நோய்க்கிருமிகளின் தாக்கத்திலிருந்து விடுபட சில எளிய வழிமுறைகள்...

மணக்கால் அய்யம்பேட்டை | 12:51 PM | Best Blogger Tips



நோய் கிருமிகள் தொற்றும் முன் நம்மை பாதுகாத்துக் கொள்வது வரும்முன் காப்பதற்கு சமம். அது நமது ஆரோக்கியமான உடல்நலத்திற்கும் நல்லது. நோய் கிருமிகள் மிக சுலபமாக தொற்றக்கூடியவை.

சில பொதுவான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நோய் கிருமிகளிலிருந்து நம்மை பாதுகாக்கலாம்...


கை கழுவதல்: கை கழுவதல் என்பது சாதாரண விஷயம் தானே என்று நினைக்கலாம். ஆனால் நோய் கிருமிகள் முதலில் தொற்றுவது கைகளில் தான். பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் பேருந்துகளில் பயணித்து விட்டு, வீட்டிற்குள் நுழைந்ததும் கைகளை கைழுவாமல் தின்பண்டகளை எடுத்து சாப்பிடுவது தவறான செயலாகும். இதனால் நோய் கிருமிகள் சுலபமாக தொற்றுகிறது. வீட்டிற்கு சென்றதும் நோய் கிருமிகள் அகற்றக்கூடிய "சோப்", அல்லது "ஹன்ட் வாஷ்" கொண்டு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.

வைட்டமின்: வைட்டமின் சத்துள்ள பொருட்களை தினமும் உணவில் எடுத்துக் கொண்டாலே நோய் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் கிடைத்துவிடும். வைட்டமின் "சி" சத்து குறைவதினால் எளிதில் சளி, இரும்பல் ஆகியவை ஏற்படுகிறது. வைட்டமின் சத்துள்ள காய்கள், பழங்கள் தினமும் உணவில் சேர்த்து கொண்டால், நோய் கிருமிகள் தொற்றமல் பாதுகாக்கலாம்.

ஓய்வும் உடற்பயிற்சியும்: நம் உடலுக்கு ஓய்வும், உடற்பயிற்சியும் கட்டாயமாக தேவையானதொன்றாகும். ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் மாற்றத்தால் உடற்பயிற்சிக்கும், ஓய்வுக்கும் நேரம் ஒதுக்குவதே இல்லை. பெருபாலானவர்கள் பிபிஓ.,க்களில் இரவு நேரப் பணிகளில் ஈடுபடுகின்றனர். இதனால் சரியான உணவு, உறக்கம், உடற்பயிற்சி ஆகியவற்றை கடைப்பிடிப்பதில்லை. இதனால் உடலின் நிலையில் மாற்ற ஏற்படுகிறது. எனவே எட்டு மணி நேர உறக்கமும், சரியான உடற்பயிற்சியும் கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

உண்ணாவிரதம்: உண்ணாவிரதம் இருப்பது நம்பிக்கையை அதிகரிப்பதாகும். விரதமிருப்பதால் உடல் எடை சரியான அளவில் வைப்பதோடு, நோய் கிருமிகள் எளிதில் அழிக்கக் கூடிய சக்தி உடலுக்கு ஏற்படுகிறது. தேவையற்ற கொழுப்பு உடலில் சேர்வதும் தடுக்கப்படுகிறது. எனவே மாதம் இரு முறை விரதமிருந்தால் உடல் வலிமை பெறும். நோய் கிருமிகள் அண்டாது.
நோய்க்கிருமிகளின் தாக்கத்திலிருந்து விடுபட சில எளிய வழிமுறைகள்...


நோய் கிருமிகள் தொற்றும் முன் நம்மை பாதுகாத்துக் கொள்வது வரும்முன் காப்பதற்கு சமம். அது நமது ஆரோக்கியமான உடல்நலத்திற்கும் நல்லது. நோய் கிருமிகள் மிக சுலபமாக தொற்றக்கூடியவை.

சில பொதுவான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நோய் கிருமிகளிலிருந்து நம்மை பாதுகாக்கலாம்...
  

கை கழுவதல்: கை கழுவதல் என்பது சாதாரண விஷயம் தானே என்று நினைக்கலாம். ஆனால் நோய் கிருமிகள் முதலில் தொற்றுவது கைகளில் தான். பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் பேருந்துகளில் பயணித்து விட்டு, வீட்டிற்குள் நுழைந்ததும் கைகளை கைழுவாமல் தின்பண்டகளை எடுத்து சாப்பிடுவது தவறான செயலாகும். இதனால் நோய் கிருமிகள் சுலபமாக தொற்றுகிறது. வீட்டிற்கு சென்றதும் நோய் கிருமிகள் அகற்றக்கூடிய "சோப்", அல்லது "ஹன்ட் வாஷ்" கொண்டு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.

வைட்டமின்: வைட்டமின் சத்துள்ள பொருட்களை தினமும் உணவில் எடுத்துக் கொண்டாலே நோய் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் கிடைத்துவிடும். வைட்டமின் "சி" சத்து குறைவதினால் எளிதில் சளி, இரும்பல் ஆகியவை ஏற்படுகிறது. வைட்டமின் சத்துள்ள காய்கள், பழங்கள் தினமும் உணவில் சேர்த்து கொண்டால், நோய் கிருமிகள் தொற்றமல் பாதுகாக்கலாம்.

ஓய்வும் உடற்பயிற்சியும்: நம் உடலுக்கு ஓய்வும், உடற்பயிற்சியும் கட்டாயமாக தேவையானதொன்றாகும். ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் மாற்றத்தால் உடற்பயிற்சிக்கும், ஓய்வுக்கும் நேரம் ஒதுக்குவதே இல்லை. பெருபாலானவர்கள் பிபிஓ.,க்களில் இரவு நேரப் பணிகளில் ஈடுபடுகின்றனர். இதனால் சரியான உணவு, உறக்கம், உடற்பயிற்சி ஆகியவற்றை கடைப்பிடிப்பதில்லை. இதனால் உடலின் நிலையில் மாற்ற ஏற்படுகிறது. எனவே எட்டு மணி நேர உறக்கமும், சரியான உடற்பயிற்சியும் கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

உண்ணாவிரதம்: உண்ணாவிரதம் இருப்பது நம்பிக்கையை அதிகரிப்பதாகும். விரதமிருப்பதால் உடல் எடை சரியான அளவில் வைப்பதோடு, நோய் கிருமிகள் எளிதில் அழிக்கக் கூடிய சக்தி உடலுக்கு ஏற்படுகிறது. தேவையற்ற கொழுப்பு உடலில் சேர்வதும் தடுக்கப்படுகிறது. எனவே மாதம் இரு முறை விரதமிருந்தால் உடல் வலிமை பெறும். நோய் கிருமிகள் அண்டாது.

காசியில் அன்னபூரணி தேவி

மணக்கால் அய்யம்பேட்டை | 12:28 PM | Best Blogger Tips
காசியில் அன்னபூரணி தேவியின் கோயிலையும், அன்னை வீற்றிருக்கும் அழகையும் இப்பதிவில் காண்போம்.

காசி விஸ்வநாதர் சந்நிதிக்குச் செல்லும் வழியில் துண்டி விநாயகரைத் தரிசிப்பது முக்கியமானது. அதன் பின்பு சற்று தூரத்தில் ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி கோயில் அமைந்துள்ளது. அழகிய சித்திர வேலைப்பாடுடன் கூடிய நுழை வாயில் வலது புறத்தில் பாதாள லிங்கம். அதன் முன்பு சிறிய கிணறு. மராட்டியர் கால கட்டட அமைப்பு. நடுவில் சந்நிதிக்கு முன்பு அஷ்டகோண வடிவில் அமைந்த மண்டபத்தைப் பன்னிரெண்டு கற்தூண்கள் தாங்கி நிற்கின்றன. கருவறையில் மூன்று வாயில்கள் உள்ளன.

தென்கிழக்கு நோக்கிய வாயிலில் கருவறை தரிசனம் செய்யலாம். மற்ற இரண்டு வாயில்களும் முறையை “தர்மத்துவாரம்” என்றும் “பிட்சத்துவாரம்” என்றும் அழைக்கப்படுகின்றன. அந்த இரு வாயில்களும் மூடப்பட்டிருக்கின்றன. அதன் முன்பு பக்தர்கள் அன்னச் செல்வத்தையும், அருட்கடாட்சத்தையும் அன்னையிடம் வேண்டி நிற்கின்றனர். கருவறை முழுவதும் சலவைக்கல் பரப்பப்பட்டு வண்ணப் பூவேலைப்பாட்டுடன் மிக அழகுடன் காட்சி அளிக்கின்றது.

தீபாவளிப் பண்டிகை நாட்களில் மட்டுமே அன்னையின் முழு திருவுருவத்தையும் நின்ற கோலத்தில் நாம் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் சிலாரூப தரிசனம் இல்லை. திருமுக தரிசனம் மட்டுமே. ஸ்வர்ணகவசம் சாத்தப்பட்ட திருமுக தரிசனம்தான் காண முடியும். மற்ற பகுதிகள் புடவையால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். கருவறை முழுவதும் பலவிதமான லட்டு வகைகள், பால் மூலம் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகள், உலர் பழவகைகள் முதலியன தட்டுகளில் அழகாக வைக்கப்படுகின்றன. அன்னை ஸ்வர்ணக் கவசத்துடன் நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு சிவபெருமானுக்கு பிட்சையிடும் காட்சியை நாம் தரிசிக்கலாம். அன்னையின் பாதக் கமலத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ சக்கர மேரு உள்ளது.

