தேநீர் – ஒரு சுவையான பானம்!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:39 | Best Blogger Tips


சுவையாக தேநீர் தயாரிப்பதும் ஒரு கலை தான். ஒரு கப் தேநீர் தயாரிக்க, அரை கப் நீரில், இரண்டு தேக்கரண்டி சர்க்கரை, ஒரு தேக்கரண்டி தேயிலை போட்டு, நன்கு கொதி வந்ததும், அத்துடன் அரை கப் பால் சேர்த்து, மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கி, வடிகட்டி அருந்தவும். சில வித்தியாசமான, சுவையான தேநீர் தயாரிக்கும் முறைகளையும் பார்ப்போம்.

மசாலா டீ:

ஏலக்காய் – 6, கிராம்பு – 6, சோம்பு – 1 தேக்கரண்டி, தனியா – அரை தேக்கரண்டி, ஜாதிக்காய் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, பட்டை போன்றவற்றை பொடி செய்யவும். தேநீருக்கு தண்ணீர் கொதித்ததும், இந்த பொடியையும், தேயிலையுடன் சேர்த்து போட்டு கொதி வந்ததும், சர்க்கரை, பால் சேர்த்து, வடிகட்டி அருந்தவும். இது, குளிர்காலத்தில் உடம்பிற்கு சூடு கொடுக்கும்; அருமையான தேநீர்.

ரோஸ் டீ:

தேநீர் கொதிக்கும் போது, புத்தம் புதிய ரோஜா இதழ்களை போட்டு தேநீர் தயாரிக்கலாம். ரோஜாப்பூ இதழ்களை காயவைத்து, ஒரு டப்பாவில் போட்டு வைத்தால், தேவையான போது உபயோகிக்கலாம்.

கோகோ டீ:

குழந்தைகள், சாக்லேட் மணம் கொண்ட கோகோ டீயை மிக விரும்புவர். இந்த டீயை தயாரிக்கும் போது, தேவையான கோகோ பவுடர் சேர்த்து கொதிக்க விட்டு அருந்தவும்.

இஞ்சி டீ:

அஜீரணம், வயிற்று கோளாறுகளை நீக்க வல்லது இஞ்சி டீ. இஞ்சியை தோலை நீக்கி, நன்கு இடித்து, டீ கொதிக்கும் போது போட்டால், இஞ்சி டீ ரெடி!

ஏலக்காய் டீ:

ஏலக்காயை தோலுடன் பொடி செய்து, தேநீரில் சேர்த்து கொதிக்க விடவும். பலகாரங்கள் செய்ய, ஏலப்பொடி செய்யும் போது, ஏலக்காய் தோலை எறியாமல், சேகரித்து வைத்து உபயோகிக்கலாம்.

எலுமிச்சை டீ:

நீரை கொதிக்க விட்டு, தேயிலையை போட்டு நன்கு கொதித்ததும், இறக்கி வடிகட்டவும். ஆறியதும், அதில் தேவையான எலுமிச்சை சாறு பிழியவும். தேவையான சர்க்கரை சேர்த்து, சில ஐஸ்கட்டிகளைப் போட்டு, பால் இல்லாமல் குடிக்கவும்.

புதினா டீ:

சில புதினா இலைகள், துளசி இலைகளோடு, சிறுதுண்டு இஞ்சியை நசுக்கிப் போட்டு, 5 மிளகையும் பொடி செய்து போட்டு, நீரை கொதிக்க விடவும். பின், தேயிலை, சர்க்கரை, பால் கலந்து, வடிகட்டி அருந்தவும். இது, ஜலதோஷம், இருமல் போன்றவற்றிற்கு உடனடி நிவாரணம் அளிக்கும்.

குறிப்பு:

தேநீர் நம் இதயத்திற்கும், நுரையீரலுக்கும் பலமளிக்கும். நரம்பு, தசை மண்டலங்களை சுறுசுறுப்பாக்கி, புத்துணர்வு தருகிறது. காபி அருந்துவதை விட, தேநீர் அருந்துவது நல்லது. அளவோடு அருந்த வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் நரம்புகளையும், வயிற்றையும் பாதிக்கும். மிக சூடாக அருந்தும் தேநீர், வயிற்றின் உட்சுவர்களை புண்ணாக்கும்.
 தேநீர் – ஒரு சுவையான பானம்!

