இந்தியா தயாரித்த, சூப்பர்சானிக் டர்பீடோக்கள்!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:31 PM | Best Blogger Tips

 சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

இந்தியா தயாரித்த, சூப்பர்சானிக் டர்பீடோக்கள்! கதறும் சீனா, அலறும் வல்லரசுகள்!
 
இந்தியா விதவிதமான ஆயுதங்களை தயாரித்து வருகிறது. அது சீனாவை மட்டுமல்ல, அமெரிக்காவையும் அச்சுறுத்தியுள்ளது.
 
🌝🔥👀 சீனா தனது நான்காவது விமானந்தாக்கி கப்பலை கட்டி முடித்தது. அது அமெரிக்காவின் ஃபோர்டுக்கு இணையானது, நிமிட்ஸ் கிளாஸ், உலகின் சிறப்பானது,80,000 டன் எடை கொண்ட மிகப்பெரியது என்று அதுவே சொல்லிக்கொள்கிறது. வெற்றிகரமாக நடத்தப்பட்ட சூப்பர்சானிக் டார்பிடோ ஏவுகணை சோதனை ! – News18 தமிழ்
 
அதற்கு சீனா US$ 3.8 பில்லியன் செலவு செய்து அதை கட்டியுள்ளது. சீனா 
 
அமெரிக்காவைப்போல உலகை ஆளப்போகிறது என்று நம் அல்லக்கைகள் கொண்டாடுகிறார்கள்.
அதை வரவேற்க, இந்தியா பிரம்மோஸ் என்ற வகை, ஏவுகணையை, அதன் வாயிலில் இருக்கும் பிலிப்பைன்ஸுக்கு கொடுத்துள்ளது. அதன் விலை US $3.8 மில்லியன். அதில் மூன்றே முன்று ஏவுகணை போதும் சீனாவின் அந்த மிகபலமான புத்தம்புது விமானந்தாங்கி கப்பலை தாக்கி அழிக்க. 
 
சீனா, பிலிப்பைன்ஸை அளவுக்கு அதிகமாக அசிங்கப்படுத்தி வந்த நிலையில் பிலிப்பைன்ஸுக்கு அதை நாம் விற்றுள்ளோம். அதாவது இந்தியா பிலிப்பைன்ஸ் செலவில் சீனாவிற்கு சூனியம். May be an image of 1 person, beard, scarf, glasses and overcoat
 
சீனாவின் ஆதரவாளர்கள் அடுத்த வல்லரசு அதுதான் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு உள்ளார்கள். ஆனால் அவர்கள் நம் மக்களை நம்பவைக்கும் அளவிற்கு நமக்கு அதுபற்றி தெரியாததால். அதனால் கொஞ்சம் விரிவாக, கொஞ்சம் வரலாற்றோடு இந்தியன் என்ற பெருமையோடு பகிர்கிறேன். 
 
பிரிடிஷ் காலத்தில் டாங்குகளே போர்களை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது. பின்னால அது போர்விமானம் என்று அதன் பரிமாணம் மாறியது. ஆனால் அது கனமான ஆயுதங்களை நீண்டதூரம் சென்று தாக்கக்கூடிய திறமை அதனிடம் இல்லை. 
 
அதனால் C-2B வகை நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய பெரிய விமானங்களை தயாரித்தார்கள். அது பெரியளவிலான ஆயுதங்களை நீண்டதூரம் பறந்து சென்று, தாக்கிவிட்டு, திரும்பிவரும் திறன் கொண்டது. அது சில டிகேடுகள் கோலோச்சியது. 
 நவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை: வெற்றிகரமாக பரிசோதனை | BrahMos  supersonic cruise missile, with enhanced capability, successfully test -  hindutamil.in
ஆனால் சிறிய வகை விமானங்கள் அதைவிட வேகமாக பறக்கக்கூடியதால், அதை தற்காத்துக்கொள்ள, அதனிடம் மிஸைல் அமைப்புகளை கூட்டினார்கள். இருந்தாலும், இன்று நம்மிடம் இருக்கும் பிரம்மோஸ் வகை ஏவ்கணைகளை அதனால் தடுக்க முடியாது என்பது அதன் ஆதிக்கத்தை கேள்விக் குறியாக்கி, வரலாறு ஆக்கிவிட்டது.
 
ஆனால் நீண்டகாலமாக உலகத்தை ஆளுமை செய்யும் திறன் கப்பற்படைகளுக்குத்தான் இருந்தது. அதை முதன் முதலில் உலகளவில் செய்யாவிட்டாலும், தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் தனது கப்பல் படைகளால் ஆதிக்கம் செலுத்தியது சோழர்களே!
 