கருவறைக்கு அருகில் உள்ள மாடியில் தங்க அன்னபூரணியின் விக்ரஹம் வைக்கப்பட்டுள்ளது. தீபாவளி சமயம் மூன்று நாட்கள் மட்டும் அன்ன பூரணியின் தங்க விக்ரஹமும், பெரிய விக்ரஹமும் வைக்கப்படுகிறது. மற்ற நாட்களில் தரிசிக்க முடியாது. பசிப்பிண் போக்கும் மருத்துவராக அகிலாண்ட நாயகி சுவர்ண பீடத்தில் தங்கக் கொலு வீற்றிருக்கிறாள். சுத்தப் பொன் விக்ரஹமாதலால் ஒளியில் கண்கள் கூசுகின்றன. திருவுரும் முழுவதும் நகைகளால் அலங்கரிக்கப்பட்டு மிக்க அழகுடன் காட்சியளிக்கின்றாள். இடது திருக்கரத்தில் தங்கக் கிண்ணமும், வலது கரத்தில் தங்க அகப்பையும் கொண்டு, நவரத்னக் கிரீடம் அணிந்து, அதன் மேல் தங்கக் குடையும், சொர்ணப் புடவையும் உடுத்தி, மார்பிலும் கழுத்திலும் நவரத்னங்கள் மின்ன, பத்மாசனத்தில் அமர்ந்து அன்னை அருள் பாலிக்கின்றாள்.

அவளருகே ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களும் தங்க விக்ரஹங்களாக அமர்ந்திருக்கின்றார்கள். அன்ன பூரணி மக்களின் பசியை நீக்குகிறாள் என்பதை ஆமோதிக்கும் வகையில் இரு தாயார்களும் வலக்கரத்தைத் தூக்கி நம்மை ஆசீர்வதித்து, கட்டியம் கூறுவது போல் அமர்ந்திருக்கின்றனர். ஓர் ஆள் உயரத்தில் வெள்ளி விக்ரஹமாக பிக்ஷாடனரும் திருவோடு தாங்கி அன்னபூரணியிடம் அன்னம் பெறுகிறார். நாகாபரணத்தை அணிந்து, இடுப்பில் புலித் தோலுடன் ஒரு கையில் உடுக்கையும் மறுகையில் பிரம்ம கபாலமும் ஏந்திய திருக்காட்சியைக் கண்டவர் மனம் உருகும். ஓர் அற்புதமான காட்சி. தீபாவளி சமயம் மூன்று நாட்களுக்கு இத்திருக்காட்சியை மக்கள் தரிசிக்கலாம்.

அன்னபூரணி கோயில் தீபாவளி அன்று சிறப்பாக அலங்கரிக்கப்படுகிறது. அன்னம்மலைபோல் குவித்து வைக்கப்படுகிறது. பலகாரங்களும் இனிப்பு வகைகளும் சிறிய சிறிய குன்றுகள் போல் குவித்து வைக்கப்படுகின்றன. அரிசி, பருப்பு, தானிய வகைகள், உப்பு, புளி போன்ற சமையலுக்குத் தேவையான மளிகைப் பொருள்களும், பாத்திரங்களிலும், தட்டுகளிலும் அடுக்கி வைக்கப்படும். காய்கறி வகைகளும் பல விதமாகத் தயாரிக்கப்பட்டு வைக்கப்படுகின்றன.

இதையடுத்து இரு கட்டில்கள், வெல்வெட் திண்டுகள், மெத்தை போன்றவை இறைவன் - இறைவி துயில் கொள்ள அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், இனிப்பு வகைகளை, பலவித தின்பண்டங்கள், உலர் பழவகைகளும் காணப்படுகின்றன. இது ஓர் அற்புதமான காட்சியாக விளங்குகிறது. பக்தர்கள் யாவருக்கும் பசியாறும் வண்ணம் அன்னமும், இனிப்பு வகைகளும் வாரி வழங்கப்படுகின்றன. பக்தர்கள் அன்ன பூரணிக்குக்காணிக்கையாக ரூபாய் நோட்டுக்களை வாரி வழங்குகின்றனர். ஆகவே, ஆதிசங்கரர் அன்னபூரணியை “நித்தியான்ன தானேஸ்வரி” என்று மிக அழகாக வர்ணித்துப் பாடியுள்ளார்.

தீபாவளி சமயத்தில் லட்டுகளினால் செய்த தேரில் அன்னபூரணி அமர்ந்து, பவனி வருவதைக் காணக் கண் கோடி வேண்டும் என்று சொல்லலாம். பவனி முடிந்ததும் அந்த லட்டுகளே பிரசாதமாக மக்களுக்குத் தரப்படுகிறது. தீபாவளி தினங்களில் சிறப்புப் பூஜை வழிபாடுகள் நடைபெறும். பக்தர்கள் காலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை அன்ன பூரணியைத் தரிசிக்க முடிகிறது.

தேனின் பலன் உங்களுக்குத் தெரியுமா ??

மணக்கால் அய்யம்பேட்டை | 12:26 PM | Best Blogger Tips


பஞ்சாப் லூதியானா பண்ணை பல்கலைக் கழகத்தின் ஓர் ஆய்வாக 1987 ம் வெளிவந்த தகவல்களை இனிக்கும் வரிகளில் இதோ:

1. தேனை உடலில் உள்ள கட்டியின் மீது பூசி வந்தால் கட்டி உடைந்து குணமாகும்.

** கட்டி உடைய தேனைப்பூசு **

2. சிறு காயங்கள், தீக் காயங்கள் மீதும் தேனை தடவலாம்.

** காயங்கள் ஆற தேனைத்தடவு **

3. நாள்தோறும் தேனை பருகிவந்தால் இதயம் வலுப்படும். கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். வாய்வுத் தொல்லை நீங்கும்.

** தேனைக் குடித்தால் இதயம் வலுப்படும் **

4. களைப்பு, உடல் சோர்வுகளுக்கும், தொண்டை கரகரப்பு, சளித் தொல்லை ஆகியவைகளுக்கும் தேன் சிறந்த மருந்து.

** உள்ளச் சோர்வுக்கு தேனை அருந்து **

5. கண்ணில் ஒரு சொட்டு தேன் விட்டால் கண் வலி, எரிச்சல் நீங்கும்.

** தேன் துளி இட்டால் துலங்கும் பார்வை **

தேனைப் பற்றி திருக்குர் ஆன் கூறுவது:

‘‘மலைகளிலும்> மரங்களிலும்> மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!’’ என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.

- B.R.Viswanadhan.
தேனின் பலன் உங்களுக்குத் தெரியுமா ??

பஞ்சாப் லூதியானா பண்ணை பல்கலைக் கழகத்தின் ஓர் ஆய்வாக 1987 ம் வெளிவந்த தகவல்களை இனிக்கும் வரிகளில் இதோ:

1. தேனை உடலில் உள்ள கட்டியின் மீது பூசி வந்தால் கட்டி உடைந்து குணமாகும். 
 
 ** கட்டி உடைய தேனைப்பூசு **

2. சிறு காயங்கள், தீக் காயங்கள் மீதும் தேனை தடவலாம். 

 ** காயங்கள் ஆற தேனைத்தடவு **

3. நாள்தோறும் தேனை பருகிவந்தால் இதயம் வலுப்படும். கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். வாய்வுத் தொல்லை நீங்கும். 

 ** தேனைக் குடித்தால் இதயம் வலுப்படும் **

4. களைப்பு, உடல் சோர்வுகளுக்கும், தொண்டை கரகரப்பு, சளித் தொல்லை ஆகியவைகளுக்கும் தேன் சிறந்த மருந்து. 

 ** உள்ளச் சோர்வுக்கு தேனை அருந்து **

5. கண்ணில் ஒரு சொட்டு தேன் விட்டால் கண் வலி, எரிச்சல் நீங்கும். 

 ** தேன் துளி இட்டால் துலங்கும் பார்வை **

தேனைப் பற்றி திருக்குர் ஆன் கூறுவது: 

‘‘மலைகளிலும்> மரங்களிலும்> மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!’’ என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது. 

- B.R.Viswanadhan.

பிரசவம் - மன வலிமை தரும் நம் பாரம்பரியங்கள். . .

மணக்கால் அய்யம்பேட்டை | 4:43 PM | Best Blogger Tips


பிரசவம் என்பது மறுபிறவி மாதிரி...அதை உடல் வலுவுடனும், மன வலுவுடனும் தாங்க வேண்டும் என்பதற்காகவே நம் இந்திய பாரம்பரியத்தில் எத்தனயோ விஷயங்களைப் பார்த்து பார்த்து செய்து வைத்திருக்கின்றார்கள். அவை ஆச்சரியமானவை மட்டுமல்ல...விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டவை என்பதுதான் இன்னும் அதிசயமானவை என்று சொல்ல வேண்டும்.

மனதுக்கான நல்ல விஷயங்களும் நம்முடைய பாரம்பரியத்தில் நிறைய அடங்கியிருக்கின்றன. முக்கியமாக, பிரசவத்துக்கு முன்பு வளைகாப்பு நடத்துகிற விஷயத்தையே சொல்லலாம். வளைகாப்புக்கு நிறைய பெண்கள் கூடி, கர்ப்பவதிக்கு மூத்த சுமங்கலிகள் வளையல் போடுவார்கள். இதற்கான காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், "எங்களை எல்லாம் பார்...நாங்கள் எத்தனை பிள்ளைகளைப் பெற்று உன் முன் நிற்கிறோம்?! நீயும் உன் பிரசவத்தை சுலபமாக கடப்பாய்...தைரியமாக இரு!" என்பதை இங்கு நாம் எடுத்துக் கொள்ளலாம்.
...
இந்தச் சடங்கில் ஒரு சுவாரஸ்யமான ஒற்றுமையையும் கவனிக்கலாம். வளையல் இடும் பெண்ணின் கையை கர்ப்பப்பைக்கு ஒப்பிட்டுப் பாருங்கள். கை விரல்களை கூப்பி, வளையல்களை உள்ள செலுத்தும்போது சற்று சுலபமாக இருக்கும். வளையலை மணிக்கட்டுப் பகுதிக்குச் செலுத்தும்போது சற்று கடினமாகி, அந்த வலியைச் சற்றே சற்று பொறுத்துக் கொண்டால்...அடுத்த நிமிடமே கரங்களில் வளையல் ஏறிவிடும். இப்படித்தான் பிரசவமும்!

