பொது அறிவு ! 1

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:39 | Best Blogger Tips

+ டில்லிக்கு முன்பு இந்தியாவின் தலைநகராக இருந்த நகரம் கல்கத்தா.

+ 1969ம் ஆண்டில் தமிழ், தமிழ் நாட்டின் அரசாங்க மொழியாக ஆக்கப்பட்டது.

+ கங்காரு கால்களால் சண்டை போடும்.

+ உகாரி என்ற வகை குரங்கு கைகளைக் கட்டிக் கொண்டு நடக்கும்.

+ குவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்கும்.

+ எள்ளின் விதை ஒரு கிராமில் 230ல் ஒரு பங்கு இருக்கும்.

+ இந்தியாவில் முதல் மின்சார ரயில் 1925ல் அறிமுகப்படுத்தப் பட்டது. இந்த ரயில் பம்பாய் வி.டி.யில் இருந்து குர்லா வரை (16 கி.மீ. தூரம்) இயக்கப்பட்டது.

+ இந்தியாவின் மிகப் பெரிய ரயில்வே நடைபாதை உத்தர பிரதேசத்தில் உள்ள காரக்பூரில் உள்ளது. இதன் நீளம் 2,733 அடி.

+ இந்தியாவின் மிக நீளமான குகை ரயில் பாதை குஜராத்தில் உள்ள மங்கி மில்லுக்கும், காண்ட்லா ரயில் நிலையத்துக்கும் இடையில் அமைந்துள்ளது. இதன் நீளம் 2,100 மீட்டர் ஆகும்.

+ இந்தியாவில் அதிகமான குகைகள் உள்ள ரயில் பாதை கல்கத்தாவில் இருந்து சிம்லாவுக்குச் செல்லும் ரயில் பாதையாகும். இந்த வழித் தடத்தில் 102 குகைகள் உள்ளன.

+ இந்திய மெட்ரோ ரயில் 1984 ஒக்டோபர் 24ம் திகதி கல்கத்தாவில் விடப்பட்டது.

+ பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். தொழிற்சாலை 1955ம் ஆண்டு தொடக்கப்பட்டது. இது உலகிலேயே மிகப் பெரிய ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை ஆகும்.

+ பாம்புகளின் கண்களுக்கு இமைகள் கிடையாது. இதனால் தான் பாம்பு தூங்கும் போது கண் விழித்திருப்பது போலத் தோன்றும்.

+ ஆபிரிக்காவில் வாழும் விஷமில்லாத ஒருவித பாம்பினம் வெறும் முட்டையை மட்டும் உண்டு உயிர் வாழ்கிறது.





நன்றி  FB பொதுஅறிவு