தெய்வீகம் என்னும் போதை அப்படி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 10:42 | Best Blogger Tips

 


ஒரு சர்க்கஸ் கூடாரத்திலிருந்து ஒரு சிங்கம் தப்பித்துவிட்டது.

பிடிப்பதற்கு எல்லோரும் ஆயத்தமானார்கள்.


மாஸ்டர் சொன்னார்.சிங்கம் மிக ஆபத்தானது.

ஆகவே அதை நெருங்க அதிக தைரியம் தேவை எனவே எல்லோரும் சிறிது மதுவை அருந்திகொள்ளுங்கள்.


எல்லோரும் மது அருந்த முல்லா மட்டும் மறுத்துவிட்டார்.


முல்லா சொன்னார் எனக்கு மது தேவையில்லை.

ஏனென்றால் சில அசாத்தியமான நேரத்தில் பயம் தேவைப்படுகிறது.


சிங்கத்தை பிடிப்பதைவிட நான் சிங்கத்திடம் பிடிபடாதிருக்க பயம் தேவைப்படுகிறது.


இது சரியான வழிதான்.


ஏனென்றால் மது உங்களுக்கு அளவுக்கு அதிகமான தைரியத்தை கொடுக்கிறது.

அதனாலேயே பல இடங்களில் அபாயத்தில் சிக்கிக்கொள்கிறீர்கள்.


ஆனால் அதை விட ஒரு சிறந்த போதை உள்ளது.


அது தெய்வீகம் என்னும் போதை.


பலர் மது அருந்துவதே இந்த சமுதாயம் என்னும் பைத்தியக்காரத்தனத்தை சமாளிக்க முடியாமல் போவதால்தான்.


ஆனால் தெய்வீகம் என்னும் போதை அப்படி அல்ல.


அது இந்த சமுதாயம் உருவாக்கின குப்பை கருத்துக்கள் உங்களிடம் நெருங்கவிடாமல் செய்கிறது.


#ஓஷோ




நன்றி இணையம்