இருக்கும் காலங்களில் அன்பு செலுத்தி*

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:28 | Best Blogger Tips


மாட்டு வண்டிக்கு

உயிர் இல்லை

மாட்டுக்கு

உயிர், அறிவு

இரண்டும் உண்டு

ஆனால்.....

*வண்டிக்காரன்*

உயிரில்லாத

வண்டியை....

அறிவுள்ள மாட்டுடன் பூட்டி..

எந்த இடம் செல்ல

வேண்டும்...

என்பதை தீர்மானித்து,

வண்டியை

செலுத்துவான்.

*எவ்வளவு தூரம்...*

*எவ்வளவு நேரம்...*

*எவ்வளவு பாரம்...*

அனைத்தையும்

*தீர்மானிப்பவன் வண்டிக்காரன் மட்டுமே*!

அறிவிருந்தும்.....

சுமப்பது தானாக இருந்தாலும்

மாட்டால்

ஒன்றும் செய்ய

இயலாது...

அதுபோல....

உடம்பு என்ற

ஜட வண்டியை

ஆத்மா, உயிர்

என்ற மாட்டுடன் பூட்டி

*இறைவன் என்ற வண்டிக்காரன்*

ஓட்டுகிறான்....

*அவனே தீர்மானிப்பவன்*

*அவன் இயக்குவான்..*

*மனிதன் இயங்குகிறான்*

👉*எவ்வளவு காலம்..

👉எவ்வளவு நேரம்..

👉எவ்வளவு பாரம்..

*தீர்மானிப்பது இறைவனே*

இதுதான்

நமக்காக

இறைவன்

போட்டிருக்கும்

*டிசைன்..*!

இதுதான்

இறைவன் நமக்கு

தந்திருக்கும்

*அசைன்மென்ட்*..!

பயணம் முடிந்ததும் உடம்பு என்ற ஜட வண்டியிலிருந்து ஆத்மா, உயிர் என்ற மாட்டை பிரித்து விடுவார் இறைவன்!

*இதை உணர்ந்தவனுக்கு துயரம் இல்லை..*

*இதை*

*உணராதவனுக்கு*

*அமைதி இல்லை*.

*இருக்கும் காலங்களில் அன்பு செலுத்தி*

*இனியது செய்வோமே*!. 

நன்றி இணையம்