குழந்தை வரம் கொடுக்கும் இயற்கை மூலிகைகள்!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:16 PM | Best Blogger Tips


குழந்தை வரம் கொடுக்கும் இயற்கை மூலிகைகள்!
இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிட்டு உடலையும் மனதையும் நோய்க்கு ஆளாக்கிவிடுவார்கள். ஆண்மை குறைபாடோ, மலட்டுத்தன்மையோ இந்த குறைபாடுகளை தீர்க்க இயற்கை மூலிகைகளிலேயே நிவாரணம் இருக்கிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் எளிதில் நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். குறையிருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்களேன்.

ஆண்மைக்கு ஜா குல்கந்து

காதலின் சின்னம் ரோஜா மலர். இதிலிருந்து தயாரிக்கப்படும் "குல்கந்து" இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குல்கந்து உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது.

தாது விருத்தி தரும் பூசணிக்காய்

பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த லேகியத்தை தினசரி சாப்பிட்டு வர உடல் வலிமை பெறுவதோடு பொலிவடையும் அதோடு தாது விருத்தி ஏற்படும். பூசணிக்காயின் விதைகள் ஆண்மை குறைபாட்டினை நீக்கும். இந்த விதைகளை சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியடையும்.




இனிமையான உறவுக்கு இலுப்பை பூ

இலுப்பை மரத்திலிருந்து கிடைக்கும் பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.மெலிந்த உடலுள்ளவர்கள் இலுப்பை பூக்களை பசும்பால் விட்டு அரைத்து காய்ச்சிய பாலுடன் சிறிது சர்க்கரை சேர்ந்து பருகி வந்தால் நாற்பத்தெட்டு நாட்களுள் உடம்பு தேறும். ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் பசும் பாலுடன் இலுப்பைப் பூ கஷாயத்தைச் சேர்த்து பருகினால் ஆண்மைக் குறைபாடு குணம் அடையும்


குழந்தை வரத்திற்கு ஆலம்பழம்
சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின் மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும். மரத்தில் கனிந்துள்ள பழங்களை பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலரவைக்கவேண்டும். பின்னர் அவற்றை நன்றாக இடித்து பொடி செய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் அந்த பொடியை போட்டுவைத்துக்கொள்ளவேண்டும். தினமும் காலை, மாலை இரண்டு வேலை பசும்பாலை காய்ச்சி அதில் இந்த பொடியை ஒரு கரண்டி போட்டு கலந்து குடிக்கவேண்டும். 48 நாட்கள் இந்த பொடியை குடித்து வர மலடு நீங்கி குழந்தை பிறக்கும்.

மெனோபாஸ் சிக்கல்கள் தீர்க்கும் அப்ரமாஞ்சி

மணக்கால் அய்யம்பேட்டை | 12:09 PM | Best Blogger Tips
நோய் தாக்கினாலே இந்த காலத்தில் மருத்துவமனையை நோக்கி ஓடவேண்டியுள்ளது. பல மருத்துவமனைகள் சிகிக்சை என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் காசை கல்லா கட்டுவதில்தான் குறியாக உள்ளன. நூற்றாண்டுகளுக்கு முன்னர் வீட்டருகில் வளரும் தாவரங்களே மருந்துப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. அப்ரமாஞ்சி என்னும் தாவரம் மிகச்சிறந்த மருத்துவ பயன் கொண்டதாக இருந்துள்ளதாக பல்வேறு நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அப்ரமாஞ்சி தாவரத்தின் பேரினப்பெயர் லத்தின் மொழியில் ' நலம் தருவது' என்னும் பொருள் கொண்டதாகும். முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த டயஸ் கொரிடிஸ் இத்தாவரத்தினைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள், இத்தாவரத்தின் மருத்துவ குணங்களை உறுதிப்படுத்தியுள்ளன. 1952 -ம் ஆண்டில் தாவர மருந்துகள் பற்றிய நூலினை வெளியிட்டவர் ஃபெரியஸ் காலுமினா. இவர் தனக்கிருந்த வலிப்பு நோயினை இத்தாவரத்தின் மூலம் குணப்படுத்திக் கொண்டதாக இந்நூலில் தெரிவித்துள்ளார்.
அப்ரமாஞ்சி தாவரம் ஈரமான இடங்களில் இயற்கையாக வளரும். வடக்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த இந்த தாவரம் மருந்திற்காக மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் பயிரிடப்படுகிறது. மேற்கு இமாலயத்திலும், காஷ்மீரிலும் 2400 - 2700 மீட்டர் உயரம் வரை வளர்கிறது. விதைகள் மூலம் வசந்த காலத்தில் பயிரிடப்படும் இத்தாவரத்தின் தரையடித்தண்டு 2 ஆண்டுகளுக்குப்பிறகு இலையுதிர் காலத்தில் சேகரிக்கப்படுகிறது.
செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்
இத்தாவரத்தில் எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் உள்ளன. போர்னைல் அசிடேட், பீட்டர் கேரிபில்லின், இரிடாய்டுகள், வெலிபோட்டிரியேட்கள், வால்டிரேட், ஐசோவால்டிரேட் மற்றும் ஆல்கலாய்டுகள், ஆகியவை உள்ளன. இவை மருத்துவ குணங்களின் அடிப்படையாகும்.
மனநோய் போக்கும்
தரையடித்தண்டு மற்றும் வேர்கள் மருத்துவப் பயன் உடையவை. தரையடித்தண்டும் வேரும் இணைந்து வெலிரியன் என்னும் மருந்தாகப் பயன்படுகிறது. இவை தூக்கத்தை தூண்டும். தசையிறுக்கத்தை தளர்த்தி சுகமளிக்கும். படபடப்பு மற்றும் வலியுடைய உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். மைய நரம்பு மண்டலத்தின் மீது செயல்புரிகிறது. அஜீரணம் போக்கும். வலுவேற்றியாகவும் செயல்படுகிறது. செயல்தூண்டுவி, காய்ச்சல், மனஇறுக்கம், மனநோய், நரம்பு தளர்ச்சி, பயஉணர்வு முதலியவற்றில் மருந்தாகப் பயன்படுகிறது.
மெனோபாஸ் சிக்கல்கள் தீரும்
இமாலயப்பகுதிகளில் வளரும் V.Walichi என்னும் சிற்றினம் வெலிரியன் போன்றே பயன்படுத்தப்படுகிறது. ஆப்ரிக்காவில் V.Capensis என்னும் சிற்றினம் வலிப்புநோய் மற்றும் மனநோய் தீர்க்கப் பயன்படுகிறது.
சீனா மற்றும் இந்தோனேசியாவில் காணப்படும் V.hardwickil தசைப்பிடிப்பு நோய்களுக்கு மருந்தாகிறது. வட அமெரிக்காவில் உள்ள மினோமினி பழங்குடியினர் V.Ulginosa என்னும் சிற்றினத்தின் மருத்துவப் பயன் அறிந்துள்ளனர். மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் கால சிக்கல்களை குணப்படுத்த இத்தாவரத்தினை பயன்படுத்துகின்றனர்.