அதன் பின்னர் பலமான போர்க்கப்பல்கள் தாம் உலகை ஆளும் திறமையை வல்லரசை தீர்மானித்தது. அதை மிகப்பெரிய அளவில் பயன்படுத்தியது பிரிடிஷ், அதன் மூலம் உலகத்தையே அதன் காலனியின் ஆதிக்கத்துக்கு கொண்டுவந்தது. 
 
குட்டி தீவுகளான கிரேட் பிரிட்டன் மட்டுமல்ல, அதை டச்சு, போர்ச்சுகீசியர்களும் பெருமளவில் செய்தார்கள். ஆனால் அந்தளவிற்கு ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. 
 
அது தன் ஆதிக்கத்தில் கொண்டுவந்த நாடுகளை தன் வசம் மீட்டு வைத்திருக்க, நீண்டதூரம் பயணிக்க முடியாததால் ஆங்காங்கே தீவுகளை பிடித்து அதன் படைகளை குவித்தன வல்லரசுகள். ஆனால் அது மிக அதிகமான செலவையும், அதை பராமரிப்பதும் கடினமாகியது. மேலும் அந்த தீவுகள் பெரும் புயலில் பேரழிவை சந்திக்கவேண்டி இருந்தது. 
 
 
அதனால் 18 ஆம் நூற்றாண்டிலேயே மிதக்கும் தீவுகள் என்று சொல்லப்பட்ட, விமானந்தாங்கி கப்பலை சோதனை ரீதியில் வெற்றிகரமாக கட்டியது அமெரிக்கா. அதன் பின்னர் நீண்ட தூரம் பயணிக்க பெரிய விமானந்தாங்கி கப்பல்களையும், அதை பாதுகாக்க பல அடுக்கு பாதுகாப்பு போர்க்கப்பல்களையும் கட்டியது. அதில் மிகப்பெரியது நிமிட்ஸ் கிளாஸ் விமானந்தாங்கி கப்பல்கள். 
 
அமெரிக்காவிடம் 11 விமானாந்தாங்கி கப்பல்கள் உள்ளது. அதன் மூலம் அந்த ஒரு படையை வைத்தே சாதாரணமான ஒரு நாட்டை தாக்கி அழிக்கவோ, அல்லது பிடிக்கவோ முடியும். அதனால்தான் அமெரிக்கா உலக வல்லரசாகி, உலகம் முழுவதும் கோலோச்சியது. 
 
ஆனால் ரஷ்யாவிடம் ஒரே ஒரு விமானந்தாங்கி கப்பல்தான் உள்ளது. மாறாக அதனிடம் மிக வலுவான நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளது. அது மேற்சொன்ன மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பலையே அழிக்கக்கூடியது.
 
இந்தியா பாகிஸ்தான் போரில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்காவும், பிரிடிஷும் இந்தியாவை இரண்டே இரண்டு விமானந்தாங்கி கப்பலால் சுற்றி வளைத்துவிட்டது. இந்தியாவை மீண்டும் தங்கள் கைக்குள் கொண்டுவந்துவிட முடியும் என்ற கனவுடன் அது அரபிக்கடலிலும், வங்காள விரிகுடாவிலும் நுழைந்துவிட்டது.
 
எல்லாம் முடிந்துவிட்டது என்ற நிலையில், ரஷ்யாவின் நீர்மூழ்கி கப்பல்கள் இந்தியாவிற்கு ஆதரவாக அங்கே வந்துவிட்டதை அந்த நாடுகள் உணரவில்லை. அங்கிருந்து திரும்பி போகாவிட்டால், மொத்த விமானந்தாங்கி கப்பற்படையையும் தாக்கி அழிப்போம் என்று ரஷ்யா கர்ஜித்தது. 
 
அதனால் இரண்டு பெரிய விமானந்தாங்கி கப்பற்படைகளும் சுவடு தெரியாமல் ஓடிய வரலாறை இன்றுவரை பல அமெரிக்கர்களுக்கு மட்டுமல்ல, இந்தியர்களுக்குமே தெரியாது!
அடுத்த வல்லரசாக துடிக்கும் சீனா, பெரிய விமானந்தாங்கி கப்பலை கட்டிக்கொண்டுள்ளது. அதற்கென சொந்த மூளை கிடையாது, அதனால் அது அமெரிக்காவின் நூறாண்டு பழைய வழியையே பின்பற்றுகிறது. 
 
அது சமீபத்தில் தனது நான்காவது மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பலை கட்டி முடித்துள்ளது. அந்த விமானந்தாங்கி கப்பல்கள், நீர்மூழ்கி கப்பலிடம் இருந்து தற்காத்துக்கொள்ளும் பாதுகாப்பு கொண்டவை.
 
