16 வார்த்தை ராமாயணம் !🙋🌄

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:30 | Best Blogger Tips


"🌷பிறந்தார்
🌷வளர்ந்தார்
🌷கற்றார்
🌷பெற்றார்
🌷மணந்தார்
🌷சிறந்தார்
🌷துறந்தார்
🌷நெகிழ்ந்தார்
🌷இழந்தார்
🌷அலைந்தார்
🌷அழித்தார்
🌷செழித்தார்
🌷துறந்தார்
🌷துவண்டார்
🌷ஆண்டார்
🌷மீண்டார்"

🙋விளக்கம்:🙋
************

🌷1. பிறந்தார்: ஸ்ரீராமர் கௌசல்யா தேவிக்கு தசரதரின் ஏக்கத்தைப் போக்கும்படியாக பிறந்தது.

🌷2.வளர்ந்தார்: தசரதர் கௌசல்யை சுமித்திரை கைகேயி ஆகியோர்
அன்பிலே வளர்ந்தது

🌷3.கற்றார்: வஷிஷ்டரிடம் சகல வேதங்கள் ஞானங்கள் கலைகள் முறைகள் யாவும் கற்றது.

🌷4.பெற்றார்: வஷிஷ்டரிடம் கற்ற துனுர்வேதத்தைக் கொண்டு விஸ்வாமித்ரர் யாகம் காத்து விஸ்வாமித்ரரை மகிழ்வித்து பல திவ்ய அஸ்திரங்களை பெற்றது.

🌷5.மணந்தார்: ஜனகபுரியில் சிவனாரின் வில்லை உடைத்து ஜனகர்-சுனயனாவின் ஏக்கத்தை தகர்த்து மண்ணின் மகளாம் சீதையை மணந்தது.

🌷6.சிறந்தார்: அயோத்யாவின் மக்கள் மற்றும் கோசல தேசத்தினர் அனைவர் மனதிலும் தன் உயரிய குணங்களால் இடம் பிடித்து சிறந்து விளங்கியது.

🌷7.துறந்தார்: கைகேயியின் சொல்லேற்று தன்னுடையதாக அறிவிக்கப்பட்ட ராஜ்ஜியத்தை துறந்து வனவாழ்வை ஏற்றது.

🌷8. நெகிழ்ந்தார்:

❣️*அயோத்தியா நகரின் மக்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்தது.

❣️*குகனார் அன்பில் நெகிழ்ந்தது.

❣️*பரத்வாஜர் அன்பில் நெகிழ்ந்தது.

❣️*பரதரின் அப்பழுக்கற்ற உள்ளத்தையும் தன் மீது அன்பினையும் தன்னலமற்ற குணத்தையும் தியாகத்தையும் விசுவாசத்தையும் கண்டு நெகிழ்ந்தது.

❣️*அத்ரி-அனுசூயை முதல் சபரி வரையிலான சகல ஞானிகள் மற்றும் பக்தர்களின் அன்பிலே நெகிழ்ந்தது.

❣️*சுக்ரீவர் படையினரின் சேவையில் நெகிழ்ந்தது.

❣️*விபீஷணரின் சரணாகதியில் நெகிழ்ந்தது.

❣️*எல்லாவற்றுக்கும் மேலாக ஆஞ்சநேயரின் சேவையைக் கண்டு, 'கைம்மாறு செய்ய என்னிடம் எதுவுமில்லை. என்னால் முடிந்தது என்னையே தருவது' எனக் கூறி ஆஞ்சநேயரை அணைத்துக் கொண்டது.

🌷9.இழந்தார்: மாய மானின் பின் சென்று அன்னை சீதையை தொலைத்தது.

🌷10.அலைந்தார்: அன்னை சீதையை தேடி அலைந்தது.

🌷11.அழித்தார்: இலங்கையை அழித்தது.

🌷12.செழித்தார்:

❣️*சீதையை மீண்டும் பெற்று அகமும் முகமும் செழித்தது.

❣️*ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்று செல்வச் செழிப்பான வாழ்க்கைக்கு திரும்பியது.

🌷13.துறந்தார்:

அன்னை சீதையின் தூய்மையை மக்களில் சிலர் புரிந்து கொள்ளாத நிலையில் மக்களின் குழப்பத்தை நீக்குவதற்காக அன்னை சீதையை துறந்தது.

🌷13.துவண்டார்:

அன்னை சீதையை பிரிய நேர்ந்தது சீராமருக்கு மிகுந்த வலியை தந்தது. அந்த வலி அவரை சில காலம் மனதளவில் துவள செய்தது.

🌷15.ஆண்டார்:

என்ன தான் மனதினுள் காயம் இருந்தாலும் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் குறைவற செய்து மக்கள் உடலால், மனதால் ஆரோக்கியமானவர்களாகவும் செல்வச் செழிப்புடன் வாழும்படியும் பார்த்துக் கொண்டது.

🌷16.மீண்டார்:

பதினோறாயிரம் ஆண்டுகள் நல்லாட்சி செய்து மக்கள் அனைவரையும் ராமராகவும் சீதையாகவும் மாற்றி தன்னுடனே அழைத்துக் கொண்டு தன் இருப்பிடமான வைகுண்டம் மீண்டது".



❣️ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !❣️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