இந்த வளையல்கள் ஏற்படுத்தும் அதிர்வு ஓசை, கருவில் வளரும் குழந்தைக்கு நல்ல தாலாட்டு. நம் தாய் நம்முடன் இருக்கிறாள் என்று குழந்தைக்கு அது கொடுக்கும் பாதுகாப்பு உணர்வு, அழகானது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

அந்தக் காலத்தில் வீடு என்பது பெரியதாக இருந்தது. பிரசவத்துக்கு முன்பு அடிக்கடி உறக்கம் கலைந்து, அந்தப் பெண்ணுக்கு சிறுநீர் கழிக்க வேண்டியதிருக்கும். இரவு நேரத்தில் கர்ப்பமான பெண் அறையைக் கடந்து, கூடத்தைக் கடந்து, பின்புறமிருக்கும் கழிவறைக்குப் போகும்போது அந்த வளையல் சப்தம் அந்த பெண் எங்கே செல்கிறாள் என்பதை சட்டென்று சுட்டிக்காட்டும். "ஏன்டி, என்னை எழுப்பக்கூடாதா...இரு நானும் வர்றேன்" என்று உதவிக்குச் செல்வார்கள் வீட்டில் இருக்கும் பெண்கள்.

வளையல் போட்ட 'கையோடு' கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக தாய் வீட்டுக்குச் செல்வதிலும் அடங்கி இருக்கின்றன அவர்களின் மனநலம் சம்பந்தப்பட்ட நுணுக்கங்கள். இந்திய நாட்டில் மட்டுமின்றி, ஆசிய நாடுகளில் எல்லாம் பிரசவம் என்று வந்தாலே அந்தப் பெண் தாய் வீட்டுக்குச் சென்று விடுவது வழக்கமாக இருக்கிறது. ஆம்...பிரசவமாகும் பெண்ணின் உடல்நலம் மட்டுமல்ல, மனநலத்தையும் பாதுகாக்கிற பணி, தாய் வீட்டுக்குத்தான் என்று பார்த்துப் பார்த்து இந்த ஏற்பாட்டை செய்து வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.

நம் அம்மா, அப்பா, கணவர், சொந்தங்கள், மருத்துவர் எல்லாம் நம்மைப் பிரசவம் எனும் அந்த பெருநிகழ்வில் இருந்து பத்திரமாக மீட்பார்கள்...' என்ற நம்பிக்கைதானே அன்று அட்டவணைகள் இல்லாமல், செக்கப்புகள் இல்லாமல், மருந்து - மாத்திரைகள் இல்லாமல் எல்லா பிரசவங்களையும் சுகப்பிரசவமாக்கின?!

அந்த நம்பிக்கையை கர்ப்பிணிகளின் மனதில், அவளைச் சுற்றியுள்ளவர்களே ஆழமாக விதைக்கலாம். அதையெல்லாம் செய்து பாருங்கள்...இரண்டு, நான்கு, ஆறு...என்று மாதங்கள். அவர்களுக்குத் தெரியாமலே சுகப்பிரசவத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும்.

நன்றி : குட்டி
பிரசவம் - மன வலிமை தரும் நம் பாரம்பரியங்கள். . .

பிரசவம் என்பது மறுபிறவி மாதிரி...அதை உடல் வலுவுடனும், மன வலுவுடனும் தாங்க வேண்டும் என்பதற்காகவே நம் இந்திய பாரம்பரியத்தில் எத்தனயோ விஷயங்களைப் பார்த்து பார்த்து செய்து வைத்திருக்கின்றார்கள். அவை ஆச்சரியமானவை மட்டுமல்ல...விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டவை என்பதுதான் இன்னும் அதிசயமானவை என்று சொல்ல வேண்டும்.

மனதுக்கான நல்ல விஷயங்களும் நம்முடைய பாரம்பரியத்தில் நிறைய அடங்கியிருக்கின்றன. முக்கியமாக, பிரசவத்துக்கு முன்பு வளைகாப்பு நடத்துகிற விஷயத்தையே சொல்லலாம். வளைகாப்புக்கு நிறைய பெண்கள் கூடி, கர்ப்பவதிக்கு மூத்த சுமங்கலிகள் வளையல் போடுவார்கள். இதற்கான காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், "எங்களை எல்லாம் பார்...நாங்கள் எத்தனை பிள்ளைகளைப் பெற்று உன் முன் நிற்கிறோம்?! நீயும் உன் பிரசவத்தை சுலபமாக கடப்பாய்...தைரியமாக இரு!" என்பதை இங்கு நாம் எடுத்துக் கொள்ளலாம்.
... 
இந்தச் சடங்கில் ஒரு சுவாரஸ்யமான ஒற்றுமையையும் கவனிக்கலாம். வளையல் இடும் பெண்ணின் கையை கர்ப்பப்பைக்கு ஒப்பிட்டுப் பாருங்கள். கை விரல்களை கூப்பி, வளையல்களை உள்ள செலுத்தும்போது சற்று சுலபமாக இருக்கும். வளையலை மணிக்கட்டுப் பகுதிக்குச் செலுத்தும்போது சற்று கடினமாகி, அந்த வலியைச் சற்றே சற்று பொறுத்துக் கொண்டால்...அடுத்த நிமிடமே கரங்களில் வளையல் ஏறிவிடும். இப்படித்தான் பிரசவமும்!

இந்த வளையல்கள் ஏற்படுத்தும் அதிர்வு ஓசை, கருவில் வளரும் குழந்தைக்கு நல்ல தாலாட்டு. நம் தாய் நம்முடன் இருக்கிறாள் என்று குழந்தைக்கு அது கொடுக்கும் பாதுகாப்பு உணர்வு, அழகானது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

அந்தக் காலத்தில் வீடு என்பது பெரியதாக இருந்தது. பிரசவத்துக்கு முன்பு அடிக்கடி உறக்கம் கலைந்து, அந்தப் பெண்ணுக்கு சிறுநீர் கழிக்க வேண்டியதிருக்கும். இரவு நேரத்தில் கர்ப்பமான பெண் அறையைக் கடந்து, கூடத்தைக் கடந்து, பின்புறமிருக்கும் கழிவறைக்குப் போகும்போது அந்த வளையல் சப்தம் அந்த பெண் எங்கே செல்கிறாள் என்பதை சட்டென்று சுட்டிக்காட்டும். "ஏன்டி, என்னை எழுப்பக்கூடாதா...இரு நானும் வர்றேன்" என்று உதவிக்குச் செல்வார்கள் வீட்டில் இருக்கும் பெண்கள்.

வளையல் போட்ட 'கையோடு' கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக தாய் வீட்டுக்குச் செல்வதிலும் அடங்கி இருக்கின்றன அவர்களின் மனநலம் சம்பந்தப்பட்ட நுணுக்கங்கள். இந்திய நாட்டில் மட்டுமின்றி, ஆசிய நாடுகளில் எல்லாம் பிரசவம் என்று வந்தாலே அந்தப் பெண் தாய் வீட்டுக்குச் சென்று விடுவது வழக்கமாக இருக்கிறது. ஆம்...பிரசவமாகும் பெண்ணின் உடல்நலம் மட்டுமல்ல, மனநலத்தையும் பாதுகாக்கிற பணி, தாய் வீட்டுக்குத்தான் என்று பார்த்துப் பார்த்து இந்த ஏற்பாட்டை செய்து வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.

நம் அம்மா, அப்பா, கணவர், சொந்தங்கள், மருத்துவர் எல்லாம் நம்மைப் பிரசவம் எனும் அந்த பெருநிகழ்வில் இருந்து பத்திரமாக மீட்பார்கள்...' என்ற நம்பிக்கைதானே அன்று அட்டவணைகள் இல்லாமல், செக்கப்புகள் இல்லாமல், மருந்து - மாத்திரைகள் இல்லாமல் எல்லா பிரசவங்களையும் சுகப்பிரசவமாக்கின?!

அந்த நம்பிக்கையை கர்ப்பிணிகளின் மனதில், அவளைச் சுற்றியுள்ளவர்களே ஆழமாக விதைக்கலாம். அதையெல்லாம் செய்து பாருங்கள்...இரண்டு, நான்கு, ஆறு...என்று மாதங்கள். அவர்களுக்குத் தெரியாமலே சுகப்பிரசவத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும்.

நன்றி : குட்டி

முடி வளர எளிய மருத்துவம்..!!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:25 PM | Best Blogger Tips

முடி வளர சித்தமருத்துவம்..!!

முடி உதிர்வதை தடுக்க:

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.


வழுக்கையில் முடி வளர:

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக:

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக:

ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற:

அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

join nagapattinamnews@gmail.com

செம்பட்டை முடி நிறம் மாற:

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க:

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு:

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர:

நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய:

நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.


முடி உதிர்வதை தடுக்க:

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.


வழுக்கையில் முடி வளர:

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக:

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக:

ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற:


அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.


செம்பட்டை முடி நிறம் மாற:

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க:

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு:


கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர:

நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய:

நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.


பெண்களுக்கான எளிய உடற்பயிற்சி

மணக்கால் அய்யம்பேட்டை | 2:03 PM | Best Blogger Tips


பெண்களை பொறுத்தவரை 30 வயதுக்கு மேல் ஒவ்வொரு பிரச்சனையாக தலை காட்டும். சிலருக்கு உடல் எடை கூடும்.

குறிப்பாக வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்ந்து பெரிதாகி விடும். வயிற்றைக் குறைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் ஓயாத வேலைகளுக்கு நடுவே உடற்பயிற்சிகள் செய்ய நேரம் இருக்காது. இப்படிப்பட்டவர்களுக்கு தினமும் 15 நிமிடங்கள் ஒதுக்கினால் போதும். இடை எடையையும் குறைக்க முடியும்.

