தேய்பிறை அஷ்டமி விரத

மணக்கால் அய்யம்பேட்டை | 9:54 AM | Best Blogger Tips

 No photo description available.

 

ஹர ஹர மஹாதேவா 🙏🏻🙏🏻

ஸ்ரீ பைரவர் அருள் பெற தேய்பிறை அஷ்டமி விரத வழிபாடு செய்யுங்கள் !!

இன்று தேய்பிறை அஷ்டமி
பைரவர் அவதரித்த திருநாள்
அதி அற்புதமான நாள் மாலையில் கண்டிப்பாக பைரவர் அபிஷேகம் பாருங்கள் !!

மிகவும் சக்தி வாய்ந்தது.

அஷ்டமியில் மஹாவிஷ்ணுவின் கோகுலாஷ்டமி வழிபாடும் சிவபெருமானின் பைரவாஷ்டமியும்
சக்தி வாய்ந்த வழிபாடாகும்.

பரணி நட்சத்திரத்தில் தான் பைரவர் அவதரித்தார்.

ஆகவே பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பைரவரை வணங்கினால் ஆயூளுக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல் சகல செளபாக்யங்களுடன் வாழ வைப்பார்.

இரண்டாவதாக சனிபகவானின் நட்சத்திரக்காரர்கள் அதாவது பூசம் அனுஷம் உத்திரட்டாதி நட்சத்திரத்திரக்காரர்கள் வழிபாடு செய்தால் சகல செளபாக்யமும் கிடைக்கும்.

மற்ற நட்சத்திரத்திரக் காரர்களும் வழிபடலாம்.

பைரவ விரதத்தின் நோக்கமே கேடுகள் கஷ்டம் எதிரிகளை அழிப்பதுதான்.

மேலும் சனிபகவானின் குரு பைரவர் ஆவார்.

ஆகையால் பைரவரை வழிபட்டால் சனிபகவான் கெடுபலன்கள் குறையும்.

பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாவத்தை நீக்குபவர் என்று பொருள்.

சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கே.

ஒரு ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார்.

அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவிகள் அஷ்ட பைரவிகளும் உண்டு.

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

எல்லா சிவ ஆலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி தருவார்.

காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று பார்த்த நித்யபூஜா விதி கூறுகிறது.

ஸ்ரீ பைரவருக்குப் பெளர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்கமுடியாத தொல்லைகள் நீங்கும், நல்லருள் கிட்டும்.

பஞ்ச தீபம் என்பது தனித் தனியாக ஏற்ற வேண்டும்.

அதாவது ஒவ்வொரு விளக்கிலும் ஒவ்வொரு எண்ணெய்.

இலுப்பை எண்ணை, விளக்கு எண்ணை, தேங்காய் எண்ணை, நல்லெண்ணை, பசுநெய் இவற்றினை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்றலாம்.

ஓன்றிலிருந்து ஒன்றை ஏற்றாமல் தனித் தனி தீபமாக ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம்.
அஷ்டமி வழிபாடு Archives - சர்வமங்களம் | Sarvamangalam

அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம் நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும்.

மற்றும் தொழிலில் லாபம் கிட்டும். சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு தயிர் அன்னம் படைத்து வழிபட்டால் வழக்குகளில் வெற்றி கிட்டும்.

ஸ்ரீ பைரவருக்கு இந்த பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் தோறும் பைரவரை வணங்கி கால பைரவ அஷ்டகம் படித்து வந்தால் எதிரிகள் அழிந்து, கடன்கள் தீர்ந்து, யம பயம் மட்டுமில்லாது எவர் பயமுமின்றி நீண்டநாள் வாழலாம்.

வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர்.
அஷ்ட பைரவர்கள் எவ்வாறு எப்போது தோன்றினர்...?

ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு.

திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும். தாமரை மலர் மாலை, வில்வ இலை மாலை போட்டு வணங்குவது சிறப்பு.

தேய்பிறை அஷ்டமி திதிகளில் சிகப்பு நிற ஆடை அணிந்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, சிகப்பு நிற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து, வெள்ளைப் பூசணியில் நெய் தீபம் ஏற்றிவர நல்ல பலன் கிடைக்கும்.

ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்ராபிஷேகம் செய்து, வடைமாலை சாற்றி சகஸ்ரநாம நாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

பைரவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம்.

பணியாற்றும் இடங்களில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியைப் பெறலாம்.

நம்பிக்கையுடன், பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களைக் கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.

வியாபாரிகள் கல்லாப் பெட்டியில் சொர்ண ஆகர்ஷண பைரவர் , பைரவி சிலை அல்லது படத்தை வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுவார்கள்.

தினமும் பைரவர் காயத்திரியையும், பைரவி காயத்திரியையும் பாராயணம் செய்து வந்தால் விரைவில் செல்வம் பெருகும்.
வெல்லம் கலந்த பாயாசம், உளுந்து வடை, பால் தேன் பழம், வில்வம் இலைகளால் மூலமந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும்.

ஸ்வர்ணா கர்ஷண பைரவ அஷ்டகம் தன செழிப்பைத் தரும்.

வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள்.

பெளவுர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு பைரவாஷ்டகத்தை 18 முறை பாராயணம் செய்ய வேண்டும். 


Thanks & Copy from video -Youtube.com


இவ்விதம் ஒன்பது பெளவுர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன சம்பத்தை அடையலாம்.

நீண்ட நாட்களாக உள்ள வறுமையிலிருந்து விடுபடலாம். 9 வது பெளவுர்ணமியன்று அவலில் பாயாசம் நைவேத்தியம் செய்யலாம்.

கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இந்த தினத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு நடத்தப்படுகிறது.

ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும் போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது.

சித்திரை பரணி ஐப்பசி பரணி போன்ற மாதங்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரம் கால பைரவருக்கு விசேஷ நாட்கள் ஆகும்.

ஏனெனில் பரணி நட்சத்திரத்தில் தான் பைரவர் அவதரித்தார்.

எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகம் கிடைக்கும்.

தை மாதம் செவ்வாய்க்கிழமைகளில் பைரவரை வழிபட்டு விரதம் இருப்பது மிகுந்த பலன்களைக் கொடுக்கும்.

எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம்.

ஆனால் செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிடச் சிறப்பான நாள் ஏதுமில்லை.

குறைந்தபட்சம் 27 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும்.

அதிகாலையில் நீராடி பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும்.

மாலையில் நடைபெறும் அபிஷேகத்தில் கலந்து கொண்டு முடிந்தால் அபிஷேகத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் மனமுவந்து ஏற்றுக்கொள்ளுங்கள்.

பகலில் இருந்து இரவு வரை முழு நாள் விரதமிருந்தால் பலன்களை அள்ளித் தருவார் பைரவர்.

வயதானவர்களுக்கு இது விதிவிலக்கு
அன்று மாலை பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட வேண்டும்.

வசதி குறைந்தவர்கள் ஒரு இரண்டு தீபம் மட்டும் ஏற்றினால் போதும்.

மறுநாள் நவமி அன்று காலை மீண்டும் கோவிலுக்கு சென்று விநாயகர், சிவன், அம்பாள், பைரவரை வணங்கி, ஏழைகளுக்கு முடிந்த அளவு அன்னதானம் அளிக்க வேண்டும்.

சிறிதளவு சர்க்கரைப் பொங்கல் செய்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் நல்லது.

பிறகு வீட்டுக்கு சென்று இன்று காலை முதல் மாலை வரை நான் செய்தது பைரவருக்கு அர்ப்பணம் என்று மனதார
சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

பைரவ காயத்ரி மந்திரம்

ஓம் பைரவாய வித்மஹே
ஹரி ஹர ப்ரம்மாத்மஹாய தீமஹி
தந்நோ கால பைரவ ப்ரசோதயாத்.

இந்த காயத்ரி மந்திரத்தை அஷ்டமியில் காலையிலும் மாலையிலும் 108 முறை கேளுங்கள்.
😊🕉️🙏🏾🐕‍🦺🐕‍🦺🕉️🙏🏾.

Thanks & Copy from video -Youtube.com

 


நன்றி இணையம்