வேளாண் மசோதா 2020-வின் நன்மை தீமைகள் என்ன?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:03 | Best Blogger Tips



வேளாண் மசோதா 2020-வின் நன்மை தீமைகள் என்ன? இதனால் என்னை போன்ற வேளாண் பெருமக்களுக்கு நலம் உண்டாகுமா?

வேளாண் மசோதா 2020

மத்திய அரசு 14 செப்டம்பர் 2020 அன்று மூன்று புதிய வேளாண் மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்து, 17 செப்டம்பர் 2020 அன்று நிறைவேற்றியது.மாநிலங்களவையில்,20 செப்டம்பர் 2020 அன்று நிறைவேற்றியது.

26 செப்டம்பர் 2020அன்று குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் சட்டம் அமலுக்கு வந்தது.

விவசாய விளை பொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம்

இச்சட்டத்தின் மூலம் விவசாயிகள் மற்றும் PAN எண் (Permanent Account Number) உள்ள வியாபாரிகள் விவசாய விளை பொருட்களை எந்த வித கட்டணமும் செலுத்தாமல்,மாநிலத்துக்கு உள்ளே மற்றும் வெளி மாநிலத்துக்கு எடுத்துச் செல்ல சுதந்திரம் வழங்கப்படுகிறது

விவசாயிகளிடம்,விளை பொருட்களை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் அதற்கான தொகையை,அதே நாளிலோ அல்லது அடுத்த மூன்று வேலை நாட்களுக்குள்ளோ விவசாயிக்குச் செலுத்த வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது

மின்னணு வர்த்தகத்தின் மூலம் விவசாய விளை பொருட்களை விற்கவும்,வாங்கவும், இச்சட்டம் அனுமதி அளிக்கிறது.ஆனால் ஒவ்வொரு விளை பொருளையும் வாங்குபவர் டெலிவரி (physical delivery) எடுத்துக் கொள்ள வேண்டும்

மாநில அரசு APMC சட்டம் அல்லது வேறு எந்த சட்டத்தின் மூலமும் விவசாய விளை பொருட்களை எடுத்துச் செல்லும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் எந்தவிதமான கட்டணமும் வசூலிப்பதை இச்சட்டம் தடை செய்கிறது.




விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் விவசாய சேவைகள் ஒப்பந்த சட்டம்

இந்தச் சட்டத்தின்படி விவசாயிகளும் கொள்முதல் செய்பவரும் பயிர் செய்ய ஆரம்பிக்கும் முன்பாகவே எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்..இந்த ஒப்பந்தத்தில் விலை பொருளுக்கான கொள்முதல் விலை, தரம், கால அளவு, பண்ணை சேவைகள்(விதை உரம் பூச்சி மருந்துகள் இயந்திரங்கள் தொழில்நுட்பங்கள் ஆலோசனை வழங்குதல்) ஆகியவை இடம்பெற வேண்டும்.

அறுவடை நேரத்தில், சந்தை விலை குறைந்தாலும், ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலை, விவசாயிகளுக்கு கிடைக்கும்

.சந்தையில் விலை அதிகரிக்கும்போது கொள்முதல் செய்பவர் அளிக்க வேண்டிய கூடுதல் தொகை மற்றும் ஊக்கத்தொகை குறித்தும் ஒப்பந்தம் செய்யும்போதே முடிவு செய்யலாம்

எழுத்து பூர்வமான ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு விவசாயிகளுக்கு மத்திய அரசு தேவையான வழிகாட்டுதலை வழங்கும்.



விவசாயிகளிடம் விளைபொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு முன் அதன் தரத்தை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி சோதித்துக் கொள்ள வேண்டும் எக்காரணத்தை முன்னிட்டும் பொருட்களைப் பெற்றுக் கொள்ளும் போதோ அதற்குப் பின்னரோ பின்வாங்க முடியாது

பண்ணை ஒப்பந்த சட்டத்தை,விவசாயிகளின் நிலத்தை மாற்றுவதற்கோ,விற்பனைக்கோ,குத்தகைக்கோ அல்லது அடமானம் வைப்பதற்கோ பயன்படுத்த முடியாது.

