இருட்டு கடை அல்வாவோட தனி டேஸ்ட்டுக்கு இது தான் காரணம்!

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:08 | Best Blogger Tips

அல்வா என்ற பெயர் கேட்டாலே நாம் எல்லாருக்கும் நினைவுக்கு வரும் ஒரே ஊர் திருநெல்வலி தான். அதுவும் அங்கே தயாரிக்கப்படும் இருட்டு கடை அல்வாவை சாபிட்டால், அதன் சுவை உங்கள் நாவில் தங்கி விடும். அப்படி என்ன விசேஷம், இருட்டுக்கடை அல்வாவில்? ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவர் தான் இந்த இருட்டு கடை அல்வாவை துவங்கினார். அவருக்கு பின் வந்த சந்ததியினர் இதை நடத்தி வருகிறார்கள் . இந்த உலகத்தில் பல வகையான அல்வா வகைகள் இருக்கும்போது ஏன் இந்த இருட்டு கடை அல்வாவுக்கு மட்டும் அப்படி ஒரு தனி சிறப்பு ? இதற்கான காரணம், இந்த அல்வாவுக்கு தேவையான கோதுமையை இவர்கள் கையால் தான் அரைக்கிறார்கள்.

Order Tirunelveli Halwa Online and get delivered in less than 24 Hours

அது மட்டும் அல்லாமல், இந்த அல்வாவை மிஷின்களை தவிர்த்து, மேனுவல் முறைப்படி தயாரிக்கப்படுகிறது. அதனால்தான் இந்த இருட்டு கடை அல்வாவிற்கு இவ்வளவு வரவேற்ப்பு. மாலை 5.30 மணி அளவில் இந்த இருக்கு கடை அல்வா திறந்துவைக்கப்படும். வெறும் மூன்றே மணிநேரத்தில் எல்லா சரக்கும் தீர்ந்துவிடும். இதில் வரும் வருமானம் போதும் என்று நினைத்து தான் இதை செய்கிறார்கள், அதனால்தான் இவர்களை இந்த தமிழகம் இன்னும் அங்கீகரித்து கொண்டே இருக்கிறது. திருநெல்வேலி அல்வா செய்யும் முறை: தேவையான பொருட்கள்: சம்பா கோதுமை - 200 கிராம் சர்க்கரை - 750 கிராம் நெய் - 40 கிராம் பால் - 1 லிட்டர் செய்முறை: உடலுக்கு ஆரோக்யமான சம்பா ரவையை, ஒரு நாள் முன்னரே தண்ணீரில் நன்றாக ஊறவைக்கவேண்டும். சம்பா ரவை நன்றாக ஊறின பிறகு, கிரைண்டரில் நன்றாக அரைக்க வேண்டும். அதாவது நைசாக அரைக்க வேண்டும். நைசாக அரைக்க அரைக்க கோதுமை, பாலாக வர ஆரம்பிக்கும். அதை ஒரு துணியில் வடிகட்டிக் கொள்ளவும். கொஞ்சம் பெரிய வாணலியை ( அடி கனமான பாத்திரமாக இருக்கவேண்டும் ) எடுத்து அதில் 1 லிட்டர் பாலை ஊற்றி நன்கு காய வைக்க வேண்டும். இப்பொழுதான் கிளறுவது என்று ஒரு வேலை ஆரம்பம் ஆகிறது. பால் ஒரு மிதமான சூடானதும், சர்க்கரையை அதனுடன் சேர்த்து நன்கு கிளற வேண்டும். இப்படி செய்யும் பொது ஒரு வித கலவை கொதித்து, இறுகி, கெட்டியான பதத்திற்கு வரும். பிறகு அதனுடன் சுத்தமான பாலில் தயாரிக்கப்பட்ட நெய்யை அதனுடன் சேர்த்து கிளற வேண்டும். இப்படியே விடாமல் கிளறினால், அல்வா ஒரு நல்ல குங்குமச்சிவப்பில் வரும். இறுகலான பக்குவத்தில் பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும், இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரத்தி, ஆறவைத்து தங்கள் அன்புக்குரியவர்களுக்கு பரிமாறி உங்கள் அன்பை வெளிப்படுத்தி கொள்ளுங்கள். இதே மாதிரி பல வகையான அல்வா இருக்கிறது. மற்ற இனிப்பு வகைகளை விட இந்த அல்வா தயாரிக்கும்போது மட்டும் பொறுமை மற்றும் பக்குவம் மிகவும் அதிகமாக வேண்டும். அனால் இப்பொழுது இருக்கும் இந்த அவசர உலகத்தில் பொறுமையும், பக்குவத்தையும் யாரும் கடைப்பிடிபதே இல்லை. அனால் அல்வா சாப்பிடும் ஆசை எல்லாருக்கும் உள்ளது. ஆகையால் பல ஸ்வீட் கடைகளில் ஏறி இறங்கி கண்கவர் வண்ணங்களில் விற்கப்படும் இந்த அல்வாவை தேடி பிடித்து வாங்குவர். இப்படி பட்ட தரமற்ற அல்வாவை நீங்கள் உண்டால், உங்கள் உடல் நிலை பாதிக்கபடும். இதை கணக்கில் கொண்ட நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) சுத்தமான, சுவையான, சுகாதாரமான, இந்த இருட்டு கடை அல்வாவை நேர்த்தியான முறையில் தயார் செய்கிறார்கள். மண்மணம் மாறாத இந்த திருநெல்வேலி இருட்டு கடை அல்வாவை நீங்க நேடிவ்கிருஷ்.காம்' ல் (www.nativcrush.com) ஆர்டர் செய்தால், உங்கள் வீடு தேடி வரும் இந்த சுவையான இனிப்பு பண்டம். 

நன்றி
Thatstamil.com