சோள அரிசி (செஞ்சோளம், வெள்ள சோளம்) கம்பு அரிசி கேழ்வரகரிசி திணை அரிசி சாமை அரிசி வரகரிசி பனி வரகரிசி குதிரைவாலி அரிசி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:15 | Best Blogger Tips
Photo: சோள அரிசி (செஞ்சோளம், வெள்ள சோளம்) கம்பு அரிசி கேழ்வரகரிசி திணை அரிசி சாமை அரிசி வரகரிசி பனி வரகரிசி குதிரைவாலி அரிசி

இவைகளை நம்மில் எத்தனை பேர் அறிவோம்? பயன்படுத்தியிருப்போம்?

நெல்லரிசி சோற்றை மட்டுமே உண்டு சர்க்கரை நோய்,இதய நோய் என நோய்களில் முதலிடத்தில் இருக்கும் தமிழன் அந்தக்காலத்திலும் இதைத்தான் உணவுப்பழக்கமாக கொண்டிருந்தானா?

நெல்லரிசியும் ஒரு உணவாக இருந்ததே தவிர அதுவே முழு உணவு இல்லை.

சோள அரிசி (செஞ்சோளம், வெள்ள சோளம்) கம்பு அரிசி கேழ்வரகரிசி திணை அரிசி சாமை அரிசி வரகரிசி பனி வரகரிசி குதிரைவாலி அரிசி இவற்றுக்கு இடையே நெல்லரிசி சோறும் நம் முன்னோர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர்.

இன்று நாம் அரிசிக்கு மாற்றாக பயன்படுத்தும் கோதுமையை விட பல வழிகளில் உயர்ந்தவை இந்த சிறு தானியங்கள்.கோதுமையை விட இவற்றில் 10 சதவிகிதம் சர்க்கரைச்சத்து குறைவு, நார்ச்சத்து அதிகம்.

ஆனால் என்ன காரணத்தினாலோ இவை எல்லாம் நம் பயன்பாட்டில் இருந்து மறைந்து போய் விட்டன.அரிசிக்கு மாற்றாக கோதுமையை நாடுகிறோம்.

விளைவு,முன்பு பரவலாக எல்லாப்பகுதிகளிலும் பயிரிடப்பட்ட இந்த சிறுதானியங்கள் இன்று பயிரிடப்படும் பரப்பளவு குறைந்து விட்டது.

இன்று இந்த சிறுதானியங்கள் குறித்து ஏற்பட்ட விழிப்புணர்வால் இதை மக்கள் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர்.ஆனால் விலை எங்கோ போய் விட்டது.

ஒருகாலத்தில் நெல்லரிசி பயன்படுத்த முடியாத ஏழை,எளியவர்களின் உணவாக இருந்த இந்த சிறு தானியங்கள் இன்று வசதிபடைத்தவர்களின் உணவாக மாறி விட்டது.


நம் மண்ணுக்கே உரித்தான இந்த தானியங்களை மட்டுமா நாம் தொலைத்தோம்? கூடவே நம் இனத்தின் ஆரோக்கியத்தையும்தானே?

அருமையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த சிறு தானியங்கள் இருக்கும்போது,வெளி நாட்டு மக்காச்சோள சிப்ஸூம்,ஓட்ஸூம் எதற்கு?

நம் பாரம்பரிய உணவுமுறைக்கு திரும்புவோம்,உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்திடுவோம்.அதுமட்டுமல்ல மீண்டும் இந்த சிறுதானியங்கள் பயிரிடும் ஆர்வம் விவசாயிகளுக்கு அதிகரிக்கும்,அதிகரித்தால் அது எல்லோருக்கும் விலை குறைவாக கிடைத்திடும் அல்லவா?

சிறுதானியங்களை இனி அடிக்கடி பயன்படுத்திட முனைந்திடுவோமா?


இவைகளை நம்மில் எத்தனை பேர் அறிவோம்? பயன்படுத்தியிருப்போம்?

நெல்லரிசி சோற்றை மட்டுமே உண்டு சர்க்கரை நோய்,இதய நோய் என நோய்களில் முதலிடத்தில் இருக்கும் தமிழன் அந்தக்காலத்திலும் இதைத்தான் உணவுப்பழக்கமாக கொண்டிருந்தானா?

நெல்லரிசியும் ஒரு உணவாக இருந்ததே தவிர அதுவே முழு உணவு இல்லை.

சோள அரிசி (செஞ்சோளம், வெள்ள சோளம்) கம்பு அரிசி கேழ்வரகரிசி திணை அரிசி சாமை அரிசி வரகரிசி பனி வரகரிசி குதிரைவாலி அரிசி இவற்றுக்கு இடையே நெல்லரிசி சோறும் நம் முன்னோர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர்.

இன்று நாம் அரிசிக்கு மாற்றாக பயன்படுத்தும் கோதுமையை விட பல வழிகளில் உயர்ந்தவை இந்த சிறு தானியங்கள்.கோதுமையை விட இவற்றில் 10 சதவிகிதம் சர்க்கரைச்சத்து குறைவு, நார்ச்சத்து அதிகம்.

ஆனால் என்ன காரணத்தினாலோ இவை எல்லாம் நம் பயன்பாட்டில் இருந்து மறைந்து போய் விட்டன.அரிசிக்கு மாற்றாக கோதுமையை நாடுகிறோம்.

விளைவு,முன்பு பரவலாக எல்லாப்பகுதிகளிலும் பயிரிடப்பட்ட இந்த சிறுதானியங்கள் இன்று பயிரிடப்படும் பரப்பளவு குறைந்து விட்டது.

இன்று இந்த சிறுதானியங்கள் குறித்து ஏற்பட்ட விழிப்புணர்வால் இதை மக்கள் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர்.ஆனால் விலை எங்கோ போய் விட்டது.

ஒருகாலத்தில் நெல்லரிசி பயன்படுத்த முடியாத ஏழை,எளியவர்களின் உணவாக இருந்த இந்த சிறு தானியங்கள் இன்று வசதிபடைத்தவர்களின் உணவாக மாறி விட்டது.


நம் மண்ணுக்கே உரித்தான இந்த தானியங்களை மட்டுமா நாம் தொலைத்தோம்? கூடவே நம் இனத்தின் ஆரோக்கியத்தையும்தானே?

அருமையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த சிறு தானியங்கள் இருக்கும்போது,வெளி நாட்டு மக்காச்சோள சிப்ஸூம்,ஓட்ஸூம் எதற்கு?

நம் பாரம்பரிய உணவுமுறைக்கு திரும்புவோம்,உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்திடுவோம்.அதுமட்டுமல்ல மீண்டும் இந்த சிறுதானியங்கள் பயிரிடும் ஆர்வம் விவசாயிகளுக்கு அதிகரிக்கும்,அதிகரித்தால் அது எல்லோருக்கும் விலை குறைவாக கிடைத்திடும் அல்லவா?

சிறுதானியங்களை இனி அடிக்கடி பயன்படுத்திட முனைந்திடுவோமா?

Via FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.