உங்கள் ராசிப்படி அதிர்ஷ்டத்தை தரும் தெய்வம் !!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:11 | Best Blogger Tips
உங்கள் ராசிப்படி அதிர்ஷ்டத்தை தரும் தெய்வம் க்கான பட முடிவு

உங்கள் ராசிப்படி அதிர்ஷ்டத்தை தரும் தெய்வம் !!
உங்கள் ராசிக்கு ஏற்ற அதிர்ஷ்ட தெய்வங்கள்...!!
ஒருவர் பிறக்கும் போது சூரியன் இருக்கும் நிலையைக் கொண்டு ஒருவரின் ராசி என்னவென்று சொல்லப்படும். ஒருவர் தனது ராசிக்கு ஏற்ற கடவுள்களை வணங்கி வந்தால், நினைக்கும் காரியம் வெற்றி பெறும்.

மேஷம்
மேஷ ராசியை ஆளும் கிரகம் செவ்வாய். மேஷ ராசிக்காரர்கள் தனது பலத்தை அதிகரிக்க, சிவனை வணங்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசியை ஆளும் கிரகம் சுக்கிரன். ரிஷப ராசிக்காரர்கள், லட்சுமி தேவியை வணங்க, அதிர்ஷ்டம் கொட்டுவதோடு, நேர்மறை ஆற்றலும் அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசியை ஆளும் கிரகம் புதன். மிதுன ராசிக்காரர்கள் ஸ்ரீமன் நாராயணனை வணங்க வேண்டும். வாழ்வில் எப்போதும் வெற்றிக் கிட்டும்.
கடகம்
கடக ராசியை ஆளும் கிரகம் சந்திரன். அமைதி மற்றும் இரக்கத்தின் உருவகமான கௌரி அம்மனை கடக ராசிக்காரர்கள் மிகுந்த பக்தியுடன் வணங்கினால், அனைத்து ஆசைகளும் நிறைவேறும்.
சிம்மம்
சிம்ம ராசியை ஆளும் கிரகம் சூரியன். சிம்ம ராசிக்காரர்கள் சிவபெருமானை வணங்க வேண்டும். எந்நேரமும் சிவனின் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு இருந்தால், வாழ்க்கையில் நல்ல நிலையை அடையலாம்.
கன்னி
கன்னி ராசியை ஆளும் கிரகம் புதன். இவர்கள் ஸ்ரீமன் நாராயணனை வணங்க வேண்டும். இதனால் அனைத்திலும் வெற்றிகள் மற்றும் வாழ்வில் அதிர்ஷ்டம் கொட்டும்.
துலாம்
துலாம் ராசியை ஆளும் கிரகம் சுக்கிரன். இவர்கள் லட்சுமி தேவியை வணங்க வேண்டும். இதனால் அவருக்கு அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் கொட்டும்.
விருச்சிகம்
செவ்வாய் கிரகம் தான் விருச்சிக ராசியை ஆள்கிறது. இவர்கள் சிவனை தொழுது வந்தால், செவ்வாய் கிரகத்தின் வலிமையை அதிகரிக்கலாம்.
தனுசு
தனுசு ராசியை ஆளும் கிரகம் குரு ஆகும். இவர்கள் தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும். இதனால் பயனுள்ள விளைவுகளைப் பெறலாம்.
மகரம்
மகர ராசியை ஆளும் கிரகம் சனி. மகர ராசிக்காரர்கள் சிவபெருமானை வணங்கினால் அனைத்து வளங்களையும் பெறலாம்.
கும்பம்
கும்ப ராசியை ஆளும் கிரகமும் சனி. இவர்கள் சிவபெருமானை வணங்க வேண்டும். அதிலும் தூய மனதுடன் சிவனை தரிசித்து வந்தால், எதிலும் நன்மை கிட்டும்.
மீனம்
மீன ராசியை ஆளும் கிரகம் குரு. எனவே மீன ராசிக்காரர்கள் தட்சிணாமூர்த்தியை அன்றாடம் வணங்கி வர, நல்ல பலன் கிடைக்கும்.
Top of Form

நன்றி இணையம்