இயற்கை வைத்தியம் மருத்துவ டிப்ஸ் !

மணக்கால் அய்யம்பேட்டை | 12:14 PM | Best Blogger Tips
Photo: இயற்க்கை வைத்தியம் மருத்துவ டிப்ஸ்:-

மஞ்சள் காமாலை வந்தால் கீழாநெல்லியை அரைத்து பசு மோருடன் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரியாகிவிடும்.

பயணத்தின்போது அடிக்கடி வாந்தி வரும். தினசரி வெறும் வயிற்றில் நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால். அப்புறம் வாந்தியாவது, ஒண்ணாவது! ஜலதோஷம் வந்தால் மாதுளம் சாப்பிட்டு வந்தால், குணமாகிவிடும்.

மருத்துவ டிப்ஸ்

உடல்வலி குணமாக : வில்வ இலைச் சாறு, அருகம்புல் சாறு கலந்து காலை, மாலை 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர, குணம் பெறலாம்.

ஞாபக சக்தி பெருக : வல்லாரை 150 கிராம், வசம்பு 15 கிராம் பவுடராக்கி தேனில் கலந்து உண்ணலாம்.

முகப் பருக்கள் ஒழிய : அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து, இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்து வர ஒழியும்.

தும்மல் நிற்க : தூதுவளைப் பொடியில் மிளகுப் பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட நிற்கும்.

சதைப் பெருக்கத்திற்கு : நெல்லிக்காய் தூள் அரை ஸ்பூன் பாலில் சாப்பிட்டு வர உடல் சதைப் பிடிப்பு கூடுதலாகும்.

புண்கள் ஆற : கருவேல இலையை அரைத்து புண்கள் மீது கட்ட ஆறும்.

உடல் ஊறல் அரிப்பு குணமாக : உத்தாமணி இலைச் சாற்றினைப் பூசி காய்ந்த பின் குளித்துவர தீரும்.

கால் ஆணி குணமாக : வெள்ளை அருகு இலையை அரைத்து வைத்துக் கட்ட குணமாகும்.

தோல் வியாதி குணமாக : தகரை செடியின் வேரை எலுமிச்ச சாறு விட்டு அரைத்துப் பூச குணமாகும்.

நமைச்சல் தடிப்பு நீங்க : வேப்பமரத்துப் பட்டையைத் தூளாக்கி உடம்பில் பூசி, அரை மணி நேரம் கழித்து குளிக்க நீங்கும்.

அக்கி குணமாக : ஆலம் விழுதை சாம்பலாக்கி நல்லெண்ணெயில் குழைத்து தடவி வர குணமாகும்.

கட்டிகள் குணமாக : அந்திமந்தாரை இலையின் மீது ஆலிவ் எண்ணெய் தடவி அனலில் சூடுகாட்டி கட்டிகள் மீது வைத்துக் கட்ட குணமாகும்.

முடி நன்றாக வளர : மருதாணி இலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலக்கி, பச்சை நிறம் மாறாமல் காய்ச்சித் தடவி வர நன்றாக வளரும்.

செம்பட்டை முடி கருப்பாக : நில ஆவார இலையுடன் மருதாணி இலையைச் சேர்த்து அரைத்து தடவி வரவேண்டும்.

கம்பளிப் பூச்சிக் கடிக்கு : வெற்றிலையைக் கடித்த இடத்தில் வைத்து அழுத்தித் தேய்க்க குணம் பெறலாம்.

எலிக்கடி விஷம் முறிய : குப்பைமேனி இலையை அரைத்து, கடித்த இடத்தில் வைத்துக்கட்ட விஷம் முறியும்.

முகப் பொலிவிற்கு சில குறிப்புகள் :

1. முல்தானிமெட்டி பவுடரை பன்னீர் விட்டுக் கலந்து முகத்தில் தடவி, 1 மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

2. பன்னீர் ரோஜா இதழ்களை அரைத்து முகத்தில் தடவி, அரை மணி ஊறிய பின் தண்ணீர் விட்டு அலம்பி வந்தால் முகம் கலர் மாறும்.

3. தக்காளியை அரைத்துப் பூசி, ஊறிய பின் அலம்பினால் முகம் பொலிவு பெறும்.

4. கரும்புள்ளி மறைய வேப்பங் கொழுந்தையும், மஞ்சளையும் அரைத்துப் பூசி, ஊறியபின் கழுவினால் மறைந்துவிடும்.

5. கண்ணிற்கு கீழ் உள்ள கருவளையம் மறைய, உருளைக்கிழங்கை ஸ்லைசாக வெட்டி கண்ணின் மீது வைத்து வந்தால் கண் குளிர்ச்சியடையும். நாளடைவில் கருவளையம் மறைந்துவிடும்.

6. முகத்தில் பூனை முடி வளர்ந்திருந்தால் அதற்கு கஸ்தூரி மஞ்சள் தூளைப் பூசி ஊறவைத்து அலம்பினால் பலன்.

மஞ்சள் காமாலை வந்தால் கீழாநெல்லியை அரைத்து பசு மோருடன் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரியாகிவிடும்.

பயணத்தின்போது அடிக்கடி வாந்தி வரும். தினசரி வெறும் வயிற்றில் நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால். அப்புறம் வாந்தியாவது, ஒண்ணாவது! ஜலதோஷம் வந்தால் மாதுளம் சாப்பிட்டு வந்தால், குணமாகிவிடும்.

மருத்துவ டிப்ஸ்


உடல்வலி குணமாக : வில்வ இலைச் சாறு, அருகம்புல் சாறு கலந்து காலை, மாலை 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர, குணம் பெறலாம்.

ஞாபக சக்தி பெருக : வல்லாரை 150 கிராம், வசம்பு 15 கிராம் பவுடராக்கி தேனில் கலந்து உண்ணலாம்.

முகப் பருக்கள் ஒழிய : அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து, இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்து வர ஒழியும்.

தும்மல் நிற்க : தூதுவளைப் பொடியில் மிளகுப் பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட நிற்கும்.

சதைப் பெருக்கத்திற்கு : நெல்லிக்காய் தூள் அரை ஸ்பூன் பாலில் சாப்பிட்டு வர உடல் சதைப் பிடிப்பு கூடுதலாகும்.

புண்கள் ஆற : கருவேல இலையை அரைத்து புண்கள் மீது கட்ட ஆறும்.

உடல் ஊறல் அரிப்பு குணமாக : உத்தாமணி இலைச் சாற்றினைப் பூசி காய்ந்த பின் குளித்துவர தீரும்.

கால் ஆணி குணமாக : வெள்ளை அருகு இலையை அரைத்து வைத்துக் கட்ட குணமாகும்.

தோல் வியாதி குணமாக : தகரை செடியின் வேரை எலுமிச்ச சாறு விட்டு அரைத்துப் பூச குணமாகும்.

நமைச்சல் தடிப்பு நீங்க : வேப்பமரத்துப் பட்டையைத் தூளாக்கி உடம்பில் பூசி, அரை மணி நேரம் கழித்து குளிக்க நீங்கும்.

அக்கி குணமாக : ஆலம் விழுதை சாம்பலாக்கி நல்லெண்ணெயில் குழைத்து தடவி வர குணமாகும்.

கட்டிகள் குணமாக : அந்திமந்தாரை இலையின் மீது ஆலிவ் எண்ணெய் தடவி அனலில் சூடுகாட்டி கட்டிகள் மீது வைத்துக் கட்ட குணமாகும்.

முடி நன்றாக வளர : மருதாணி இலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலக்கி, பச்சை நிறம் மாறாமல் காய்ச்சித் தடவி வர நன்றாக வளரும்.

செம்பட்டை முடி கருப்பாக : நில ஆவார இலையுடன் மருதாணி இலையைச் சேர்த்து அரைத்து தடவி வரவேண்டும்.

கம்பளிப் பூச்சிக் கடிக்கு : வெற்றிலையைக் கடித்த இடத்தில் வைத்து அழுத்தித் தேய்க்க குணம் பெறலாம்.

எலிக்கடி விஷம் முறிய : குப்பைமேனி இலையை அரைத்து, கடித்த இடத்தில் வைத்துக்கட்ட விஷம் முறியும்.

முகப் பொலிவிற்கு சில குறிப்புகள் :

1. முல்தானிமெட்டி பவுடரை பன்னீர் விட்டுக் கலந்து முகத்தில் தடவி, 1 மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

2. பன்னீர் ரோஜா இதழ்களை அரைத்து முகத்தில் தடவி, அரை மணி ஊறிய பின் தண்ணீர் விட்டு அலம்பி வந்தால் முகம் கலர் மாறும்.

3. தக்காளியை அரைத்துப் பூசி, ஊறிய பின் அலம்பினால் முகம் பொலிவு பெறும்.

4. கரும்புள்ளி மறைய வேப்பங் கொழுந்தையும், மஞ்சளையும் அரைத்துப் பூசி, ஊறியபின் கழுவினால் மறைந்துவிடும்.

5. கண்ணிற்கு கீழ் உள்ள கருவளையம் மறைய, உருளைக்கிழங்கை ஸ்லைசாக வெட்டி கண்ணின் மீது வைத்து வந்தால் கண் குளிர்ச்சியடையும். நாளடைவில் கருவளையம் மறைந்துவிடும்.

6. முகத்தில் பூனை முடி வளர்ந்திருந்தால் அதற்கு கஸ்தூரி மஞ்சள் தூளைப் பூசி ஊறவைத்து அலம்பினால் பலன்.

Via இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்
 

குங்குமத்தின் மகிமைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:09 PM | Best Blogger Tips

குங்குமத்தின் மகிமைகள்;
------------------------------------
இந்து சமயத்தின் முக்கிய அடையாளமாக கருதப்படுவது குங்குமம் ஆகும்.இந்த குங்கும பொடி மதம் சார்ந்தது அல்ல நமக்கு பல வகைகளிலும் நன்மையை கொடுக்ககூடிய மிகப்பெரிய கிருமி நாசினி ஆகும்.இயற்கை முறையில் விரலி மஞ்சள், வெண்காரம், படிகாரம், கஸ்தூரி மஞ்சள் ஆகியன சேர்ந்து அரைக்கபட்ட பொடியுடன் நல்லெண்ணய் கலக்கி குங்குமம் தயாரிக்கப்படுகிறது. மஞ்சளும் காரமும் வேதிவினையாற்றி சிவப்பு நிறம் கிடைக்கிறது.

மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த நெற்றிக்கண் அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும்.

1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.

2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.

3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.

5. பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.

7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.

9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.

11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.

12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லதாகும்.அதேபோல் குங்குமம் வைத்த பெண்களை யாரும் ஹிப்னாட்டிஸம்,வசியம் செய்ய முடியாது.அதை முறியடிக்கும் சக்தி குங்குமத்திற்கு உண்டு.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
இந்து சமயத்தின் முக்கிய அடையாளமாக கருதப்படுவது குங்குமம் ஆகும்.இந்த குங்கும பொடி மதம் சார்ந்தது அல்ல நமக்கு பல வகைகளிலும் நன்மையை கொடுக்ககூடிய மிகப்பெரிய கிருமி நாசினி ஆகும்.இயற்கை முறையில் விரலி மஞ்சள், வெண்காரம், படிகாரம், கஸ்தூரி மஞ்சள் ஆகியன சேர்ந்து அரைக்கபட்ட பொடியுடன் நல்லெண்ணய் கலக்கி குங்குமம் தயாரிக்கப்படுகிறது. மஞ்சளும் காரமும் வேதிவினையாற்றி சிவப்பு நிறம் கிடைக்கிறது.

மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த நெற்றிக்கண் அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும்.

1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.

2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.

3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.

5. பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.

7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.

9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.

11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.

12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லதாகும்.அதேபோல் குங்குமம் வைத்த பெண்களை யாரும் ஹிப்னாட்டிஸம்,வசியம் செய்ய முடியாது.அதை முறியடிக்கும் சக்தி குங்குமத்திற்கு உண்டு.


அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்

வேலிப்பருத்தியின் மருத்துவ குணம்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:05 PM | Best Blogger Tips

வேலிப்பருத்தியின் மருத்துவ குணம்:

தமிழகமெங்கும் வேலிகளில் தானே படர்ந்து வளர்கிறது. இதயவடிவ இலைகளை மாற்றடுக்கில் கொண்டு பசுமை நிற வெகுட்டல் மணமுடைய பூங்கொத்துக் களையும் மென்மையான முட்களைக்கொண்ட இரட்டைக் காய்களையும், பாலுள்ள பிசுபிசுப்பான ஏறுகொடி. முட்டைவடிவ விதைகளில் பட்டுப் போன்ற பஞ்சுகள்காணப்படும். இதனை உந்தாமணி என்றும்குறிப்பிடுவதுண்டு.காய்கள் காய்ந்து வெடித்துப் பஞ்சுகளுடன் விதையும் சேர்த்துப் பறந்து சென்று வேறு இடங்களில் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.

இலையிலிருந்து வேர் வரை உடல் நலத்திற்காக பயன்படக்கூடியது வேலிப்பருத்தி. இது வேளிகளில் படர்ந்திருப்பதை பார்த்திருப்போம். இது நெஞ்சில் சேர்ந்து இருக்கின்ற கோழையை அகற்றி வாந்தியை உண்டாக்குவதோடு புழுக்களைக் கொல்லும் தன்மையுடையது. இதன் இலையை இடித்துப் பிழிந்த சாற்றை ஒரு நாளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் அருந்தி வர ஆஸ்த்துமாவும் பாம்புக் கடியும் எளிதில் குணமடையும். 

நாள்பட்ட புண்களுக்கு இதன் இலையை அரைத்துக் கட்டி வந்தால் புண்கள் எளிதில் ஆறும். பெண்களுக்கு மாதவிலக்கின் போது உண்டாகும் வயிற்று வலியைப் போக்க வேலிப் பருத்தி இலைச்சாற்றைத் தேனுடன் கலந்து அருந்தி வர வயிற்று வலி தீரும். 

கால் வீக்கங்களுக்கும், உடம்பில் அடிபட்ட வீக்கங்களுக்கும், இதன் இலைச் சாற்றையும், சுண்ணாம்பையும் கலந்து வீக்கம் ஏற்பட்ட இடத்தில் பூசி வர எளிதில் குணமாகும். இதன் இலைச்சாற்றுடன் தேன் கலந்து அருந்தி வர இருமல் தணியும். இதன் இலையை நன்கு அரைத்து அதன் விழுதை நகச்சுற்று, கண்ட மாலை இவைகளுக்குப் பற்றிட்டு வர நல்ல குணம் தரும். 

காணாக்கடி, அரிப்பு, தடிப்புக்கு இதன் இலைச்சாறை தடவலாம். இலையை வதக்கித் துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கக் கீல் வாதம், முடக்கு வாதம், வாதக் கடைச்சல், இடுப்புவலி மிதலியன குணமாகும். இலைச்சாற்றுடன் சுக்கு, பெருங்காயம், பொடித்துக் காயச்சி இளஞ்சூட்டில் பற்றிட வாத வலி, வீக்கம் குணமாகும், யானைக்கால் நோய் தொடக்க நிலையில் இருந்தால் 40,50 நாள்களில் குணமாக்கலாம். 

இதன் வேரை உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 சிட்டிகை வரை பாலில் கொடுக்க குழந்தைகளின் வாயுத் தொல்லைகள் நீங்கிப் பேதியாகும், பூச்சி, கிருமிகள் சாகும். இதன் இலைச்சாற்றில் 7முறை மிளகை ஊறவைத்து வெய்யிலில் உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 அரிசி எடை பால் அல்லது தேனில் கொடுக்கக் குழந்தைகளின் செரியாமை, வாந்தி, மந்தம், மாந்த இழப்பு, கை,கால் சில்லிட்டுப் போதல், சுரம் முதலிய சகல குழந்தை வியாதிகளுக்கும் கொடுக்கலாம். 

5 கிராம் வேரைப் பாலில் அரைத்துக் கலக்கி வடிகட்டிக் காலை மட்டும் 3 நாள் கொடுக்க நஞ்சுக் கடி, கரப்பான், கிரந்தி, சூலை, பிடிப்பு, வாயு முதலியவை போகும். உந்தாமணி, பொடுதலை, நுணா, நொச்சி ஆகியவற்றின் இலைகளை வகைக்கு 1 பிடி வதக்கிப் பிழிந்த சாறை 10 மி.லி. கொடுக்கச் சளியோடு கூடிய மாந்தம் தீரும். தக்க வயதடைந்தும் பெண் ருதுவாகாவிட்டால் வேலிப்பருத்தி இலைகள் ஆறு எண்ணம் எடுத்துச் சுத்தப்படுத்தி மூன்று மிளகு சேர்த்து அம்மியில் மைபோல் அரைத்து கழற்சிக்காய் அளவு பத்து தினங்கள் தொடர்ந்து உடகொண்டு வர ருதுவாகாத பெண்கள் ருது ஆவார்கள்.
தமிழகமெங்கும் வேலிகளில் தானே படர்ந்து வளர்கிறது. இதயவடிவ இலைகளை மாற்றடுக்கில் கொண்டு பசுமை நிற வெகுட்டல் மணமுடைய பூங்கொத்துக் களையும் மென்மையான முட்களைக்கொண்ட இரட்டைக் காய்களையும், பாலுள்ள பிசுபிசுப்பான ஏறுகொடி. முட்டைவடிவ விதைகளில் பட்டுப் போன்ற பஞ்சுகள்காணப்படும். இதனை உந்தாமணி என்றும்குறிப்பிடுவதுண்டு.காய்கள் காய்ந்து வெடித்துப் பஞ்சுகளுடன் விதையும் சேர்த்துப் பறந்து சென்று வேறு இடங்களில் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.

இலையிலிருந்து வேர் வரை உடல் நலத்திற்காக பயன்படக்கூடியது வேலிப்பருத்தி. இது வேளிகளில் படர்ந்திருப்பதை பார்த்திருப்போம். இது நெஞ்சில் சேர்ந்து இருக்கின்ற கோழையை அகற்றி வாந்தியை உண்டாக்குவதோடு புழுக்களைக் கொல்லும் தன்மையுடையது. இதன் இலையை இடித்துப் பிழிந்த சாற்றை ஒரு நாளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் அருந்தி வர ஆஸ்த்துமாவும் பாம்புக் கடியும் எளிதில் குணமடையும்.

நாள்பட்ட புண்களுக்கு இதன் இலையை அரைத்துக் கட்டி வந்தால் புண்கள் எளிதில் ஆறும். பெண்களுக்கு மாதவிலக்கின் போது உண்டாகும் வயிற்று வலியைப் போக்க வேலிப் பருத்தி இலைச்சாற்றைத் தேனுடன் கலந்து அருந்தி வர வயிற்று வலி தீரும்.

கால் வீக்கங்களுக்கும், உடம்பில் அடிபட்ட வீக்கங்களுக்கும், இதன் இலைச் சாற்றையும், சுண்ணாம்பையும் கலந்து வீக்கம் ஏற்பட்ட இடத்தில் பூசி வர எளிதில் குணமாகும். இதன் இலைச்சாற்றுடன் தேன் கலந்து அருந்தி வர இருமல் தணியும். இதன் இலையை நன்கு அரைத்து அதன் விழுதை நகச்சுற்று, கண்ட மாலை இவைகளுக்குப் பற்றிட்டு வர நல்ல குணம் தரும்.

காணாக்கடி, அரிப்பு, தடிப்புக்கு இதன் இலைச்சாறை தடவலாம். இலையை வதக்கித் துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கக் கீல் வாதம், முடக்கு வாதம், வாதக் கடைச்சல், இடுப்புவலி மிதலியன குணமாகும். இலைச்சாற்றுடன் சுக்கு, பெருங்காயம், பொடித்துக் காயச்சி இளஞ்சூட்டில் பற்றிட வாத வலி, வீக்கம் குணமாகும், யானைக்கால் நோய் தொடக்க நிலையில் இருந்தால் 40,50 நாள்களில் குணமாக்கலாம்.

இதன் வேரை உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 சிட்டிகை வரை பாலில் கொடுக்க குழந்தைகளின் வாயுத் தொல்லைகள் நீங்கிப் பேதியாகும், பூச்சி, கிருமிகள் சாகும். இதன் இலைச்சாற்றில் 7முறை மிளகை ஊறவைத்து வெய்யிலில் உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 அரிசி எடை பால் அல்லது தேனில் கொடுக்கக் குழந்தைகளின் செரியாமை, வாந்தி, மந்தம், மாந்த இழப்பு, கை,கால் சில்லிட்டுப் போதல், சுரம் முதலிய சகல குழந்தை வியாதிகளுக்கும் கொடுக்கலாம்.

5 கிராம் வேரைப் பாலில் அரைத்துக் கலக்கி வடிகட்டிக் காலை மட்டும் 3 நாள் கொடுக்க நஞ்சுக் கடி, கரப்பான், கிரந்தி, சூலை, பிடிப்பு, வாயு முதலியவை போகும். உந்தாமணி, பொடுதலை, நுணா, நொச்சி ஆகியவற்றின் இலைகளை வகைக்கு 1 பிடி வதக்கிப் பிழிந்த சாறை 10 மி.லி. கொடுக்கச் சளியோடு கூடிய மாந்தம் தீரும். தக்க வயதடைந்தும் பெண் ருதுவாகாவிட்டால் வேலிப்பருத்தி இலைகள் ஆறு எண்ணம் எடுத்துச் சுத்தப்படுத்தி மூன்று மிளகு சேர்த்து அம்மியில் மைபோல் அரைத்து கழற்சிக்காய் அளவு பத்து தினங்கள் தொடர்ந்து உடகொண்டு வர ருதுவாகாத பெண்கள் ருது ஆவார்கள்.
Via ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.

