அறிவை விட உயர்ந்தது எது ???

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:02 | Best Blogger Tips
அறிவை விட உயர்ந்தது எது ???

அதுவேண்டும் இதுவேண்டும் என்று அனைவரும் ஆலாய்ப் பறக்கிறார்கள். மனதில் ஏதாவது ஆசை இருந்து கொண்டே இருக்கும் வரை அமைதி வருவதில்லை.

* வாழ்க்கைத் தரம் என்பது பொருளாதாரம் சார்ந்ததில்லை. மனநிறைவும், நிம்மதியும் நிறைந்திருப்பதே உயர்ந்த வாழ்க்கை.

* கோடீஸ்வரனாக இருப்பவன் கூட ஏதாவது மனக்குறையுடன் அலைந்து கொண்டிருக்கிறான் என்பதை ஏழைகள் உணர மறுக்கிறார்கள்.

* எதை நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அதுவாக நாம் ஆகிறோம் என்று மனோதத்துவம் மனதின் வலிமையை எடுத்துக் கூறுகிறது.

* அழகு, கருணை, சக்தி, ஞானம் போன்ற கடவுளின் குணங்களை எப்போதும் மனதில் சிந்தித்து வந்தால் நாமும் நல்லவர்களாகி விடுவோம்.

* அறிவை விட ஒழுக்கம் ஒருவனுக்கு அவசியம். ஒழுக்கம் இல்லாத அறிவு தீமைக்கு வழிவகுக்கும்.

* குழந்தைப் பருவத்திலேயே ஒழுக்கத்தின் உயர்வை பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்.....