பெண்களை உற்சாகப்படுத்தும் ஊட்டச்சத்து உணவுகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:09 PM | Best Blogger Tips
மனிதர்களின் வாழ்க்கை சுழற்சியில் ஹார்மோன்களின் பங்கு முக்கியமானது. ஹார்மோன்கள் சரியாக சுரந்தால் மட்டுமே பாதிப்புகள் ஏற்படாது. ஈஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன் பெண்களின் கருவுறுதலுக்கும், மெனோபாஸ் காலத்தில் மனம் தளர்வடையாமல் இருப்பதற்கு உதவுகிறது. நல்ல கொலஸ்ட்ராலையும், தீய கொலஸ்ட்ராலையும் ஒருகட்டுப்பாட்டில் வைப்பது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன். இது நிரந்தரமாக மாதவிடாய் நிற்கும் பருவத்தில் இதன் சுரப்பு குறைந்துவிடும். இதனால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த முடியாமல் போகும். தீய கொலஸ்ட்ரால் அதிகரித்து இதய நோய்கள் உண்டாகும்.
ஆஸ்டியோ போரோசிஸ்
ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் கால்சியம் உடலில் படிவதற்கு உதவுகிறது. ஈஸ்ட்ரோஜன் குறைந்தால் எலும்பிலிருந்த கால்ஷியம் குறையும். நாளடைவில் எலும்புகள் வலுவிழந்து எலும்புகள் அடிக்கடி முறிய நேரிடும். மெனோபாஸ்க்கு பிறகு வரும் முதல் அல்லது இரண்டாவது ஆண்டுகளில் அதிகமான எலும்பு இழப்பு நேருகிறது. ஆசிய பெண்கள் தான் அதிக அளவு ஆஸ்டியோபொராசிஸ் நோய்க்கு உள்ளாகுகிறார்கள். அதேசமயம் ஈஸ்ட்ரோஜன் அதிகம் சுரப்பதால் மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம், சினைப்பை கட்டிகள் ஆகியவை ஏற்படுகின்றன. எனவே, சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு, ஹார் மோன்களை எவ்வாறு சமநிலையில் வைத்துக் கொள்வது என்பதற்காக சில ஆலோசனைகளை கூறியுள்ளனர் உணவியல் நிபுணர்கள்.
பைட்டோ ஈஸ்ட்ரோஜன்
உணவுகளில் இயற்கையாக காணப்படும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன், பெண்களுக்கான ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. அனைத்து வகை பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றிலும், ஈஸ்ட்ரோஜன் காணப்படுகிறது. ஆனால், அவை “ஐசோஃப்ளாவின்’ என்ற வடிவிலேயே அதிக பலன் தருகிறது. இவை, சோயா மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றில் அதிகளவு காணப்படுகிறது.
சென்ஈஸ்ட்ரோஜன் உணவுகள்
ஈஸ்ட்ரோஜன் போன்ற ரசாயனமான "சென்ஈஸ்ட்ரோஜன்கள்' பூச்சி மருந்துகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் காணப்படுகின்றன. இவை, பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை தோற்றுவிக்கின்றன. உடல் எடை அதிகம் உடையவர்களுக்கு, இந்த ரசாயனம் அதிகளவு காணப்படும்.
கொழுப்பு நிறைந்த உணவுகளான வெண்ணெய் மற்றும் இறைச்சி ஆகியவற்றை பிளாஸ்டிக் உறையில் சேமிப்பது, பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் உணவுகளை வைத்து, அவற்றை மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்துவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அதிகளவு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது, உடலில் அதிகளவு, "சென்ஈஸ்ட்ரோஜன்கள்' சேருகின்றன என்பதால் அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.
பழங்கள் காய்கறிகள்
பழங்கள் மற்றும் காய்கறிகளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் காணப்படுகிறது. எனவே தினமும், இரண்டு அல்லது மூன்று பழங்கள் சாப்பிடுவதோடு, சாலட்கள் மற்றும் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ், சோயா மற்றும் பருப்பு வகைகளை அதிகளவு சாப்பிட வேண்டும். இவை உடலில் சுரக்கும் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை வெளியேற்ற உதவுகிறது. ரசாயன கலப்பின்றி இயற்கை முறையில் உருவாக்கப்படும் உணவுகள், உடலுக்கு சிறந்தது. இவற்றால், கல்லீரல் நன்கு செயல்பட்டு, அதிகப்படியான ஹார்மோன்களை வெளியேற்ற உதவுகிறது.
ஓமேகா 3 உணவுகள்
ஒமேகா – 3 கொழுப்பு நிறைந்த உணவுகளை முறையாக சாப்பிட வேண்டும். இவை, எண்ணெய் சத்து நிறைந்த மீன்கள், பாதாம், அக்ரூட் போன்ற பருப்பு வகைகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் பூசணிக்காய் ஆகியவற்றில் அதிகளவு காணப்படுகிறது. மாதவிடாயின் போது ஏற்படும் வலியை தடுக்கும் தன்மை இந்த உணவுகளில் காணப்படுகிறது. தினமும் 2.5 லி., முதல் 3 லி., வரை தண்ணீர் குடிக்க வேண்டும். மூலிகை டீ மற்றும் இளநீர் ஆகியவையும் குடிக்கலாம். டீ, காபி போன்ற காபின் நிறைந்த பானங்களை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. காபின், உடலில் ஹார்மோன் சமநிலையை பராமரிக்கும் ஊட்டச்சத்தின் ஆற்றலை குறைக்கும் வாய்ப்பு உள்ளது.
நார்ச்சத்து உணவுகள்
பெண்களுக்கான ஹார்மோன் களை சமநிலைப்படுத்துவதில், நார்ச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களில் காணப்படும் நார்ச்சத்து, ஈஸ்ட்ரோஜன் அளவை குறைக்கிறது. உடலில் காணப்படும் பழைய ஈஸ்ட்ரோஜனை வெளியேற்றும் நிகழ்வு, மற்ற பெண்ளோடு ஒப்பிடும் போது, அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடும் பெண்களின் உடலில் மூன்று மடங்கு அதிகமாக செயல்படுகிறது. வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உணவுகளை அதிகம் உண்ணவேண்டும் இதனால் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு சரிவிகிதமாக இருக்கும்.
ஈஸ்ட்ரோஜனை சமப்படுத்தும் யோகா
தினசரி அரை மணிநேரம் தியானம் மற்றும் யோகா செய்வதன் மூலம் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு சரிவிகிதமாக இருக்கும். அட்ரீனலினை ஊக்குவிக்கும். மேற்கண்ட ஆலோசனைகளை பின்பற்றினால் ஆரோக்கியமாக வாழலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

சீக்கிரம் மெனோபாஸ் வந்தால் மாரடைப்பு ஏற்படும் : ஆய்வில் எச்சரிக்கை

மணக்கால் அய்யம்பேட்டை | 12:08 PM | Best Blogger Tips
பெண்களுக்கு 45 வயதிற்குமேல் மெனொபாஸ் வருவதுதான் அவர்களின் உடல்நலத்திற்கு ஏற்றது. அதற்கு முன்னதாக மெனோபாஸ் வருவது இதயநோய், பக்கவாத நோய்க்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
அமெரிக்காவில் இது தொடர்பாக நடைபெற்ற ஆய்வு ஒன்றில் 2,509 பெண்கள் பங்கேற்றனர். இதில் 693 பேர் 46 வயதிற்கு முன்னபாகவே மெனோபாஸ் காலத்தை எட்டியவர்கள். அவர்களின் உடல் எடை அதிகம் காணப்பட்டது. நீரிழிவு நோயினாலும் அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களின் பிஎம்ஐ சராசரி அளவை விட அதிகம் காணப்பட்டது.
சீக்கிரமே மெனோபாஸ் பருவத்தை அடையும் ஐரோப்பா, ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஆசியாவைச் சேர்ந்த பெண்களுக்கு தாமதமாக மெனோபாஸ் பருவத்தை அடைபவர்களை விட இதயநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மாரடைப்பு, இதயநோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ குறிப்பேடுகளை ஆய்வு செய்ததின் மூலம் இந்த உண்மை தெரியவந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவு ‘தி நார்த் அமெரிக்கன் மெனோபாஸ் சொசைட்டி' இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மெனோபாஸ் காலத்தை எளிதாக எதிர்கொள்ளலாம்!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:08 PM | Best Blogger Tips
பெண்கள் தங்களின் பருவம் எய்தும் காலத்தை எவ்வாறு ஒருவித அச்சத்துடன் எதிர்கொள்கின்றனரோ அதேபோல மெனோபாஸ் பருவத்தையும் ஒருவித கலவரத்துடனே எதிர்கொள்கின்றனர். அசதி, மனச்சோர்வு, இனிமேல் நமக்கு ஒன்றுமே இல்லையோ என்ற ஒருவித விரக்தியான நிலைக்கு சென்றுகின்றனர். இந்த கால கட்டத்தில் உடல்ரீதியாக ஏற்படும் சிக்கல்களை சமாளித்தாலே மனரீதியாக ஏற்படும் சிக்கல்களை எளிதாக சமாளித்துவிடலாம் என்கின்றனர் நிபுணர்கள். மெனோபாஸ் காலத்தில் என்ன உணவுகளை உட்கொள்ளவேண்டும் என்றும் உணவியல் நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.
நார்ச்சத்துள்ள உணவுகள்
வயதாக வயதாக உடல் தளர்வடைந்து விடும். ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் மட்டுமே உடல் தளர்ச்சியை போக்க முடியும். நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும். குறைந்த கொழுப்பு சத்துள்ள உணவுகளை உட்கொள்வது அவசியம். காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மெனொபாஸ் காலத்தை சமாளிக்க உதவும்.
கால்சியம் உணவுகள்
வயதான காலத்தில் எலும்புகள் வலிமை குன்றிவிடும். எனவே கால்சியம் சரியான அளவில் இருந்தால் மட்டுமே எலும்பு உடைதல் நோய்களில் இருந்து பாதுகாக்க முடியும். எனவே பால் சார்ந்த பொருட்களில் உயர்தர கால்சியம் சத்துக்கள் காணப்படுகின்றன. அவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
சோயாபீன்ஸ்சில் உயர்தர நார்ச்சத்து அடங்கியுள்ளது. இதில் உள்ள டோஃபு தேவையான அளவு கால்சியம் உள்ளது. இதில் உள்ள தாவர ஈஸ்ட்ரோஜன், ஐசோஃப்ளோவின் பெண்களுக்கு ஏற்றது.
இரும்புச்சத்து
ரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவாக இருந்தால் ரத்தசோகை நோய் தாக்குதல் ஏற்படும். இதற்கு இரும்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது அவசியம். மீன், கோழி, கறி, பச்சைக் காய்கறிகள், கீரைகள் ஆகியவைகளில் உயர்தர இரும்புச்சத்து அடங்கியுள்ளன. இவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ரத்தசோகை ஏற்படாமல் தவிர்க்கலாம்.
வைட்டமின், புரதம்
வைட்டமின் பி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய உணவுகளை உட்கொள்வதன் மூலம் மெனோபாஸ் காலத்திய சோர்வினை போக்க முடியும். உயர்தர புரதச்சத்துள்ள உணவுகள், பயறு மற்றும் பருப்பு வகைகள் அடங்கிய உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கலர் கலராக உள்ள பழங்கள், காய்கறிகளில் எண்ணற்ற வைட்டமின்கள், தாது உப்புகள், நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடென்ட்கள் அடங்கியுள்ளன. இவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
பீன்ஸ்சில் உயர்தர நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளன. தாது உப்புக்கள், கால்சியம், போலிக் அமிலம், வைட்டமின் பி-6 அடங்கியுள்ளன. எனவே மெனோபாஸ் பருவத்தை எட்டும் பெண்கள் அதிக அளவில் பீன்ஸ் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரை.
கழிவுகளை வெளியேற்றும் தண்ணீர்
மெனோபாஸ் பருவத்தை எட்டியவர்கள் அதிக அளவு தண்ணீர் குடிக்கவேண்டும். இது உடலில் உள்ள கழிவுகளை போக்குகிறது. சருமத்தை புத்துணர்ச்சியாக்கும்.
மேலே கூறியுள்ள உணவுகளை சரியாக உட்கொண்டால் இதுவும் கடந்து போகும் என்று மெனோபாஸ் பருவத்தை ஈசியாக கடந்து விடலாம் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.