சிக்கன் தேங்காய்ப்பால் கிரேவி

மணக்கால் அய்யம்பேட்டை | 12:03 PM | Best Blogger Tips

சிக்கன் தேங்காய்ப்பால் கிரேவி  
தேவையானவை:

சிக்கன்...................... ..1/4 கிலோ 
மிளகாய்ப் பொடி...........1 தேக்கரண்டி 
மல்லிப் பொடி..................1 தேக்கரண்டி
மிளகுப் பொடி................1/2 தேக்கரண்டி 
சீரகப் பொடி.....................1/2 தேக்கரண்டி 
மஞ்சள் தூள் ...................கொஞ்சம் 
எலுமிச்சை சாறு.............1 தேக்கரண்டி 
தயிர்..................................1 தேக்கரண்டி 
இஞ்சி, பூண்டு பேஸ்ட்......1 தேக்கரண்டி 
வெங்காயம்......................100 கிராம
தேங்காய்ப்பால்...............100 .மில்லி 
தக்காளி.............................4
கறிவேப்பிலை....  ஒரு கொத்து
மல்லி தழை...............கொஞ்சம்.
புதினா........................கொஞ்சம்.
உப்பு தேவையான அளவு..
தேங்காய் எண்ணெய்..........50 மில்லி

செய்முறை:

சிக்கனை நன்கு கழுவவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். அதனை கொஞ்சம் எண்ணெய் விட்டு நன்கு வதக்கவும் தக்காளியை மிக்சியில் நன்கு அரைத்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு, அதில் மிளகாய்த் தூள், மல்லி தூள், மிளகுபொடி, சீரகப் பொடி, மஞ்சள் பொடி போட்டு சிவக்காமல் வறுத்து அதிலேயே அரைத்த தக்காளியையும் போட்டு நன்கு வதக்கவும். சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் வதக்கிய வெங்காயம், வதக்கிய தக்காளி + மிளகாய் தூள், மல்லி தூள் போன்றவற்றைப் போட்டு அதிலேய இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு, எலுமிச்சை சாறு, தயிர், ஒரு தேக்கரண்டி, உப்பு போட்டு பிசைந்து வைக்கவும். இதனை குளிர் பதனப் பெட்டியில் உள்ள பிரீசரில் ஒரு மணி நேரம் வைக்கவும். 24 மணி நேரம் வைத்தால் ரொம்ப நன்றாக இருக்கும்.

பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து, அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அதில் ஒரு துண்டு பட்டை, இரண்டு கிராம்பு போட்டு, அது சிவந்ததும், சிக்கனைப் போட்டு வதக்கவும். தீயைக் குறைத்து வைக்கவும். ஐந்து நிமிடம் கழித்து, அதில் தேங்காய்ப் பாலை விடவும். மசாலா மற்றும் தேங்காய்ப் பால் நீர் வற்றி வரும்போது, அதில் மல்லி, புதினா + கறிவேப்பிலை தூவி இறக்கவும். 
-நலம், நலம் அறிய ஆவல். என்றும் உங்கள் Shamvel.
இணைந்திருங்கள் எங்களுடன்...
பகிர்ந்துக் கொள்ளுங்கள் நண்பர்களுடன்...
http://www.facebook.com/mrksamivel?ref=tn_tnmn
http://www.facebook.com/pages/Leprosy-and-Disability-People/535050236511161
http://www.facebook.com/pages/நலம்-நலம்-அறிய-ஆவல்-என்றும்-உங்கள்-Shamvel/475332812532648
இந்த பக்கத்தை குறித்து உங்களுடைய கருத்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் வரவேற்க்க படுகிறது.
தேவையானவை:

சிக்கன்...................... ..1/4 கிலோ
மிளகாய்ப் பொடி...........1 தேக்கரண்டி
மல்லிப் பொடி..................1 தேக்கரண்டி
மிளகுப் பொடி................1/2 தேக்கரண்டி
சீரகப் பொடி.....................1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் ...................கொஞ்சம்
எலுமிச்சை சாறு.............1 தேக்கரண்டி
தயிர்..................................1 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு பேஸ்ட்......1 தேக்கரண்டி
வெங்காயம்......................100 கிராம
தேங்காய்ப்பால்...............100 .மில்லி
தக்காளி.............................4
கறிவேப்பிலை.... ஒரு கொத்து
மல்லி தழை...............கொஞ்சம்.
புதினா........................கொஞ்சம்.
உப்பு தேவையான அளவு..
தேங்காய் எண்ணெய்..........50 மில்லி

செய்முறை:


சிக்கனை நன்கு கழுவவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். அதனை கொஞ்சம் எண்ணெய் விட்டு நன்கு வதக்கவும் தக்காளியை மிக்சியில் நன்கு அரைத்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு, அதில் மிளகாய்த் தூள், மல்லி தூள், மிளகுபொடி, சீரகப் பொடி, மஞ்சள் பொடி போட்டு சிவக்காமல் வறுத்து அதிலேயே அரைத்த தக்காளியையும் போட்டு நன்கு வதக்கவும். சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் வதக்கிய வெங்காயம், வதக்கிய தக்காளி + மிளகாய் தூள், மல்லி தூள் போன்றவற்றைப் போட்டு அதிலேய இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு, எலுமிச்சை சாறு, தயிர், ஒரு தேக்கரண்டி, உப்பு போட்டு பிசைந்து வைக்கவும். இதனை குளிர் பதனப் பெட்டியில் உள்ள பிரீசரில் ஒரு மணி நேரம் வைக்கவும். 24 மணி நேரம் வைத்தால் ரொம்ப நன்றாக இருக்கும்.

பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து, அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அதில் ஒரு துண்டு பட்டை, இரண்டு கிராம்பு போட்டு, அது சிவந்ததும், சிக்கனைப் போட்டு வதக்கவும். தீயைக் குறைத்து வைக்கவும். ஐந்து நிமிடம் கழித்து, அதில் தேங்காய்ப் பாலை விடவும். மசாலா மற்றும் தேங்காய்ப் பால் நீர் வற்றி வரும்போது, அதில் மல்லி, புதினா + கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
 
Via -நலம், நலம் அறிய ஆவல்.

ஓம் ! ஓம் ! ஓம்!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:56 AM | Best Blogger Tips

‘ஓம்’: ‘ஓம்’ என்பது அ, உ, ம என்ற மூன்று எழுத்துகள் இணைந்து உருவானது. இந்த மந்திரத்திற்குப் பல விளக்கங்கள் உள்ளன. மூன்று எழுத்துகள் மூன்று வேதங்களைக் குறிப்பிடுவதாகவும், அ,உ,ம என்ற மூன்றெழுத்துகள் முறையே (அக்னி) நெருப்பு, (உதகம்) நீர், (மருத்) காற்று என்ற பூதங்களைக் குறிப்பிடுவதாகவும், பிறப்பு, வாழ்வு, இறப்பு என்ற வாழ்க்கையின் மூன்று நிலைகளைக் குறிப்பிடுவதாகவும், இந்து தர்மத்தில் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழில்களைப் புரிவதாகக் கூறப்படும் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளையும் இது குறிப்பிடுவதாகவும், ஸத்வ, ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களையும் குறிப்பிடுவதாகம்.

அனைத்து உபநிஷத்துகளிலும் இந்த மந்திரம் வருணிக்கப்பட்டுள்ளது.
மாண்டூக்ய உபநிஷத் ‘ஓம்’ என்ற மந்திரத்தின் பொருளை விளக்குவதற்காகவே அளிக்கப்பட்டது.

‘ஓம்’ என்ற இந்தச் சொல் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்பதற்கான விளக்கமாகும். முக்காலங்களைக் கடந்திருப்பதும் ஓங்காரமே. அதாவது ‘ஓம்’ என்ற சொல், படைப்பிற்கு முன்பே இருந்தது. பிரளயத்திற்குப் பின்பும் இருக்கும்.

புனிதமான மந்திரமாகிய ‘ஓம்’ என்ற வில்லை வளைத்து நாணேற்றி, ஆன்மாவாகிற அம்பைத் தொடுத்து, மனத்தை ஒருமுகப்படுத்தி பிரஹ்மமாகிய இலக்கை நோக்கிச் செலுத்த வேண்டும். இதனால் இலக்கைத் துளைக்கும் அம்பு இலக்கோடு ஒன்றிவிடுவதுபோல் ஆன்மா பிரஹ்மத்துடன் ஒன்றிவிடும்.

இந்த ஓர் எழுத்துதான் ப்ரஹ்மம். இந்த ஓர் எழுத்துதான் உயர்வானது. இந்த ஓர் எழுத்தைப் புரிந்துகொள்பவர் எதை விரும்புகின்றனரோ அதைப் பெறுகிறார்கள்.

இதுதான் சிறந்ததும், உயர்ந்ததுமான ஆதாரம். இந்த ஆதாரத்தைப் புரிந்து கொள்பவன் ப்ரஹ்மலோகத்தை அலங்கரிப்பான்.

‘ஓம்’ எனும் மந்திரத்தை, இந்துக்கள் மட்டுமன்றி சீக்கியர்களும், ஜைனர்களும், புத்தமதத்தவர்களும், அனைத்து மந்திரங்களைவிட புனிதமானது என்று ஒருசேர நம்புகின்றனர். பாரதத்திற்கு வெளியிலுள்ள சீனாவிலும், திபெத்திலும்கூட இது பரவியுள்ளது.
தேவநாகரி எழுத்து, தமிழ் எழுத்து, ஜெயின் எழுத்து, குருமுகி எழுத்து, திபெத்திய எழுத்து, சைன எழுத்து ஆகியவற்றில் ‘ஓம்’ எவ்வாறு எழுதப்படுகிறது என்பது கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

மந்திரம் சிறப்பாக சொல்வடிவு, குறிப்புவடிவு, உணர்ச்சிவடிவு என மூன்று வகைப்படும். சொல்வடிவில் வெளிப்படுத்தும் மந்திரங்களின் பொருள் தெளிவாக இருக்கும். குறிப்பால் வெளிப்படுத்தும் மந்திரங்களின் சொற்களுக்கு நேரடியான பொருள் இல்லாமல் வேறு பொருள் இருக்கும். உணர்ச்சி வடிவிலான மந்திரங்களுக்கு மொழியிலிருந்து வேறுபட்டு ஒலிக்கும் பொருள் இருக்கும். ‘ஓம்’ என்பது உணர்ச்சி வடிவிலான மந்திரமாகும்.

‘ஓம்’ என்று உச்சரிக்கும்பொழுது ‘அ’ ஒலி தொண்டையிலிருந்தும், ‘உ’ ஒலி நாவிலிருந்தும் புறப்பட்டு ‘ம்’ என்று உதட்டில் வந்து முடிகிறது. ‘அ’ விலிருந்து எழுச்சி, ‘உ’ விலிருந்து கனவு, ‘ம்’ லிருந்து உறக்கத்தின் தாக்கம் கிடைக்கிறது. இது மனிதனுடைய தொண்டையிலிருந்து வெளிப்படும் அனைத்து ஒலியையும் நிரூபிக்கிறது. ஆகையால் இதை பிரஹ்மநாதம் என்று கூறுகிறார்கள். உடல், ஒலி, மனது ஆகியவற்றை ஒன்றிணைப்பது ‘ஓம்’ எனும் மந்திரம்.

ஆயுர்வேதம் முதலான சாஸ்திரங்களில் ‘ஓம்’ என்ற மந்திர ஜபத்தால் உண்டாகும் வியத்தகு பலன்கள் வருணிக்கப்பட்டுள்ளன. இக்காலத்தைய புது அறிவியலாளர்களும் ஆராய்ச்சியின் மூலமாக இதன் வியத்தகு தாக்கங்களை நிரூபித்துள்ளனர். ‘ஓம்’ என்பதை வெவ்வேறு ஒலிகளில், வெவ்வேறு எண்ணிக்கையில் ஜபிப்பதால் மனநோயாளிகள் மிகவும் பயனடைகின்றனர்.