தரையில் நேராகப்படுக்கவும். இரண்டு கால்களையும் படத்தில் காட்டி இருப்பது போல் மடக்கவும். இரு கைகளையும் தலைக்கு அடியில் பக்கபலமாக வைத்தபடி படத்தில் காட்டியபடி தலையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயர்த்துங்கள். தலையை உயர்த்தும் போது மேல் வயிற்றில் அழுத்தம் ஏற்படும். இப்படிப் பத்து முறை செய்ய வேண்டும். பலன்….தினமும் இந்தப்பயிற்சியைச் செய்தால் தொப்பை குறையும்.

தரையில் நேராகப்படுக்கவும். கைகளை இடுப்புக்கு அப்புறம் வைத்தபடி கால்களை படத்தில் காட்டியபடி எந்த அளவுக்கு உயர்த்த முடியுமோ இந்த அளவுக்கு உயர்த்தவும். இந்நிலையில் அடிவயிற்றை உள்ளிழுத்து சில நொடிகள் அப்படியே இருக்கவும். பின் கால்களைக் கீழே இறக்கவும். இதே போல் தினசரி பத்து முறை செய்ய வேண்டும். பலன்… இந்த பயிற்சி இடுப்புப் பகுதியில் உள்ள தேவைற்ற கொழுப்பு குறையும்.
பெண்களுக்கான எளிய உடற்பயிற்சி

பெண்களை பொறுத்தவரை 30 வயதுக்கு மேல் ஒவ்வொரு பிரச்சனையாக தலை காட்டும். சிலருக்கு உடல் எடை கூடும்.

குறிப்பாக வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்ந்து பெரிதாகி விடும். வயிற்றைக் குறைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் ஓயாத வேலைகளுக்கு நடுவே உடற்பயிற்சிகள் செய்ய நேரம் இருக்காது. இப்படிப்பட்டவர்களுக்கு தினமும் 15 நிமிடங்கள் ஒதுக்கினால் போதும். இடை எடையையும் குறைக்க முடியும்.

தரையில் நேராகப்படுக்கவும். இரண்டு கால்களையும் படத்தில் காட்டி இருப்பது போல் மடக்கவும். இரு கைகளையும் தலைக்கு அடியில் பக்கபலமாக வைத்தபடி படத்தில் காட்டியபடி தலையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயர்த்துங்கள். தலையை உயர்த்தும் போது மேல் வயிற்றில் அழுத்தம் ஏற்படும். இப்படிப் பத்து முறை செய்ய வேண்டும். பலன்….தினமும் இந்தப்பயிற்சியைச் செய்தால் தொப்பை குறையும்.

தரையில் நேராகப்படுக்கவும். கைகளை இடுப்புக்கு அப்புறம் வைத்தபடி கால்களை படத்தில் காட்டியபடி எந்த அளவுக்கு உயர்த்த முடியுமோ இந்த அளவுக்கு உயர்த்தவும். இந்நிலையில் அடிவயிற்றை உள்ளிழுத்து சில நொடிகள் அப்படியே இருக்கவும். பின் கால்களைக் கீழே இறக்கவும். இதே போல் தினசரி பத்து முறை செய்ய வேண்டும். பலன்… இந்த பயிற்சி இடுப்புப் பகுதியில் உள்ள தேவைற்ற கொழுப்பு குறையும்.

பிரச்னையை எதிர்கொள்வது எப்படி?....

மணக்கால் அய்யம்பேட்டை | 11:49 AM | Best Blogger Tips


உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்னை இருந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும், தினசரி புதிய பிரச்னைகளும் வந்து கொண்டிருக்கின்றன. உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்னை. நாளை தீர்க்க வேண்டிய பிரச்னை. சில நாள் அல்லது சில மாதங்கள் கழித்து தீர்க்க வேண்டிய பிரச்னை என பிரச்னைகளின் வகைகளைப் பிரித்து வைத்துக் கொண்டு, அதனை எதிர்கொண்டு தீர்க்க முயல வேண்டும்.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் கடன் பிரச்னை, தொழில் பிரச்னை, குடும்பப் பிரச்னை, தொழிலை வெற்றிகரமாகச் செய்யும்போது எதிர்கொள்ள வேண்டிய பிரச்னை என அடுக்கடுக்காக வருகிறது என வருத்தப்பட்டார். ஆனால், அவர் பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாமல் முடங்கி விடவில்லை.

கடன்காரர்கள் வந்தால் சளைக்காமல் பதில் கூறுவார். தொழிலாளர்கள் பிரச்னையை சாதுரியமாகப் பேசி முடிப்பார். வாழ்க்கையே போராட்டம்தான் என்பார்.

எந்தப் பிரச்னை வந்தாலும் அதில் மூழ்கிவிட வேண்டாம். சதா பிரச்னைகளை எண்ணிக் கொண்டிருந்தால் பிரச்னை தீராது. ஒரு பிரச்னையைத் தீர்க்க பல வழிகளை யோசிக்க வேண்டும். பிரச்னை குறித்து அலசி ஆராய வேண்டும். எந்த முடிவு என தீர்மானம் செய்ய வேண்டும். அந்த முடிவை அடையும் வழிமுறைகளை யோசிக்க வேண்டும். இறுதியில் எந்த வழி சிறந்தது என ஆய்வு செய்து, அந்த வழியில் செல்ல வேண்டும்.

இதனை விட்டுவிட்டு, இந்தப் பிரச்னையை எப்படிச் சமாளிப்பது என சும்மா இருந்து கொண்டு சிந்தித்துக் கொண்டிருந்தால், அந்தப் பிரச்னையில் மூழ்க நேரிடும். பின்னர், அதிலிருந்து எழுந்துவருவது கடினமாக இருக்கும். குழப்ப நிலையிலிருந்து மீண்டு தெளிவான நிலையில் இருந்து கொண்டு பிரச்னைகள் குறித்து யோசிக்க வேண்டும். தேவைப்பட்டால் பிறரின் ஆலோசனையைக் கேட்கலாம்.

நமது பழக்கங்களும் மனப்போக்கும் ஒரு புதிய பிரச்னையைத் தொலைவில் நின்று பார்க்க முடியாமல், ஆராய முடியாமல் தடுக்கும்.

அடுத்து, நமது விருப்பு வெறுப்புகள் நம்மில் ஒரு பிடிவாதத்தை ஏற்படுத்தி விடும். பிரச்னைகளில் தடை ஏற்படும்போது சற்று பின்வாங்கிப் புதிய உத்திகளையும், புதிய திட்டங்களையும் யோசிக்க வேண்டும்.

ஒரு துறவி தன் சீடர்களுடன் காட்டுவழியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆறு ஒன்று குறுக்கே ஓடிக் கொண்டிருந்தது. ஆற்றைக் கடக்க வேண்டும் என முடிவு எடுத்தபோது, அங்குவந்த இளம்பெண் ஒருவர், சுவாமி எனக்கு நீச்சல் தெரியாது. என்னை ஆற்றைக் கடந்து அக்கரைக்கு கொண்டு செல்ல தாங்கள் உதவ வேண்டும் எனக் கேட்டார். அப் பெண் கூறியதைக் கேட்டதும் சீடர்களுக்குக் கோபம் வந்தது.

ஆனால் துறவி, "நீ என் தோளில் அமர்ந்து கொள். உன்னை அக்கரைக்குக் கொண்டு சென்று விடுகிறேன்' என பெண்ணிடம் கூறியதையடுத்து அப் பெண், துறவியின் தோளில் அமர்ந்து கொண்டார். துறவி தண்ணீரைக் கடந்து மறு கரையில் அப் பெண்ணை இறக்கிவிட்டுவிட்டு, மீண்டும் நடக்கத் தொடங்கினார். சீடர்கள் கசமுசாவென பேசிக் கொண்டார்கள். சிறிது தூரம் சென்ற பின்னர் ஒரு சீடன், "சுவாமி, நீங்கள் அப் பெணை தோளில் சுமந்து சென்றது தவறு என எங்களுக்குப்படுகிறது' என்றான்.

"நான் அப் பெண்ணை அப்போதே கீழே இறக்கிவிட்டு விட்டேன். நீ இன்னுமா சுமந்து கொண்டிருக்கிறாய்' எனத் துறவி கேட்டராம். அதுபோல, நாம் பிரச்னைகளை தேவையில்லாமல் நம் மனதில் வைத்துக்கொண்டு தடுமாறுகிறோம்.

சளைக்காத மனம் வேண்டும் என ஓர் அறிஞன் கூறுகிறான். பந்து விளையாட்டில், பந்தை எதிர்கொள்பவனே வெற்றி கொள்கிறான். அதுபோல பிரச்னைகளை எதிர்கொள்பவர்களே வெற்றி பெறுகிறார்கள். வாழ்வின் மிக முக்கியமான பிரச்னை -நாம் நம் வாழ்வில் அதிர்ஷ்டத்தைத் தோற்றுவிக்க முடியுமா என்பதுதான். "முடியும்' என பல ஞானிகள் கூறியுள்ளார்கள்.

ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு, வழி தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும்போது, ஒரு சிறு சம்பவம் நேருகிறது. உடனே நம் மனம் நமது பிரச்னையுடன் அதை இணைத்து முடிவு காண்கிறது. சொல்லப் போனால் நமது மனம் பிரச்னைக்கு என்ன தீர்வு என சிந்தித்த வண்ணம், எதிர்பார்த்த வண்ணம் உள்ளது. மனம் எதிர்பார்க்கும்போது, அது எதிர்பார்ப்பதே நிகழ்கிறது.

