கிழங்கு வகைகளின் மருத்துவ குணங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:40 | Best Blogger Tips
கிழங்கு வகைகளின் மருத்துவ குணங்கள்

சர்க்கரைவள்ளிக் கிழங்கு:

சத்துக்குறைவான உணவை உண்பதால் ஏற்படும் சோகை போன்ற நோய்கள் வராமல் தடுக்கும். அதிகமாக உட்கொண்டால் சிலருக்கு வாதத் தொல்லைகளை ஏற்படுத்தும்.

கருணைக் கிழங்கு:

அஜீரணத்தை அகற்றி நல்ல பசியை உண்டாக்கும். மற்றும் வாதசூலை , குன்மநோய், கிருமிகள், வாதம், பித்தம் போன்றவற்றால் ஏற்படும் நோய்களைப் போக்கும்.

அமுக்கிரா கிழங்கு:

கட்டிகளின் காரணமாக உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குணப்படுத்தும். இதை பாலில் நன்கு வேகவைத்து உலர்த்தி பின் இடித்து அத்துடன் கற்கண்டு சேர்த்துப் பாலில் போட்டுக் காய்ச்சிக் குடித்தால் தாது புஷ்டி ஏற்படும்.

தாமரைக் கிழங்கு:

கண்களின் தோன்றும் குறைபாடுகளைப் போக்கப் பயன்படுகிறது. தவளைச்சொறி, உடல்வலி, பித்தத்தினால் ஏற்படும் மயக்கம் போன்றவற்றையும் குணப்படுத்தவல்லது.

முள்ளங்கிக் கிழங்கு:

இருமல், ஜலதோஷம், தலைவலி, கபம், சுவாசக் கோளாறு, குன்மம், பல்நோய், மூலக்கடுப்பு போன்ற குறைபாடுகளை குணமாக்கும்.

பனங்கிழங்கு:

பித்தமேகம், அஸ்திசூடு, ஆகியவற்றை நன்கு குணமாக்கும். உடல் குளிர்ச்சி உண்டாக்கும்.

சின்னக் கிழங்கு: 

இருதய நோய், ஆஸ்துமா போன்ற பிணிகளுக்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.

வெற்றிலைவள்ளிக் கிழங்கு:

நல்ல ஊட்டச் சத்தை உடலுக்கு தரக்கூடியது. பாண்டு ரோகம் குணமாகும். சிலருக்கு இக்கிழங்கு வாய்வுக் கோளாறுகளை மிகுதியாக்கக் கூடும்.


சத்துக்குறைவான உணவை உண்பதால் ஏற்படும் சோகை போன்ற நோய்கள் வராமல் தடுக்கும். அதிகமாக உட்கொண்டால் சிலருக்கு வாதத் தொல்லைகளை ஏற்படுத்தும்.

கருணைக் கிழங்கு:

அஜீரணத்தை அகற்றி நல்ல பசியை உண்டாக்கும். மற்றும் வாதசூலை , குன்மநோய், கிருமிகள், வாதம், பித்தம் போன்றவற்றால் ஏற்படும் நோய்களைப் போக்கும்.

அமுக்கிரா கிழங்கு:

கட்டிகளின் காரணமாக உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குணப்படுத்தும். இதை பாலில் நன்கு வேகவைத்து உலர்த்தி பின் இடித்து அத்துடன் கற்கண்டு சேர்த்துப் பாலில் போட்டுக் காய்ச்சிக் குடித்தால் தாது புஷ்டி ஏற்படும்.

தாமரைக் கிழங்கு:

கண்களின் தோன்றும் குறைபாடுகளைப் போக்கப் பயன்படுகிறது. தவளைச்சொறி, உடல்வலி, பித்தத்தினால் ஏற்படும் மயக்கம் போன்றவற்றையும் குணப்படுத்தவல்லது.

முள்ளங்கிக் கிழங்கு:

இருமல், ஜலதோஷம், தலைவலி, கபம், சுவாசக் கோளாறு, குன்மம், பல்நோய், மூலக்கடுப்பு போன்ற குறைபாடுகளை குணமாக்கும்.

பனங்கிழங்கு:

பித்தமேகம், அஸ்திசூடு, ஆகியவற்றை நன்கு குணமாக்கும். உடல் குளிர்ச்சி உண்டாக்கும்.

சின்னக் கிழங்கு:

இருதய நோய், ஆஸ்துமா போன்ற பிணிகளுக்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.

வெற்றிலைவள்ளிக் கிழங்கு:

நல்ல ஊட்டச் சத்தை உடலுக்கு தரக்கூடியது. பாண்டு ரோகம் குணமாகும். சிலருக்கு இக்கிழங்கு வாய்வுக் கோளாறுகளை மிகுதியாக்கக் கூடும்.