‘ஓம்’ என்பதை ஜபிக்கத் தொடங்கும்பொழுது அந்த ஒலி நாவிலிருந்து புறப்படாமல் வயிற்றிலிருந்து புறப்படுகிறது. அதுமட்டுமன்றி ‘ஓம்’ என்ற ஒலியின் உச்சாரணம் வயிறு, நெஞ்சு, மூளை ஆகியற்றில் ஒலி அதிர்வை உண்டாக்குகிறது. இந்த அதிர்வு உடலில் உள்ள இறந்த உயிரணுக்களுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கிறது. புது உயிரணுக்களை உருவாக்கவும் செய்கிறது.

‘ஓம்’ என்பது இந்து தர்மத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல. இந்து மரபின் மிகப்புனிதமான ஒரு சொல்லாகும். தினந்தோறும், ‘ஓம்’ என்று உச்சரிப்பதால் ஆற்றல் அதிகமாவதோடு மட்டுமல்லாது நோயைத் தடுக்கும் ஆற்றலை அதிகமாக்கி தீர்க்க முடியாத நோய்களை வெகு தொலைவுக்கு விரட்டுவதற்கும் உதவுகிறது.
Via  Gnanayohi Yohi

30 வகை பிரெட் சமையல் !

மணக்கால் அய்யம்பேட்டை | 11:54 AM | Best Blogger Tips
ஹோட்டலுக்குப்போகாமல் வீட்டில் சமைக்கும் பெண்களுக்கான 30 வகை பிரெட் சமையல் (சைவம்) - கலோரீஸ் பற்றி கவலைபடாதவர்களுக்கு

 
30 வகை பிரெட் சமையல்
 
'பிரெட்' என்றாலே, ''உடம்பு சரியில்லாதவங்க சாப்பிடறது'' என்கிற காலமெல்லாம் மலையேறி, 'பிரெட் இன்றியமையாத உணவு' என்பதாகிவிட்ட காலம் இது. வகை வகையாக ஹோட்டல்களில் கிடைக்கும் பிரெட் உணவுகளைப் பார்க்கும்போது... 'இதையெல்லாம் நாமும் செய்து பார்த்தால் என்ன?' என்று தோன்றும்தானே!

இதோ, ''ஒரு பாக்கெட் பிரெட் இருந்தால்போதும்... அட்டகாசமான ரெசிபிகளை செய்து அசத்தலாம்’' என்று சொல்லும் 'சமையல்கலை நிபுணர்', நங்கநல்லூர் பத்மா, அப்பம் முதல் அல்வா வரை 30 வகை ரெசிபிகளை பிரெட்டிலேயே தயாரித்து பிரமிக்க வைத்திருக்கிறார்.

சமையல் டிப்ஸ்...

பிரெட் மற்றும் பாக்கிங் உணவு வகைகளில் அதிக உப்பு மறைந்திருப்பதால், இதில் சமைக்கும்போது உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
சாதம் வைத்த குக்கர் சூடாக இருக்கும்போதே, அதன் மீது இரண்டு பிரெட் துண்டுகளை வைத்தால்... நன்கு ரோஸ்டாகிவிடும்.
பொடி வகைகளை செய்யும்போது, சிறிது கல் உப்பை சேர்ப்பதால், அதிக நாட்கள் கெடாமல் இருக்கும்.

சர்க்கரைப் பாகு காய்ச்சும்போது, நான்கு சொட்டு எலுமிச்சைச் சாறு விட்டால், பாகு இளகியே இருக்கும்.

டீ தூள் போட்டு கொதிக்க வைக்கும்போதே சர்க்கரை சேர்த்தால், சுவை குறைந்துவிடும். கடைசியாகத்தான் சேர்க்க வேண்டும்.

தக்காளி ரசம் செய்யும்போது தக்காளியைப் பொடியாக நறுக்கிச் சேர்க்காமல், புளியுடன் சேர்த்து நன்றாகக் கரைத்து (அ) மிக்ஸியில் அரைத்து வடிகட்டி செய்யுங்கள். சூப் போல் தக்காளி ரசமும் சூப்பராக இருக்கும்.

கொழுக்கட்டை செய்ய மேல் மாவுக்கு கிளறும்போது, சரியாக வேகாமல் கட்டி தட்டிவிடும். அரிசியை ஊற வைத்து, சிறிது உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்தில் அரையுங்கள். அடுப்பில் ஒரு கடாயை ஏற்றி, கரைத்த மாவை அதில் போட்டுக் கிளறி, பந்து போல் கையில் ஒட்டாமல் வந்ததும் எடுத்து, கொழுக்கட்டை செய்தால் நன்றாக வரும்.

கேரட்டைத் துருவுவதற்கு முன்பு ஐந்து நிமிடம் தண்ணீரில் போட்டு வைத்துத் துருவினால், ஈஸியாக துருவ முடியும்.

வெண்டைக்காயில் பொரியல் செய்யும்போது, சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்தால் உதிராக இருப்பதுடன் ருசியும் நன்றாக இருக்கும்.

கீரை மசியல் செய்யும்போது, சிட்டிகை சர்க்கரை சேர்த்தால் ருசி நன்றாக இருக்கும்.

சாம்பார் பொடியை மொத்தமாக அரைப்பதால், அதன் மணமும், குணமும் குறைந்துவிடும். ஒரு வாரத்துக்கு தேவைப்படும் அளவுக்கு மட்டும் அரைத்து, பாலிதீன் கவரில் போட்டு, ஒரு டப்பாவில் சேமிக்கலாம். இதனால் சாம்பார் பொடி எப்போதுமே வாசனையாக இருக்கும்.

1. பிரெட் காரப்பணியாரம்

தேவையானவை: வெங்காயம், கேரட் - தலா 2, சால்ட் பிரெட் துண்டுகள் - 6, இஞ்சி பேஸ்ட், பச்சை மிளகாய் விழுது - தலா ஒரு டீஸ்பூன், தயிர் - ஒரு கப், கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கேரட்டைத் துருவவும். பிரெட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பொடிக்கவும். இதனுடன் தயிர், பச்சை மிளகாய் விழுது, இஞ்சி பேஸ்ட், உப்பு சேர்க்கவும். கேரட், வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி சேர்த்து, எல்லாவற்றையும் கலந்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். பணியாரக் குழியில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.

தேங்காய்ப்பால், சர்க்கரை சேர்த்து தொட்டு சாப்பிடலாம். சாஸ், சட்னி போன்றவையும் நன்றாக இருக்கும்.

2. புலாவ் வித் பிரெட்

தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், பச்சைப் பட்டாணி - ஒரு பாக்கெட், கேரட், வெங்காயம் - தலா 2, பீன்ஸ் - 50 கிராம், குடமிளகாய் - 1, பிரெட் துண்டு - 2, நெய்யில் வறுத்த பிஸ்தா, முந்திரி - தலா 10, புதினா - ஒரு கைப்பிடி, கொத்தமல்- சிறிதளவு, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பங்கு அரிசிக்கு இரு மடங்கு தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் நெய் விட்டு... பச்சைப் பட்டாணி, வெங்காயம், பீன்ஸ், குடமிளகாய், கேரட் சேர்த்து வதக்கவும். பிஸ்தா, முந்திரி, கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி, உப்பு சேர்த்துக் கிளறவும். வெறும் கடாயில் புதினாவை வதக்கவும். வதக்கிய எல்லாவற்றையும் சாதத்துடன் கலக்கவும். பிரெட்டை சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் பொரித்துச் சேர்க்கவும்.

வெங்காயம், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி இதற்கு அருமையாக இருக்கும்.

3.பிரெட் பாயசம்

தேவையானவை: ஸ்வீட் பிரெட் துண்டுகள் - 6, நெய்யில் வறுத்த முந்திரி - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பால் - 500 மில்லி.

செய்முறை: பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். பாலைக் காய்ச்சி ஆற வைத்து... பொடித்த பிரெட் தூள், வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.
ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம். விரும்பினால் சிறிது கேசரி பவுடர் சேர்க்கலாம்.

4.பிரெட் பக்கோடா

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 6, வெங்காயம் - 2, இஞ்சித் துருவல், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு - தலா 4 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 1, முந்திரிப்பருப்பு - 10 (உடைத்துக் கொள்ளவும்), வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - ஒரு கைப்பிடி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். பிரெட்டை பொடித்து, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு, முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை, வெங்காயம் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தீயை மிதமாக வைத்து, பிசைந்த மாவிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து காயும் எண்ணெயில் கிள்ளிப்போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.

5. பிரெட் போண்டா

தேவையானவை: கடலை மாவு - 150 கிராம், பிரெட் துண்டுகள் - 10, உருளைக்கிழங்கு - 4, வெங்காயம் - 2, இஞ்சித் துருவல் - சிறிதளவு, பச்சை மிளகாய் - 1, கடுகு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி மசிக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு தாளித்து... இஞ்சித் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி, பிரெட் தூள், உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். கடலை மாவை பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். உருளைக் கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி, கரைத்த மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

6. பிரெட் வெஜிடபிள் கட்லெட்

தேவையானவை:
பிரெட் துண்டுகள் - 10, கேரட், உருளைக்கிழங்கு - தலா 2, குடமிளகாய் - 1, கொத்தமல்- சிறிதளவு, பச்சை மிளகாய் - 1, எண்ணெய் - கால் டீஸ்பூன், நெய் - 6 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து மசிக்கவும். பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். குடமிளகாயைப் பொடியாக நறுக்கவும். கேரட்டைத் துருவிக் கொள்ளவும். குடமிளகாயையும், கேரட்டையும் எண்ணெயில் லேசாக வதக்கவும். இதனுடன் உருளைக்கிழங்கு, பிரெட் தூள், நறுக்கிய கொத்தமல்லி, நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறு கட்லெட் வடிவத்தில் தட்டிக் கொள்ளவும். தோசைக்கல் (அ) நான் ஸ்டிக் தவாவில் போட்டு நெய் தடவி சுட்டெடுக்கவும்.

சில்சாஸ் இதற்கு சூப்பர் காம்பினேஷன்.

7. பிரெட் பூரண போளி

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, மைதா மாவு, பொடித்த வெல்லம் - தலா 150 கிராம், தேங்காய் துருவல் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 2 டீஸ்பூன், கேசரி பவுடர் - சிறிதளவு.

செய்முறை: பிரெட்டை பொடித்து, தேங்காய் துருவல், வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாகப் பூரணம் போல் கிளறி, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். மைதா மாவில் கேசரி பவுடர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து, சிறு அப்பளங்களாக இடவும். இதனுள் பூரண உருண்டைகளை வைத்து மூடி, ஒரு வாழை இலை (அ) பிளாஸ்டிக் ஷீட்டில் நெய் தடவி போளிகளாக தட்டவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் தீயை மிதமாக வைத்து, இருபுறமும் நெய்விட்டு சுட்டெடுக்கவும்.

