நன்றி மறவாத குணம்,
பண்புகளில் உயர்வானது.
உண்மையின் எடை அதிகம்
அதனால் அதை.
சுமப்பவர்களின்
எண்ணிக்கை மிக குறைவு.
கெட்ட வழியில் செல்வோரை
திருத்துபவர்களை விட.
அதனை ஊக்குவிப்பவர்கள்
அதிகமாகிவிட்டனர்.
உங்களை நீங்களே
மதித்துக்கொள்வது
ஆணவம்.
பிறர் உங்களை
மதிப்பது பெருமை.
தேடிக் கொண்டே
வாழாதே....
வாழ்ந்து கொண்டே
தேடு ..
இதில் தான்
வாழ்க்கை
பயணமாகிறது..
அதிகாரம் என்ற பெயரில் உனது திறமைகளை
தடை செய்யும்போது...
சுதந்திரமும்
அடிமையாகிறது.
எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சம்பாதித்த பணத்தை அனுபவிக்காமலே மாண்டு போகிறார்கள்.
சாம்பாதித்ததை செலவு செய்த காலம் போய், முதலிலேயே செலவு செய்து விட்டு அதை அடைக்க சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம்.
ஆடத் தெரியாத மயில்கள் இல்லை, கூவத் தெரியாத குயில்கள் இல்லை,
நீந்த தெரியாத மீன்கள் இல்லை,
ஓடத் தெரியாத மான்கள் இல்லை, ஆனால்,
வாழத் தெரியாத மனிதன் இருக்கிறான். வாழத் தெரியாமலேயே மாண்டு விடுகிறான்.
பழிதீர்க்கும் மனப்பான்மை நெருப்பைப் போல நெஞ்சை எரிக்கும்..
மன்னிக்கும் மனபக்குவம் நீரைப் போல நெஞ்சை குளிர்விக்கும்..
இருப்பது போதுமென்று நீங்கள் நினைத்தால்,
உங்களுக்கு நிம்மதி உறுதியாக இருக்கும்...
மனிதனின் விரல்கள் அனைத்தும் சமமில்லை.
ஒப்பிட்டுப் பேசும் அளவுக்கு எல்லா மனிதனும் நல்லவனும் இல்லை.
நமக்குள் வெறுமையான இடத்தில்
முடிந்த வரை சந்தோஷங்களை நிரப்பிக் கொள்வோம்.
இல்லையெனில் அந்த இடங்களில்
பிரச்சனைகள் தானாக
நிரம்பிக் கொள்ளும்
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