பிரச்னைகளுக்கு விடை இருக்கும் என திடமாக நம்ப வேண்டும். நமது அன்றாட வாழ்வில் சிறு பிரச்னைகள், பெரும் பிரச்னைகள் என நமது வாழ்க்கை, பிரச்னைகளால் நிரம்பியுள்ளது. பல சிறு பிரச்னைகளுக்குச் சரியாக முடிவு எடுக்கும்போது, வாழ்க்கை பல சிறு வெற்றிகளால் அமைகிறது. சிறு வெற்றிகளை இணைத்து சாதனை என்ற மாலையை நாம் அணிந்து மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

இதயத்தை பலப்படுத்தும் வெள்ளைக் காய்கறிகள் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:41 AM | Best Blogger Tips


வெள்ளை காய் மற்றும் பழ வகைகளில் தொடர்ந்து உண்பவர்கள் இதய நலத்துடன் இருப்பதாகவும், புற்றுநோயைத் தடுக்கும் எதிர்ப்பு சக்தி இவர்கள் உடலில் அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. வெங்காயத்திலிருந்து கிடைக்கும் அலிசின் என்ற வேதிப்பொருள் கொழுப்பையும், இரத்த அழுத்தத்தையும் குறைக்கும் சக்தி கொண்டது. காலிபிளவரில் உள்ள வெள்ளை அணுக்கள் புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது. பூண்டு, காளான்கள், இஞ்சி, வெள்ளை உருளை, முள்ளங்கி ஆகியவற்றிலும் புற்றுநோயைத் தடுக்கும் சக்தி இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக காளான்கள் காய்கறியாகவே கருதப்படுகிறது. இது உண்பதற்கு ஏற்ற உணவு. காளான்களில் பல்லாயிரக்கணக்கான வகைகளும் நிறங்களும் உள்ளன. உணவிற்கு உகந்தவை வெள்ளை நிற காளான்கள் மட்டுமே. பளுப்பு நிறமோ அல்லது கறும் புள்ளிகளோ கொண்டவை வயதில் முதிர்ந்த இனப்பெருக்கத்தில் ஈடுப்பட்டுள்ள காளான்கள் என்பதனை குறிக்கும். காளான்களில் அதிக புரதம்காணப்படுகின்றது. உலகம் முழுவதும் சுமார் 200 வகையான உண்பதற்கு உகந்த காளான்கள் உள்ளன, பெரும்பாலும் அனைத்து நாடுகளிலும் இதனை உணவாக பயன்படுத்துகின்றனர். இதற்குக் காரணம் அவற்றில் அடங்கியுள்ள சுவை, மணம் மற்றும் ஊட்டச்சத்துக்களே ஆகும். இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இதில் உள்ள பொட்டாசியம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.

வெள்ளைப்பூண்டு நோய் எதிர்ப்பு திறன் கொண்டது. இது ஆன்டிபாக்டீரியல், ஆன்டிபங்கல், மேலும் ரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்புகளை அகற்ற உதவுகிறது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் வெள்ளைப் பூண்டு முக்கிய பங்காற்றுகிறது.

உருளைக்கிழங்கும், வாழைப்பழமும் ஒரே மாதிரியான ஊட்டச்சத்தினை கொண்டுள்ளன. இதில் அதிக அளவில் கார்போஹைடிரேட், பொட்டாசியம் போன்றவை காணப்படுகின்றன. இது மனிதர்களுக்குத் தேவையான சக்தியை அளிக்க வல்லது.

காலிஃப்ளவர் விட்டமின் சத்து நிறைந்தது. இதில் உள்ள வெள்ளை அணுக்கள் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இதில் குறைந்த அளவு கலோரிகளே காணப்படுகின்றன. பீட்ரூட், காரட் போல டர்னிப் வேரில் கிடைக்கும். இந்த வெள்ளைநிற காய்கறியில் விட்டமின் C சத்து அதிகம் காணப்படுகிறது. இதை பச்சையாக சலாட்போல சாப்பிடலாம். இந்த வெள்ளை நிற காய்கறிகளை தினசரி உணவுகளில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியம் அதிகரிக்கும் .இது போன்ற எண்ணற்ற நல்ல பல தகவலை தந்து கொண்டு இருக்கும் சகோதரி பரமக்குடி சுமதி அவர்களுக்கு இன்று ஒரு தகவல் சார்பாக நமது நன்றியே தெரிவித்து கொள்கிறோம்

நன்றி
பரமக்குடி சுமதி
இதயத்தை பலப்படுத்தும் வெள்ளைக் காய்கறிகள் !!!

வெள்ளை காய் மற்றும் பழ வகைகளில் தொடர்ந்து உண்பவர்கள் இதய நலத்துடன் இருப்பதாகவும், புற்றுநோயைத் தடுக்கும் எதிர்ப்பு சக்தி இவர்கள் உடலில் அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. வெங்காயத்திலிருந்து கிடைக்கும் அலிசின் என்ற வேதிப்பொருள் கொழுப்பையும், இரத்த அழுத்தத்தையும் குறைக்கும் சக்தி கொண்டது. காலிபிளவரில் உள்ள வெள்ளை அணுக்கள் புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது. பூண்டு, காளான்கள், இஞ்சி, வெள்ளை உருளை, முள்ளங்கி ஆகியவற்றிலும் புற்றுநோயைத் தடுக்கும் சக்தி இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

 பொதுவாக காளான்கள் காய்கறியாகவே கருதப்படுகிறது. இது உண்பதற்கு ஏற்ற உணவு. காளான்களில் பல்லாயிரக்கணக்கான வகைகளும் நிறங்களும் உள்ளன. உணவிற்கு உகந்தவை வெள்ளை நிற காளான்கள் மட்டுமே. பளுப்பு நிறமோ அல்லது கறும் புள்ளிகளோ கொண்டவை வயதில் முதிர்ந்த இனப்பெருக்கத்தில் ஈடுப்பட்டுள்ள காளான்கள் என்பதனை குறிக்கும். காளான்களில் அதிக புரதம்காணப்படுகின்றது. உலகம் முழுவதும் சுமார் 200 வகையான உண்பதற்கு உகந்த காளான்கள் உள்ளன, பெரும்பாலும் அனைத்து நாடுகளிலும் இதனை உணவாக பயன்படுத்துகின்றனர். இதற்குக் காரணம் அவற்றில் அடங்கியுள்ள சுவை, மணம் மற்றும் ஊட்டச்சத்துக்களே ஆகும். இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இதில் உள்ள பொட்டாசியம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.

வெள்ளைப்பூண்டு நோய் எதிர்ப்பு திறன் கொண்டது. இது ஆன்டிபாக்டீரியல், ஆன்டிபங்கல், மேலும் ரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்புகளை அகற்ற உதவுகிறது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் வெள்ளைப் பூண்டு முக்கிய பங்காற்றுகிறது.

உருளைக்கிழங்கும், வாழைப்பழமும் ஒரே மாதிரியான ஊட்டச்சத்தினை கொண்டுள்ளன. இதில் அதிக அளவில் கார்போஹைடிரேட், பொட்டாசியம் போன்றவை காணப்படுகின்றன. இது மனிதர்களுக்குத் தேவையான சக்தியை அளிக்க வல்லது.

காலிஃப்ளவர் விட்டமின் சத்து நிறைந்தது. இதில் உள்ள வெள்ளை அணுக்கள் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இதில் குறைந்த அளவு கலோரிகளே காணப்படுகின்றன. பீட்ரூட், காரட் போல டர்னிப் வேரில் கிடைக்கும். இந்த வெள்ளைநிற காய்கறியில் விட்டமின் C சத்து அதிகம் காணப்படுகிறது. இதை பச்சையாக சலாட்போல சாப்பிடலாம். இந்த வெள்ளை நிற காய்கறிகளை தினசரி உணவுகளில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியம் அதிகரிக்கும் .இது போன்ற எண்ணற்ற நல்ல பல தகவலை தந்து கொண்டு இருக்கும்  சகோதரி பரமக்குடி சுமதி அவர்களுக்கு இன்று ஒரு தகவல் சார்பாக நமது நன்றியே தெரிவித்து கொள்கிறோம் 

நன்றி
பரமக்குடி சுமதி

உ.வெ.சாமிநாத ஐயர்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:38 AM | Best Blogger Tips


தமிழ்மொழியின் பழம்பெருமையைப் பலர் அறியாமல் வாழ்ந்து வந்த காலத்தில், அதாவது 19-ஆம் நூற்றாண்டின் நடுவில், தமிழுக்கு புத்துயிர் ஊட்ட, பலர் தோன்றினார்கள். அவர்களில் பெருமைக்குரியவராகத் திகழ்பவர் தான் தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படும் பேராசிரியர் உ.வே. சாமிநாதன் என்கிற உ.வே.சா.!

1855, பிப். 19'ம் நாள், நாகை மாவட்டம் சூரியமூலை என்ற ஊரில், வேங்கடசுப்பையா- சரஸ்வதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த இவர், தமிழுக்கு ஆற்றிய அரும்பணியும், அதன்பொருட்டு அவர் அடைந்த இன்னல்களும், தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அரிய வரலாறு!

அக்காலத்தில் நூல்கள் அனைத்தும் ஏட்டுச் சுவடிகளில் (பனை ஓலையில்) எழுதப்பட்டிருந்தன. இந்நிலையில் இவர், இதுபோன்ற ஏட்டுச்சுவடிகளை ஆராய்ந்து பின்பு நூல் வடிவிலே பதிப்பிக்கும் பொருட்டு திருவாவடுதுறை, திருப்பனந்தாள், தருமபுரம் போன்ற தமிழ் வளர்த்து வரும் ஆதீனங்களில் சுவடிகளைத் தேடி அலைந்தார். அங்கு அருமையான சுவடிகள் பல கரையான்கள் அரிக்கப்பட்ட நிலையில் இருக்கக் கண்டு மனம் புண்பட்டார்.

அப்போது ஆங்கிலேயர் ஆட்சி நம் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்நாளில் பழந்தமிழ் சுவடிகளைக் கற்பவரும் இல்லை, அவற்றை பாதுகாக்க நினைப்பவரும் இல்லை என்ற நிலை நாட்டில் நிலவியது. இந்நிலையிலும் இவரது தமிழ் ஆர்வத்தைக் கண்டு வியந்த தருமபுரம் ஆதீனத்தின் தலைவராக இருந்த ஸ்ரீ மாணிக்கவாசகர் தேசிகர் ஆதீனத்தில் இருந்த 50-க்கு மேற்பட்ட சுவடிகளை உ.வே. சாமிநாதருக்கு கொடுத்து உதவினார்.