தினசரி 6000 அடி நடங்க ஆரோக்கியமா இருக்கலாம்!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:07 PM | Best Blogger Tips
தினசரி 6000 அடிகள் நடக்கும் பெண்களுக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம், இதயநோய்கள் ஏற்படாது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
walk 6 000 steps daily a healthier life
பெண்கள் மெனோபாஸ் பருவத்தை எட்டிய உடனே நீரிழிவு தொடங்கி இதயநோய்கள், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அழையா விருந்தாளிகளாக வந்து குடியேறிவிடுகின்றன. உடல் நோய்களோடு மனஅழுத்தமும் சேர்ந்து பெண்களை பாடாய் படுத்திவிடும். உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இந்த நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.இதேபோல் மெனோபாஸ் காலத்தை எட்டிய பெண்களின் நலனுக்காக பிரேசில் நாட்டில் நாட்டில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 45 வயது முதல் 72 வயதுடைய 292 பெண்கள் பங்கேற்றனர். அவர்களின் உடல் எடை பரிசோதிக்கப்பட்டது. அடி வயிறு கொழுப்பு, ரத்த சர்க்கரை ஆகியவை கணக்கெடுக்கப்பட்டன. பின்னர் ஆய்வில் பங்கேற்ற பெண்களை தினசரி 6 ஆயிரம் அடிகள் நடக்குமாறு பணிகள் கொடுக்கப்பட்டன.
4 வாரங்களுக்குப் பின்னர் அவர்களின் உடல் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் நோய்களான நீரிழிவு, இதயம் தொடர்பான நோய்கள் பாதிப்பு ஏற்படுவது குறைந்து இருந்தது. அவர்களின் ஹார்மோன் சுரப்பும் சீராக இருந்தது தெரியவந்தது.
இதன்மூலம் நன்றாக நடந்து ஓடி ஆடி வேலைபார்க்கும் பெண்களுக்கு நோய்கள் ஏற்படுவது குறைகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உட்கார்ந்த நிலையிலேயே இருக்கும் பெண்களுக்குத்தான் நோய் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. எனவே தினசரி 6000 அடி நடப்பவர்கள் நோய்களில் இருந்து தப்பிவிடுகிறார்கள் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

பனிகாலத்துல சருமம் பொலிவிழந்து இருக்கா? ஆரஞ்சு ஃபேஸ் பேக் போடுங்க...

மணக்கால் அய்யம்பேட்டை | 12:06 PM | Best Blogger Tips
சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு குளிர் காலத்தில் அதிகம் கிடைக்கும். இது மிகவும் சுவையோடு இருப்பதோடு, இதனை வைத்து முகத்திற்கு ஃபேஸ் பேக்குகளை போட்டால், சருமம் நன்கு இறுக்கமடைந்து, இளமையோடு காணப்படும். அதிலும் இது இந்த குளிர்காலத்தில் அதிகம் கிடைப்பதாலும், சருமம் அதிகம் பொலிவிழந்து காணப்படுவதாலும், கடைகளில் அதிகம் விற்கும் ஆரஞ்சு பழங்களை வாங்கி, பழத்தை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தைப் பெறுவதோடு, அதன் தோலை தூக்கிப் போடாமல், அவற்றை வைத்து சருமத்தை அழகுப்படுத்தலாம். சரி, அப்போது அந்த ஆரஞ்சு பழத்தை வைத்து எப்படியெல்லாம் சருமத்தை அழகாக்கலாம் என்று பார்ப்போமா!!!
homemade orange face packs
ஆரஞ்சு பேக்: இந்த ஃபேஸ் பேக் போடுவது மிகவும் எளிது. இதற்கு எந்த ஒரு பொருளையும் சேர்த்து அரைத்து போட வேண்டுமென்ற அவசியம் இல்லை. இந்த ஃபேஸ் பேக்கில் ஆரஞ்சு பழத்தில் சாறு மற்றும் உள்ளே உள்ள பல்ப்பை வைத்து மசாஜ் செய்து, 5 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால், சருமம் நன்கு இறுக்கமடைந்து, அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி, சருமத்தை பொலிவாக்கி, இளமைத் தோற்றத்தை தக்க வைக்கும். இதனை தினமும் குளிப்பதற்கு முன் செய்து வந்தால் நல்லது.
ஆரஞ்சு ஜூஸ் மற்றும் மில்க் கிளின்சர்: சருமத்தை சுத்தம் கிளின்சர் மிகவும் முக்கியமானது. அதிலும் வீட்டிலேயே கிளின்சர் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள், கரும்புள்ளிகள், அழுக்குகள் போன்றவற்றை நீக்கும். அதற்கு ஆரஞ்சு ஜூஸ் உடன், மில்க் கிளின்சரை கலந்து முகத்தில் தடவி ஒரு நிமிடத்திற்கு மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமம் நன்கு ஈரப்பசையுடன், பளிச்சென்று காணப்படும்.
ஆரஞ்சு தோல் மற்றும் தயிர்: இந்த வகையான ஃபேஸ் ஸ்கரப் மிகவும் பிரபலமானது. இதனை ஆண்களும் செய்யலாம். அந்த ஸ்கரப்பிற்கு ஆரஞ்சு பழத்தின் தோலை வெயிலில் காய வைத்து, பின் அதனை பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் ஒரு டீஸ்பூன் தயிருடன், 1/2 டீஸ்பூன் ஆரஞ்சு பவுடரை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து, பின் காய வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். கரும்புள்ளிகள், முகப்பரு போன்றவை இருப்பவர்கள், இந்த கலவையுடன் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்த்து, செய்தால் நல்லது.
ஆரஞ்சு ஜூஸ், எலுமிச்சை மற்றும் தயிர்: எலுமிச்சை மற்றும் தயிர் தான் வீட்டில் தயாரிக்கும் ஃபேஸ் பேக்கிற்கு மூலதனப் பொருள். ஆகவே அத்துடன் சிறிது ஆரஞ்சு ஜூஸை சேர்த்து, முகத்திற்கு போட்டால், சருமம் நன்கு பொலிவுடன் அழகாகக் காணப்படும். மேலும் சருமத்தில் இருக்கும் பழுப்பு நிறமும் மறைந்துவிடும்.
ஆரஞ்சு தோல் மற்றும் ஓட்ஸ்: இது ஒரு ஈஸியான ஒரு ஸ்கரப். இந்த ஸ்கரப்பை செய்தால் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் எளிதில் நீங்கிவிடும். அதற்கு ஆரஞ்சு தோலை காய வைத்து பொடி செய்து, ஓட்ஸ் உடன் கலந்து, வாரத்திற்கு இரண்டு முறை ஸ்கரப் செய்தால், சருமத்தில் இருக்கும் அழுக்குகள் வெளியேறி, கரும்புள்ளிகள் மற்றும் பழுப்பு நிற சருமம் போன்றவை நீங்கிவிடும்.
ஆகவே இந்த குளிர்காலத்தில் மேற்கூறிய ஃபேஸ் பேக்குகளை போட்டு, முகத்தை அழகாகவும் பொலிவோடும் வைத்துக் கொள்ளுங்கள்.

காரைக்கால்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:50 PM | Best Blogger Tips
காரைக்கால் காவிரியின் கழிமுகத்தில் கடற்கரை பகுதியின் மத்தியில் அமைந்திருக்கும் துறைமுக நகரம் ஆகும்.பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதி தான் காரைக்கால். பாண்டிச்சேரியில் இருந்து கிழக்காக சுமார் 120 கி.மி தொலைவில் இருக்கும் கடற்
கரை நகர். நாகைக்கும் காரைக்காலுக்கும் சுமார் 10 கிமி க்கும் குறைவு. காரைக்கால் என்ற சொல்லுக்கு "சுண்ணாம்பு கால்வாய்" "மீன் கால்வாய்" என பலரும் பொருள் கூறுவதால் இதன் பெயர் காரணம் சரிவர அறியப்படவில்லை.

