பெண் பிறந்துவிட்டாள்...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:42 | Best Blogger Tips



கல்யாணம் ஆன கணவன் மனைவி இடையே ஓரு ஓப்பந்தம்...

இன்று யார் வந்தாலும் கதவைத் திறக்கக்கூடாது என்று முடிவெடுத்தனர்...

அன்றே கணவனுடைய அம்மா, அப்பா வந்தனர் இருவரும் அவர்கள் வருவதைப் பார்த்தனர்... இருவரும் ஓருவரை ஓருவர் பார்த்துக் கொண்டனர்.. கணவனுக்கு கதவைத் திறக்க வேண்டும் என்ற ஆசை... ஆனால் ,



அக்ரிமெண்ட் போட்டது நினைவுக்கு வந்தது... அதனால் கதவைத் திறக்கவில்லை அவன்.. அவர்கள் யாரும் இல்லை என்று நினைத்துப் போய் விட்டனர்.. கொஞ்ச நேரம் கழித்து மனைவியின் அம்மா அப்பா வந்தனர் கதவைத் தட்டினார்கள் இருவரும் ஓருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் மனைவிக்கு கண்கள் கண்ணீரால் குளமானது. என்னால் கதவைத் திறக்காமல் இருக்க முடியாது என்று சொல்லிக் கதவைத் திறந்தாள் ஆனால் கணவன் ஒன்றும் சொல்லவில்லை.. வருஷங்கள் உருண்டோடின...

அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைப் பிறந்தது.. மூன்றாவதாகப் பெண் குழந்தைப் பிறந்தது கணவன் பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் பெரிய அளவில் செலவு செய்து அனைவருக்கும் பார்ட்டி கொடுத்துக் கொண்டாடினான்.. அதற்கு மனைவி நமக்கு இரண்டு ஆண் குழந்தை பிறந்தப் போது நீங்கள் இவ்வளவு பெரிய அளவில் கொண்டாடவில்லையே ஏன் பெண் குழந்தைப் பிறந்தவுடன் இவ்வளவு பெரியப் பார்ட்டி கொடுக்கிறீங்க என்றுக் கேட்டாள்...

அதற்குக் கணவன் ரொம்ப நிதானமாக ஏனெனில் பிற்காலத்தில் எனக்காக கதவைத் திறக்க ஓரு பெண் பிறந்துவிட்டாள்...

என்றான் கர்வத்துடன்...

நான் படித்ததில் பிடித்தது