அந்த ஏட்டுச் சுவடிகளை நூலாக வெளியிட, இவருக்கு வேண்டிய உதவிகளை செய்ய கும்பகோணத்தில் முன்சீப்பாக இருந்த ராமசாமி என்பவர் முன்வந்தார். பின்னர் ராமசாமியின் உதவியால் உ.வே.சா. முதன் முதலில் பதிப்பித்த நூல் 'சீவகசிந்தாமணி’. அடுத்து சங்க இலக்கியங்களுள் ஒன்றான “பத்துப்பாட்டு’ என்ற நூலை உ.வே.சா. அச்சிட்டு வெளியிட்டார். அதன் பிறகு ஐம்பெருங்காப்பியங்களில் 'சிலப்பதிகாரம்’, 'மணிமேகலை’ போன்ற நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார்.

அடுத்து 'குறுந்தொகை’ என்ற இலக்கியத்திற்கு உரை எழுதி வெளியிட்டார். இதைத் தொடர்ந்து எண்ணற்ற நூல்களை வெளியிட்டு தமிழுக்கு அரும்பணியாற்றினார். இவர் பதிப்பித்த நூல்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். 'சங்க நூல்கள்’, 'பிற்கால நூல்கள்’, 'இலக்கண நூல்கள்’, 'திருவிளையாடற் புராணம்’ போன்ற காவிய நூல்களாகும். ஆக மொத்தம் ஏட்டுச் சுவடிகளைப் பதிப்பித்து நூலாக வெளியிட உ.வே.சா. பட்ட இன்னல்கள் கணக்கில் அடங்காதவை.

இவர் தொடக்கக் கல்வியை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். பின்னர் தனது 17 வது வயதில் திருவாவடுதுறை ஆதீனத்தில் திவானாகப் பணியாற்றிய மீனாட்சி சுந்தரத்திடம் ஆறு ஆண்டுகள் தமிழ் கற்றார். பின்னர் கும்பகோணம் கல்லூரியில் 23 ஆண்டுகளும், சென்னை மாநிலக் கல்லூரியில் 16 ஆண்டுகளும் பேராசிரியராகப் பணியாற்றினார்.

இவர் மாநிலக் கல்லூரியில் பணிபுரிந்த போது, சென்னை திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரன் பேட்டைக்கு நிரந்தரமாகக் குடி பெயர்ந்தார். 1906-ஆம் ஆண்டு சென்னை அரசாங்கம் இவரது தமிழ்த் தொண்டை பாராட்டி 'மகா மகோபாத்யாயர்’ என்ற பட்டத்தை வழங்கியது. 1932-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் இவருக்கு 'தமிழ் இலக்கிய அறிஞர்’ என்ற விருதை வழங்கிக் கௌரவித்தது.

1937ம் ஆண்டு சென்னையில் மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து உ.வே.சா. உரை நிகழ்த்தினார். இந்த உரையை கேட்ட மகாத்மா, 'இந்த பெரியவரின் அடிநிழலில் இருந்தவண்ணம் நான் தமிழ் கற்க வேண்டுமென்ற ஆர்வமிகுதிதான் என்னிடம் எழுகிறது’ என்றார். இம் மாநாட்டின் போது அனைவராலும் 'தமிழ்த் தாத்தா’ என்று அழைக்கப்பட்ட உ.வே. சாமிநாதன் காந்தியடிகளைவிட பதினைந்து வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 1940-ஆம் ஆண்டு 'என் சரித்திரம்’ என்ற நூலை எழுதத் தொடங்கினார். இந்நூலில் தமிழ் வளர்ச்சி, தமிழ் நாட்டின் வரலாறு, அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள், புரவலர்கள், ஆதீனத் தலைவர்கள் ஆகியோரின் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கியிருந்தன.

இந்நூல் முழுமையடைவதற்கு முன்னரே 1942, ஏப். 28 ம் நாள் இரு நூற்றாண்டைக் கண்ட பெருமிதத்தோடு உ.வே.சா. இவ்வுலகை விட்டு மறைந்த போதிலும், காலமெல்லாம் வாழும் தமிழ்மொழி போல் தமிழ்த் தாத்தாவாக என்றென்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
 
-இராம. அய்யப்பன்
ஆதாரம்: அலைகள் இ-நியூஸ்

கோபால கிருஷ்ண கோகலே

மணக்கால் அய்யம்பேட்டை | 11:37 AM | Best Blogger Tips


கோபால கிருஷ்ண கோகலே, ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தின்போது உருவான சமூக மற்றும் அரசியல் தலைவர்களில் ஒருவர். கோகலே இந்திய தேசிய காங்கிரசின் மூத்த தலைவரும் இந்திய சேவகர்கள் அமைப்பின் நிறுவனரும் ஆவார். கோகலே தன்னுடைய குறிக்கோள்களை அடைவதற்காக, வன்முறையைத் தவிர்த்தல், இருக்கும் அரசு நிறுவனங்களுக்குள்ளேயே மாற்றத்தைக் கொண்டு வருதல் ஆகிய இரு முக்கிய கொள்கைகளைப் பின்பற்றினார். அடிப்படையில் மிதவாதியான இவரை, பாலகங்காதர திலகரின் தீவிரவாத குழுவுக்கு நேரேதிரானவராக சரித்திரம் பதிவு செய்துள்ளது. மகாத்மா காந்தியின் அரசியல் குருவாக இவர் கருதப்படுகிறார்.

கோபால கிருஷ்ண கோகலே, 1866, மே 9 அன்று மஹாராஷ்டிராவின் கோதாலுக்கில், ஒரு சித்பவன் பிராமணர் குடும்பத்தில் பிறந்தார், அப்போது இந்த மாநிலம் இந்திய மேற்கு கடற்கரையோரம் இருந்த பாம்பே பிரெசிடென்சியின் ஓர் அங்கமாக இருந்தது. கோகலேவின் குடும்பம் ஏழ்மையில் இருந்த போதிலும், அவர்கள் கோகலேவுக்கு ஆங்கிலக் கல்வி கிடைப்பதை உறுதிசெய்தனர், இதன் மூலம் ஆங்கிலேய அரசில் ஒரு சிறு அதிகாரியாகவோ வேலை கிடைக்கும் நிலையில் கோகலே இருப்பார் என்று நம்பினர். பல்கலைக்கழக கல்வியைப் பெறும் முதல் தலைமுறை இந்தியர்களில் ஒருவராக இருந்த கோகலே, 1884 ம் ஆண்டில் எல்பின்ஸ்டோன் கல்லூரியில் தன் பட்டப் படிப்பை முடித்தார்.

கோகலேவின் கல்வி அவருடைய எதிர்கால வாழ்க்கைத் தொழிலின் போக்கை மிகப் பெரிய அளவில் தூண்டுவதாக அமைந்தது – ஆங்கிலம் கற்றதோடல்லாமல் அவர் மேற்கத்திய அரசியல் கோட்பாடுகளுக்கு உள்ளாகி, ஜான் ஸ்டூவார்ட் மில் மற்றும் எட்முண்ட் புர்கே போன்ற தத்துவ அறிஞர்களின் பெரும் ஆர்வலராக ஆனார். ஆங்கில காலனிய ஆட்சிமுறையின் பல அம்சங்களைத் தயக்கமின்றி விமர்சித்து வந்தபோதிலும், கோகலே தன்னுடைய கல்லூரி ஆண்டுகளில் பெற்ற ஆங்கிலேய அரசியல் கோட்பாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீதான மரியாதை அவருடைய வாழ்நாள் முழுவதற்கும் அவருடனேயே இருந்தது.

சமூக மறுமலர்ச்சியாளர் மஹாதேவ் கோவிந்த் ரானடேவின் ஆதரவாளராக கோகலே, 1889ல் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினரானார். பால கங்காதர திலகர், தாதாபாய் நௌரோஜி, பிபின் சந்திர பால், லாலா லஜபத் ராய் மற்றும் அன்னிபெசன்ட் போன்ற சமகாலத்திய தலைவர்களுடன் முரண்பாடுகளுடனும், இணைந்தும் கோகலே, சாதாரண இந்தியர்களுக்குப் பொதுத்துறை விஷயங்களில் அதிகமான அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்காகப் பல ஆண்டுகளாகப் போராடினார்.

அவர் தன்னுடைய எண்ணங்களில் மிதமானவராகவே இருந்தார், இந்தியர்களின் உரிமைகளுக்கு ஆங்கிலேயர்களின் பெருமளவு மரியாதையைப் பெற்றுத் தரக்கூடிய பேச்சுவார்த்தை மற்றும் கலந்துரையாடல் செயல்முறையை வளர்த்தெடுப்பதன் மூலம் ஆங்கில அதிகாரிகளிடத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற எண்ணினார்.

அயர்லாந்து சென்ற கோகலே அங்கு ஐரிஷ் தேசியவாதியான ஆல்ஃப்ரெட் வெப்பை இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகப் பணிபுரிய 1894 ம் ஆண்டில் ஏற்பாடு செய்தார். அதற்கு அடுத்த ஆண்டு, கோகலே திலகருடன் இணைந்து காங்கிரசின் இணைச் செயலாளர் ஆனார். திலகர் மற்றும் கோகலேவின் ஆரம்ப கால தொழில்வாழ்க்கை பல விதங்களில் இணையானதாகவே இருந்து வந்தது. இருவருமே சித்பவன் பிராமணர்கள். இருவருமே எல்பின்ஸ்டோன் கல்லூரியில் படித்தனர், இருவருமே கணித பேராசிரியர்களானார்கள். இருவருமே டெக்கன் கல்வி அமைப்பின் முக்கிய உறுப்பினர்களாக இருந்தனர். எனினும், இருவருமே காங்கிரசில் ஈடுபட ஆரம்பித்தவுடனே, இருவரது அரசியல் வழிமுறை தொடர்பான அவர்களின் வேறுபட்ட எண்ணங்கள் வெளிப்பட்டது.

