கருத்தடை மாத்திரையை உபயோகிப்பதால் என்ன பிரச்சினைகள் வரும்ன்னு தெரியுமா

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:54 | Best Blogger Tips


கருத்தடை மாத்திரையை உபயோகிப்பதால் என்ன பிரச்சினைகள் வரும்ன்னு தெரியுமா???

கருத்தடை மாத்திரையானது தேவையில்லாமல் கர்ப்பமாவதைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் இந்த மாத்திரையை தொடர்ந்து அடிக்கடி எடுக்கக்கூடாது. ஏனெனில் இவை உடலுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இப்போது அந்த மாத்திரைகளை எடுப்பதால் என்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

*
இந்த மாத்திரையை எடுப்பதால், கருவில் உள்ள கருமுட்டைக்கு தொந்தரவை ஏற்படுத்தி, இனப்பெருக்க செயலைத் தடுக்கிறது. அதிலும் இவ்வாறு பயன்படுத்தியப் பின்பு, அடுத்த இரண்டு மாதவிடாயின் போது பிரச்சனையை ஏற்படுத்தும்.

*
கர்ப்பத் தடை மாத்திரைகளைப் போடுவதால், அந்த மாத்திரைகளை போட்ட சில நாட்களில் இரத்தப்போக்கு ஏற்படும். சில நேரத்தில் அந்த மாத்திரைகளை போட்டதுமே, இரத்தப்போக்கு ஏற்படும். அதற்காக பயப்பட வேண்டாம். அவ்வாறு வந்தால், நிச்சம் கர்ப்பம் ஆக முடியாது என்பதற்கான ஒரு அறிகுறி.

மேலும் சாதாரணமாக பெண்களுக்கு மாதவிடாயானது 6-7 நாட்கள் தான் இருக்கும். ஆனால் சிலருக்கு ஒரு வாரத்திற்கு மேலே கூட இருக்கும். அப்படி இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

*
இந்த மாத்திரை போட்டு ஏற்படும் அடுத்த மாதவிடாயின் போது கடும் இரத்தப் போக்குடன், கடுமையான வயிற்றுவலியும் ஏற்படும். இதனால் எதற்கும் பயப்பட வேண்டாம். இது இனப்பெருக்க மண்டலத்திற்கு சிறு இடையூறை ஏற்படுத்துகிறது.

ஆகவே எப்போது மாதவிடாய் ஏற்படுகிறதோ, அப்போது அளவுக்கு மீறிய வயிற்று வலிக்கு ஆளாக நேரிடும். முக்கியமாக இந்த மாத்திரையை அடிக்கடி எடுத்தால், இனப்பெருக்க மண்டலம் பாதிக்கப்பட்டு, பின் கருவுறுதலுக்கு பிற்காலத்தில் பெரும் பிரச்சனை ஏற்படும். ஆகவே எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
கருத்தடை மாத்திரையை உபயோகிப்பதால் என்ன பிரச்சினைகள் வரும்ன்னு தெரியுமா???

கருத்தடை மாத்திரையானது தேவையில்லாமல் கர்ப்பமாவதைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் இந்த மாத்திரையை தொடர்ந்து அடிக்கடி எடுக்கக்கூடாது. ஏனெனில் இவை உடலுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இப்போது அந்த மாத்திரைகளை எடுப்பதால் என்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

* இந்த மாத்திரையை எடுப்பதால், கருவில் உள்ள கருமுட்டைக்கு தொந்தரவை ஏற்படுத்தி, இனப்பெருக்க செயலைத் தடுக்கிறது. அதிலும் இவ்வாறு பயன்படுத்தியப் பின்பு, அடுத்த இரண்டு மாதவிடாயின் போது பிரச்சனையை ஏற்படுத்தும்.

* கர்ப்பத் தடை மாத்திரைகளைப் போடுவதால், அந்த மாத்திரைகளை போட்ட சில நாட்களில் இரத்தப்போக்கு ஏற்படும். சில நேரத்தில் அந்த மாத்திரைகளை போட்டதுமே, இரத்தப்போக்கு ஏற்படும். அதற்காக பயப்பட வேண்டாம். அவ்வாறு வந்தால், நிச்சம் கர்ப்பம் ஆக முடியாது என்பதற்கான ஒரு அறிகுறி.

மேலும் சாதாரணமாக பெண்களுக்கு மாதவிடாயானது 6-7 நாட்கள் தான் இருக்கும். ஆனால் சிலருக்கு ஒரு வாரத்திற்கு மேலே கூட இருக்கும். அப்படி இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

* இந்த மாத்திரை போட்டு ஏற்படும் அடுத்த மாதவிடாயின் போது கடும் இரத்தப் போக்குடன், கடுமையான வயிற்றுவலியும் ஏற்படும். இதனால் எதற்கும் பயப்பட வேண்டாம். இது இனப்பெருக்க மண்டலத்திற்கு சிறு இடையூறை ஏற்படுத்துகிறது.

ஆகவே எப்போது மாதவிடாய் ஏற்படுகிறதோ, அப்போது அளவுக்கு மீறிய வயிற்று வலிக்கு ஆளாக நேரிடும். முக்கியமாக இந்த மாத்திரையை அடிக்கடி எடுத்தால், இனப்பெருக்க மண்டலம் பாதிக்கப்பட்டு, பின் கருவுறுதலுக்கு பிற்காலத்தில் பெரும் பிரச்சனை ஏற்படும். ஆகவே எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.