால் பரிகாரம் செய்வது நல்லது.

பரிகாரம்;      
                 திருநாகேஸ்வரம், கீழப்பெரும் பள்ளம் ஆகிய ராகு, கேது ஸ்தலங்களிலும், காளஹஸ்தி போன்ற சிறப்பு பெற்ற கோயில்களிலும் பரிகார பூஜைகள் செய்யலாம்.மேலும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர், சிவன் உள்ளிட்ட (பாம்பு தொடர்பான) கோயில்களிலுக்கு சென்று வழிபாடும் மேற்கொள்ளலாம். நவகிரகத்தில் உள்ள ராகு/கேதுவுக்கும் விளக்கேற்றலாம். 

ஜோதிடத்தில் கேது ஞானக்காரகன் என்று அழைக்கப்படுகிறார். அவரது ஆதிக்கம் பெற்றவர்கள் அல்லது தோஷம் பெற்றவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள், மனவளம் குன்றியவர்களுக்கு உதவலாம்.ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யலாம். பள்ளிப் பாடம் நடத்திய ஆசிரியருக்கு உதவலாம். பழைய பள்ளிக்கூடங்களைப் புதுப்பிக்க உதவலாம். பணம் செலுத்த முடியாமல் தவிக்கும் ஏழை மாணவர்களின் படிப்புக்கு பொறுப்பேற்கலாம் இதுவும் சிறந்த பரிகாரமாகும்.

இன்னொரு சிறந்த பரிகாரமாக ராகு-கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் தாய்வழி பாட்டன்,பாட்டி-தகப்பன் வழி பட்டன்,பாட்டி இவர்களுக்கு பணிவிடை செய்து அவர்களை மகிழ்விப்பது சிறந்த பரிகாரமாகும்.காரணம் ஜோதிட ரீதியாக ராகு,கேதுற்கு இவர்களே அதிபதி ஆவார்கள்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.மனித பிறவி எடுத்த ஒவ்வொருவர் ஜாதகத்திலும் சில தோஷ்ங்கள் காணப்படுகின்றன. அவற்றில் முதன்மையான தோஷம் ராகு-கேதுவினால் வரும் தோசங்களாகும்.

பிதூர் தோசம்,களத்திர தோசம்,சர்ப்பதோசம்,புத்திர தோசம் போன்ற முக்கிய தோசங்களுக்கு ராகு,கேதுக்களே காரணமாகின்றனர்.ராகு-கேது எல்லோருக்கும் கெடுதலை செய்துவிடுவதில்லை ஒரு சிலருக்கு அபரிதமான நன்மைகளையும் கொடுப்பார்கள்.ஆண் பெண் இருபாலருக்கும் திருமணம் தடைப்பட்டால்,கனவில் அடிக்கடி பாம்பு வந்தால் பரிகாரம் செய்வது நல்லது.

பரிகாரம்;
திருநாகேஸ்வரம், கீழப்பெரும் பள்ளம் ஆகிய ராகு, கேது ஸ்தலங்களிலும், காளஹஸ்தி போன்ற சிறப்பு பெற்ற கோயில்களிலும் பரிகார பூஜைகள் செய்யலாம்.மேலும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர், சிவன் உள்ளிட்ட (பாம்பு தொடர்பான) கோயில்களிலுக்கு சென்று வழிபாடும் மேற்கொள்ளலாம். நவகிரகத்தில் உள்ள ராகு/கேதுவுக்கும் விளக்கேற்றலாம்.

ஜோதிடத்தில் கேது ஞானக்காரகன் என்று அழைக்கப்படுகிறார். அவரது ஆதிக்கம் பெற்றவர்கள் அல்லது தோஷம் பெற்றவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள், மனவளம் குன்றியவர்களுக்கு உதவலாம்.ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யலாம். பள்ளிப் பாடம் நடத்திய ஆசிரியருக்கு உதவலாம். பழைய பள்ளிக்கூடங்களைப் புதுப்பிக்க உதவலாம். பணம் செலுத்த முடியாமல் தவிக்கும் ஏழை மாணவர்களின் படிப்புக்கு பொறுப்பேற்கலாம் இதுவும் சிறந்த பரிகாரமாகும்.

இன்னொரு சிறந்த பரிகாரமாக ராகு-கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் தாய்வழி பாட்டன்,பாட்டி-தகப்பன் வழி பட்டன்,பாட்டி இவர்களுக்கு பணிவிடை செய்து அவர்களை மகிழ்விப்பது சிறந்த பரிகாரமாகும்.காரணம் ஜோதிட ரீதியாக ராகு,கேதுற்கு இவர்களே அதிபதி ஆவார்கள்.


அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.