எதுவென்று முடிவுசெய்யுங்கள்...

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:58 | Best Blogger Tips

 


பத்தாவது முறையாக கீழே விழுந்தவனை பார்த்து.. பூமி முத்தமிட்டு சொன்னது "

#நீ_ஒன்பது_முறை_எழுந்தவன்" என்று..!!

தோல்வியும், துன்பமும் தனியே வருவதில்லை..!கூடவே 'வலிமையையும்' அழைத்து வருகிறது..!!

காயப்படுத்த பலர் இருந்தாலும்.. மருந்தாக சிலர் இருப்பதாலேயே... நம் வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறது..!!

ஆகச்சிறந்த பழிவாங்கல் என்பது எதிரியையும், துரோகியையும்.. கூட வச்சிட்டே நாம வாழ்ந்து காட்டுறது தான்..!!

அடுத்தவரின் வளர்ச்சியை விமர்சிக்கும் நேரத்தை உங்கள் வளர்ச்சிக்காக செலவிட்டு பாருங்கள். அவரை விட உயர்ந்து நிற்பீர்..!!



எனக்கு, உண்மையான நண்பன் யாருமே ! இல்லை என, சொல்லாதீர்கள்...!நாம், யாருக்காகாவது உண்மையாக, இருந்ததுண்டா ! என்பதை, மட்டும் யோசியுங்கள்...!!!

தன் வால் கொண்டு வலை நண்டு பிடிப்பதில் குள்ளநரி கைதேர்ந்தது. தன் வாய் கொண்டு பிறர் வாழ்க்கையை கெடுப்பதில் மனிதர்கள் கைதேர்ந்தவர்கள்.

பால் மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது. பாத்திரமும் சுத்தமாக இருந்தால் தான் பால் கெட்டுப்போகாது. அதேபோல் தான். நல்லவராக இருந்தால் மட்டும் போதாது சேர்க்கையும் சரியாக இருக்க வேண்டும்.

அழுத்தமான வரிகளை லேசான காகிதங்கள் தாங்கி விடுகின்றன....... அதை வாசிக்கும் இதயங்கள் தான் கனத்து விடுகிறது...........!!

#வாழ்க்கையில் நமக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளது..

ஒன்று உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது..!

மற்றொன்று ஏற்றுக் கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது..!!

எதுவென்று முடிவுசெய்யுங்கள்...

#வெற்றியை_பயிர்செய்யுங்கள்..!!

🌺🌺#வாழ்க_வளமுடன்.🌺🌺

 


நன்றி இணையம்