"கே. பி. சுந்தரம்பாள்"

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:46 | Best Blogger Tips
கே. பி. சுந்தரம்பாள் பாடல் என்றாலே தனித்துவமாய் கம்பீரமாய் ஒலிப்பது. கரூரில் சிறுமியாய் தாயுடன் கழித்த காலத்திலே இவரது பாடலும் பாடும் திறனும் அந்தக் காலமே உற்றவர்களாலும், பெரியவர்களாலும் போற்றப்பட்டது. சொந்த ஊர் கொடுமுடி. பழனி முருகனைப் பாடியே காலம் எல்லாம் கழித்தவர் என்றே சொல்லலாம்.

தனிப் பாடல்களான 'தனித்திருந்து வாழும் தவமணியே... ' , 'பால் மணக்குது ,பழம் மணக்குது ;பழனி மலையிலே .பழனி மலையைத் தூக்கி காவடியாட்டம் தினமும் நடக்குதாம்..... ' என்று பாடி வரும்காலை ,'பால் காவடி பண்ணீர்க் காவடி புஷ்பக் காவடியாம், சந்தனக் காவடி,சர்ப்பக் காவடி,சேவற் காவடியாம் ...என்று உச்சஸ்தாயில் குரல் ஒலிக்க எழுந்து ஆடாதவரும் உண்டோ ? திரைப் பாடல் என்று வரும் பொழுது,

ஔவையார் படத்தில் , 'மயிலேறும் வடிவேலனே...என்று வரும் பாடலில் இவரது இளமைக் குரலில் உள்ள தெய்வீகக் குழைவை நாம் ரசித்துப் பரவசமடையலாம். ',பழம் நீ அப்பா...பாடல் நம்மை மறந்து தலை அசைக்க வைக்கும். ஞானப் பழத்தைப் பிழிந்து.....பாடலில் ,'உனக்கென்ன விதம் இக்கனியை நான் ஈவ தென்று நாணித்தான்..... என்றெல்லாம் பாடுகையில் அவரது குரலில் சீராக ஏறி இறங்கும் வளைவுகள் அற்புதமானவை. ஐயனே! என்று முருகனை விளிக்கும் போதும் சரி, கேள்விக்கு பதில் சொல்லும் போதும் சரி எடுப்பான அவரது குரல் வளம், வார்த்தைகளை அச்சரமாய் நம் மனதில் தொடுக்கும். கந்தன் கருணையில் 'புதியது என்றும் புதியது பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது; முருகா !...என்ன ஒரு கம்பீரமான பாடல்.
பூம்புகாரில் ,வாழ்க்கை எனும் ஓடம், அழகிய தத்துவப் பாடலாய் மிளிர்கிறது. ஔவையார் போன்றே இந்தக் குந்தி அடிகள் வேடமும் கச்சிதமாய் பொருந்தியது.மகாகவி காளிதாசில், 'காலத்தில் அழியாத ,காவியம் .....' பாடல் யார்தான் மறந்திருக்க முடியும் ? கேட்கும் பொது விலகி நிற்க முடியும்.
உயிர்மேல் ஆசை என்ற சமூகப் படத்தில், 'கேளு பாப்பா,
என்ற பாடல் பிரசித்தி பெற்றது. அந்நாளில் தேசப் பக்தி பாடல் நிறைய பாடியுள்ளார்.


via Page Kothai notes on Music and Movie.
"கே. பி. சுந்தரம்பாள்"

கே. பி. சுந்தரம்பாள் பாடல் என்றாலே தனித்துவமாய் கம்பீரமாய் ஒலிப்பது. கரூரில் சிறுமியாய் தாயுடன் கழித்த காலத்திலே இவரது பாடலும் பாடும் திறனும் அந்தக் காலமே உற்றவர்களாலும், பெரியவர்களாலும் போற்றப்பட்டது. சொந்த ஊர் கொடுமுடி. பழனி முருகனைப் பாடியே காலம் எல்லாம் கழித்தவர் என்றே சொல்லலாம். 

தனிப் பாடல்களான 'தனித்திருந்து வாழும் தவமணியே... ' , 'பால் மணக்குது ,பழம் மணக்குது ;பழனி மலையிலே .பழனி மலையைத் தூக்கி காவடியாட்டம் தினமும் நடக்குதாம்..... ' என்று பாடி வரும்காலை ,'பால் காவடி பண்ணீர்க் காவடி புஷ்பக் காவடியாம், சந்தனக் காவடி,சர்ப்பக் காவடி,சேவற் காவடியாம் ...என்று உச்சஸ்தாயில் குரல் ஒலிக்க எழுந்து ஆடாதவரும் உண்டோ ? திரைப் பாடல் என்று வரும் பொழுது,

ஔவையார் படத்தில் , 'மயிலேறும் வடிவேலனே...என்று வரும் பாடலில் இவரது இளமைக் குரலில் உள்ள தெய்வீகக் குழைவை நாம் ரசித்துப் பரவசமடையலாம். ',பழம் நீ அப்பா...பாடல் நம்மை மறந்து தலை அசைக்க வைக்கும். ஞானப் பழத்தைப் பிழிந்து.....பாடலில் ,'உனக்கென்ன விதம் இக்கனியை நான் ஈவ தென்று நாணித்தான்..... என்றெல்லாம் பாடுகையில் அவரது குரலில் சீராக ஏறி இறங்கும் வளைவுகள் அற்புதமானவை. ஐயனே! என்று முருகனை விளிக்கும் போதும் சரி, கேள்விக்கு பதில் சொல்லும் போதும் சரி எடுப்பான அவரது குரல் வளம், வார்த்தைகளை அச்சரமாய் நம் மனதில் தொடுக்கும். கந்தன் கருணையில் 'புதியது என்றும் புதியது பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது; முருகா !...என்ன ஒரு கம்பீரமான பாடல்.
பூம்புகாரில் ,வாழ்க்கை எனும் ஓடம், அழகிய தத்துவப் பாடலாய் மிளிர்கிறது. ஔவையார் போன்றே இந்தக் குந்தி அடிகள் வேடமும் கச்சிதமாய் பொருந்தியது.மகாகவி காளிதாசில், 'காலத்தில் அழியாத ,காவியம் .....' பாடல் யார்தான் மறந்திருக்க முடியும் ? கேட்கும் பொது விலகி நிற்க முடியும்.
உயிர்மேல் ஆசை என்ற சமூகப் படத்தில், 'கேளு பாப்பா, 
என்ற பாடல் பிரசித்தி பெற்றது. அந்நாளில் தேசப் பக்தி பாடல் நிறைய பாடியுள்ளார்.


via Page Kothai notes on Music and Movie.