ஆடி மாதத்தின் சிறப்பு

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:56 | Best Blogger Tips
Photo: ஆடி மாதத்தின் சிறப்பு;
-----------------------------------
தமிழ் மாதங்கள் மொத்தம் 12 ஆகும்.இதில் உத்திராயணம்,தட்சாயாணம் என இரு பிரிவுகள் உள்ளன.சூரியன் வடக்கு திசையில் சாரம் செய்யும் பொழுது உத்திராயணம் காலமும்,தென் திசையில் சாரம் செய்யும் பொழுது தட்சாயணம் காலமும் ஆகும்.ஆடி முதல் மார்கழி வரை தட்சாயண காலமாகும்.தை முதல் ஆனி வரை உத்திராயண காலமாகும்.

தட்சாயண புண்னிய காலத்தின் முதல் மாதமான ஆடிமாதத்தில் சூரியனனின் கதிர்கள் பூமியில் நல்ல கோணத்தில் விழகிறது.பிரான வாயு அதிகமாகவும் கிடைக்கிறது.ஆடிமாதத்தின் பருவ நிலைகள் விவசாய வேலைகளுக்கும்,பூமிக்கும் உகந்ததாக உள்ளது.அதனால்தான் ”ஆடி பட்டம் தேடி விதை”என்பார்கள்.

ஆடி மாதத்தை சக்திமாதம் என பண்டைய ஜோதிட நூல்கள் சொல்கின்றது.ஆடிமாதம் வரும் வெள்ளிகிழமையும்,செவ்வாய்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்த நாட்களாகும்.மேலும் சக்தியின் அம்சமான மாரியம்மனுக்கு உகந்த மாதமும் ஆடி ஆகும்.

இந்த மாதத்தில் வரும் ஆடி 18-ம் பெருக்கு சிறப்புவாய்ந்ததாகும்.மேலும் ஆடி அமாவாசையும் முன்னோர்களை நினைவு கூறவும்,திதி கொடுக்கவும் சிறப்பு வாய்ந்த நாளாகும்.
ஸ்ரீ ஆண்டாள் பிறந்தது ஆடி மாதமாகும்.பூமி தேவி அவத்ரித்தது ஆடிமாதமாகும்.

என்னதான் இந்த மாததிற்கு சிறப்புகள் இருந்தாலும்,புதுமண தம்பதிகளுக்கு பிடிக்காத மாதம் ஆடி மாதமாகும்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன் .
தமிழ் மாதங்கள் மொத்தம் 12 ஆகும்.இதில் உத்திராயணம்,தட்சாயாணம் என இரு பிரிவுகள் உள்ளன.சூரியன் வடக்கு திசையில் சாரம் செய்யும் பொழுது உத்திராயணம் காலமும்,தென் திசையில் சாரம் செய்யும் பொழுது தட்சாயணம் காலமும் ஆகும்.ஆடி முதல் மார்கழி வரை தட்சாயண காலமாகும்.தை முதல் ஆனி வரை உத்திராயண காலமாகும்.

தட்சாயண புண்னிய காலத்தின் முதல் மாதமான ஆடிமாதத்தில் சூரியனனின் கதிர்கள் பூமியில் நல்ல கோணத்தில் விழகிறது.பிரான வாயு அதிகமாகவும் கிடைக்கிறது.ஆடிமாதத்தின் பருவ நிலைகள் விவசாய வேலைகளுக்கும்,பூமிக்கும் உகந்ததாக உள்ளது.அதனால்தான் ”ஆடி பட்டம் தேடி விதை”என்பார்கள்.

ஆடி மாதத்தை சக்திமாதம் என பண்டைய ஜோதிட நூல்கள் சொல்கின்றது.ஆடிமாதம் வரும் வெள்ளிகிழமையும்,செவ்வாய்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்த நாட்களாகும்.மேலும் சக்தியின் அம்சமான மாரியம்மனுக்கு உகந்த மாதமும் ஆடி ஆகும்.

இந்த மாதத்தில் வரும் ஆடி 18-ம் பெருக்கு சிறப்புவாய்ந்ததாகும்.மேலும் ஆடி அமாவாசையும் முன்னோர்களை நினைவு கூறவும்,திதி கொடுக்கவும் சிறப்பு வாய்ந்த நாளாகும்.
ஸ்ரீ ஆண்டாள் பிறந்தது ஆடி மாதமாகும்.பூமி தேவி அவத்ரித்தது ஆடிமாதமாகும்.

என்னதான் இந்த மாததிற்கு சிறப்புகள் இருந்தாலும்,புதுமண தம்பதிகளுக்கு பிடிக்காத மாதம் ஆடி மாதமாகும்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன் .