வாழை இலை

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:32 | Best Blogger Tips
வாழை இலை க்கான பட முடிவுதொடர்புடைய படம்

*கவுண்டமணியைப் பார்த்து செந்தில் கேட்பதைப் போல , நேற்று ஒரு நண்பர் என்னைப் பார்த்து கேட்டார்

*“
வாழை இலையின் நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே .! அந்தக் கோட்டைப் போட்டது யார்..?”*
.
*
என்ன பதில் சொல்வது இதற்கு..?*
.
*
லாஜிக்படி பார்த்தால் , எல்லா இலைகளையும் போலத்தான் வாழை இலையும் ..!*
*
எனவே நண்பரின் கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாமல் ,"நீங்களே சொல்லுங்க ..!"என்றேன்.*
.
*
நண்பர் இதற்கு ஒரு சுவையான கதையைச் சொன்னார்


*# "
புராண காலங்களில் வாழை இலையின் நடுவில் இவ்வளவு பெரிய கோடு கிடையாதாம்..!*
*
இராமாயண காலத்தில் ....*
*
ஒரு முறை ராமன் சாப்பிடும்போது அனுமனையும் தன்னுடன் ஒரே இலையில் சாப்பிடச் சொன்னாராம்*
*
இருவரும் எதிர் எதிராக அமர்ந்திருந்தார்களாம்*
.
*
அப்போதுதான் அணில் முதுகில் கோடு போட்ட மாதிரி*
*
வாழை இலையின் நடுவிலும் தனது கையால் ஒரு பெரிய கோட்டைக் கிழித்தாராம் ராமன்.*
.
*
ராமர் இருந்த பக்கத்தில் மனிதர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளும்*
*
அனுமன் இருந்த எதிர் பகுதியில் குரங்குகள் விரும்பிச் சாப்பிடும் காய்கறிகளும் பரிமாறப்பட்டதாம்*.
*
அப்படி பரிமாறிய அந்தப் பழக்கம்தான் இன்னும் நம்மிடையே தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறதாம்*
*# கதை சுவையாகத்தான் இருக்கிறது...!*
.
*நல்லது... வாழை இலை பற்றி இன்னும் சில விஷயங்கள் 


*
வாழை இலையில் சாப்பிடும் எல்லோருக்கும் ,சாப்பிடும் முன் ... ஒரு நொடிக் குழப்பம் ஒன்று வந்தே தீரும்.*
.
*“
பரிமாறும்போது இலையை எப்படிப் போடுவது..?*
*
இலையின் நுனி இடது பக்கமாக வர வேண்டுமா..? வலது பக்கமா..?*
.
*
சிம்பிள் ..!*
.
*
இலையின் நுனி , சாப்பிட அமர்ந்திருப்பவருக்கு இடது கை பக்கமாக வருகிற மாதிரி போட வேண்டும்.*
.
*
ஏன்..?*
.
*
நாம் சாப்பிடும்போது , வலது கையால் பிசைந்து சாப்பிடுவதால்*
*
இலையின் வலது பக்கம் அதிக இடம் தேவை..!*
.
*
சரி ...உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம்*
*
இலையின் குறுகலான இடது பக்கத்தில் வைக்கிறோமே .. அது ஏன்..?*
.
*
உப்பு, ஊறுகாய், இனிப்பு ..* *இதையெல்லாம் ஓவராக சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது*
*
கொஞ்சமாகத்தான் சாப்பிட வேண்டும். அதனால்தான் இலையின் குறுகலான பாகத்தில் இட ஒதுக்கீடு !*
.
*
சாதம் , காய் கறிகள் ...* *இவற்றையெல்லாம் நிறைய சாப்பிடலாம் .*
*
அதனால் அவற்றை இலையின் அகலமான வலது பக்கத்தில் பரிமாற வேண்டும்.*
.
*
சரி .. இலையில் முதலில் வைக்கப்படும் இனிப்பை , பலர் கடைசியாக* *சாப்பிடுகிறார்களே ..இது சரிதானா ..?*
.
*
இல்லை..!*
.
*
இலையில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது*
*
நாம் இனிப்பை எடுத்து வாயில் வைத்த அடுத்த நொடியில்... அந்த இனிப்பு , உடனடியாக உமிழ் நீருடன் கரைந்து , ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று , வயிற்றில் ஜீரண சக்திக்கு தேவையான அமிலங்களை சுரக்க செய்ய உத்தரவிடுகிறது . அதனால்தான் ஜீரணம் எளிதாக நடை பெறுகிறது.*
.
*#
அப்பப்பா ! இலையைப் போடுவதிலிருந்து , எப்படி பரிமாறுவது , எதை முதலில் சாப்பிடுவது ...*
*
எல்லாவற்றையும் முறையாக வகுத்துத் தந்திருக்கும் நம் முன்னோரை எப்படிப் பாராட்டுவது..?*
.
*
ஆனால் ....*
*
இவை எல்லாவற்றையும்*
*
ஃபாஸ்ட் புட் கலாச்சாரத்திற்கு பலி கொடுத்து விட்டு ,*
*அந்நிய கலாச்சாரத்திற்கு மாறி , அடிமைகளாகிக் கொண்டிருக்கும் நம்மை* ,
*
இனி யார் வந்து திருத்துவது..?*




 Image may contain: 1 person, smiling, sunglasses, phone and outdoor
🌴🍃 *வாழ்க வளமுடன்

நன்றி இணையம்