மேலும் விவசாயிகளின் நிலத்தில் நிரந்தரமான கட்டுமானங்களோ அல்லது நிலத்தில் எந்த மாற்றமோ செய்யக்கூடாது

.அவ்வாறு கட்டுமானம் செய்திருப்பின் ஒப்பந்த காலம் முடியும்போது அது அகற்றப்பட்டு நிலத்தை சரிசெய்து ஒப்படைத்தல் வேண்டும் தவறும் பட்சத்தில் அந்த கட்டுமானம் விவசாயிக்கு உரிமையாகும்

ஒப்பந்தம் செய்து கொண்ட பின் நியாயமான காரணங்கள் இருக்கும் பட்சத்தில் இரு தரப்பினரின் சம்மதத்தின் பேரில் ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யவோ,ஒப்பந்தத்தை ரத்து செய்யவோ முடியும்

பண்ணை ஒப்பந்தம் காப்பீட்டுடனோ(Insurance),மத்திய அல்லது மாநில அரசின் திட்டத்தின் மூலம் கடன் உதவி பெறும் நிறுவனத்திடமோ அல்லது வேறு கடன் உதவி வழங்கும் நிறுவனத்திடமோ இணைக்கப்பட வேண்டும்

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்

போர், பஞ்சம், அசாதாரணமான விலையேற்றம், இயற்கைப் பேரழிவு ஆகிய காலங்களில் மட்டும்தான் மத்திய அரசு, தானியங்கள், பருப்பு,வகைகள், உருளைக்கிழங்கு, வெங்காயம், சமையல் எண்ணெய் வித்துக்கள் மற்றும் எண்ணெய் வகைகள் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் அரசாணை வெளியிட வேண்டும்

விவசாய விளைபொருட்களின் இருப்பு வரம்பை நிர்ணயிக்க இச்சட்டத்தின் மூலம் எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் விலையேற்றத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட வேண்டும்

விலையேற்றத்தைக் கணக்கிடும் பொழுது 100% சதம் தோட்டக்கலைப் (Horticultural) பொருட்களான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட, எளிதில் அழுகும் வேளாண் பொருட்களின் விலை ஏறும்போதும் 50% அழுகாதா (Non –perishable) பொருட்களான, தானியங்கள், பருப்பு,வகைகள், சமையல் எண்ணெய் வித்துக்கள் ஆகிய விவசாய விளை பொருட்கள் விலை ஏறும் பொழுது மட்டும் முந்தைய 12 மாதங்களின் அல்லது கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரி விலையில் எது குறைவோ அதனைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்

இச்சட்டம் விவசாயிகளுக்கு நன்மையா? தீமையா? சாதகமா? பாதகமா?

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்டங்களுக்கான இணைப்பை மேலே கொடுத்துள்ளேன்.

நான் புரிந்து கொண்ட வகையில் விவசாயி ஆகிய எனது பார்வையில்,இச்சட்டம் விவசாயிகளுக்கு நன்மை அளிப்பதாகவே கருதுகிறேன்.

தமிழகத்தில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூடம்,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், இந்திய உணவுக்கழகம்,மற்றும் வெளி மார்க்கெட் மூலம் விவசாயிகள் விற்பனை செய்வதை இந்த சட்டம் தடை செய்யவில்லை

மேலும் இந்தச் சட்டம் விவசாயிகள் ஒப்பந்த பண்ணையம் தான் செய்ய வேண்டுமென்று எந்த இடத்திலும் கட்டாயப் படுத்தவில்லை மாறாக விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்றுக் கொள்வதற்கு சுதந்திரம் அளிக்கிறது.

கார்பரேட் கம்பெனிகள் உணவுப் பொருள்களை பதுக்கி வைத்துக்கொண்டு செயற்கை விலையேற்றம் செய்ய முடிமா?