பருப்பு சேர்க்காத இந்த பிரெட் போளி, ருசியாகவும் மிருதுவாகவும் இருக்கும். பண்டிகை நாட்களில் முந்தைய நாளே தயாரித்து வைத்து விடலாம்.

8. பிரெட் வெஜிடபிள் சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, குடமிளகாய், கேரட் - தலா 1, தக்காளி, வெங்காயம் - தலா 2, கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, வெண்ணெய் - 4 டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: குடமிளகாய், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். கேரட்டைத் துருவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... கேரட், குடமிளகாய், வெங்காயம், தக்காளி, புதினா, கொத்தமல்லி, கரம் மசாலாத்தூள், பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்துக் கிளறவும். ஒரு பிரெட் துண்டின் மேல் சிறிது வெண்ணெய் தடவி, வதக்கிய காய்கறிக் கலவையை அதன் மேல் வைத்து, மற்றொரு பிரெட் துண்டால் மூடி டோஸ்ட் செய்யவும்.

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரெசிபி இது. சூடாக சாப்பிட டோஸ்ட்... ரொம்ப டேஸ்ட்டாக இருக்கும்.

9. கல்கத்தா ஜீரா

தேவையானவை: பிரெட் - ஒரு பாக்கெட், சர்க்கரை சேர்க்காத பால் கோவா - 100 கிராம், நெய் - 150 கிராம், சர்க்கரை - 250 கிராம், பால் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, குங்குமப்பூ - சிறிதளவு.

செய்முறை: பிரெட் ஓரங்களை 'கட்’ செய்து நீக்கிவிட்டு, பிரெட்டை பாலில் நனைத்து உடனே ஒரு அகலமான தட்டில் வைத்து, அதனுடன் கோவாவை சேர்த்து மூடி, சிறிய கட்லெட் போல் தட்டவும். கடாயில் நெய் விட்டு, அதில் கட்லெட்களைப் போட்டு பொரித்தெடுக்கவும். சர்க்கரையைப் பாகு காய்ச்சி, கம்பி பதம் வந்ததும் பொரித்து வைத்த கட்லெட்டின் மேல் ஊற்றி... குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

இது, வித்தியாசமான ஸ்வீட்... வெரி டேஸ்ட்டி!

10.பிரெட் சமோசா

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, மைதா மாவு - 150 கிராம், பீன்ஸ் - 10, கேரட், வெங்காயம் - தலா 2, உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் - தலா 1, கரம் மசாலாத்தூள் - சிறிதளவு, இஞ்சித் துருவல் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். மைதா மாவில் சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். கேரட்டைத் துருவிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரிக்கவும். வெங்காயம், பீன்ஸ், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை சேர்த்து வதக்கி... பீன்ஸ், கேரட், இஞ்சித் துருவல், பச்சை மிளகாய், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும். இதில் பிரெட் தூள், உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாகப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பிசைந்த மைதா மாவை சிறிய அப்பளங்களாக இட்டு, உள்ளே உருண்டையை வைத்து, சமோசா வடிவில் மூடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தீயை மிதமாக வைத்து ஒவ்வொரு சமோசாவாக போட்டு பொரித்தெடுக்கவும்.

மாலை வேளையில் சூடாக சாப்பிட நன்றாக இருக்கும். சைட் டிஷ் தேவை இல்லை.

11. பிரெட் பஜ்ஜி

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, கடலை மாவு - 100 கிராம், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், அரிசி மாவு - 50 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


செய்முறை: பிரெட் துண்டை நான்கு துண்டுகளாக 'கட்’ செய்யவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து தண்ணீர் விட்டு பஜ்ஜிமாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். இதில் பிரெட் துண்டுகளைத் தோய்த்து காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
வெங்காய சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

12. பிரெட் அல்வா

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, சர்க்கரை - 100 கிராம், பால் - 500 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். பாலைக் காய்ச்சி, சிறிது கெட்டியானதும் பிரெட் பொடியை சேர்த்துக் கிளறி, சர்க்கரை சேர்த்து கெட்டியாகக் கிளறவும். வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் போட்டு, நெய் விட்டு மேலும் கிளறி இறக்கவும்.

பால் மற்றும் பிரெட் இரண்டும் சேர்ந்து வித்தியாசமான சுவையை உண்டாக்கும் அல்வா இது.

13.பிரெட் அடை

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, இட்அரிசி - 200 கிராம், காய்ந்த மிளகாய் - 2, தக்காளி, வெங்காயம் - தலா 1, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: இட்அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் களைந்து கொள்ளவும். அதனுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பிரெட் சேர்த்து அரைக்கவும். இதில் உப்பு சேர்த்துக் கலந்து, அடை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லை காய வைத்து, அதில் மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

பூண்டு வாசனை பிடிக்கும் என்றால், அரைக்கும்போது இரண்டு பூண்டுப் பல் சேர்க் கலாம்.

14. பிரெட் ஸ்பிரிங் ரோல்

தேவையானவை: மைதா மாவு - 100 கிராம், பொடியாக நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் (வெங்காயத்தாள்), வெங்காயம், குடமிளகாய், கேரட் துருவல் - சிறிதளவு, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் பிரெட் தூள் - 100 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... கேரட், குடமிளகாய், வெங்காயம், ஸ்பிரிங் ஆனியன், பிரெட் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். மைதா மாவை சப்பாத்தி மாவு போல பிசைந்து, சிறு அப்பளங்களாக இட்டு, வதக்கிய கலவையை நடுவில் வைத்து பாய் போல் சுருட்டவும். இருபுறமும் தண்ணீரைத் தொட்டு மூடி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

தக்காளி சாஸுடன் சாப்பிட ஸ்பிரிங் ரோல்... சூப்பர் ரோல்!

15. பிரெட் வடை

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 6, உளுத்தம்பருப்பு - 100 கிராம், வெங்காயம் - 2, இஞ்சி - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 1, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கவும். உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் களைந்து... உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன் பிரெட் தூள், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு பிசையவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

இதற்கு புதினா சட்னி நன்றாக இருக்கும். திடீர் விருந்தினர்கள் வந்துவிட்டால் பிரெட் தூளுடன் அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு சேர்த்துப் பிசைந்தும் இதே முறையில் செய்யலாம்.



16. பிரெட் சூப்

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 4, தக்காளி - 6, மிளகுத்தூள் நெய் - தலா அரை டீஸ்பூன், வெண்ணெய், சோள மாவு - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, துருவிய கோஸ் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தக்காளியைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு தோல் உரித்து, மிக்ஸியில் அரைக்கவும். கோஸ் துருவலை நெய் விட்டு வதக்கி, தக்காளி சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து லேசாக சூடாக்கவும். பிரெட்டை பொடித்து சேர்க்கவும். இதனுடன் சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றி கொத்தமல்லி, வெண்ணெய் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

சூடாக குடித்தால் 'சூப்’பராக இருக்கும். காய் வேக வைத்த தண்ணீரை வீணாக்காமல், அதைச் சேர்த்தும் சூப் தயாரிக்கலாம்.

17. பிரெட் சப்பாத்தி

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, மைதா மாவு - 150 கிராம், வெண்ணெய் - 2 டீஸ்பூன், பால் - 100 மில்லி, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், நெய் - 4 டீஸ்பூன்.

செய்முறை: பிரெட் துண்டுகளை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். மைதா மாவுடன் வெண்ணெய், பால், சர்க்கரை, பொடித்த பிரெட் சேர்த்துப் பிசைந்து, பதினைந்து நிமிடம் மூடிவைக்கவும். இதை சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் லேசாக நெய் தடவி சுட்டு எடுக்கவும்.

இந்த சப்பாத்தியை அப்படியே சாப்பிடலாம். பிரெட், சர்க்கரை பால் சேர்ப்பதால் சுவை அருமையாக இருக்கும்.

18. பிரெட் குணுக்கு

தேவையானவை: பிரெட் - 10 துண்டுகள், வெங்காயம், பேபிகார்ன் - தலா 2, பச்சை மிளகாய், வேக வைத்த உருளைக்கிழங்கு - தலா 1, பொடியாக நறுக்கிய புதினா - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பிரெட்டை உதிர்த்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பேபிகார்ன், வேக வைத்த உருளைக்கிழங்கு, புதினா, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசைந்த மாவை சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு, பொன்னிற மாக வேக வைத்து எடுக்கவும்.

சாஸ் தொட்டு சாப்பிடலாம். வாயில் போட்டதும் 'நறுக்’கென இருக்கும் இந்தக் குணுக்கு.

19. பிரெட் கேக்

தேவையானவை: பிரெட் - 6 துண்டுகள், நெய்யில் வறுத்த மைதா மாவு - 100 கிராம், முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு - தலா 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 கிராம்., சர்க்கரை - 200 கிராம்.

செய்முறை: பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். பாதாம், முந்திரியை ஊற வைக்கவும். பாதாமை தோல் உரித்து, முந்திரி சேர்த்து நைஸாக அரைக்கவும். சர்க்கரையை, மூழ்கும்வரை தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து, சிறிது கொதித்ததும் மைதா மாவை சிறிது சிறிதாக போடவும். பிரெட் தூள், முந்திரி - பாதாம் விழுது, நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, கெட்டியானதும் நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும்.

20.பிரெட் சாலட்

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 6, கேரட், வெள்ளரிக்காய், தக்காளி - தலா 1, முளைக்கட்டிய பாசிப்பயறு, முளைக்கட்டிய கொண்டைக்கடலை - தலா 50 கிராம், எலுமிச்சம்பழம் - 1, பொடியாக நறுக்கிய கொத்தமல்- சிறிதளவு, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கேரட், வெள்ளரி, தக்காளியை வட்டமாக நறுக்கவும். பிரெட்டை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பெரிய பிளேட்டில் வைத்து நடு நடுவே வெள்ளரி, தக்காளி, கேரட், முளைகட்டிய பயறு, கொண்டைக்கடலை, உப்பு, மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்சேர்க்கவும். எலுமிச்சைச் சாறு பிழிந்து பரவலாக விடவும்.

காலை நேர பரபரப்பில் ஈஸியாக தயாரிக்கலாம். முழுமையான ஊட்டச்சத்துடன் கூடிய பிரேக்ஃபாஸ்ட்டாக இருக்கும்.

21. பாவ் பாஜி


தேவையானவை: பாவ் பிரெட் (பேக்கரியில் கிடைக்கும்) - 2 பாக்கெட், பீன்ஸ் - கால் கிலோ, குடமிளகாய், தக்காளி - தலா 1, கேரட், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் - தலா 2, பச்சைப் பட்டாணி - ஒரு பாக்கெட், வெண்ணெய் - 100 கிராம், கரம் மசாலாத் தூள், நறுக்கிய கொத்தமல்- சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பீன்ஸை நீளவாக்கில் மெல்லியதாகவும்... கேரட், குடமிளகாய், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாகவும் நறுக்கவும். பீன்ஸ், கேரட்டுடன் உப்பு சேர்த்து வேகவிடவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரிக்கவும். கடாயில் சிறிது வெண்ணெய் சேர்த்து... குடமிளகாய், தக்காளி, பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி, கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கி இறக்கவும். இதனுடன் வேக வைத்த பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, வதக்கிய தக்காளி, குடமிளகாய், கொத்தமல்சேர்த்து நன்றாக மசித்துப் பிசையவும். பாவ் பிரெட்டை நடுவில் வெட்டி, மசித்த கலவையை உள்ளே வைத்து, சிறிது வெண்ணெய் தடவி தோசைக்கல்லில் போட்டு சுட்டெடுக்கவும்
.
பிரெட்டை, இந்த மசாலா கலவையைத் தொட்டும் சாப்பிடலாம். சைட் டிஷ் தேவை இல்லை.

