கர்ப்பிணித் தாய்மார்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள்!

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:43 | Best Blogger Tips

 * கர்ப்ப காலத்தில் கரும்பச்சை நிறமான கீரைவகைகளையும், காரட் போன்ற காய்கறிகளையும், பழங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* கர்ப்பிணிகள் கடினமான பயணங்களைத் தவிர்க்க வேண்டும். ஆட்டோவில் பயணம் செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். பஸ்ஸில் கடைசி இருக்கை என்றால் வேண்டவே வேண்டாம். மலைப்பிரதேசப் பயணம் ஏற்கத்தக்கதல்ல. விமானப் பயணமும் அப்படித்தான்.

* உடலுக்குத் தேவையான மிக அத்தியாவசியமான சத்துக்களில் ஒன்று அயோடின். பிறக்கும் குழந்தைக்கு மூளை வளர்ச்சியின்மை, உடல்வளர்ச்சிக் குறைவு போன்றவற்றுக்கு இந்த சத்துக்குறைவுதான் காரணம். இதனால் குழந்தையின் இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது.


* கருவுற்ற முதல் சில மாதங்கள் வாந்தி அதிகம் இருந்தால், சிறுகச் சிறுக உணவைக் குறைந்த இடைவெளியில் உட்கொள்ளலாம்.

* ஒரு பெண் கருவுறும்போது மூன்றாம் மாதத்தில் கருவிலுள்ள குழந்தையின் பற்களின் அஸ்திவாரம் தோன்ற ஆரம்பிக்கும். அந்நேரத்தில் கர்ப்பிணிகள் கால்சியம், புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளையும், பாலையும் பருகுவது அவசியம்.

* தாய்மை அடைந்தவர்கள், மாம்பழம், பலாப்பழம், சாத்துக்குடி, எலுமிச்சை ஆகிய பழங்களை உட்கொள்ளக்கூடாது. இதனால் இருமல், சளி ஏற்படலாம்.

* மருத்துவரின் ஆலோசனையின்றி கர்ப்பிணிகள் எந்த மருந்தையும் உட்கொள்ளக்கூடாது.

* அதிக மசாலாப் பொருள்கள் சேர்த்த உணவு வகைகளைத் தவிர்க்கவும்.

* தினமும் இரண்டு தம்ளர் பால் குடிக்க வேண்டும்.

* தினமும் நன்கு நடக்க வேண்டும். அப்போது தான் பிரசவம் எளிதாகும்.

* மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். இனிமையான, மெலோடி பாடல்களை கேட்கலாம்.
கர்ப்பிணித் தாய்மார்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள்! 

* கர்ப்ப காலத்தில் கரும்பச்சை நிறமான கீரைவகைகளையும், காரட் போன்ற காய்கறிகளையும், பழங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* கர்ப்பிணிகள் கடினமான பயணங்களைத் தவிர்க்க வேண்டும். ஆட்டோவில் பயணம் செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். பஸ்ஸில் கடைசி இருக்கை என்றால் வேண்டவே வேண்டாம். மலைப்பிரதேசப் பயணம் ஏற்கத்தக்கதல்ல. விமானப் பயணமும் அப்படித்தான்.

* உடலுக்குத் தேவையான மிக அத்தியாவசியமான சத்துக்களில் ஒன்று அயோடின். பிறக்கும் குழந்தைக்கு மூளை வளர்ச்சியின்மை, உடல்வளர்ச்சிக் குறைவு போன்றவற்றுக்கு இந்த சத்துக்குறைவுதான் காரணம். இதனால் குழந்தையின் இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது.
  

* கருவுற்ற முதல் சில மாதங்கள் வாந்தி அதிகம் இருந்தால், சிறுகச் சிறுக உணவைக் குறைந்த இடைவெளியில் உட்கொள்ளலாம்.

* ஒரு பெண் கருவுறும்போது மூன்றாம் மாதத்தில் கருவிலுள்ள குழந்தையின் பற்களின் அஸ்திவாரம் தோன்ற ஆரம்பிக்கும். அந்நேரத்தில் கர்ப்பிணிகள் கால்சியம், புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளையும், பாலையும் பருகுவது அவசியம்.

* தாய்மை அடைந்தவர்கள், மாம்பழம், பலாப்பழம், சாத்துக்குடி, எலுமிச்சை ஆகிய பழங்களை உட்கொள்ளக்கூடாது. இதனால் இருமல், சளி ஏற்படலாம்.

* மருத்துவரின் ஆலோசனையின்றி கர்ப்பிணிகள் எந்த மருந்தையும் உட்கொள்ளக்கூடாது.

* அதிக மசாலாப் பொருள்கள் சேர்த்த உணவு வகைகளைத் தவிர்க்கவும்.

* தினமும் இரண்டு தம்ளர் பால் குடிக்க வேண்டும்.

* தினமும் நன்கு நடக்க வேண்டும். அப்போது தான் பிரசவம் எளிதாகும்.

* மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். இனிமையான, மெலோடி பாடல்களை கேட்கலாம்.