#முப்பத்தஞ்சு வருஷத்துக்கு முன்னால
ஒரு கல்யாணத்துக்கு அழைப்பு வந்தா...
10 நாளுக்கு முன்னாடியே குடும்பத்தோடு போயிருவோம்.



சீரியல் பல்பு தோரணமும்.,
புனல் ஸ்பீக்கரில் ஓடும்.





அதுல குழந்தைகளும் பெண்களும்
உறவுக் கதைகளை பேசிட்டிருப்பாங்க.
சின்ன சின்ன பசங்க எல்லாம் ஓடியாடி விளையாடி கொண்டிருப்பார்கள்.


வெளியாட்களை பாக்கவே முடியாது.
உறவுகளே பரிமாறினார்கள்.
நிச்சயம் ஒரு சண்டையும் கோபித்து கொண்டு அடம்பிடிக்கும் நிகழ்வும் நடக்கும்.

நாம் ஊர் திரும்ப மனசு வராது.
மனசு நெறைய சந்தோசத்துடனும்,
கனத்துடனும் திருப்புவோம்.
இப்படியாக.. ஒரு விஷேஷத்துக்கு போயிட்டு வந்தோம்ன்னா அங்கு நடந்த நிகழ்வுகளின் நினைவு சுவடுகள் மறைய மாதங்களோ வருடங்களோ ஆகும்.
ஆனா இன்னிக்கு?????????????????????
இந்த பழக்கம் எங்க போச்சுங்க?....
யார் மாத்துனது? ஏன்?

7 மணிக்கு போனா போதும்,
பசங்களுக்கு ஸ்கூல் இருக்கு.
எனக்கு லீவ் இல்ல..
லோன் கட்டனும்...
அவருக்கு ஆபீஸ் மீட்டிங்.
யப்பா எத்தனை காரணங்கள்?!...
இதெல்லாம் போக...
எப்ப இந்த பாழாய்போன செல்போன் வந்துச்சோ...குறிப்பா இணைய வசதியோட ஆண்ட்ராய்டு கைப்பேசிகள் வந்துச்சோ...
அப்போ மறைந்து போனது மனித நேயமும் சக மனித நட்பு பாராட்டலும்,உறவின் புரிதலும்..


இப்படி இருந்து நீங்க என்ன சாதிச்சீங்க?
உறவுகளை இழந்ததுதான் மிச்சம்.