மனித மூளை

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:19 | Best Blogger Tips

🌹மனித மூளையின் நூறு சதவீத செயல்பாடு சாத்தியமே. அதுதான் அட்டமா சித்திகளின் கடைசி நிலையான ஈசத்துவம்
🌴அந்த நிலையில் அனைத்தும் சாத்தியம். ஆக்கல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழிலும் சாத்தியம்
🌴ஒரே விடயத்தில் மட்டும் மனதை ஊன்றி சிந்திப்பது
🌴தாரணை என்பது விஞ்ஞானிகள் அறியாமலும், மெய்ஞானிகள் அறிந்தும் செய்வது
🌴மனம் ஒன்றுவது தாரணை
🌴மனமே அற்றது தியானம்
🌴மனம் அற்ற நிலையே தியானத்தின் இறுதி நிலை. அதாவது நிர்விகல்ப சமாதி
🌴எண்ணங்களின் தொகுப்பே மனம்.
🌴மனம் வேறு மூளை வேறு.
🌴மனம் பிரபஞ்சத்திற்கு சொந்தமானது.
🌴மூளை மனிதனுக்கு சொந்தமானது.
🌴பிரபஞ்ச மனம் மூளை என்கிற அணுத்தொகுதிகளின் வழியாக பஞ்சபூதங்களால் கட்டமைக்கப்பட்ட உடலை இயக்குகிறது.
🌴எல்லாமே ஆற்றல் பரிமாற்றம்தான்
🌴மனம் என்பது மூளையை மையமாக கொண்டு பிரபஞ்சம் முழுக்க வியாபித்து இருக்கக் கூடிய ஒன்று
🌴பிரபஞ்சத்தில் சிதறிக்கிடக்கும் எண்ணங்களை தொடர்பு கொள்ளும் மீடியமே மூளை
🌴நாம் ஒன்றைப்பற்றி சிந்திக்கும்போது மூளையில் உள்ள நியூரான்ஸ்களுக்கு மின்சக்தி சென்று அதிர தொடங்குவதால் அந்த அதிர்வு அலைகளாக வெளியே பயணிக்கும்
🌴ஒரு அணுவில் இருந்து மற்றொரு அணுவிற்கு ஆற்றலானது அலைகளாகவே பயணிக்கிறது
Top of Form