வாழும் ரகசியம். முடிந்தவரை கடைபிடியுங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:51 | Best Blogger Tips

அதிகாலையில் எழுபவன். இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன்.

முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன்.

மண்பானைச் சமையலை உண்பவன்.

 உணவை நன்கு மென்று உண்பவன்.

 உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன்.



வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன்.


கோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காதவன்.

 மலச்சிக்கல் இல்லாதவன்.
 

கவலைப்படாத மனிதன்.
 

நாவடக்கம் உடையவன்.
 

படுத்தவுடன் தூங்குகிறவன்.


எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும்.
 

தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவன்.
 

கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்பவன்.
 

கற்பு நெறி தவறாது வாழ்பவன்.
 

மன்னிக்கிறவன், மன்னிப்பு கேட்கிறவன்.


 ஈகை மனப்பான்மையை வளர்ப்பவன்.
 

வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவன்.


 இடது பக்கமாக படுத்து காலை நீட்டி நித்திரை செய்பவன்.


தூங்கி எழுந்ததும் காலை 2டம்ளர் சுத்தமான தண்ணீர் பருகுபவன். 


 உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்பவன்.


 வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமையுடன் வாழ்பவன்.


 10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவன்.

மேற்கண்ட முறைகளை கடைபிடிப்பவன் இவ்வுலகில் நோயின்றி வாழ்வான்.
 

 நன்றி வா்மக்கலை ஆசான்
எஸ். கோபாலகிருஷ்ணன்