கி.பி நான்காம் நூற்றாண்டில் பிறந்த மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமான புனிதவதி என்கிற காரைக்கால் அம்மையார் பிறந்த ஊர். இது பிரெஞ்சு நாட்டின் பகுதியாக இருந்தது. ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால் பிரெஞ்சுச் சொற்களை வெகு லாகவமாக அடித்தட்டு மக்களும் பயன்படுத்தும் இடமாகவும் இருக்கிறது. பிரெஞ்சு கட்டுப்பாட்டில் இருந்த இப்பகுதி 1 நவம்பர் 1954 இந்தியாவோடு இணைக்கப்பட்டது!

காவிரியின் கிளை ஆறான அரசலாறு இங்குதான் ஓடுகிறது.இங்கு ஆறும் கடலும் சந்திக்கும் இரண்டு முகத்துவாரங்கள் இருப்பதால் காரைக்காலைச் சுற்றி ஓடிக் கொண்டிருக்கும் அந்த‌ ஆறுகளே காரைக்காலையும் அதன் கிராமங்களையும் தமிழ்நாட்டிலிருந்து பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளன. காரைக்கால் நகரத்தில் பிரெஞ்சுக்காரகளால் அமைக்கப்பட்ட சாலைகள் பெரும்பாலும் நேர்கோட்டில் அமைந்தவை என்பது காரைக்காலின் ஓர் சிறப்பு. அது குறித்தான ஒரு சொலவடை, ‘நீதி அழகு இல்லையென்றாலும் வீதி அழகு உண்டு’ என்பதாகும்.

மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட யூனியன் பிரதேசமான காரைக்கால்தான் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் என்று இரண்டு மாவட்டங்களுக்குள் உள்ளடங்கிய பகுதிகளில் பெரிய நகரம் மட்டுமல்லாது தொழில் நகரமும்கூட‌. நாட்டின் தென்கிழக்கு கடற்கரையில் அனைத்து பருவ நிலைகளுக்கும் ஏற்ற முக்கிய உயர் தொழில்நுட்ப வசதி கொண்டது காரைக்கால் துறைமுகம். 680 கி.மீ. தென்கிழக்கு கடற்கரையில் சரியான மையத்தில் சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் நடுவில், இத்துறைமுகம் அமைந்துள்ளது.தமிழக கடற்கரை மத்திய‌ பகுதியில் மிக வேகமாக பெரிய அளவில் உருவாகிவரும் துறைமுக நகரமும்கூட‌. இங்கு, ஏராளமான இரும்பு உருக்கு ஆலைகள், டைல்ஸ் மற்றும் ரசாயண‌ தொழிற்சாலைகள் உள்ளன. மேலும் தேசிய தொழில்நுட்ப கழகம் (N.I.T), மருத்துவக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், வேளான் கல்லூரி, என்று கலை மற்றும் தொழில்நுட்பக்கல்லூரிகள் நிறைந்த நகரம்.

திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் காரைக்கால் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இடையனுக்கு இறைவன் காட்சியளித்தார் என்பது தொன்நம்பிக்கை. இங்குள்ள சனிபகவான் சந்நிதி பிரசித்தி பெற்றதாகும்.
காரைக்கால் காவிரியின் கழிமுகத்தில் கடற்கரை பகுதியின் மத்தியில் அமைந்திருக்கும் துறைமுக நகரம் ஆகும்.பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதி தான் காரைக்கால். பாண்டிச்சேரியில் இருந்து கிழக்காக சுமார் 120 கி.மி தொலைவில் இருக்கும் கடற்
கரை நகர். நாகைக்கும் காரைக்காலுக்கும் சுமார் 10 கிமி க்கும் குறைவு. காரைக்கால் என்ற சொல்லுக்கு "சுண்ணாம்பு கால்வாய்" "மீன் கால்வாய்" என பலரும் பொருள் கூறுவதால் இதன் பெயர் காரணம் சரிவர அறியப்படவில்லை.

கி.பி நான்காம் நூற்றாண்டில் பிறந்த மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமான புனிதவதி என்கிற காரைக்கால் அம்மையார் பிறந்த ஊர். இது பிரெஞ்சு நாட்டின் பகுதியாக இருந்தது. ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால் பிரெஞ்சுச் சொற்களை வெகு லாகவமாக அடித்தட்டு மக்களும் பயன்படுத்தும் இடமாகவும் இருக்கிறது. பிரெஞ்சு கட்டுப்பாட்டில் இருந்த இப்பகுதி 1 நவம்பர் 1954 இந்தியாவோடு இணைக்கப்பட்டது! 

காவிரியின் கிளை ஆறான அரசலாறு இங்குதான் ஓடுகிறது.இங்கு ஆறும் கடலும் சந்திக்கும் இரண்டு முகத்துவாரங்கள் இருப்பதால் காரைக்காலைச் சுற்றி ஓடிக் கொண்டிருக்கும் அந்த‌ ஆறுகளே காரைக்காலையும் அதன் கிராமங்களையும் தமிழ்நாட்டிலிருந்து பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளன. காரைக்கால் நகரத்தில் பிரெஞ்சுக்காரகளால் அமைக்கப்பட்ட சாலைகள் பெரும்பாலும் நேர்கோட்டில் அமைந்தவை என்பது காரைக்காலின் ஓர் சிறப்பு. அது குறித்தான ஒரு சொலவடை, ‘நீதி அழகு இல்லையென்றாலும் வீதி அழகு உண்டு’ என்பதாகும். 

மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட யூனியன் பிரதேசமான காரைக்கால்தான் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் என்று இரண்டு மாவட்டங்களுக்குள் உள்ளடங்கிய பகுதிகளில் பெரிய நகரம் மட்டுமல்லாது தொழில் நகரமும்கூட‌. நாட்டின் தென்கிழக்கு கடற்கரையில் அனைத்து பருவ நிலைகளுக்கும் ஏற்ற முக்கிய உயர் தொழில்நுட்ப வசதி கொண்டது காரைக்கால் துறைமுகம். 680 கி.மீ. தென்கிழக்கு கடற்கரையில் சரியான மையத்தில் சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் நடுவில், இத்துறைமுகம் அமைந்துள்ளது.தமிழக கடற்கரை மத்திய‌ பகுதியில் மிக வேகமாக பெரிய அளவில் உருவாகிவரும் துறைமுக நகரமும்கூட‌. இங்கு, ஏராளமான இரும்பு உருக்கு ஆலைகள், டைல்ஸ் மற்றும் ரசாயண‌ தொழிற்சாலைகள் உள்ளன. மேலும் தேசிய தொழில்நுட்ப கழகம் (N.I.T), மருத்துவக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், வேளான் கல்லூரி, என்று கலை மற்றும் தொழில்நுட்பக்கல்லூரிகள் நிறைந்த நகரம். 

திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் காரைக்கால் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இடையனுக்கு இறைவன் காட்சியளித்தார் என்பது தொன்நம்பிக்கை. இங்குள்ள சனிபகவான் சந்நிதி பிரசித்தி பெற்றதாகும்.

முகத்திற்கு ஆவி புடிச்சா, முகம் பளிச்சுன்னு இருக்குமாம்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:48 PM | Best Blogger Tips



முகத்தை அழகாக்க எத்தனை அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினாலும், ஆவி பிடிப்பது போல் இருக்காது. ஏனெனில் அழகு சாதனப் பொருட்களில் கெமிக்கல்கள் கலந்திருக்கும். மேலும் சருமத்திற்கு ஏற்ப ஒவ்வொரு அழகுப் பொருட்களும் வேறுபடும். ஒரு வேளை மாற்றி பயன்படுத்திவிட்டால், அதனால் தேவையில்லாத பக்கவிளைவுகள் ஏற்படும். ஆகவே எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படுத்தாமல், சருமத்தை அழகாக்கவும், உடலை ஆரோக்கியமாக்கவும் வைக்க சூடான நீரை வைத்து ஆவி பிடிப்பது மிகவும் சிறந்தது. ஏனெனில் இதனால் சருமத்தில் உள்ள சரும துளைகள் விரிவடைந்து, அதில் உள்ள அழுக்குகள், கிருமிகள் விரைவில் வெளியேறிவிடும். மேலும் இதற்கு எந்த ஒரு செலவும் ஆகாது. இதனை எந்த நேரத்திலும், வீட்டில் சூடான நீரை வைத்து செய்யலாம்.

வீட்டில் முகத்திற்கு எவ்வாறு ஆவி பிடிக்கலாம்?

சூடான நீரை வைத்து, ஒரு போர்வைக்குள் நீங்கள் உட்கார்ந்து, அந்த நீரின் முன் முகத்தை வைத்து, அதிலிருந்து வரும் ஆவி முகத்தில் படும்படி, ஒரு 30 நிமிடம் உட்கார வேண்டும்.

என்ன நன்மை?

* முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு, இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.

* கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும்.

* ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். எப்படியெனில் ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்.

* மற்றொரு நன்மைகள் என்னவென்றால், முதுமை தோற்றதை தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.

* பிம்பிள் இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், பிம்பிள் உடைந்துவிடும். இதனால் ஒரே நாளில் பிம்பிளை சூப்பராக குறைத்துவிடலாம்.

* ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும்.

ஆகவே நேரம் இருக்கும் போது முகத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற்றுங்கள்.

