அனிச்சம் மலர்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:32 | Best Blogger Tips
இதுதான் அனிச்சம் மலர். முகர்ந்ததும் வாடிவிடும் என்று (இலக்கியத்தில்) கருதப்பட்ட மலர். கற்புடைய பெண்களை இம்மலரோடு ஒப்பிட்டுக் குறிஞ்சிப் பாடலில் பாடியுள்ளார் கபிலர்.

தன் கற்பை உயிரினும் பெரிதாய்ப் போற்றும் மங்கைகள் வேறொருவன் பார்வை தன் மேல் பட்டாலே தன்னுயிரை மாய்த்துக் கொள்வர். அதேபோல, இம்மலரும் முகர்ந்து பார்த்தாலே வாடும் தன்மைக் கொண்டதாகத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, தமிழ்ப் பெண் குழந்தைகளுக்கு,

அபர்ணா, நிர்வாணா என்று கொச்சையாகப் பெயர் சூட்டுவதை விட்டொழித்து விட்டு,

அனிச்சா, அனிச்சையா என இம்மலரின் பெயரைச் சூட்டுவது மிகப் பொருத்தமாகவும், பொருள்மிக்கதாகவும் இருக்கும்.
இப்பெயர்களின் உட்பொருளானது அப்பெண் ஒரு கற்புக்கரசி என்பதாகும்.