மருத்துவ பழமொழிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:02 AM | Best Blogger Tips

 No photo description available.

மருத்துவ பழமொழிகள்:
 
அசைவம்/சைவம்
 
🌿1) கோழைக்கு எதிர் தூதுவளை... நம் குடும்பத்தின் நன்மைக்கு துளசி இலை.

 
🌿2) வாதத்தை அடக்கும் முடக்கத்தான்.. நல் வாழ்வுக்கு வேண்டுமே முருங்கைதான்.
 
🌿3) கண்ணுக்கு நன்மை செய்யும் பொன்னாங்கண்ணி. மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் கீழாநெல்லி.
 
🌿4) குடல் புண்ணை ஆற்றிடும் மணத்தக்காளி.. சிறுநீரைப் பெருக்கிடும் சிறுகீரை.
 
🌿5) கோழையை இளக்கும் குப்பைமேனிச் சாறு.
 
🌿6) அரணைக் கடியை ஆற்றும் சிறுகுறிஞ்சான்.
 
🌿7) காசநோய்க்கு கண்கண்ட வெந்தயக்கீரை.
 
🌱8) ஆசன வெடிப்புக்குத் துத்திக்கீரை.
 மருத்துவ பழமொழிகள்:- 🌿1) கோழைக்கு எதிர் தூதுவளை... நம் குடும்பத்தின்  நன்மைக்கு துளசி இலை. 🌿2) வாதத்தை அடக்கும் முடக்கத்தான்.. நல் வாழ்வுக்கு ...
🌿9) தொண்டை, காது, சுவாச நோய்களுக்குத் தூதுவளைக்கீரை.
 
🌿10) வெங்காயம் உண்போர்க்குத் தங்காயம் பழுதில்லை.
 
🌿11) கிழங்குகளில் கருணையன்றி வேறொன்றும் புசியாதே.
 
🌿12) நெஞ்சில் கபம் போம், நிறை இருமி நோயும் போம்.
 
விஞ்சு வாதத்தின் விளைவு போம்.
 
🌿13) நன்னாரி மேனியைப் பொன்னாக்கும்.
 
🌿14) விடா சுரத்திற்கு விஷ்ணுக் கரந்தை.
 
🌿15) விஷத்தைக் குடித்தவன் மிளகு நீர் குடிக்க வேண்டும்.
 
🌿16) ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும்.
 
🌿17) வில்வம் பித்தம் தீர்க்கும்.
 
🌿18) காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலை கடுக்காய் வாழ்வை வளமாக்கும் .
 
🌿19) அனைத்து வியாதிக்கும் அருகம்புல் சாறு.
இவ்வாறு மனித உடம்பைத் தாக்கும் 
 
நோய்களையும் மருத்துவரிடம் செல்லாமல், அந்நோயைத் தீர்க்க எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகளையும் மிகத் தெளிவாக எடுத்தியம்புகின்றன இப் பழமொழிகள்... 
 
படித்தால் மட்டும் போதாது பயன்படுத்தி பலன் பெறுங்கள் , மூலிகைவளம் என்பது இறைவனின் அருட்கொடைகளில் ஒன்று...
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

 

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 


  
🌷 🌷🌷 🌷