"கே. பி. சுந்தரம்பாள்"

மணக்கால் அய்யம்பேட்டை | 2:46 PM | Best Blogger Tips
கே. பி. சுந்தரம்பாள் பாடல் என்றாலே தனித்துவமாய் கம்பீரமாய் ஒலிப்பது. கரூரில் சிறுமியாய் தாயுடன் கழித்த காலத்திலே இவரது பாடலும் பாடும் திறனும் அந்தக் காலமே உற்றவர்களாலும், பெரியவர்களாலும் போற்றப்பட்டது. சொந்த ஊர் கொடுமுடி. பழனி முருகனைப் பாடியே காலம் எல்லாம் கழித்தவர் என்றே சொல்லலாம்.

தனிப் பாடல்களான 'தனித்திருந்து வாழும் தவமணியே... ' , 'பால் மணக்குது ,பழம் மணக்குது ;பழனி மலையிலே .பழனி மலையைத் தூக்கி காவடியாட்டம் தினமும் நடக்குதாம்..... ' என்று பாடி வரும்காலை ,'பால் காவடி பண்ணீர்க் காவடி புஷ்பக் காவடியாம், சந்தனக் காவடி,சர்ப்பக் காவடி,சேவற் காவடியாம் ...என்று உச்சஸ்தாயில் குரல் ஒலிக்க எழுந்து ஆடாதவரும் உண்டோ ? திரைப் பாடல் என்று வரும் பொழுது,

ஔவையார் படத்தில் , 'மயிலேறும் வடிவேலனே...என்று வரும் பாடலில் இவரது இளமைக் குரலில் உள்ள தெய்வீகக் குழைவை நாம் ரசித்துப் பரவசமடையலாம். ',பழம் நீ அப்பா...பாடல் நம்மை மறந்து தலை அசைக்க வைக்கும். ஞானப் பழத்தைப் பிழிந்து.....பாடலில் ,'உனக்கென்ன விதம் இக்கனியை நான் ஈவ தென்று நாணித்தான்..... என்றெல்லாம் பாடுகையில் அவரது குரலில் சீராக ஏறி இறங்கும் வளைவுகள் அற்புதமானவை. ஐயனே! என்று முருகனை விளிக்கும் போதும் சரி, கேள்விக்கு பதில் சொல்லும் போதும் சரி எடுப்பான அவரது குரல் வளம், வார்த்தைகளை அச்சரமாய் நம் மனதில் தொடுக்கும். கந்தன் கருணையில் 'புதியது என்றும் புதியது பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது; முருகா !...என்ன ஒரு கம்பீரமான பாடல்.
பூம்புகாரில் ,வாழ்க்கை எனும் ஓடம், அழகிய தத்துவப் பாடலாய் மிளிர்கிறது. ஔவையார் போன்றே இந்தக் குந்தி அடிகள் வேடமும் கச்சிதமாய் பொருந்தியது.மகாகவி காளிதாசில், 'காலத்தில் அழியாத ,காவியம் .....' பாடல் யார்தான் மறந்திருக்க முடியும் ? கேட்கும் பொது விலகி நிற்க முடியும்.
உயிர்மேல் ஆசை என்ற சமூகப் படத்தில், 'கேளு பாப்பா,
என்ற பாடல் பிரசித்தி பெற்றது. அந்நாளில் தேசப் பக்தி பாடல் நிறைய பாடியுள்ளார்.


via Page Kothai notes on Music and Movie.
"கே. பி. சுந்தரம்பாள்"

கே. பி. சுந்தரம்பாள் பாடல் என்றாலே தனித்துவமாய் கம்பீரமாய் ஒலிப்பது. கரூரில் சிறுமியாய் தாயுடன் கழித்த காலத்திலே இவரது பாடலும் பாடும் திறனும் அந்தக் காலமே உற்றவர்களாலும், பெரியவர்களாலும் போற்றப்பட்டது. சொந்த ஊர் கொடுமுடி. பழனி முருகனைப் பாடியே காலம் எல்லாம் கழித்தவர் என்றே சொல்லலாம். 

தனிப் பாடல்களான 'தனித்திருந்து வாழும் தவமணியே... ' , 'பால் மணக்குது ,பழம் மணக்குது ;பழனி மலையிலே .பழனி மலையைத் தூக்கி காவடியாட்டம் தினமும் நடக்குதாம்..... ' என்று பாடி வரும்காலை ,'பால் காவடி பண்ணீர்க் காவடி புஷ்பக் காவடியாம், சந்தனக் காவடி,சர்ப்பக் காவடி,சேவற் காவடியாம் ...என்று உச்சஸ்தாயில் குரல் ஒலிக்க எழுந்து ஆடாதவரும் உண்டோ ? திரைப் பாடல் என்று வரும் பொழுது,

ஔவையார் படத்தில் , 'மயிலேறும் வடிவேலனே...என்று வரும் பாடலில் இவரது இளமைக் குரலில் உள்ள தெய்வீகக் குழைவை நாம் ரசித்துப் பரவசமடையலாம். ',பழம் நீ அப்பா...பாடல் நம்மை மறந்து தலை அசைக்க வைக்கும். ஞானப் பழத்தைப் பிழிந்து.....பாடலில் ,'உனக்கென்ன விதம் இக்கனியை நான் ஈவ தென்று நாணித்தான்..... என்றெல்லாம் பாடுகையில் அவரது குரலில் சீராக ஏறி இறங்கும் வளைவுகள் அற்புதமானவை. ஐயனே! என்று முருகனை விளிக்கும் போதும் சரி, கேள்விக்கு பதில் சொல்லும் போதும் சரி எடுப்பான அவரது குரல் வளம், வார்த்தைகளை அச்சரமாய் நம் மனதில் தொடுக்கும். கந்தன் கருணையில் 'புதியது என்றும் புதியது பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது; முருகா !...என்ன ஒரு கம்பீரமான பாடல்.
பூம்புகாரில் ,வாழ்க்கை எனும் ஓடம், அழகிய தத்துவப் பாடலாய் மிளிர்கிறது. ஔவையார் போன்றே இந்தக் குந்தி அடிகள் வேடமும் கச்சிதமாய் பொருந்தியது.மகாகவி காளிதாசில், 'காலத்தில் அழியாத ,காவியம் .....' பாடல் யார்தான் மறந்திருக்க முடியும் ? கேட்கும் பொது விலகி நிற்க முடியும்.
உயிர்மேல் ஆசை என்ற சமூகப் படத்தில், 'கேளு பாப்பா, 
என்ற பாடல் பிரசித்தி பெற்றது. அந்நாளில் தேசப் பக்தி பாடல் நிறைய பாடியுள்ளார்.


via Page Kothai notes on Music and Movie.

பயங்கரமான ஆட்கொல்லி (பிரானா மீன்) !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:43 PM | Best Blogger Tips
உலகத்தில் மனிதர்கள்தான் மீன்களைச் சாப்பிடுவோம், ஆனால் மீன்கள் மனிதர்களைக் கொல்பவை சுறா, திமிங்கலம்னுதான் தெரியும். ஆனால் 'பிரானா' என்ற சிறிய மீனைப் போல் பயங்கரமான ஆட்கொல்லி வேறு எதுவும் இல்லை. பார்பதற்குச் சின்னதாக, சாதுவாகத் தோற்றமளித்தாலும், பிரானா, கொடூர குணமுள்ளது. அதன் உடம்புடன் ஒப்பிட்டால், தலை அளவுக்கு மீறிப் பெரியதாயிருக்கும்.

இந்த பிரானா மீன்கள் தென் அமெரிக்காவிலுள்ள ஆறுகளிலும், ஏரிகளிலும் வாழ்வதாகக் கூறப்படுகின்றன. ஆர்ஜன்டீனாவின் வடபகுதி முதல் கொலம்பியா வரையிலான பிரதேசத்தில் காணப்படுகின்ற இவ்வகை மீன்களின் வித்தியாசமான 20 இனங்கள் அமேசன் நதியில் வாழ்கின்றன.

பிரானா மீன் இனங்களுள் செந்நிற வயிற்றுப் பிரானா முரட்டுத்தனத்துக்குப் பெயர் பெற்றதாகும். இவ்வின மீன்கள் ஏனையவற்றைவிட மிக வலிமையான தாடைகளையும் மிகக் கூர்மையான பற்களையும் கொண்டுள்ளன.

பிரானாமீன் இனங்களைச் சேர்ந்த பெரும்பாலான மீன்கள் நீளத்தில் 60 செ.மீ. மேல் வளர்வதில்லை. அதற்கு வலுவான மண்டையோடு உள்ளது. அதன் கண்கள் பெரிதாகவும், சிவந்தும் காணப்படும். அதன் வாயில் முக்கோண வடிவில் பற்கள் உண்டு. கீழ்த்தாடை சற்று முன்னுக்கு வந்திருக்கும். வாயை மூடும்போது மேல்வரிசைப் பற்களுக்கு கீழ்வரிசைப் பற்கள் ஒட்டிப் பொருத்துகின்றன. அதனால் அவை எந்தப் பொருளையும் இரு தாடைகளும் ஒன்றுசேரும்போது கத்தரிக்கோலைப் போல நறுக்கக்கூடியனவாக இப்பற்கள் அமைந்துள்ளன.