சுவையாக தேநீர் தயாரிப்பதும் ஒரு கலை தான். ஒரு கப் தேநீர் தயாரிக்க, அரை கப் நீரில், இரண்டு தேக்கரண்டி சர்க்கரை, ஒரு தேக்கரண்டி தேயிலை போட்டு, நன்கு கொதி வந்ததும், அத்துடன் அரை கப் பால் சேர்த்து, மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கி, வடிகட்டி அருந்தவும். சில வித்தியாசமான, சுவையான தேநீர் தயாரிக்கும் முறைகளையும் பார்ப்போம். 

மசாலா டீ: 

ஏலக்காய் – 6, கிராம்பு – 6, சோம்பு – 1 தேக்கரண்டி, தனியா – அரை தேக்கரண்டி, ஜாதிக்காய் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, பட்டை போன்றவற்றை பொடி செய்யவும். தேநீருக்கு தண்ணீர் கொதித்ததும், இந்த பொடியையும், தேயிலையுடன் சேர்த்து போட்டு கொதி வந்ததும், சர்க்கரை, பால் சேர்த்து, வடிகட்டி அருந்தவும். இது, குளிர்காலத்தில் உடம்பிற்கு சூடு கொடுக்கும்; அருமையான தேநீர். 

ரோஸ் டீ: 

தேநீர் கொதிக்கும் போது, புத்தம் புதிய ரோஜா இதழ்களை போட்டு தேநீர் தயாரிக்கலாம். ரோஜாப்பூ இதழ்களை காயவைத்து, ஒரு டப்பாவில் போட்டு வைத்தால், தேவையான போது உபயோகிக்கலாம். 

கோகோ டீ: 

குழந்தைகள், சாக்லேட் மணம் கொண்ட கோகோ டீயை மிக விரும்புவர். இந்த டீயை தயாரிக்கும் போது, தேவையான கோகோ பவுடர் சேர்த்து கொதிக்க விட்டு அருந்தவும். 

இஞ்சி டீ: 

அஜீரணம், வயிற்று கோளாறுகளை நீக்க வல்லது இஞ்சி டீ. இஞ்சியை தோலை நீக்கி, நன்கு இடித்து, டீ கொதிக்கும் போது போட்டால், இஞ்சி டீ ரெடி! 

ஏலக்காய் டீ: 

ஏலக்காயை தோலுடன் பொடி செய்து, தேநீரில் சேர்த்து கொதிக்க விடவும். பலகாரங்கள் செய்ய, ஏலப்பொடி செய்யும் போது, ஏலக்காய் தோலை எறியாமல், சேகரித்து வைத்து உபயோகிக்கலாம். 

எலுமிச்சை டீ: 

நீரை கொதிக்க விட்டு, தேயிலையை போட்டு நன்கு கொதித்ததும், இறக்கி வடிகட்டவும். ஆறியதும், அதில் தேவையான எலுமிச்சை சாறு பிழியவும். தேவையான சர்க்கரை சேர்த்து, சில ஐஸ்கட்டிகளைப் போட்டு, பால் இல்லாமல் குடிக்கவும். 

புதினா டீ: 

சில புதினா இலைகள், துளசி இலைகளோடு, சிறுதுண்டு இஞ்சியை நசுக்கிப் போட்டு, 5 மிளகையும் பொடி செய்து போட்டு, நீரை கொதிக்க விடவும். பின், தேயிலை, சர்க்கரை, பால் கலந்து, வடிகட்டி அருந்தவும். இது, ஜலதோஷம், இருமல் போன்றவற்றிற்கு உடனடி நிவாரணம் அளிக்கும்.

குறிப்பு: 

தேநீர் நம் இதயத்திற்கும், நுரையீரலுக்கும் பலமளிக்கும். நரம்பு, தசை மண்டலங்களை சுறுசுறுப்பாக்கி, புத்துணர்வு தருகிறது. காபி அருந்துவதை விட, தேநீர் அருந்துவது நல்லது. அளவோடு அருந்த வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் நரம்புகளையும், வயிற்றையும் பாதிக்கும். மிக சூடாக அருந்தும் தேநீர், வயிற்றின் உட்சுவர்களை புண்ணாக்கும்.
நன்றி: செந்தில்வயல் தளம்
 
நன்றி: செந்தில்வயல் தளம்