விடியற்காலையில் நீர் அருந்துதல் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:11 | Best Blogger Tips


துளசி, வில்வம், அருகம்புல் ஆகிய ஏதாவது ஒன்றினை எடுத்து இரவில் ஒரு லிட்டர் நீரில் போட்டு மூடிவைத்து அந்த நீரை விடியற்காலையில் அருந்தினால் உடலில் வெப்பம் சம்பந்தமான நோய்கள் தீரும். விடியற்காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும் நீர் அருந்துதல் வேண்டும். இதனால் உடல் வெப்பம் குறையும். மூத்திரப்பை, மலக்குடல், அடிவயிறு ஆகியவற்றின் வெப்பம் குறையும். மலச்சிக்கல் நீங்கும். இரவில் ஒரு லிட்டர் நீரைக் காய்ச்சி அந்த நீரை விடியற்காலையில் அருந்தினால் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் குறையும்.

நன்றி -
நலம், நலம் அறிய ஆவல்