பிரானா நூற்றுக்கணக்கில் கூட்டமாக வந்துதான் வேட்டையாடும். பெரிய விலங்கொன்று தாக்கப்படும் சந்தர்ப்பங்களில் பல கூட்டங்கள் ஒன்றாகத் திரண்டு அவ்விலங்கைக் கடித்துக் குதறிவிடுகின்றன. இவ்வாறு குறுகிய நேரத்தினுள் எலும்புக்கூடு மாத்திரம் மிஞ்சும். பொதுவாக செந்நிற வயிற்றுப் பிரானாக் கூட்டமொன்றைச் சேர்ந்த மீன்கள் பரவிச் சென்று இரை தேடலில் ஈடுபடுகின்றன.

மனிதர்கள் இவ்வாறு கொல்லப்படுவது மிக அபூர்வமாகவே நிகழ்கின்றது. எனினும், அண்மைக் காலத்தில் தென்னமெரிக்காவின் சில பகுதிகளில் மனிதர்கள் மீதான பிரானா தாக்குதல்கள் அதிகரித்து வந்துள்ளன.

ஆனால், விஞ்ஞானிகள் பிரானாக்களைப் பற்றி பீதி அனாவசியமானது என்கிறார்கள். அமேசான் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள் நதியில் அஞ்சாமல் குளிக்கிறார்கள், பிரானா அவர்களை அபூர்வமாகவே கடிக்கிறது.

பிரானாக்கள் சாதாரணமாக மற்ற மீன்களை வேட்டையாடி வாழும். ஆனால் கோடைகாலத்தில் நீர்நிலைகள் சுருங்கி உணவுத் தட்டுபாடு ஏற்படும்போது, நீரில் இறங்குகிற எதையும் அவை கடிக்கத் தொடங்குகின்றன. ஆறுகளுக்குக் குறுக்காக அணைகள் கட்டப்பட்டு நீரோட்டம் தடுக்கப்படுவதால் தாக்குதல் நடக்கிறது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். வீட்டில் வளர்க்க இது தடைசெய்யப்பட்ட மீன்.பிரானா மீன்கள் கொடூரமானவையாக இருந்தாலும் உண்பதற்கு ருசியானவையாக கருதப்படுகிறது.

நன்றி
ராகேஷ்
பயங்கரமான ஆட்கொல்லி (பிரானா மீன்)  !!!

உலகத்தில் மனிதர்கள்தான் மீன்களைச் சாப்பிடுவோம், ஆனால் மீன்கள் மனிதர்களைக் கொல்பவை சுறா, திமிங்கலம்னுதான் தெரியும். ஆனால் 'பிரானா' என்ற சிறிய மீனைப் போல் பயங்கரமான ஆட்கொல்லி வேறு எதுவும் இல்லை. பார்பதற்குச் சின்னதாக, சாதுவாகத் தோற்றமளித்தாலும், பிரானா, கொடூர குணமுள்ளது. அதன் உடம்புடன் ஒப்பிட்டால், தலை அளவுக்கு மீறிப் பெரியதாயிருக்கும்.

 இந்த பிரானா மீன்கள் தென் அமெரிக்காவிலுள்ள ஆறுகளிலும், ஏரிகளிலும் வாழ்வதாகக் கூறப்படுகின்றன. ஆர்ஜன்டீனாவின் வடபகுதி முதல் கொலம்பியா வரையிலான பிரதேசத்தில் காணப்படுகின்ற இவ்வகை மீன்களின் வித்தியாசமான 20 இனங்கள் அமேசன் நதியில் வாழ்கின்றன.

 பிரானா மீன் இனங்களுள் செந்நிற வயிற்றுப் பிரானா முரட்டுத்தனத்துக்குப் பெயர் பெற்றதாகும்.  இவ்வின மீன்கள் ஏனையவற்றைவிட மிக வலிமையான தாடைகளையும் மிகக் கூர்மையான பற்களையும் கொண்டுள்ளன.

பிரானாமீன் இனங்களைச் சேர்ந்த பெரும்பாலான மீன்கள் நீளத்தில் 60 செ.மீ. மேல் வளர்வதில்லை. அதற்கு வலுவான மண்டையோடு உள்ளது. அதன் கண்கள் பெரிதாகவும், சிவந்தும் காணப்படும். அதன் வாயில் முக்கோண வடிவில் பற்கள் உண்டு. கீழ்த்தாடை சற்று முன்னுக்கு வந்திருக்கும்.     வாயை மூடும்போது மேல்வரிசைப் பற்களுக்கு கீழ்வரிசைப் பற்கள் ஒட்டிப் பொருத்துகின்றன. அதனால் அவை எந்தப் பொருளையும் இரு தாடைகளும் ஒன்றுசேரும்போது கத்தரிக்கோலைப் போல நறுக்கக்கூடியனவாக இப்பற்கள் அமைந்துள்ளன.

பிரானா நூற்றுக்கணக்கில் கூட்டமாக வந்துதான் வேட்டையாடும். பெரிய விலங்கொன்று தாக்கப்படும் சந்தர்ப்பங்களில் பல கூட்டங்கள் ஒன்றாகத் திரண்டு அவ்விலங்கைக் கடித்துக் குதறிவிடுகின்றன. இவ்வாறு குறுகிய நேரத்தினுள் எலும்புக்கூடு மாத்திரம் மிஞ்சும். பொதுவாக செந்நிற வயிற்றுப் பிரானாக் கூட்டமொன்றைச் சேர்ந்த மீன்கள் பரவிச் சென்று இரை தேடலில் ஈடுபடுகின்றன.

மனிதர்கள் இவ்வாறு கொல்லப்படுவது மிக அபூர்வமாகவே நிகழ்கின்றது. எனினும், அண்மைக் காலத்தில் தென்னமெரிக்காவின் சில பகுதிகளில் மனிதர்கள் மீதான பிரானா தாக்குதல்கள் அதிகரித்து வந்துள்ளன.

ஆனால், விஞ்ஞானிகள் பிரானாக்களைப் பற்றி பீதி அனாவசியமானது என்கிறார்கள். அமேசான் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள் நதியில் அஞ்சாமல் குளிக்கிறார்கள், பிரானா அவர்களை அபூர்வமாகவே கடிக்கிறது.

 பிரானாக்கள் சாதாரணமாக மற்ற மீன்களை வேட்டையாடி வாழும். ஆனால் கோடைகாலத்தில் நீர்நிலைகள் சுருங்கி உணவுத் தட்டுபாடு ஏற்படும்போது, நீரில் இறங்குகிற எதையும் அவை கடிக்கத் தொடங்குகின்றன. ஆறுகளுக்குக் குறுக்காக அணைகள் கட்டப்பட்டு நீரோட்டம் தடுக்கப்படுவதால் தாக்குதல் நடக்கிறது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். வீட்டில் வளர்க்க இது தடைசெய்யப்பட்ட மீன்.பிரானா மீன்கள் கொடூரமானவையாக இருந்தாலும் உண்பதற்கு ருசியானவையாக கருதப்படுகிறது.

நன்றி 
ராகேஷ்

செல்ஃபோன்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:42 PM | Best Blogger Tips
செல்ஃபோன் என அழைக்கப்படும் கைப்பேசி எவ்வளவு பரிமானத்தில் வந்தாலும் ஸ்க்ரீன் என்ற விஷயம் மட்டும் சதுரமாகத்தான் வருகிறது. காரணம்- டிஸ்ப்ளே எனப்படும் எல் சி டி தான் காரணம். இதை பத்து வருடங்களுக்கு மேல் ரிசர்ச் செய்யும் சோனி, சாம்சங், தோஷிபா போன்றவர்கள் எப்படியாவது ஃபிலக்ஸிபிள் டிஸ்ப்லே அதாவது சதுரத்திற்க்கு பதிலாக மடக்க அல்லது சுருட்டி வைக்க கூடிய டிஸ்ப்லேக்களை ஆராய்ச்சி அளவில் தான் சோதனை செய்யபட்டிருந்தாலும் 2011 ஆம் ஆண்டு சாம்சங் நாங்கள் இந்த வருடத்தில் பிளக்ஸிபல் டிஸ்ப்லே கொன்டு வருவோம் என கூறி ஒரு வருடம் கழித்து இப்போது தான் புரோட்டோ டைப்பை ரெடி செய்திருக்கின்றனர்.

அதுதான் இந்த படத்தில் உள்ள பிளக்ஸிபில் டிஸ்ப்ளே, கண்ணாடிக்கு பதிலாக பிளாஸ்டிக்கில் செய்திருக்கின்றனர், இது அமோஎலீடி வகையை சார்ந்தது. இது வந்தால் ஃபோனை சுருட்டி வைக்க முடியும். டிஸ்ப்ளே உடையும் அபாயம் இல்லை. அது போக விலை குறையும் மற்றும் வாட்டர் ஃப்ரூப் செய்ய இயலும்.இதை வெற்றி கரமாக ஹாங்காங்கில் லான்ச் செய்யபட்டிருக்கிறது இந்தியாவுக்கு 2013ல் கிடைக்கும். இதன் வீடியோ இங்கிருக்கிறது.