ஆனால் இந்தியாவின் பிரம்மோஸுக்கு அதனால்.பதில் சொல்ல முடியாது. அந்த நான்கு மிகப்பெரிய கப்பலை அழிக்க, 12 பிரம்மோஸ் போதும் அதை முற்றிலும் தாக்கி அழிக்க முடியும். அதுவும் அதை தரை, கடல், வான் என்று மூன்று நிலைகளில் இருந்தும் அதை ஏவ முடியும். 
 
பிலிப்பைன்ஸ் என்பது பல தீவுகளை கொண்ட சீனாவிற்கு அருகில் தென் சீனக் கடலில் உள்ள ஒரு குட்டி நாடு. அதை சீனா தன்னிடம் இருந்த வலுவான கப்பற்படையை வைத்து, கொடுமைபடுத்தி வந்தது. அதற்கு அமெரிக்கா பாதுகாப்பு கொடுக்கிறது என்றாலும், அதனால் அதை சீனாவை நேரடியாக சமாளிக்க முடியவில்லை. 
 
இந்த நிலையில் இந்தியாவிடம் இருந்து பிலிப்பைன்ஸ் அதன் வலிமைக்கு மீறி செலவு செய்து பிரம்மோஸ் வகை ஏவுகனையை வாங்கியுள்ளது. அதை வைத்து சீனாவின் மிகப்பலமான விமாந்தாங்கி கப்பலை தாக்கி மூழ்கடிக்க முடியும். அதை நிலம், நீர், ஆகாயம் என்று எல்லா நிலைகளில் இருந்தும் ஏவ முடியும் என்பதால் பல தீவுகளை கொண்ட பிலிப்பைன்ஸ் அதை எங்கே இருந்து தாக்கப்போகிறது என்று சீனாவிற்கு தெரியாது!
 
இன்னும் சொல்லப்போனால் அதை சீனாவிடம் நான், இத்தனை மணிக்கு பிரம்மோஸை ஏவுகிறேன் என்று நேரம் காலம் குறித்து அதை ஏவினாலும் கூட, சீனாவால் அதை தடுக்க முடியாது. சீனாவால் மட்டுமல்ல, அமெரிக்காவல் கூட முடியாது என்பதுதான் ஹைலைட்டே!
அதனால் சீனா இப்போதைக்கு தனது நான்கு விமானந்தாங்கி கப்பலை ஒரே இடத்தில் வைக்க முடியாது... 
 
அதுமட்டுமா, இந்தியா இப்போது சூப்பர்சானிக் டர்பீடோக்களை தயாரித்துள்ளது. டர்பீடோக்கள் என்பது நீருக்குள் செல்லும் சிறியவகை ஏவுகனைகள். அது கப்பல்கள் முதல் நீர்மூழ்கி வரை தாக்கி அழிக்கக்கூடியவை. ஆனால் அதன் தாக்கும் தூரம் என்பது 350 கிமீ தூரம் வரை மட்டுமே.. அப்படியெனில் கப்பல்கள் அருகில் சென்றுதான் அதை தாக்க முடியும், அது ஆபத்தானது! 
 
இந்த நிலையில் சமீபத்தில் இந்தியா சூப்பர்சோனிக் டர்பீடோக்களை தயாரித்துள்ளது. அதாவது நீண்ட தூரம் செல்லும் ஏவுகணைகளில் இருந்து இந்த டர்பீடோக்களை வைத்து தாக்கக்கூடிய காம்போ வகை என்பதால், இந்தியா வங்காள விரிகுடாவில் இருந்தே தென் சீனக்கடலில் இருக்கும் சீனாவின் விமானந்தாங்கி கப்பலையோ அல்லது மேற்பரப்பில் உள்ள அதன் நீர்மூழ்கி கப்பலையோ அழிக்க முடியும். 
 
பில்லியன்களில், ட்ரில்லியன்களில் சீனா அதன் மிகப்பெரிய கப்பற்படையை கட்டி, உலக வல்லரசாகிவிடலாம் என்ற கனவில் இருந்தது. ஆனால் இந்தியா அதற்கு மில்லியன்களில் முடிவுரை எழுதும் வல்லமையை பெற்றபின்னர், சீனவிற்கு உலகத்தரம் வாய்ந்த கப்பற்படை, இன்று வாழ்வே மாயம் என்று பாடிக்கொண்டு இருக்கிறது!
 
என்னடா சீனாவிற்கு வந்த சோதனை? 
 
ஆனால் சீனாதான் அடுத்த வல்லாசு, இந்தியாவால் அதற்கு நகக்கீரலைக்கூட கொடுக்க முடியாது என்று பேசிய இந்தியாவில் இருக்கும் அதன் கைக்கூலிகளும், கொத்தடிமைகளும்தான் அலறப்போகிறார்கள். அதனால் மறக்காமல் வாழ்த்துச்சொல்லி அவர்களுக்கு பகிரவும்! 👀
💗
🐶
நன்றி Indhea
நன்றி இணையம்