திலகருடனான கோகலேவின் முதல் முரண்பாடு அவருடைய விருப்பமான செயல்திட்டத்தின் மீது மையம் கொண்டிருந்தது, அது 1891-92 ம் ஆண்டுகளில் ஆங்கிலேய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஏஜ் ஆஃப் கன்சன்ட் சட்டமாகும். கோகலே குழுவினர், இந்து மதத்தில் இருந்த மூடநம்பிக்கைகள் மற்றும் இழிவுபடுத்தல்களை தூய்மைப்படுத்த எண்ணி, குழந்தைத் திருமணத்தைத் தடுத்திடும் சட்டத்தை விரும்பினர். திலகர் அதை எதிர்த்தார்.

குழந்தைத் திருமணத்தை நீக்கும் எண்ணத்தை திலகர் எதிர்க்கவில்லை ஆனால் இந்துக்களின் பாரம்பரியத்தில் ஆங்கிலேயர்கள் தலையிடும் எண்ணத்தை எதிர்த்தார். இத்தகைய சீர்திருத்தங்களை சுதந்திரம் அடைந்தவுடன் இந்தியர்கள் தாங்களே செய்து கொள்ள வேண்டும் என்பாத்து திலகரின் கருத்தாக இருந்தது. எனினும் திலகரின் எதிர்ப்புகளுக்கு இடையில் கோகலே குழுவினர் ஆங்கிலேய அரசின் துணையுடன் அதற்கான மசோதாவை பாம்பே பிரெசிடென்சியில் சட்டமாக ஆக்கினர்.
1905 ம் ஆண்டில் கோகலே இந்திய தேசிய காங்கிரசின் தலைவரானார். கோகலே இப்போது தன்னுடைய புதிய பெரும்பான்மை ஆதரவைப் பயன்படுத்தி தன் நீண்டகால எதிரியான திலகரை வலுவிழக்கச் செய்தார். 1906 ம் ஆண்டில் காங்கிரசின் தலைவர் வேட்பாளராக திலகரை ஆதரிக்க மறுத்துவிட்டார். சூரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரசின் இரு பிரிவுகளுக்குள் பலத்த மோதல் ஏற்பட்டு, காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. கோகலே, திலகர் இருவரும் முறையே காங்கிரசின் மிதவாதி, தீவிரவாதிகளின் தலைவரானார்கள்.

திலகர், ஆங்கிலேயப் பேரரசை வீழ்த்துவதற்கு உள்நாட்டு கலவரம் மற்றும் நேரடி புரட்சியின் ஆதரவாளர், கோகலேவோ ஒரு மிதமான மறுமலர்ச்சியாளர். இதன் விளைவாக காங்கிரஸ் கட்சி இரு பிரிவாக உடைந்து பத்தாண்டு காலத்துக்கு அதன் செயல்பாட்டுத்தன்மையை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியது. 1916 ம் ஆண்டில் கோகலே இறந்த பின்னரே இரு பிரிவுகளும் ஒன்று சேர்ந்தன.

1905 ம் ஆண்டில் கோகலே இந்திய தேசிய காங்கிரஸ்சின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் தம்முடைய அரசியல் அதிகாரத்தின் உச்சியில் இருந்தபோது, 'இந்தியச சேவகர்கள்' அமைப்பினை ஏற்படுத்தினார். ஏற்கெனவே இருக்கும் கல்வி நிறுவனங்கள் மற்றும் இந்தியக் குடிமைச் சேவைகள், அரசியல் கல்வியை இந்தியர்கள் பெறுவதற்கான போதிய அளவு வாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை என்று அவர் எண்ணினார், இந்திய சேவகர்கள் அமைப்பு இந்தத் தேவையை நிறைவேற்றும் என்று கோகலே நம்பினார்.

இந்த அமைப்பு இந்திய கல்வியை முன்னேற்றும் நோக்கத்தை உள்ளார்வத்துடன் முன்னெடுத்தது. மேலும் அதன் பல செயல்முறைத் திட்டங்களுடன், நடமாடும் நூலகங்களை ஒருங்கிணைத்தது, பள்ளிக்கூடங்களைத் தோற்றுவித்தது. தொழிற்சங்க ஊழியர்களுக்கு இரவு வகுப்புகளை வழங்கியது. கோகலேவின் இறப்பினைத் தொடர்ந்து இந்த அமைப்பு தன்னுடைய வீரியத்தை இழந்தபோதிலும், அது இன்றும் நிலைத்திருக்கிறது,
கோகலே சுதந்திரத்தைப் பற்றி முதன்மையாகக் கவலைப்படவில்லை. ஆனால் சமூக மறுமலர்ச்சியில் அக்கறை கொண்டிருந்தார்; அத்தகைய மறுமலர்ச்சியை ஏற்கனவே இருக்கும் ஆங்கிலேய அரசு நிறுவனங்களுக்குள்ளேயே பணி செய்வதன் மூலம் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்று அவர் நம்பினார், இந்த நிலை திலகர் போன்ற அதி தீவிர தேசியவாதிகளிடத்தில் பகைமையை ஏற்படுத்தியது. இத்தகைய எதிர்ப்புகளால் தைரியமிழக்காமல், தன்னுடைய மறுமலர்ச்சி குறிக்கோள்களை முன்னெடுத்துச் செல்வதற்கு கோகலே தன்னுடைய அரசியல் வாழ்க்கை முழுவதும் ஆங்கிலேயர்களுடன் நேரடியாந நட்புறவுடன் பணி செய்தார்.

1899 ல், கோகலே மும்பை சட்ட பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1903, மே 22 அன்று அவர் இந்திய கவர்னர் ஜெனரலின் இந்தியப் பேரவைக்கு மும்பை பிராந்தியத்தை பிரதிநிதிக்கும் வகையில் பதவி வகிக்காத உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் பேரரசின் சட்டப் பேரவை 1909 ல் விரிவடைந்த பின்னர் அதில் சேவை புரிந்தார். அங்கு அவர் ஆண்டு வரவு செலவு திட்ட விவாதங்களில் பெரிதும் பங்காற்றினார். இங்கிலாந்து நாட்டின் செயலாளர் லார்ட் ஜான் மார்லேவைச் சந்திக்க லண்டனுக்கு அழைக்கப்படும் அளவுக்கு அவர் ஆங்கிலேயர்களுடன் ஒரு சுமுகமான உறவை உருவாக்கிக் கொண்டார்.

1909 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மிண்டோ-மார்லே திருத்தங்களை செழுமைப்படுத்துவதில் கோகலே இந்த பயணங்களின் போது உதவினார். 1904 ம் ஆண்டு, கோகலே CIE (கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி இண்டியன் எம்பையர்) ஆக நியமிக்கப்பட்டார், இது அவருடைய சேவைக்காக ஆங்கிலேயப் பேரரசின் ஒரு முறையான அங்கீகாரமாகும்.

மகாத்மா காந்தி வளர்ச்சி பெற்று வந்த ஆண்டுகளில் கோகலே அவருக்கு மிகப் பிரபலமான அறிவுரையாளராக இருந்து வந்தார். 1912 ல் காந்தியின் அழைப்பின் பேரில் கோகலே தென் ஆப்பிரிக்காவுக்கு வருகை புரிந்தார். ஒரு இளம் பாரிஸ்டராக காந்தி, தம்முடைய தென் ஆப்பிரிக்க பேரரசுக்கு எதிரான போராட்டங்களிலிருந்து திரும்பி கோகலேவிடமிருந்து தனிப்பட்ட முறையில் அறிவுரைகளைப் பெற்றார். 1920 க்குள் காந்தி இந்திய சுதந்திர இயக்கத்தின் தலைவராக உருவானார். தன்னுடைய சுயசரிதையில் காந்தி, கோகலேவை தன்னுடைய வழிகாட்டி என்றே குறிப்பிடுகிறார்.

பாகிஸ்தானின் எதிர்கால நிறுவனரான முகமது அலி ஜின்னாவின் முன்னோடியாகவும் கோகலே இருந்தார், ஜின்னாவை "இந்து- முகமதிய ஒற்றுமையின் தூதுவர்" என்று கோகலே புகழ்ந்தார். கோகலே தன்னுடைய வாழ்நாள் இறுதி வரையிலும் தொடர்ந்து அரசியல்ரீதியாக இயங்கிக்கொண்டே இருந்தார். அதே நேரத்தில், அவர் தொடர்ந்து இந்திய சேவகர்கள் அமைப்பு, காங்கிரஸ் மற்றும் சட்டப் பேரவையிலும் ஈடுபட்டு வந்தார். எனினும் இத்தகைய மன அழுத்தங்கள் இவரது உயிரை பலிவாங்கின. 1915 , பிப். 19 ம் நாள் கோகலே தம்முடைய நாற்பத்து ஒன்பதாவது வயதில் காலமானார்.

இந்திய தேசிய இயக்கத்தின் வளர்ச்சிப்போக்கில் கோகலேவின் பாதிப்பு பெரும் பங்கு வகிப்பதாகும். ஆங்கிலேய பேரரசின் உயர்ந்த நிலையில் இருந்தவர்களுடன் கோகலே கொண்டிருந்த நெருக்கமான உறவுகள் மூலம், இந்தியாவின் காலனியாதிக்க தலைமையாளர்களை இணக்கமான முறையில் சிந்திக்க வைத்தார். இவரது தாக்கமே அஹிம்சா மூர்த்தியாக மகாத்மா காந்தி மலர வழிவகுத்தது எனில் மிகையில்லை. 1950 ஆம் ஆண்டில் குடியரசான இந்தியாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 'வெஸ்மினிஸ்டர்' மாதிரியான அரசாங்கத்தின் உருவாக்கத்தில் கோகலேவின் அரசியல் நிலைப்பாடுகளுக்கு பெரும் பங்குண்டு.