22. பிரெட் ஜாமூன்


தேவையானவை: பிரெட் துண்டுகள் - 4, சர்க்கரை கலக்காத பால் கோவா, பால் பவுடர் - தலா 100 கிராம், சர்க்கரை - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை: பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். இதனுடன் கோவா, பால் பவுடர் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து சிறு உருண்டைகளாக உருட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சர்க்கரையை, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி... கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்து, பொரித்த ஜாமூன்களைப் போட்டு வைத்து, சிறிது நேரம் கழித்து பரிமாறவும்.

பால் பவுடருக்குப் பதிலாக ஜாமூன் மிக்ஸ் சேர்த்தும் இதை செய்யலாம்.

23. பிரெட் ரெய்தா

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 4, புளிக்காத தயிர் - 250 மில்லி, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், வெங் காயம், தக்காளி, கொத்தமல்- சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து பரிமாறவும்.

இதே முறையில் ஸ்வீட்கார்ன், பழங்கள் சேர்த்து தித்திப்பு ரெய்தாவும் செய்யலாம்.

24, புதினா - கார்லிக் பட்டர் டோஸ்ட்

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, புதினா - ஒரு கைப்பிடி, உரித்த பூண்டு - 6 பல், பச்சை மிளகாய் - 1, வெண்ணெய் - 100 கிராம், உப்பு - சிறிதளவு, நெய் - 6 டீஸ்பூன்.


செய்முறை: புதினாவுடன், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைக்கவும். இதில் வெண்ணெய், உப்பு சேர்த்து நன்றாகக் குழைத்து, பிரெட்டின் இருபுறமும் தடவவும். பிரெட்டை தோசைக்கல்லில் போட்டு, நெய் விட்டு மொறுமொறுப்பாக எடுக்கவும்.

இதற்கு சாஸ் சிறந்த காம்பினேஷன். பூண்டு, புதினா வாசனையுடன் சுவையும் அட்டகாசமாக இருக்கும்.

25. பிரெட் ஊத்தப்பம்

தேவையானவை: 
பிரெட் துண்டுகள் - 10, புழுங்கல் அரிசி - 150 கிராம், உளுத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி, வெங்காயம், கேரட், பச்சை மிளகாய் - தலா 1, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:  வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கவும். கேரட்டை துருவவும். அரிசி, உளுந்தை ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும். இதனுடன் பிரெட் சேர்த்து நைஸாக அரைக்கவும். சிறிது எண்ணெயில் வெங்காயம், கேரட், பச்சை மிளகாயை வதக்கி... உப்பு சேர்த்து, மாவில் கலக்கவும்.
தோசைக்கல்லை காய வைத்து மாவை சிறு ஊத்தப் பமாக ஊற்றி, இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

தேங்காய் சட்னி இதற்கு சூப்பராக இருக்கும்.

26, பிரெட் நெய் அப்பம்

தேவையானவை:
பிரெட் துண்டுகள் - 2 (பொடித்துக் கொள்ளவும்), அரிசி மாவு - 4 டீஸ்பூன், கோதுமை மாவு - 3 டீஸ்பூன், ரவை - 2 டீஸ்பூன், வாழைப்பழத் துண்டுகள் - 4, பொடித்த வெல்லம் - 50 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 4 டீஸ்பூன், தேங்காய்ப்பால் - தேவையான அளவு.


செய்முறை: அரிசி மாவு, கோதுமை மாவு, ரவை, பிரெட் தூள், வெல்லத்தூள், ஏலக்காய்த் தூள், வாழைப்பழத் துண்டுகள் எல்லாவற்றையும் சேர்த்து, தேங்காய் பால் விட்டு தோசை மாவு பதத்தில் கரைக்கவும். அப்பம் தயாரிக்கும் குழியில் நெய் தடவி, சிறு கரண்டியால் மாவை ஊற்றி, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

தேங்காய் துருவல் சேர்த்தும் மாவைக் கரைக் கலாம்.

27. பிரெட் உப்புமா


தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, வெங்காயம், கேரட் - தலா 2, பச்சை மிளகாய் - 1, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், கடுகு, உளுத்தம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:  பிரெட்டில் சிறிது தண்ணீர் தெளித்து, உப்பு சேர்த்து உதிர்த்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். கேரட்டைத் துருவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகுத்தூள் போட்டு தாளித்து... வெங்காயம், பச்சை மிளகாய், கேரட் சேர்த்து வதக்கி, உதிர்த்த பிரெட், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

விருப்பப்பட்டால் பட்டாணி, குடமிளகாய் சேர்த்துக் கொள்ளலாம்.

28. பிரெட் பீட்ஸா

தேவையானவை: பீட்ஸா பிரெட் - 1, சீஸ் - 4 துண்டுகள், கேரட், குடமிளகாய், வெங்காயம் - தலா 1, நெய் - 6 டீஸ்பூன்.

செய்முறை:
பிரெட்டை தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் நெய் தடவி சுட்டு, வட்டமாக 'கட்’ செய்யவும். சீஸ், குடமிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி, பிரெட்டின் மீது சுற்றிலும் லேயர் லேயராக வைக்கவும். இடைவெளியில் கேரட் துருவலை பரவலாக போட்டு, அப்படியே சாப்பிடவும்.

அடை மாவிலும் அடை தட்டி இதே முறையில் அலங்கரித்து கொடுக்கலாம். அடம் பிடிக்கும் குழந்தையும் ஆர்வமாக சாப்பிடும்.


29. பிரெட் கிரேவி

தேவையானவை:பிரெட் துண்டுகள் - 6, இஞ்சி - சிறிய துண்டு, தக்காளி - 2, பச்சை மிளகாய் - 1, பச்சைப் பட்டாணி - ஒரு பாக்கெட், கொத்தமல்- சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.


செய்முறை:
பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவி... தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்து அரைக்கவும். பிரெட் தூள், இஞ்சிக் கலவை விழுது, பட்டாணி விழுது எல்லாவற்றையும் கலந்து, உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும். இறக்கு வதற்கு முன்பு கொத்த மல்லியை நறுக்கி மேலா கத் தூவவும்.

சப்பாத்தி, தோசைக்கு தொட்டுச் சாப்பிட அருமை யாக இருக்கும்.

30.பிரெட் சீஸ் பால்

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 4, கடலை மாவு, அரிசி மாவு, மைதா மாவு - தலா 100 கிராம், சோள மாவு - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், சீஸ், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


செய்முறை: 
பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எல்லா மாவையும் போட்டு உப்பு, பிரெட் தூள், மிளகுத்தூள் மிளகாய்த்தூள், சீஸ் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித் தெடுக்கவும்.

இதே முறையில் காரம் சேர்க்காமல் செய்து, ஜீரா பாகில் போட்டுக் கொடுக்கலாம்.


நன்றி - அவள் விகடன்

தண்டு வட மருத்துவம்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:42 AM | Best Blogger Tips

தண்டு வட மருத்துவம்  

கைரோப்பிராக்டிஸ் எனப்படும் தண்டுவடத் திருத்த துறை இப்போது ஆசிய நாடுகள் அனைத்திலும் பிரபலமாகிவருகின்றது. ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களின் பெரும்பான்மையோர் கால்வலி, மூட்டுவலி, இடுப்பு வலி, முதுகு வலி, கை வலி ஆகியவற்றில் அவதிப்படுகின்றனர். மனிதனின் செயல்பாடுகளுக்கு அடிப்படைக் காரணம் முதுகெலும்பு ஆகும். இயற்கையிலோ அல்லது தவறான நடைமுறைப் பழக்கவழக்கங்களினால் முதுகெலும்பு பாதிக்கப்படுகிறது. அதிக அளவில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களை ஓட்டுவோரும் முதுகெலும்பு பாதிப்புக்கு உள்ளாகின்றனர். முதுகெலும்பு விலகுதல், ஆஸ்டியோ பொராசிஸ் என அழைக்கப்படும் கால்சியம் குறைதல், முதுகெலும்பு மூட்டுகளின் செயல்திறன் குறைதல் குழாய் அடைப்புகள் ஆகியவற்றால் முதுகெலும்பு பாதிக்கப்படுகிறது.

முதுகெலும்பு மூட்டுகளில் உள்ள திரவம் குனிந்தோ, வளைந்தோ நீண்ட நேரத்துக்கு தொடர்ச்சியாக வேலை செய்தால் அதன் செயல் திறனை இழக்கின்றது. உடலின் ஒரே இடத்தில் எடை அதிகமாகும் போதும் முதுகு எலும்புகளின் உள்ள திரவம் தன் வேலையைச் சரிவர செய்யவில்லை. எலும்பின் உறுதித் தன்மை கால்சியத்தினால் தான் பாதிக்கப்படுகிறது. கால்சியம் சத்து குறைவதால் முதுகெலும்பு பாதிக்கப்படுகின்றது. கால்சியம் சத்து குறைவதால் முதுகெலும்பு பாதிக்கப்படுகின்றது. குழாய் அடைப்புகள் மூளையும் முதுகெலும்பும் இணையும் இடத்தில் ஏற்படும் மாற்றம் ஆகும். இதனால் தலை வலியும் கழுத்து வலியும் ஏற்படுகின்றன.

