இய‌ற்கை வைத்தியம் ஜீரணம் ஆக எளிய மருத்துவம் ,

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:04 | Best Blogger Tips

 



ஜீரணம் ஆக எளிய மருத்துவம்

நம்மில் பல பேர் சாப்பிட்ட சாப்பாடு ஜீரணம் ஆகாமல் அஜீரண கோளாறுகளால் கஷ்டப்படுவதை அறிந்திருக்கிறோம் .  இதற்காகவே பல மருந்துகளை மருந்து கம்பனிகள் தயாரித்தும் வருகின்றன .  ஆனால் இந்த மாதிரியான அஜீரண கோளாறுகள் கீழ்க்கண்ட எளிய மருத்துவத்தை பயன்படுத்தினால்  நீங்கி நல்ல பலன் கிடைப்பதை பார்க்கலாம் .

விசேஷ நாட்களில் பலகாரம் சாப்பிடுவதால் உண்டாகும் அஜீரணம் ,  பசியின்மை ,  வயிறு உப்பி காணப்படுதல் ,  உடல் வலி , அசதி  முதலியவைகளுக்கு வீட்டிலேயே தயாரிக்கும் சுக்கு தண்ணீர் சிறந்தது .    2  பெரிய சுக்கு ,  2  ஏலக்காய் இவற்றை நசுக்கி கொண்டு ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து , 2  டம்ளர் நீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்து ,  முக்கால் தம்ளராக சுண்டியவுடன் கருப்பட்டி ( பனை வெல்லம் ) அல்லது சாதாரண வெல்லத்துடன் கலந்து குடித்து வந்தால் அணைத்து அஜீரண கோளாறுகளும் நீங்கி உடம்பு கலகலப்பாக இருக்கும் . 

ஓமம்  -  200 கிராம்  ,  சீரகம்  -  100  கிராம் ,  மிளகு  -  100  கிராம் ,  கருஞ்சீரகம் -  100  கிராம் ,  பூண்டு  - 50  கிராம் ,  கறிவேப்பிலை - 100  கிராம் ,  தோல் நீக்கிய சுக்கு -  200  கிராம் ஆகியவற்றை லேசாக நல்லெண்ணையில் வரித்து பொடி செய்து  தினசரி பகல் உணவில் 2  ஸ்பூன் 1  பிடி சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வர செரிமானம் நல்ல நிலையில் ஆகி வயிற்று கோளாறு இன்றி சுகமாக இருக்கலாம் . 

தினசரி 4  பேரீச்சம் பழம் சாப்பிடுபவர்களுக்கு வயிற்று கடுப்பு ,  அஜீரண பேதி , மலசிக்கல்  போன்ற வயிற்று கோளாறுகள் வருவதில்லை . 

சுக்கு பொடியுடன் சுடு நீரை சேர்த்து குடித்தாலும் அஜீரணத்தில் இருந்து நல்ல சுகம் கிடைக்கும் .