இந்திய அரசு வெளியிட்டுள்ள NRI களுக்கான 12X7 Help Line--GOVERNMENT LINKS

மணக்கால் அய்யம்பேட்டை | 2:02 PM | Best Blogger Tips
இந்திய அரசு வெளியிட்டுள்ள NRI களுக்கான 12X7 Help Line--GOVERNMENT LINKS

இந்திய அரசு வெளியிட்டுள்ள NRI களுக்கான 12X7 Help Line

 


வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கு ஏற்படும் பிரச்னை குறித்து உலகின் எந்த பகுதியில் இருந்தும் உதவி கோர இந்திய அரசு 12X7 Help Line அறிமுகப்படுத்தியுள்ளது:

தொலை பேசி எண்:

1800113090
911140503090


 


பொது மருத்துவ தளங்கள்:

healthopedia.com/
webmd.com/
health.discovery.com/
health.nih.gov/
mercksource.com/

medlineplus.gov/
medicinenet.com
en.wikipedia.org/wiki/Health
cdc.gov/datastatistics/
health.yahoo.com/

goodhealthnyou.com/
menshealth.digitaltoday.in/menshealth/
cnn.com/HEALTH/
webhealthcentre.com/
health.howstuffworks.com/

aolhealth.com/health
health.ninemsn.com.au/
dir.yahoo.com/Health/
nhsdirect.nhs.uk/help/
Disease Index

online-medical-dictionary.org/
wrong diagnosis.com
e health md.com
family doctor.org
nccam.nih.gov

yourtotalhealth.ivillage.com/
intelihealth.com/
my.clevelandclinic.org
lib.uiowa.edu/hardin/md/
healthfinder.gov/

mayoclinic.com/
medhelp.org/
noah-health.org/
emedicinehealth.com/
medicdirect.co.uk/
ஹாய் நலமா?

நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துக்களின் தன்மைகள், பக்க விளைவுகள் பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்:
fda.gov/
nlm.nih.gov/
webmd.com/
webmd.com
mercksource.com/pp/us

Medicine Net.com
centerwatch.com/
dailymed.nlm.nih.gov/
druginfonet.com/
druginfo.nlm.nih.gov/

needymeds.org/
rxlist.com/

எந்த மருந்துகள் சாப்பிடும் போது எந்த உணவுகள் சாப்பிடக்கூடாது என்ற விபரம்:
http://www.hoptechno.com/book10.htm
Food and Drug Interactions - FDA

மருத்துவத்துறையில் மோசடிகளை,மூட நம்பிக்கைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் தளம்
www.quackwatch.com/
http://www.herbological.com/-
மூலிகைகள் பற்றிய தகவல் திரட்டுக்களையும் புரட்டுக்களையும் ஆராயும் தளம்

மூலிகைகள் பற்றி தெரிந்து கொள்ள
மூலிகை வளம்
mskcc.org/
http://www.richters.com/
http://www.botanical.com/botanical/mgmh/mgmh.html
http://www.planetherbs.com/

http://www.medherb.com/
http://www.christopherhobbs.com/
abc.herbalgram.org-Herbal_Library
http://rain-tree.com/plants.htm
phytotherapies.org/

http://envis.frlht.org.in/

மாற்று மருத்துவம்:
http://www.skepdic.com/tialtmed.html
http://www.thenewmedicine.org/
http://nccam.nih.gov/
http://www.drweil.com/drw/ecs/ask_dr_weil/index.html

யோகா http://www.yogajournal.com/

தியானம் http://www.meditationcenter.com/

மசாஜ் http://www.kjartan.org/backrubfaq/
மாற்று மனநல மருத்துவம் www.alternativementalhealth.com/

மருத்துவச் செய்திகள்:
mercksource.com/
nlm.nih.gov/

மனித உடற்கூறு பற்றிய தளம்: www.innerbody.com/

தனிப்பட்ட நோய்கள் பற்றிய தளங்கள்:
நீரிழிவு அல்லது சர்க்கரை வியாதி பற்றி அறிய:
diabetes.niddk.nih.gov/
National Institute Of Diabetes, Digestive & Kidney Disease
http://www.diabetes.org/

இதயம் நுரையீரல் ,இரத்தம் சம்பந்தமான நோய்கள் பற்றி அறிய:
nhlbi.nih.gov/
National Heart ,Lung and Blood Institute
American heart Association
http://www.lungusa.org

கிட்னி சம்பந்தமான பக்கம்:
Kidney & Urologic Disease

ஜீரண மண்டல நோய்கள்:
Digestive Diseases A to z
digestive.niddk.nih.gov/

மூளை மற்றும் நரம்பியல்
http://www.ninds.nih.gov/index.htm

ஒற்றைத் தலைவலி (மைக்ரேன்)
http://www.migraines.org/

வலிப்பு
http://www.epilepsy.com/

Alzheimer’s Association
http://www.alz.org

American Academy of Dermatology-Public Resource Center
http://www.aad.org/public

American Dental Association-Public
http://www.ada.org/public/index.asp

Asthma and Allergy Foundation of America
http://www.aafa.org

National Cancer Institute (NCI)
http://www.cancer.gov

கண் பாதுகாப்பு
http://www.nei.nih.gov/health
http://www.allaboutvision.com/
http://www.mic.stacken.kth.se/Diseases/C11.html
http://www.agingeye.net/

National Institute of Child Health and Human Development
http://www.nichd.nih.gov/

முதியோர் பாதுகாப்பு:
Tips for Older adults
Smart parent Health Source
Aging well
National Institute on Aging
http://www.nia.nih.gov/

பெண்கள் நலம்
http://www.obgyn.net/women/conditions/conditions.asp

National Institute on Arthritis and Musculoskeletal and Skin Diseases
http://www.niams.nih.gov/

National Institute of Mental Health (NIMH) Health Information
http://www.nimh.nih.gov/healthinformation/index.cfm

National Institute of Neurological Disorders and Stoke (NINDS)
http://www.ninds.nih.gov

National Stroke Association
http://www.stroke.org/

Your Orthopaedic Connection (American Academy of Orthopaedic Surgeons
http://orthoinfo.aaos.org/
Pain Resource Center

திக்கு வாய் http://www.stutteringhelp.org/
முதுகு வலி ,கழுத்து வலி http://www.spine-health.com/

உணவு உட்பொருட்கள் பற்றிய கேள்விகளுக்குப் பதில்:
http://www.vrg.org/nutshell/faqingredients.htm
Food Nutrition ,Cosmetics Q&A
ask Noah

உணவுப் பொருட்கள் பற்றிய ஆய்வுத் தகவல்கள்:
ifr.ac.uk/
Weight loss and control
Nutrition
Better Health and You
Nutrition Fact Sheets

Nutrients - Food Research Institute
The Nutrition source
Nutrition Index
Vitamin index
Overview of Dietary Supplements - FDA

Nutrition Table For 7,248 Foods
Food Standards Agency
Nutrition and Your Health
Healthy Eating on the Run: A Month of Tips
Vegetarian Nutrition

Vegetarian Recipes
Recipes for Cooking the Heart Hearty Way
Ingredient Information
Lactose Intolerance - American Dietetic Association
Chemical Cuisine: CSPI's Guide to Food Additives

A Fresh Look at Food Preservatives
Food Additives
Staking a Claim to Good Health - FDA
Consumer Advice
Micronutrient Information Center

போதைப் பொருள் விடுதலை
www.cdc.gov/tobacco/index.htm -
புகைப்பழக்கம்
www.usd.edu/cd/publications/fashandbook.cfm -
மதுப்பழக்கம்
http://www.habitsmart.com/


பூச்சி ஒழிப்பு:
The p(B)est Control

சுற்று சூழல் மாசு உருவாக்கும் உடல் நலக் கேடு
http://www.scorecard.org/health-effects/

டாக்டர்களுடன் ஒரு சாட்டிங்
தமிழக அரசின் குடும்ப நலத்துறை இணைய தளம் மூலம் நமக்குத் தேவையான துறை சார்ந்த மருத்துவ நிபுணருடன் இணையம் வழி சாட் செய்து ஆலோசனைகள் பெறலாம்.
முகவரி இதோ www.tnhealth.org/chat.htm
இரத்த தானம் செய்ய விரும்புபவர்களும் ,இரத்தம் அவசரமாக தேவைப்படுவோர்களும் இந்த அருமையான தளத்தை பயன் படுத்தலாம். Indian Blood Donors.com
SMS
மூலம் இரத்தம் பெறலாம்
இப்பொழுது இரத்தம் பெறுவது மிகவும் எளிது, இதற்க்கு நீங்கள் செய்யவேண்டியது என்னவெனில் உங்கள் அலை பேசியிலிருந்து "BLOOD" <உங்களுக்கு தேவையான இரத்தப் பிரிவு> டைப் செய்து 96000 97000 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.
உதாரணமாக "BLOOD B+" .
உடனே ஒரு இரத்த கொடையாளர் உங்களை தொடர்பு கொள்வார்.

http://www.suggestadoctor.in/
இந்தியாவில் பரிந்துரை செய்யப்படும் மருத்துவர்களை பட்டியலிடுகிறது.

தென்னிந்தியாவில் சிறந்த மருத்துவ மனைகளின் பட்டியல்

Posted by Mohamed Ali Blog at 6:07 PM 0 comments




Industrial Policies


Judiciary


Recruitment Services


Schemes of Departments


Employment Portal


REGiNET Services of Registration Department




Tamil Nadu State Transport Corporations


o    Bus Fares





Chennai Metro Water


Municipal Corporations / Municipalities


Tamil Nadu Electricity Board (TNEB)


Acts and Rules


Business and Commerce


Educational Services


Enquiry Services


Government Documents and Reports


Health Services