VIDEO Link – http://live.wsj.com/video/samsung-flexible-smartphone-screens/66C98C21-8960-4247-854C-F3E188BB50E8.html#!CE36E9F8-537E-45BD-AC7E-01D39498BFE5

Samsung Bendable Screens entering mass production lines. The Samsung Display Co., the display unit of the company is now on the final phase of development of these flexible displays and though there is no release date announcement just yet, we may expect to see these phones hit the showcases right the first half of next year. More interestingly, Samsung has decided to make use of plastic instead of glass to produce these OLED displays, thus rendering them unbreakable. Famous for its AMOLED screens, Samsung made a choice of OLEDs here again instead of Plasma or LCD because they can be made flexible and transparent. Sony, the other popular smartphone manufacturer says it has been doing research on flexible displays for almost a decade now, but they still don’t seem to have any plans of commercializing their technology.

VIDEO Link – http://live.wsj.com/video/samsung-flexible-smartphone-screens/66C98C21-8960-4247-854C-F3E188BB50E8.html#!CE36E9F8-537E-45BD-AC7E-01D39498BFE5


நன்றி : ஆந்தை ரிப்போர்ட்டர்
செல்ஃபோன் என அழைக்கப்படும் கைப்பேசி எவ்வளவு பரிமானத்தில் வந்தாலும் ஸ்க்ரீன் என்ற விஷயம் மட்டும் சதுரமாகத்தான் வருகிறது. காரணம்- டிஸ்ப்ளே எனப்படும் எல் சி டி தான் காரணம். இதை பத்து வருடங்களுக்கு மேல் ரிசர்ச் செய்யும் சோனி, சாம்சங், தோஷிபா போன்றவர்கள் எப்படியாவது ஃபிலக்ஸிபிள் டிஸ்ப்லே அதாவது சதுரத்திற்க்கு பதிலாக மடக்க அல்லது சுருட்டி வைக்க கூடிய டிஸ்ப்லேக்களை ஆராய்ச்சி அளவில் தான் சோதனை செய்யபட்டிருந்தாலும் 2011 ஆம் ஆண்டு சாம்சங் நாங்கள் இந்த வருடத்தில் பிளக்ஸிபல் டிஸ்ப்லே கொன்டு வருவோம் என கூறி ஒரு வருடம் கழித்து இப்போது தான் புரோட்டோ டைப்பை ரெடி செய்திருக்கின்றனர்.

அதுதான் இந்த படத்தில் உள்ள பிளக்ஸிபில் டிஸ்ப்ளே, கண்ணாடிக்கு பதிலாக பிளாஸ்டிக்கில் செய்திருக்கின்றனர், இது அமோஎலீடி வகையை சார்ந்தது. இது வந்தால் ஃபோனை சுருட்டி வைக்க முடியும். டிஸ்ப்ளே உடையும் அபாயம் இல்லை. அது போக விலை குறையும் மற்றும் வாட்டர் ஃப்ரூப் செய்ய இயலும்.இதை வெற்றி கரமாக ஹாங்காங்கில் லான்ச் செய்யபட்டிருக்கிறது இந்தியாவுக்கு 2013ல் கிடைக்கும். இதன் வீடியோ இங்கிருக்கிறது. 

VIDEO Link – http://live.wsj.com/video/samsung-flexible-smartphone-screens/66C98C21-8960-4247-854C-F3E188BB50E8.html#!CE36E9F8-537E-45BD-AC7E-01D39498BFE5

Samsung Bendable Screens entering mass production lines. The Samsung Display Co., the display unit of the company is now on the final phase of development of these flexible displays and though there is no release date announcement just yet, we may expect to see these phones hit the showcases right the first half of next year. More interestingly, Samsung has decided to make use of plastic instead of glass to produce these OLED displays, thus rendering them unbreakable. Famous for its AMOLED screens, Samsung made a choice of OLEDs here again instead of Plasma or LCD because they can be made flexible and transparent. Sony, the other popular smartphone manufacturer says it has been doing research on flexible displays for almost a decade now, but they still don’t seem to have any plans of commercializing their technology. 

VIDEO Link – http://live.wsj.com/video/samsung-flexible-smartphone-screens/66C98C21-8960-4247-854C-F3E188BB50E8.html#!CE36E9F8-537E-45BD-AC7E-01D39498BFE5


நன்றி : ஆந்தை ரிப்போர்ட்டர்

குளிர்காலத்துல இந்த உணவுகளை மறக்காதீங்க...

மணக்கால் அய்யம்பேட்டை | 2:24 PM | Best Blogger Tips





நவம்பர் மாதம் வந்தாலே, சரியான குளிர்ச்சி இருக்கும். அந்த நேரம் ஸ்வெட்டர், ஸ்கார்ப், கால்களுக்கு சாக்ஸ் மற்றும் கைகளுக்கு க்ளொஸ் போன்றவற்றை அணிந்து கொண்டிருக்கும் நிலையில் இருப்போம். ஏனெனில் அந்த அளவில் குளிர்ச்சியானது இருக்கும். சொல்லப்போனால் வெளியே செல்லக்கூட பயந்து, சிலர் பிடித்த உணவைக் கூட சரியாக சாப்பிடமாட்டோம். அதிலும் சிலர் பழங்கள் சாப்பிட்டால், சள

ி, ஜலதோஷம் போன்றவை பிடிக்கும் என்று அவற்றை சாப்பிடுவதையே நிறுத்திவிடுவர்.

இவ்வாறெல்லாம் சரியாக சாப்பிடாமல் இருந்தால், உடலை எந்த ஒரு கிருமிகள் தாக்கினாலும், அவை எளிதில் உடலில் புகுந்து தங்கிக் கொள்ளும் நிலை ஏற்படும். ஏனெனில் உடலில் சத்துக்கள் இல்லாவிட்டால், அதிலும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாவிட்டால், எவ்வாறு உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆகவே குளிர்காலத்தில் கடைகளுக்கு ஒரு முறை பர்சேஸ் செய்யப் போகும் போதே, எந்த உணவுப் பொருட்களையெல்லாம் மறக்காமல் வாங்க வேண்டும். மேலும் எதற்கு அவற்றை தவிர்க்காமல் நிச்சயம் வாங்கி சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போமா!!!


ஆரஞ்சு

குளிர்காலத்தில் அதிகமான அளவில் சளி, ஜலதோஷம் போன்றவை அதிகம் பிடிக்கும். ஆகவே அத்தகையவற்றை தடுக்க உடலில் போதிய அளவில் நோய் எதிர்ப்பு சக்தியான வைட்டமின் சி அவசியமாகிறது. அத்தகைய சத்து ஆரஞ்சு பழத்தில் அதிகம் உள்ளன. எனவே இதனை குளிர்காலத்தில் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பசலைக் கீரை

பொதுவாக கீரை வகைகளை அதிகம் சேர்த்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பசலைக் கீரையை உணவில் அதிகமாக சேர்த்து வந்தால், அதில் உள்ள அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் உடலில் சேர்ந்து, நோய் தாக்காமல் உடலை ஆரோக்கியமாக வைக்கும்.

வேர்க்கடலை

வேர்க்கடலையை குளிர்காலத்தில் அதிகம் சாப்பிட வேண்டும். அது வறுத்ததாகவோ, உப்பாகவோ அல்லது சாதாரணமாகவோ இருந்தாலும், அதை சாப்பிட்டால், உடலில் உள்ள வெப்பம் சரியான அளவு இருப்பதோடு, புரோட்டீனும் அதிகம் கிடைக்கும்.

கொய்யாப்பழம்

இந்த பழம் நோய் எதிர்ப்பு சக்தியை மட்டும் கொடுப்பதில்லை, இதயத்தையும் ஆரோக்கியமாக வைக்கிறது. அதிலும் கொய்யாவில் லைகோபைன் என்னும் பொருள் இருப்பதால், அது இதயத்தில் ஏற்படும் பிரச்சனையை தடுக்கிறது. ஆகவே குளிர்காலத்தில் பிங்க் மற்றும் சாறுள்ள கொய்யாப்பழத்தை அதிகம் வாங்கி சாப்பிட வேண்டும்.

கேரட்

கேரட்டை இயற்கையின் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் அந்த அளவு இதில் வைட்டமின்களான பி, சி, டி, ஈ மற்றும் கே உள்ளன. மேலும் இதில் உள்ள கரோட்டீன என்னும் பொருள் உடலினுள் செல்லும் போது வைட்டமின் ஏ-வாக மாறிவிடுகிறது. எனவே இத்தகைய கேரட்டை சேர்ப்பது அவசியமாகிறது.

கிவி

இது மற்றொரு சிறப்பான வைட்டமின் சி நிறைந்துள்ள பழம். அதிலும் இந்த பழத்தின் மேல் சிறிது உப்பை தூவி, காலை வேளையில் அல்லது மாலை வேளையில் சாப்பிட்டால், உடலுக்கு சத்து கிடைத்தது போன்றும் இருக்கும், வயிறு நிறைந்தது போன்றும் இருக்கும்.

சிக்கன் சூப்

சூப் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். அவ்வாறு சாப்பிடும் சூப்பில் சிக்கன் சூப் சாப்பிட்டால், குளிர்காலத்திற்கு இதமாக இருக்கும்.

கொக்கோ

கொக்கோவை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள அதிகமான ஃப்ளேவோனாய்டுகள், இதய நோய்க்கு வராமல் தடுக்கும். ஆகவே இந்த கொக்கோவை, உணவு உண்ட பின்பு சிறிது குடிப்பது நல்லது.