தண்டுவடக் குறைகளைக் திருத்தும் கைரோப்பிராடிக்ஸ் முறை அமெரிக்காவில் தற்போது மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த முறையில் மருந்துகளோ அல்லது ஆபரேஷன்களோ பயன்படுத்தப்படுவதில்லை. வலிகளை போக்குவதற்கு சிறந்த முறையாக இது பயன்படுத்தப்படுகின்றது. தண்டுவடத் திருத்த மருத்துவத்துறைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.
நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்
-நலம், நலம் அறிய ஆவல். என்றும் உங்கள் Shamvel.
இணைந்திருங்கள் எங்களுடன்...
பகிர்ந்துக் கொள்ளுங்கள் நண்பர்களுடன்...
http://www.facebook.com/mrksamivel?ref=tn_tnmn
http://www.facebook.com/pages/Leprosy-and-Disability-People/535050236511161
http://www.facebook.com/pages/நலம்-நலம்-அறிய-ஆவல்-என்றும்-உங்கள்-Shamvel/475332812532648
இந்த பக்கத்தை குறித்து உங்களுடைய கருத்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் வரவேற்க்க படுகிறது.
கைரோப்பிராக்டிஸ் எனப்படும் தண்டுவடத் திருத்த துறை இப்போது ஆசிய நாடுகள் அனைத்திலும் பிரபலமாகிவருகின்றது. ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களின் பெரும்பான்மையோர் கால்வலி, மூட்டுவலி, இடுப்பு வலி, முதுகு வலி, கை வலி ஆகியவற்றில் அவதிப்படுகின்றனர். மனிதனின் செயல்பாடுகளுக்கு அடிப்படைக் காரணம் முதுகெலும்பு ஆகும். இயற்கையிலோ அல்லது தவறான நடைமுறைப் பழக்கவழக்கங்களினால் முதுகெலும்பு பாதிக்கப்படுகிறது. அதிக அளவில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களை ஓட்டுவோரும் முதுகெலும்பு பாதிப்புக்கு உள்ளாகின்றனர். முதுகெலும்பு விலகுதல், ஆஸ்டியோ பொராசிஸ் என அழைக்கப்படும் கால்சியம் குறைதல், முதுகெலும்பு மூட்டுகளின் செயல்திறன் குறைதல் குழாய் அடைப்புகள் ஆகியவற்றால் முதுகெலும்பு பாதிக்கப்படுகிறது.
முதுகெலும்பு மூட்டுகளில் உள்ள திரவம் குனிந்தோ, வளைந்தோ நீண்ட நேரத்துக்கு தொடர்ச்சியாக வேலை செய்தால் அதன் செயல் திறனை இழக்கின்றது. உடலின் ஒரே இடத்தில் எடை அதிகமாகும் போதும் முதுகு எலும்புகளின் உள்ள திரவம் தன் வேலையைச் சரிவர செய்யவில்லை. எலும்பின் உறுதித் தன்மை கால்சியத்தினால் தான் பாதிக்கப்படுகிறது. கால்சியம் சத்து குறைவதால் முதுகெலும்பு பாதிக்கப்படுகின்றது. கால்சியம் சத்து குறைவதால் முதுகெலும்பு பாதிக்கப்படுகின்றது. குழாய் அடைப்புகள் மூளையும் முதுகெலும்பும் இணையும் இடத்தில் ஏற்படும் மாற்றம் ஆகும். இதனால் தலை வலியும் கழுத்து வலியும் ஏற்படுகின்றன.

தண்டுவடக் குறைகளைக் திருத்தும் கைரோப்பிராடிக்ஸ் முறை அமெரிக்காவில் தற்போது மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த முறையில் மருந்துகளோ அல்லது ஆபரேஷன்களோ பயன்படுத்தப்படுவதில்லை. வலிகளை போக்குவதற்கு சிறந்த முறையாக இது பயன்படுத்தப்படுகின்றது. தண்டுவடத் திருத்த மருத்துவத்துறைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்
Via -நலம், நலம் அறிய ஆவல்.

சீரியல் நம்பரை இலவசமாக பெற சிறந்த இணையத்தளங்கள்! ! ! !

மணக்கால் அய்யம்பேட்டை | 11:41 AM | Best Blogger Tips

சீரியல் நம்பரை இலவசமாக பெற சிறந்த இணையத்தளங்கள்! ! ! !

என்னதான் மென்பொருள் மற்றும் விளையாட்டுக்கள் இலவசமாக download செய்தாலும் அதை நாம் குறைந்தது 15 நாட்கள் அல்லது அதிகமாக 40 நாட்கள் மட்டுமே உபயோகிக்க முடியும்,அதற்கு பிறகு அந்த மென்பொருள் Register பன்ன வேண்டும் என ஒரு செய்தியை எமக்கு காட்டும்.அப்படி நாம் பயன்படுத்தும் 15 அல்லது 40 நாட்களில் அதனுடைய பயனை நாம் முழுமையாக அடைந்து கொள்ள முடியாது. அதாவது குறிப்பிட்ட வசதியை மட்டும் தான் தருவார்கள்.

மென்பொருளுடைய சீரியல் நம்பரை வழங்குவதன் மூலம் அந்த மென்பொருளுடைய உண்மையான பயனை நாம் அனுபவிக்க முடியும். அதாவதுஅனைத்து வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும். இதெல்லம் உண்மைதான் ஆனால் நமக்கு Trial version தான் இலவசமாககிடைக்கும் என்று தெரியும் அதற்கான சீரியல் நம்பரும் கிடைப்பதென்பது சில பேருக்கு தெரியாமல் இருக்கலாம்.(அதா ன் இப்ப தெரிந்து விட்டதே), குறிப்பிட்ட மென்பொருளுடைய சீரியல் நம்பரை இலவசமாகத்தர சில இணையத்தளங்கள் இருக்கின்றன அவை

01 http://www.youserials.com/
02 http://www.egydown.com/
03 http://serialnumber.in/
04 http://www.serials4u.com/
05 http://www.serialhint.com/
06 http://www.cserial.com/
07 http://www.serials.be/
08 http://www.findserialnumber.com/

நீங்கள் தேடும் மென்பொருளுடைய சீரியல் நம்பர் கிடைக்கா விட்டல் ஒரு வாரம் அல்லது இரண்டுவாரத்திற்கு பிறகு அங்கு சென்று தேடினீர்கள் என்றால் கிடைக்கும்.

என்னதான் மென்பொருள் மற்றும் விளையாட்டுக்கள் இலவசமாக download செய்தாலும் அதை நாம் குறைந்தது 15 நாட்கள் அல்லது அதிகமாக 40 நாட்கள் மட்டுமே உபயோகிக்க முடியும்,அதற்கு பிறகு அந்த மென்பொருள் Register பன்ன வேண்டும் என ஒரு செய்தியை எமக்கு காட்டும்.அப்படி நாம் பயன்படுத்தும் 15 அல்லது 40 நாட்களில் அதனுடைய பயனை நாம் முழுமையாக அடைந்து கொள்ள முடியாது. அதாவது குறிப்பிட்ட வசதியை மட்டும் தான் தருவார்கள்.

மென்பொருளுடைய சீரியல் நம்பரை வழங்குவதன் மூலம் அந்த மென்பொருளுடைய உண்மையான பயனை நாம் அனுபவிக்க முடியும். அதாவதுஅனைத்து வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும். இதெல்லம் உண்மைதான் ஆனால் நமக்கு Trial version தான் இலவசமாககிடைக்கும் என்று தெரியும் அதற்கான சீரியல் நம்பரும் கிடைப்பதென்பது சில பேருக்கு தெரியாமல் இருக்கலாம்.(அதா ன் இப்ப தெரிந்து விட்டதே), குறிப்பிட்ட மென்பொருளுடைய சீரியல் நம்பரை இலவசமாகத்தர சில இணையத்தளங்கள் இருக்கின்றன அவை

01 http://www.youserials.com/
02 http://www.egydown.com/
03 http://serialnumber.in/
04 http://www.serials4u.com/
05 http://www.serialhint.com/
06 http://www.cserial.com/
07 http://www.serials.be/
08 http://www.findserialnumber.com/

நீங்கள் தேடும் மென்பொருளுடைய சீரியல் நம்பர் கிடைக்கா விட்டல் ஒரு வாரம் அல்லது இரண்டுவாரத்திற்கு பிறகு அங்கு சென்று தேடினீர்கள் என்றால் கிடைக்கும்.
Via முக்கிய செய்திகள்

இயற்க்கை வைத்தியம் மருத்துவ டிப்ஸ் !

மணக்கால் அய்யம்பேட்டை | 11:39 AM | Best Blogger Tips

இயற்க்கை வைத்தியம் மருத்துவ டிப்ஸ்:-

மஞ்சள் காமாலை வந்தால் கீழாநெல்லியை அரைத்து பசு மோருடன் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரியாகிவிடும்.

பயணத்தின்போது அடிக்கடி வாந்தி வரும். தினசரி வெறும் வயிற்றில் நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால். அப்புறம் வாந்தியாவது, ஒண்ணாவது! ஜலதோஷம் வந்தால் மாதுளம் சாப்பிட்டு வந்தால், குணமாகிவிடும்.

மருத்துவ டிப்ஸ்

உடல்வலி குணமாக : வில்வ இலைச் சாறு, அருகம்புல் சாறு கலந்து காலை, மாலை 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர, குணம் பெறலாம்.

ஞாபக சக்தி பெருக : வல்லாரை 150 கிராம், வசம்பு 15 கிராம் பவுடராக்கி தேனில் கலந்து உண்ணலாம்.

முகப் பருக்கள் ஒழிய : அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து, இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்து வர ஒழியும்.

தும்மல் நிற்க : தூதுவளைப் பொடியில் மிளகுப் பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட நிற்கும்.

சதைப் பெருக்கத்திற்கு : நெல்லிக்காய் தூள் அரை ஸ்பூன் பாலில் சாப்பிட்டு வர உடல் சதைப் பிடிப்பு கூடுதலாகும்.

புண்கள் ஆற : கருவேல இலையை அரைத்து புண்கள் மீது கட்ட ஆறும்.

உடல் ஊறல் அரிப்பு குணமாக : உத்தாமணி இலைச் சாற்றினைப் பூசி காய்ந்த பின் குளித்துவர தீரும்.

கால் ஆணி குணமாக : வெள்ளை அருகு இலையை அரைத்து வைத்துக் கட்ட குணமாகும்.

தோல் வியாதி குணமாக : தகரை செடியின் வேரை எலுமிச்ச சாறு விட்டு அரைத்துப் பூச குணமாகும்.

நமைச்சல் தடிப்பு நீங்க : வேப்பமரத்துப் பட்டையைத் தூளாக்கி உடம்பில் பூசி, அரை மணி நேரம் கழித்து குளிக்க நீங்கும்.

அக்கி குணமாக : ஆலம் விழுதை சாம்பலாக்கி நல்லெண்ணெயில் குழைத்து தடவி வர குணமாகும்.

கட்டிகள் குணமாக : அந்திமந்தாரை இலையின் மீது ஆலிவ் எண்ணெய் தடவி அனலில் சூடுகாட்டி கட்டிகள் மீது வைத்துக் கட்ட குணமாகும்.

முடி நன்றாக வளர : மருதாணி இலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலக்கி, பச்சை நிறம் மாறாமல் காய்ச்சித் தடவி வர நன்றாக வளரும்.

செம்பட்டை முடி கருப்பாக : நில ஆவார இலையுடன் மருதாணி இலையைச் சேர்த்து அரைத்து தடவி வரவேண்டும்.

கம்பளிப் பூச்சிக் கடிக்கு : வெற்றிலையைக் கடித்த இடத்தில் வைத்து அழுத்தித் தேய்க்க குணம் பெறலாம்.

எலிக்கடி விஷம் முறிய : குப்பைமேனி இலையை அரைத்து, கடித்த இடத்தில் வைத்துக்கட்ட விஷம் முறியும்.

முகப் பொலிவிற்கு சில குறிப்புகள் :

1. முல்தானிமெட்டி பவுடரை பன்னீர் விட்டுக் கலந்து முகத்தில் தடவி, 1 மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

2. பன்னீர் ரோஜா இதழ்களை அரைத்து முகத்தில் தடவி, அரை மணி ஊறிய பின் தண்ணீர் விட்டு அலம்பி வந்தால் முகம் கலர் மாறும்.

3. தக்காளியை அரைத்துப் பூசி, ஊறிய பின் அலம்பினால் முகம் பொலிவு பெறும்.

