அதிமதுரம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:17 | Best Blogger Tips


மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் நீல நிறப் பூக்களையும் உடைய சிறு செடியினம். மருத்துவப் பயனாகும் தண்டு உலர்ந்த நிலையில் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். சளி இருமல் ஆகியவற்றுக்கான மருந்தாகப் பயன்படுகிறது. புண்ணழுகல் ஆற்றுதல், சளியகற்றுதல், வெப்பகற்றல், பித்தநீர் பெருக்கல், எரிச்சலூட்டல், குருதிப்போக்கு அடக்கல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது.

1. 1 அல்லது 2 கிராம் அதிமதுரப் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர மார்பு, ஈரல், இரைப்பை, தொண்டை ஆகியவற்றில் உள்ள வறட்சி தீரும். இருமல், மூலம், தொண்டை கரகரப்பு, நரம்புத் தளர்ச்சி ஆகியவை தீரும். 2. அதிமதுரப் பொடி, சந்தனத்தூள் சமன் கலந்து 1 கிராம் அளவாகப் பாலில் கொடுத்து வர இரத்த வாந்தி நிற்கும். அக உறுப்புகளில் புண் ஆறும்.