நட்ஸ் மற்றும் உலர் பழங்கள்

சாதாரணமான பழங்களை சாப்பிடுவதை விட, உலர் பழங்களை சாப்பிடுவதால், உடலில் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். சொல்லப்போனால் நல்ல ஃப்ரஷ்ஷான பழங்களை விட, உலர் பழங்கள் தான் நல்லது. ஆகவே இத்தகைய உணவுப் பொருட்களை நட்ஸ் உடன் தினமும் சேர்த்து சாப்பிட்டால், முக்கியமாக குளிர்காலத்தில் சாப்பிட்டால், கிருமிகள் எளிதில் உடலைத் தாக்காமல் தடுக்கும்.



பேசிக்கொண்டே சாப்பிடுதல் பற்றிய தகவல்.

மணக்கால் அய்யம்பேட்டை | 2:19 PM | Best Blogger Tips

'சாப்பிடும்போது பேசக்கூடாது', 'விருட்டென்று சாப்பிட்டுவிட்டு எழுந்திருக்க வேண்டும்' என்று பெரியவர்கள் கூறுவதுண்டு. ஆனால் உண்மையில் அது நல்லதல்ல. சாப்பிடும்போது நிதானமாகச் சாப்பிட வேண்டும். பேசிக் கொண்டே சாப்பிடுவது திருப்தியாக சாப்பிட உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன...

* நிதானமாக மென்று சாப்பிடுங்கள். இது உணவுத் துணுக்குகள் உமிழ்நீரால் சூழப்பட்டு எளிமையாக செரிமானம் ஆக உதவும். இல்லாவிட்டால் இடையிடையே தாகம் ஏற்படும். இரைப்பையில் செரிமானம் ஆவதற்கு நிறைய நேரம் பிடிக்கும். சீக்கிரம் செரிமானம் ஆகாததால் பசியின்மை தோன்றும்.

* சாப்பிட்டபின் சிலர் மடமடவென்று ஒரு சொம்பு தண்ணீ­ர் குடிப்பார்கள். சாப்பிடும் போது தண்ணீ­ர் குடிக்கக்கூடாது என்று சொல்பவர்களும் உண்டு. சாப்பிடும்போது தண்­ணீர் எடுத்துக் கொள்வது நல்லதுதான். சாப்பிட்ட பிறகுதான் நிறைய தண்­ணீர் குடிக்கக் கூடாது. இது செரிமானம் ஆவதை தடுக்கும். மொத்தத்தில் உணவு உண்ணும் போது 200 மில்லி தண்­ணீர் பருகலாம்.

* சாப்பிடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக நொறுக்குத் தீனி, பானங்கள் எதுவும் சாப்பிடக்கூடாது. தண்­ணீர்கூட தவிர்க்க வேண்டும்.

* சாப்பிட்ட பின்னரும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு பழங்கள், நொறுக்குத் தீனி எதையும் சாப்பிடக்கூடாது.

* உங்கள் உடலுழைப்பிற்கு ஏற்ப உணவின் அளவு இருக்க வேண்டும். காலையிலும், இரவிலும் ஆவியில் சமைக்கப்பட்ட மென்மையான உணவுகளை உண்ணலாம். அமெரிக்காவில் காலை உணவை முழு வயிற்றுக்கு சாப்பிடுவார்கள். அவர்கள் மதியத்திற்குள் வேலையை முடித்துவிட்டு பிறகு ஓய்வு எடுப்பார்கள். அதனால் அப்படி பழக்கம் வைத்திருக்கிறார்கள். இங்கு பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு இரவில் ஓய்வெடுக்கும் பழக்கம் இருப்பதால் மதிய உணவை முழுவயிற்றுக்கு சாப்பிடுவது பழக்கமாக உள்ளது. அதையே பின்பற்றலாம்.

* சிலர் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க போவதாக கூறியும், விரதம் இருப்பதாக கூறியும் சாப்பிடாமல் இருக்கிறார்கள். டயட், விரதம் என்றால் பட்டினி கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. எளிதில் ஜீரணம் ஆகும் பானங்கள், பழங்கள் சாப்பிட்டாலே விரதம் இருப்பதற்குச் சமம்தான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். முழுமையாக பட்டினி கிடப்பது உடல்நலத்திற்கு கேடு.

* ஒவ்வொரு வேளை உணவுக்கும் இடையே இடைவெளி கால அளவு எதுவும் கிடையாது. நன்கு பசித்தபிறகு சாப்பிட்டாலே போதுமானது. சாப்பாட்டு நேரம் வந்துவிட்டது என்று கூறி பசிக்காத நேரத்தில் கடமை போல எண்ணி சாப்பிடக்கூடாது. இப்படிச் சாப்பிடுவதுதான் வியாதிகள் உருவாக காரணமாக இருக்கிறது.

* உணவானது இரைப்பையில் செரிமானம் ஆக 3 மணி நேரம் ஆகும். எனவே 4 அல்லது 5 மணி நேர இடைவெளிவிட்டு சாப்பிடுவது சிறந்தது.
Like here first -->> @[433124750055265:274:இன்று ஒரு தகவல். Today A Message.]
பேசிக்கொண்டே சாப்பிடுதல் பற்றிய தகவல்.

'சாப்பிடும்போது பேசக்கூடாது', 'விருட்டென்று சாப்பிட்டுவிட்டு எழுந்திருக்க வேண்டும்' என்று பெரியவர்கள் கூறுவதுண்டு. ஆனால் உண்மையில் அது நல்லதல்ல. சாப்பிடும்போது நிதானமாகச் சாப்பிட வேண்டும். பேசிக் கொண்டே சாப்பிடுவது திருப்தியாக சாப்பிட உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன...

* நிதானமாக மென்று சாப்பிடுங்கள். இது உணவுத் துணுக்குகள் உமிழ்நீரால் சூழப்பட்டு எளிமையாக செரிமானம் ஆக உதவும். இல்லாவிட்டால் இடையிடையே தாகம் ஏற்படும். இரைப்பையில் செரிமானம் ஆவதற்கு நிறைய நேரம் பிடிக்கும். சீக்கிரம் செரிமானம் ஆகாததால் பசியின்மை தோன்றும்.

* சாப்பிட்டபின் சிலர் மடமடவென்று ஒரு சொம்பு தண்ணீ­ர் குடிப்பார்கள். சாப்பிடும் போது தண்ணீ­ர் குடிக்கக்கூடாது என்று சொல்பவர்களும் உண்டு. சாப்பிடும்போது தண்­ணீர் எடுத்துக் கொள்வது நல்லதுதான். சாப்பிட்ட பிறகுதான் நிறைய தண்­ணீர் குடிக்கக் கூடாது. இது செரிமானம் ஆவதை தடுக்கும். மொத்தத்தில் உணவு உண்ணும் போது 200 மில்லி தண்­ணீர் பருகலாம்.

* சாப்பிடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக நொறுக்குத் தீனி, பானங்கள் எதுவும் சாப்பிடக்கூடாது. தண்­ணீர்கூட தவிர்க்க வேண்டும்.

* சாப்பிட்ட பின்னரும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு பழங்கள், நொறுக்குத் தீனி எதையும் சாப்பிடக்கூடாது.

* உங்கள் உடலுழைப்பிற்கு ஏற்ப உணவின் அளவு இருக்க வேண்டும். காலையிலும், இரவிலும் ஆவியில் சமைக்கப்பட்ட மென்மையான உணவுகளை உண்ணலாம். அமெரிக்காவில் காலை உணவை முழு வயிற்றுக்கு சாப்பிடுவார்கள். அவர்கள் மதியத்திற்குள் வேலையை முடித்துவிட்டு பிறகு ஓய்வு எடுப்பார்கள். அதனால் அப்படி பழக்கம் வைத்திருக்கிறார்கள். இங்கு பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு இரவில் ஓய்வெடுக்கும் பழக்கம் இருப்பதால் மதிய உணவை முழுவயிற்றுக்கு சாப்பிடுவது பழக்கமாக உள்ளது. அதையே பின்பற்றலாம்.

* சிலர் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க போவதாக கூறியும், விரதம் இருப்பதாக கூறியும் சாப்பிடாமல் இருக்கிறார்கள். டயட், விரதம் என்றால் பட்டினி கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. எளிதில் ஜீரணம் ஆகும் பானங்கள், பழங்கள் சாப்பிட்டாலே விரதம் இருப்பதற்குச் சமம்தான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். முழுமையாக பட்டினி கிடப்பது உடல்நலத்திற்கு கேடு.

* ஒவ்வொரு வேளை உணவுக்கும் இடையே இடைவெளி கால அளவு எதுவும் கிடையாது. நன்கு பசித்தபிறகு சாப்பிட்டாலே போதுமானது. சாப்பாட்டு நேரம் வந்துவிட்டது என்று கூறி பசிக்காத நேரத்தில் கடமை போல எண்ணி சாப்பிடக்கூடாது. இப்படிச் சாப்பிடுவதுதான் வியாதிகள் உருவாக காரணமாக இருக்கிறது.

* உணவானது இரைப்பையில் செரிமானம் ஆக 3 மணி நேரம் ஆகும். எனவே 4 அல்லது 5 மணி நேர இடைவெளிவிட்டு சாப்பிடுவது சிறந்தது.