இல்லங்கள் உள்ளங்களால் அழகுறும்.!!

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:42 | Best Blogger Tips

 



இல்லங்கள் உள்ளங்களால் அழகுறும்.!!

 

இன்றைய கால ஓட்டத்தில்

பிரிவுகள் சாதாரணமாகிறது..

 

வாக்குவாதங்களைத் தவிர்க்கப் பாருங்கள்..


சொன்ன சொல்லையே பிடித்துத் தொங்காதீர்கள்..

 

கோபம் அதிகமானால் பேசுவதைத் தள்ளி வையுங்கள்..

 

பேச்சுக்கள் அதிகமானால் நீங்கள் மௌனத்தைக் கையில் எடுங்கள்..

 

செய்த தவறை காலம் முழுதும் சுட்டிக் காட்டி நோகடிக்காதீர்கள்..

 

நானும் தவறுகளிலிருந்து பாடம் கற்றேன் என்று ஒத்துக் கொள்ளுங்கள்..

 

மன்னிப்புக்களை வழங்க

எப்போதும் மறுக்காதீர்கள்..

 

விமர்சனங்களை மனம்

நோகாமல் சொல்லிப் பாருங்கள்..

 

விருந்தினர்களை மனம் மகிழ வரவேற்கப் பழகுங்கள்..

 

நன்றிகளைக் கூற நொடி நேரமும் காலதாமதம் செய்யாதீர்கள்..

 

ஒரு நாளில் ஒரு முறையேனும்

ஒன்றாக அமர்ந்து உணவு அருந்துங்கள்..

 

வெளியில் சென்றால் புன்னகையுடன் சொல்லி விட்டுக் கிளம்புங்கள்..

 

உறவுகளைத் தக்க வைப்பதும் தூக்கி எறிவதும் நம் வார்த்தைகளில் உள்ளது.!!

 

நன்றி....


 நன்றி இணையம்