4. கரும்புள்ளி மறைய வேப்பங் கொழுந்தையும், மஞ்சளையும் அரைத்துப் பூசி, ஊறியபின் கழுவினால் மறைந்துவிடும்.

5. கண்ணிற்கு கீழ் உள்ள கருவளையம் மறைய, உருளைக்கிழங்கை ஸ்லைசாக வெட்டி கண்ணின் மீது வைத்து வந்தால் கண் குளிர்ச்சியடையும். நாளடைவில் கருவளையம் மறைந்துவிடும்.

6. முகத்தில் பூனை முடி வளர்ந்திருந்தால் அதற்கு கஸ்தூரி மஞ்சள் தூளைப் பூசி ஊறவைத்து அலம்பினால் பலன்.
மஞ்சள் காமாலை வந்தால் கீழாநெல்லியை அரைத்து பசு மோருடன் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரியாகிவிடும்.


பயணத்தின்போது அடிக்கடி வாந்தி வரும். தினசரி வெறும் வயிற்றில் நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால். அப்புறம் வாந்தியாவது, ஒண்ணாவது! ஜலதோஷம் வந்தால் மாதுளம் சாப்பிட்டு வந்தால், குணமாகிவிடும்.


மருத்துவ டிப்ஸ்

உடல்வலி குணமாக : வில்வ இலைச் சாறு, அருகம்புல் சாறு கலந்து காலை, மாலை 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர, குணம் பெறலாம்.

ஞாபக சக்தி பெருக : வல்லாரை 150 கிராம், வசம்பு 15 கிராம் பவுடராக்கி தேனில் கலந்து உண்ணலாம்.

முகப் பருக்கள் ஒழிய : அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து, இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்து வர ஒழியும்.

தும்மல் நிற்க : தூதுவளைப் பொடியில் மிளகுப் பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட நிற்கும்.

சதைப் பெருக்கத்திற்கு : நெல்லிக்காய் தூள் அரை ஸ்பூன் பாலில் சாப்பிட்டு வர உடல் சதைப் பிடிப்பு கூடுதலாகும்.

புண்கள் ஆற : கருவேல இலையை அரைத்து புண்கள் மீது கட்ட ஆறும்.

உடல் ஊறல் அரிப்பு குணமாக : உத்தாமணி இலைச் சாற்றினைப் பூசி காய்ந்த பின் குளித்துவர தீரும்.

கால் ஆணி குணமாக : வெள்ளை அருகு இலையை அரைத்து வைத்துக் கட்ட குணமாகும்.

தோல் வியாதி குணமாக : தகரை செடியின் வேரை எலுமிச்ச சாறு விட்டு அரைத்துப் பூச குணமாகும்.

நமைச்சல் தடிப்பு நீங்க : வேப்பமரத்துப் பட்டையைத் தூளாக்கி உடம்பில் பூசி, அரை மணி நேரம் கழித்து குளிக்க நீங்கும்.

அக்கி குணமாக : ஆலம் விழுதை சாம்பலாக்கி நல்லெண்ணெயில் குழைத்து தடவி வர குணமாகும்.

கட்டிகள் குணமாக :
அந்திமந்தாரை இலையின் மீது ஆலிவ் எண்ணெய் தடவி அனலில் சூடுகாட்டி கட்டிகள் மீது வைத்துக் கட்ட குணமாகும்.

முடி நன்றாக வளர : மருதாணி இலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலக்கி, பச்சை நிறம் மாறாமல் காய்ச்சித் தடவி வர நன்றாக வளரும்.

செம்பட்டை முடி கருப்பாக : நில ஆவார இலையுடன் மருதாணி இலையைச் சேர்த்து அரைத்து தடவி வரவேண்டும்.

கம்பளிப் பூச்சிக் கடிக்கு : வெற்றிலையைக் கடித்த இடத்தில் வைத்து அழுத்தித் தேய்க்க குணம் பெறலாம்.

எலிக்கடி விஷம் முறிய : குப்பைமேனி இலையை அரைத்து, கடித்த இடத்தில் வைத்துக்கட்ட விஷம் முறியும்.

முகப் பொலிவிற்கு சில குறிப்புகள் :

1. முல்தானிமெட்டி பவுடரை பன்னீர் விட்டுக் கலந்து முகத்தில் தடவி, 1 மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

2. பன்னீர் ரோஜா இதழ்களை அரைத்து முகத்தில் தடவி, அரை மணி ஊறிய பின் தண்ணீர் விட்டு அலம்பி வந்தால் முகம் கலர் மாறும்.

3. தக்காளியை அரைத்துப் பூசி, ஊறிய பின் அலம்பினால் முகம் பொலிவு பெறும்.

4. கரும்புள்ளி மறைய வேப்பங் கொழுந்தையும், மஞ்சளையும் அரைத்துப் பூசி, ஊறியபின் கழுவினால் மறைந்துவிடும்.

5. கண்ணிற்கு கீழ் உள்ள கருவளையம் மறைய, உருளைக்கிழங்கை ஸ்லைசாக வெட்டி கண்ணின் மீது வைத்து வந்தால் கண் குளிர்ச்சியடையும். நாளடைவில் கருவளையம் மறைந்துவிடும்.

6. முகத்தில் பூனை முடி வளர்ந்திருந்தால் அதற்கு கஸ்தூரி மஞ்சள் தூளைப் பூசி ஊறவைத்து அலம்பினால் பலன்.
Via இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்

வல்லாரை கிரையின் மருத்துவ குணங்கள் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 6:49 PM | Best Blogger Tips



வல்லாரை கிரையின் மருத்துவ குணங்கள் !!!


இது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தாவரம். இதன் இலைப்பகுதிகள் உணவாகப்ப் பயன் படுவதால் இத்தாவரம், கீரையினங்களுள் அடங்கும். வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப்பெயர் பெற்றது.இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து ‘எ’, உயிர்சத்து’சி’ மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. ரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது.

காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், பச்சையாக நன்கு மென்று விழுங்கி வந்தால், மூளை மிகுந்த செயலாற்றல் பெறும். காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், ஒரு கைப்பிடியளவுக் கீரையைப் பச்சையாக நன்கு மென்று விழுங்கிய பின், பசும்பால் உண்டு வர, மாலைக்கண் நோய் குணமாகும்.

சிறுவர் அடிக்கடி உண்ணுதல் மிக்க நல்லது.
இக்கீரையை, சித்த மருத்துவர்கள் லேகியம், சூரணம், மாத்திரை போன்ற வடிவங்களில் பக்குவப்படுத்தி பயன்படுத்துகிறார்கள்.

வளரியல்பு -: ஈரமான பகுதிகளில் அதிகமாகக் காணப்படும். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் கிடைக்கும். தட்பமான, மித தட்பமான பகுதிகளில் வளரும். ஒரு மென்மையான கொடி. தண்டு நீண்டதாக தரையில் படர்ந்து இருக்கும். செங்குத்தான வேர்களின் இலைக் கோணத்திலிருந்து இந்த தண்டுகள் வளரும். மெல்லிய தண்டு பெரும்பாலும் சிவப்பு நிறமானதாக இருக்கும். வேர்க்கூட்டத்திலிருந்து தோன்றும் இலைக்காம்பு மிகவும் நீண்டு இருக்கும். ஒரு கணுவிலிருந்து
1 முதல் 3 இலை தோன்றும். இலையின் வடிவம் வட்ட வடிவமாகவோ, மொச்சை வடிவமாகவோ இருக்கும். அகலம் அதிகமாக இருக்கும். கரு வல்லாரை என்ற ஓரினம் மலைப்பாங்கான இடங்களிங் வளர்கின்றன. கொடிமற்றும் விதைகளில் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.

மருத்துவப்பயன்கள் -: உடல் தேற்றி, உரமாக்கி, சிறுநீர் பெருக்கி, வெப்பமுண்டாக்கி, ருது உண்டாக்கி. வாதம், வாய்வு, அண்டவீக்கம், யானைக்கால், குட்டம், நெரிகட்டி, கண்டமாலை, மேகப்புண், பைத்தியம், சூதக் கட்டு, மூளைவளர்ச்சிக்கும், சுறுசுறுப்பிற்கும் ஏற்றது.

முற்றிய வல்லாரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து இதில் காலை, மாலை 5 கிராம் அளவு சாப்பிட்டு வர வேண்டும். 48-96 நாள் சாப்பிடவும். மேலே கூறப்பட்ட எல்லா நோய்களும் குணமாகும். உடல் நோய் எதிர்ப்பாற்றல் பெறும். ஒரு வருசம் சாப்பிட்டால் நரை, திரை மாறும்.

வல்லாரை+ தூதுவிளை இரண்டையும் சம அளவில் இடித்துப் பிழிந்த சாற்றை 5 மி.லி. சாப்பிடவும். நோய்க் கேற்றவாறு காலம் நீடித்து சாப்பிட சயரோகம், இருமல் சளி குணமாகும்.

இதன் இலைச்சாறு நாளும் 5 மி.லி.காலை மாலை சாப்பிட்டு வரவும். யானைக்கால், விரை வாதம், அரையாப்பு, கண்டமால் குணமாகும். ஆமணக்கெண்ணையில் இலையை வதக்கி மேலே பற்றிடவேண்டும். கட்டிகளும் கரையும். அரைத்துப் பூச புண்களும் ஆறும்.

வல்லாரை, உத்தாமணி, மிளகு சமன் கூட்டி அரைத்துக் குண்டுமணி அளவு மாத்திரை செயுது காலை, மாலை 1 மாத்திரை வெந்நீரில் கொடுக்க அனைத்து வகையான காச்சலும் தீரும்.

கீழாநெல்லி, வல்லாரை சமன் அரைத்து சுண்டக்காயளவு காலை மட்டும் தயிரில் கொள்ள நீர் எரிச்சல் தீரும்.

வல்லாரை சாற்றில் 7 முறை ஊறவைத்து உலர்த்தியரிசித் திப்பிலி மூளைசுறுசுறுப்பாக இயங்கவும், தொண்டைக் கரகரப்பு நீங்கவும் நல்ல சாரீரம் கொடுக்கவும் பயன் படும்.

பெண்களுக்கு உதிரத்தடை ஏற்படும். மாதவிலக்கு தள்ளிப்போகும். இதனால் இடுப்பு, அடிவயிறு கடுமையாக வலிக்கும். இதற்கு வல்லாரை+உத்தாமணி இலையை சம அளவில் அரைத்து 20-30 கிராம் அளவு காலை, மாலை நான்கு நாள் சாப்பிட வேண்டும். குணமாகும். உடன் வலக்கேற்படும்.

வல்லாரயை நிழலில் இலர்த்தி சூரணம் செய்து கொள்ளவும். பரங்கிச் சக்கையையும் இதே போல் சூரணம் செய்து, இரண்டையும் சம அளவில் சேர்த்து 5-10 கிராம் காலை, மாலை பசும் வெண்ணெயில் சாப்பிட வேண்டும். நோய்க்கேற்ப 6-12 மாதம் சாப்பிட வேண்டும். மோர் பாலில் தான் உணவு சாப்பிட வேண்டும். புளி, காரம் இனிப்புக் கூடாது. புலால், புகை, மது கூடாது. குட்டம் குணமாகிவிடும்.
Via இன்று ஒரு தகவல்(பக்கம்)