சோம வார பிரதோஷம் !!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:44 | Best Blogger Tips
சோம வார பிரதோஷம் க்கான பட முடிவுசோம வார பிரதோஷம் க்கான பட முடிவு

இன்று சோம வார பிரதோஷம் !! அப்படி என்ன சிறப்பு...


சோம வார விரதம் !!

🌟 திங்கட்கிழமை என்பது 'சோமவாரம்" என்றழைக்கப்படுகிறது. சிவபெருமானை நினைத்து திங்கட்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் என்பதால் இதற்கு சோமவார விரதம் என்று பெயர்.


🌟 பிரதோஷத்தில் சோமவாரம் (திங்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது. சந்திர திசை நடப்பவர்கள், சந்திரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் திங்கள் அன்று வரும் பிரதோஷத்திற்கு செல்ல மனதில் நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.

சோமவார விரதத்தை முதலில் தொடங்க உகந்த நாள் :

🌟 சிவபெருமானுக்கு உகந்த சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைபிடிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி முதலான மாதங்களில் வரும் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி தொடர்ந்து கடைபிடிக்கலாம்.

🌟 ராகு காலத்திற்கு முன்பே பூஜையை தொடங்க வேண்டும். அதிகாலையில் கணபதியை வழிபட வேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, அதற்கு தேங்காய் உடைத்து கற்பூர தீபம் காட்ட வேண்டும். பின்னர் கும்பம் தயார் செய்ய வேண்டும். கலசத்தில் தண்ணீர் பிடித்து அதில் நாணயம், மஞ்சள்பொடி போன்றவற்றை போட்டு, கலசத்திற்கு மேல் பகுதியில் மாவிலையை வைக்க வேண்டும்.

குடும்ப தலைமை பற்றிய மெய்யறிவு !
குடும்பம் என்கிற அமைப்பு கொஞ்சம் குறைபாடுகளும், அதிக நன்மைகளும் வாய்ந்தது. குடும்ப தலைமை என்பது, அடக்குமுறை, ஆக்கிரமிப்பின் ஆரம்பம் என்று உணர்வதை விட, சரியான பாதுகாப்பு ஏற்பாடு என்பதே உண்மை. ஒரு குடும்பத்துக்கு ஒரு தலைமைதான் சாத்தியம்.

வாழ்க்கையில் தலைமை பண்பு என்பது குடும்பத்திலான தலைமைப் பண்பிலிருந்து துவங்குகிறது.

குடும்பத்தலைவனின் ஆளுமை பற்றி விவரிக்கும் புத்தகம் தான் குடும்ப தலைமை பற்றிய மெய்யறிவு !


இந்த புத்தகத்தை உடனே பெற இங்கே கிளிக் செய்யுங்கள் !
🌟 கலசத்தின் மையப் பகுதியில் மஞ்சள் தடவி, தேங்காய் வைத்து சந்தனம், குங்குமம் வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். அதன் பிறகே பூஜையைத் தொடங்க வேண்டும். சாதம், நெய், பருப்பு, பாயசம், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். வழிபாட்டின் போது சிவ நாமத்தை உச்சரிப்பது சிறப்பான வாழ்வை அருளும். வழிபாட்டின் முடிவில் இறைவனுக்கு தீபாராதனை காட்ட வேண்டும்.

🌟 பூஜை முடிந்த பின்னர் வயதான தம்பதியரை பார்வதி பரமேஸ்வரனாக மனதில் நினைத்து சந்தனம், குங்குமம் அளித்து நமஸ்காரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு புதுவேட்டி, ரவிக்கைதுணி, வெற்றிலைப்பாக்கு மற்றும் பழம் இவற்றுடன் தட்சனை ஆகியவை அடங்கிய தட்டை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அன்னமிட்டு அட்சதையை அவர்கள் கையில் கொடுத்து வணங்கி ஆசி பெற வேண்டும்.

🌟 இந்த விரதத்தைக் கடைபிடிப்பவர்கள், அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதத்தை கடைபிடிக்கலாம். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது 12 ஆண்டுகளோ கடைபிடிக்கலாம்.

🌟 அதுவும் இயலாதவர்கள் கார்த்திகை மாதத்தில் மட்டுமாவது இந்த விரதத்தை அனுஷ்டிப்பது நலம் தரும்.



நன்றி இணையம்