முடியாது,காரணம் இச்சட்டத்தில்,

தோட்டக்கலைப் (Horticultural) பொருட்களான, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட, எளிதில் அழுகும் பொருட்கள் 100% சதமும்,அழுகாதா (Non –perishable) பொருட்களான,தானியங்கள், பருப்பு,வகைகள், சமையல் எண்ணெய் வித்துக்கள் ஆகிய விவசாய விளை பொருட்கள் 50% சதமும் விலை ஏறும் பொழுது,முந்தைய 12 மாதங்களின் அல்லது கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரிவிலையில் எது குறைவோ அதனைக் கணக்கில் எடுத்துக் கொண்டு,விலை ஏற்றத்தைத் தடுக்கவும், கட்டுப்பாடுகளை விதிக்கவும், சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது

இதனால், 'கார்ப்பரேட்' நிறுவனங்கள், அத்தியாவசிய பொருட்களை பதுக்குவதற்கு வாய்ப்பு கிடைக்காது.சந்தையில் ஆரோக்கியமான போட்டி ஏற்படுவதுடன், விளைபொருட்கள் வீணாவது தடுக்கப்படும்.

இச்சட்டத்தின் மூலம்,விவசாயிகளின் நிலங்கள் கார்பரேட் கம்பெனிகளின் கைகளுக்குச் செல்ல வாய்ப்பு உள்ளதா?

வாய்ப்பில்லை.காரணம்

இச்சட்டத்தை,விவசாயிகளின் நிலத்தை மாற்றுவதற்கோ, விற்பனைக்கோ, குத்தகைக்கோ அல்லது அடமானம் வைப்பதற்கோ,பயன்படுத்த முடியாது.

பஞ்சாப் மாநிலத்தில் ஏன் அரசாங்கம் இச்சட்டத்தை மிகக் கடுமையாக எதிர்க்கிறது?

பஞ்சாப் போன்ற வடமாநிலங்களில்,தனியாக பொருட்களை, விவசாயிகளால் விற்பனை செய்ய முடியாது விவசாயிகள் விளைபொருட்களை, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மட்டுமே விற்க முடியும்.பஞ்சாப் மாநிலத்தில்.நெல்,கோதுமை உள்ளிட்டவற்றை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்வதற்கு, 3 சதவீதம் சந்தை கட்டணமாக செலுத்த வேண்டும். ஊரக உள்ளாட்சி மேம்பாட்டு வரி யாக, 3 சதவீதம் செலுத்த வேண்டும். கமிஷன் ஏஜன்டுகளுக்கு, 2.50 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு விற்பனை கட்டணமாக, 8.50 சதவீதம் பெறப்படுகிறது

.பஞ்சாப் மாநிலத்தில், கோதுமை வாயிலாக மட்டும்,விற்பனை கட்டணமாக ஆண்டுதோறும், 3,500 கோடி ரூபாய் கிடைக்கிறது. இதில், 30 சதவீதம், அரசுக்கு சந்தை கட்டண வருவாயாகக் கிடைக்கிறது..

இச்சட்டத்தின்படி விவசாயிகள் வெளிமார்க்கெட்டில் விற்றால் அரசுக்கு வரிவருவாய் இழப்பு ஏற்ப்படும்.

மேலும் வியாபாரிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வெளியில் வாங்கும் விவசாய விளைபொருளுக்கு எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை என்பதால் அங்கு வாங்குவதையே விரும்புவார்கள்.எனவே மாநில அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்ப்படும்.அதனால் பஞ்சாப் அரசு இச் சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறது.

ஆனால் தமிழகத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளிடம் எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை

இந்த சட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்தால், விளைபொருட்களுக்கு அறிவிப்பது நிறுத்தப்படுமா?

இல்லை.நிறுத்தப்படாது.

இந்த குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என, பிரதமரும், மத்திய அரசும், விவசாயிகளுக்கு உறுதி அளித்துள்ளனர்

ராபி பருவ பயிர்களான நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது

முடிவாக என்னுடைய பார்வையில் இந்த மூன்று வேளாண் சட்டங்களிலும் விவசாயிகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள் மிகச்சிறப்பாக உள்ளது.இச்சட்டத்தை நடைமுறைப் படுத்தும் போது ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களை சரி செய்தால் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகவே அமையும் 

நன்றி இணையம்