காத்திருக்கப் பழகு

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:38 | Best Blogger Tips


நாம் வாழ்க்கையில்,பல்வேறு கட்டங்களில்,விரும்பிக் 
காத்திருக்கப் பழகினால்நிறைவு நமதாகும்
*
பசிக்கும் வரை காத்திரு!
*
உடல்,நீர் கேட்கும் வரை காத்திரு!
*
காய்ச்சல் உடலைத் தூய்மைப்படுத்தும் வரை காத்திரு!
*
சளி வெளியேறும் வரை காத்திரு!
*
உடல் தன்னைச் சீர்படுத்தும் வரை காத்திரு!
*
பயிர் விளையும் வரை காத்திரு!
*
உலையில் அரிசி வேகும் வரை காத்திரு!
*
கனி கனியும் வரை காத்திரு!
*
எதற்கும்,காலம் கனியும் வரை காத்திரு!
*
செடி மரமாகும் வரை காத்திரு!
*
செக்குஎண்ணெயைப் பிரிக்கும் வரை காத்திரு!
*
தானியத்தின் உமி,நீங்கும் வரை காத்திரு!
*
தானியம்,கல்லில் மாவாகும் வரை காத்திரு!
*
துவையல் அம்மியில் அரைபடும் வரை காத்திரு!
*
தேவையானவை,உன் உழைப்பில் கிடைக்கும் வரை,
காத்திரு!
*
உணவு தயாராகும் வரை காத்திரு!
*
போக்குவரத்து சிக்கலில் இருந்து விடுபடும் வரை காத்திரு!
*
நண்பர்கள் பேசும் போது,அவர்கள் கூற வந்த 
கருத்துக்களை,அவர்கள் கூறி முடிக்கும் வரை காத்திரு!
*
பிறர் கோபம் தணியும் வரை காத்திரு!
*
இது உன்னுடைய வாழ்க்கை!
*
ஒட்டப்பந்தயம் அல்ல!
*
ஒடாதே!
*
நில்!
*
விழி!
*
பார்!
*
ரசி!
*
சுவை!
*
உணர்!
*
பேசு!
*
பழகு!
*
விரும்பு!
*
உன்னிடம் காத்திருப்புப் பழக்கம் இல்லாததால்,
*
உன் வாழ்க்கைமுறைக்கு சற்றும் பொருந்தாத,
*
தேவையில்லாத பொருட்களும்செய்திகளும் உன் மேல் 
திணிக்கப்படுகிறது.
*
உன் மரபணுவிற்கு,சற்றும் சம்பந்தம் இல்லாத,விச 
உணவுகள்,உன் மேல் திணிக்கப்படுகிறது.
*
எதிலும் அவசரம்!உன்னையும்உன் சந்ததியையும் 
அழிக்கும் ஆயுதம் என்பதைமறவாதே.
*
உனது அன்பிற்கும்,அக்கறைக்கும் எத்தனை உள்ளங்கள் 
காத்திருக்கின்றன என்பதைஅறிவாயா......?
*
நீ இதற்கெல்லாம் காத்திருந்தால்,
உன் உயிர்,உன்னைவிட்டுப் பிரியும் வரை காத்திருக்கும்!
*
காத்திருக்கப் பழகினால்!
*
வாழப் பழகுவாய்!!
*
வாழ்ந்து பார்!!!

நன்றி இணையம்